Ithazhil Oru Yutham
()
About this ebook
நாயகன் விஷ்வா, நாயகி வர்ஷா இருவரும் புதுமண தம்பதகள். திருமணமான முதல் நாளில் இருந்தே விஷ்வா தனது மனைவியை நெருங்க முடியாமல் தவிக்கிறான். வர்ஷாவின் இதழ் பதிக்க தடைபோடும் விஷ்வாவின் வாழ்க்கையை புரட்டி போட்ட நிகழ்வு தான் என்ன? சக்தி, கனிஷ்காவின் ஆழமான காதல், சுவாரஸ்யமான ஊடல், ரொமான்ஸ் ரசிக்க வைக்கும் க்ரைம், சஸ்பென்ஸ், திரில்லர் பல அதிரடி திருப்பங்கள், ரொமான்ஸ், மர்மங்கள் நிறைந்த வித்தியாசமான கதைக்களம்...
Read more from Vaani Aravind
Marmadesathil Mayakkum Paavai Rating: 0 out of 5 stars0 ratingsNeruppaatril Neendhum Anangavaley Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ithazhil Oru Yutham
Related ebooks
Ammavum Pussykuttyium Rating: 0 out of 5 stars0 ratingsThunaivi Rating: 2 out of 5 stars2/5Ellame Nee Sonnathu... Rating: 0 out of 5 stars0 ratingsPathala Karandi Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsNinaivellam Kokila Rating: 0 out of 5 stars0 ratingsMel Nokki Paayum Aruvi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalukkum Undo Adaikkum Thazh? Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaaniley Rating: 5 out of 5 stars5/5Vaanavil Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vizhigal Urangidumo…? Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsThoduvaanam Rating: 3 out of 5 stars3/5Vettiveru Vaasam... Rating: 2 out of 5 stars2/5Agayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Kaadhal Nilavey... Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Pothum Rating: 5 out of 5 stars5/5Theekkul Viralai Vaithal Rating: 4 out of 5 stars4/5Kaadhalum Kutrame... Rating: 4 out of 5 stars4/5Kathavu Thiranthathu Rating: 3 out of 5 stars3/5Valiya Illai Bhoomiyil? Rating: 0 out of 5 stars0 ratingsLakshmi Rajarathnathin Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsUllam Varudum Thendral Rating: 5 out of 5 stars5/5Aasai Alaigal Rating: 5 out of 5 stars5/5Natchathirangalin Naduvey...! Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Irupathu Ennidamey! Rating: 0 out of 5 stars0 ratingsEn Yavana Rani Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu Ethu Varai? Rating: 0 out of 5 stars0 ratingsVedhamadi Nee Enakku... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ithazhil Oru Yutham
0 ratings0 reviews
Book preview
Ithazhil Oru Yutham - Vaani Aravind
https://www.pustaka.co.in
இதழில் ஒரு யுத்தம்
Ithazhil Oru Yutham
Author:
வாணி அரவிந்த்
Vaani Aravind
For more books
https://www.pustaka.co.in/home/author/vaani-aravind
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
பகுதி - 1
பகுதி – 2
பகுதி – 3
பகுதி – 4
பகுதி - 5
பகுதி – 6
பகுதி – 7
பகுதி – 8
பகுதி – 9
பகுதி – 10
பகுதி – 11
பகுதி - 12
பகுதி – 13
பகுதி - 14
பகுதி - 15
பகுதி - 16
பகுதி – 17
பகுதி - 18
பகுதி – 19
பகுதி – 20
பகுதி – 21
பகுதி – 22
பகுதி – 23
பகுதி – 24
பகுதி - 1
காதல் எனும் யுத்தத்தில்
இதழ்களே போர்க்களம்
முத்தங்களே ஆயுதம்
வில்லில் இருந்து
விடுபடும் கூரிய அம்பாய்
அவளின் இதழ்களை பூட்டி
மோகத்தீயின் நெருப்பாய்
என்னுள் மெல்ல தீயை
மூட்டுகிறாய் - உன்
இதழ்களின் யுத்தத்தில்
சத்தமில்லாமல் - என்
சரீரங்கள் மொத்தமாய்
சரணடைகிறது உனக்குள்
யுத்தம் முடிவுக்கு வருகையில்
காமன் நம்மை வென்றெடுக்க
சத்தமின்றி ஓய்வெடுத்தன...!
இதழ்களோடு இரு இதயங்களும்
அனைவரது வாழ்விலும்
இன்று வரை அழியாத
காவியமாக...
இதழ் சிந்தும் முத்தங்கள்...!
விஷ்வா, வர்ஷா இவர்களின் திருமணம் இவர்களின் மனப்பூர்வமான சம்மதத்தோடும், இரு வீட்டாரின் சம்மதத்துடன், உற்றார் உறவினர் முன்னிலையில் இன்று காலை இனிதே நடந்தேறியது.
மற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் முடிந்து இரவு நேரம் நெருங்க தொடங்கியது. மணமகன் விஷ்வாவின் வீட்டைச் சுற்றி வண்ண வண்ண விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருந்தது.
விஷ்வா ஆயிரம் ஆசைகளை மனதில் சுமந்து கொண்டு வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான். வானத்தில் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருக்க. நிலவுப்பெண் வெட்கத்தில் ஒளிவீச, இதமான இனிய தென்றல் காற்று அவன் மேனியைத் தழுவ, இந்த இரவு இனிய இரவாகதான் தோன்றியது.
இருவீட்டாரும் சேர்ந்து அவர்களுக்காக தனி அறையை ஒதுக்கி பஞ்சு மெத்தையில் வாசனைப் பூக்களைத் தூவி அலங்கரித்து வைத்தனர்.
மணமகள் வர்ஷா தங்க ஜரிகை பார்டர் போட்டு ரோஜாப்பூ நிறத்தில் சேலைகட்டி, காதில் அழகான ஜிமிக்கியும், கழுத்தில் புது மஞ்சள் கயிறோடு தாலி கொடியும், ஒரு டாலர் செயின் மட்டும் அணிந்து, கையில் கண்ணாடி வளையல் குலுங்க, மென்மையான பாதத்தில் கொலுசுகள் சிணுங்க, மாதுளை இதழ்களில் புன்னகையுடன் பட்டொளி வீச, அவள் உடம்போடு ஒட்டிய நளினமும், அவளின் சந்தன மேனிக்கு மேலும் அழகை மெருகூட்டியது. ஏற்கனவே வர்ணிக்க முடியாத அளவு பேரழகியாக இருந்த வர்ஷா இப்போது அழகுக்கு அழகு சேர்த்ததை போல பார்ப்பவர்கள் கண்களுக்கு தேவதையாகத்தான் தோன்றினாள்.
நல்ல நேரம் நெருங்க வர்ஷாவின் கையில் பால் சொம்பை கொடுத்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு அனுப்பி வைத்தனர்.
வர்ஷா உள்ளே வந்து கதவைத் தாளிட்டாள். கையில் பால் சொம்புடன் வெட்கத்தோடு உள்ளே நுழைந்தவளை விஷ்வா சொம்பை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு தனது கரங்களால் அவளது இடையை வளைத்து பிடித்து இறுகத் தழுவினான்.
இதுவரை இல்லாத ஒரு புது விதமான உணர்வு அவளுக்குள் ஏற்பட வெட்கத்தில் சிணுங்கினாள். அவனது ஸ்பரிசம் அவளுக்கு கூச்சத்தை ஏற்படுத்தியது. விடுங்க. எனக்கு வெட்கமா இருக்கு
என விலக முயற்சித்தவளை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
ச்ச்சீ. விடுங்க எனக்கு வெட்கமா இருக்கு
என்றவளை கொஞ்சம் காற்றுக்கு இடைவெளி கொடுத்து அப்படியே தூக்கி மெத்தையில் உட்கார வைத்தான்.
வர்ஷா உன்னோட சிணுங்கள் என்னைய கிறங்கடிக்குது.
ச்ச்சீ போங்க
என்று மீண்டும் வெட்கப்பட்டு சிணுங்க, வெட்கத்தில் ரோஜாப்பூ போன்ற அவளது கன்னக் கதுப்புகள் சிவந்தது.
எத்தனை அழகான மனைவியை கடவுள் எனக்கு கொடுத்து இருக்காரு. பெருமையா இருக்கு வர்ஷா.
ஓஹோ! அப்போ நான் அழகா இருக்கேன்னுதான் என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சீங்களா?
இல்ல வர்ஷா. உன்ன பாத்த உடனே பிடிச்சது உண்மைதான். எங்க அம்மாவோட ஆசையும்கூட உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கணும்தான்.
உனக்கு எப்படி என்ன பிடிச்சது? பொண்ணு பார்க்க வந்த உடனே சம்மதம் சொல்லிட்ட.
எனக்கும்தான் உங்கள பார்த்த முதல் பார்வையிலேயே பிடிச்சது. எங்க வீட்லயும் உங்களுக்கேதான் என்னைய திருமணம் செய்து கொடுக்கணும்னு முடிவே பண்ணிட்டாங்க
என்று கண்களை மின்னலாய் சிமிட்டினாள்.
வர்ஷா ஒன்னு சொல்லவா?
ம்ம்ம் சொல்லுங்க.
முதல்ல உன்ன பத்தி நானும் என்ன பத்தி நீயும் முழுசா புரிஞ்சுக்கணும். நம்மளோட விருப்பு வெறுப்புகள் எல்லாத்தையும் பகிர்ந்துக்கணும்.
ம்ம்ம்
என்று தலையசைத்தாள் வர்ஷா.
என் மக்கு செல்லம். இன்னைக்கு இல்ல. நாளையில இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தெரிஞ்சுக்கலாம், புரிஞ்சிக்கலாம். சரியா? இன்னொன்னு கேட்கவா வர்ஷா.
ம்ம்ம். கேளுங்க.
நீ என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிற?
அன்பு மட்டும்தாங்க.
இதெல்லாம் வார்த்தைக்கு மட்டும்தான் வர்ஷா. வாழ்க்கைக்கு சரியா வராது
என்றான் விஷ்வா.
அவள் செல்லமாய் கோபத்தை தனது விழிகளில் காட்ட,
சரி சரி வரும். அன்புதானே. என் கிட்ட இருந்து நிச்சயமாக கிடைக்கும்
என்றபடி சின்ன சிரிப்பை உதிர்த்து, வைத்த அன்பை புரிய வைக்க அவளை இறுக அணைத்து பின்பு விடுவித்தான்.
அவள் வெட்கம் பீறிட எதுவும் பேச வராமல் அமைதியாக என்ன செய்வதென்று தெரியாமல் அவன் முகத்தையே பார்த்துகொண்டிருந்தாள்.
வர்ஷா உன் கைய பிடிச்சிக்கட்டுமா? தோள்ல சாஞ்சிக்கணும் போல இருக்கு.
இத நீங்க என்கிட்ட கேட்கனுமா?
இல்லதான்
என்று சொல்லி அவளது பூவிரலை பற்றிக்கொண்டு அவளது தோளில் மெல்ல சாய்ந்து கொண்டான்.
வர்ஷா வாழ்க்கைல எவ்வளவு பிரச்சனை வந்தாலும் எப்பவும் என்கூடவே இருப்பியா?
நிச்சயமா இருப்பேங்க
, என அவனது நுனி மூக்கை கிள்ளி ஆட்டியவள், ஏங்க இப்படி கேக்கறீங்க?"
சும்மாதான். வர்ஷா ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே.
இல்லங்க.
நீ கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது லவ் பண்ணியிருக்கியா?
வர்ஷா சட்டென்று பதட்டத்தோடு இல்லங்க
என்றாள் ஒரு வித பயத்தோடு. முதல் முறையாக அவளுக்கு கொஞ்சம் பயம் வரத்தான் செய்தது.
என்னடா இப்படி கேட்டுட்டேனு நினைக்கிறயா வர்ஷா. நான் எப்பவும் ஓப்பன் டைப். நமக்குள்ள எந்த ஒழிவு மறைவும் இருக்கக்கூடாது. அதான் பட்டுனு கேட்டுட்டேன். நீ மனசுல எதுவும் வச்சிக்காத. லைட் ஆஃப் பண்ணிடலாமா?
என்றான்.
சரிங்க
என்றாள் வெட்கத்தோடு.
விஷ்வா லைட் ஆஃப் பண்ணிவிட்டு சின்ன ஜீரோவாட்ஸ் பல்பை மட்டும் எரியவிட்டான்.
அந்த ஒளியில் அவளது அழகை ஆசை தீர பார்த்து ரசித்தான்.
மெல்ல அவளருகில் வந்து தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்து கொண்டான்.
அந்த விளக்கொளியில் அவளது சிணுங்கள் சத்தம் அவன் காது மடலில் மெல்லியதாக கேட்க, அவளது மூச்சு காற்றின் வெப்பம் அவன் கழுத்தோறம் வீச, அவன் கட்டுப்பாடிழந்தான்.
வர்ஷா தன்னையும் மீறி அவனுள் கட்டுண்டு தன் விரல்களால் அவனது தலையைக் கோதி மெல்ல இழுத்து கண்களை மூடி இதழ்களால் மென்மையாக முத்தமிட, அந்த இதழ்களின் தீண்டல் திடீரென அவனுக்குள் ஏதோ பழைய ஞாபகத்தை கொண்டு வந்தது.
பேசாம இவகிட்ட நடந்த உண்மைய இப்பவே சொல்லிடலாமா?
என்று யோசித்தான். ‘வேண்டாம். அவசரப்பட்டு கிடைச்ச இந்த நல்ல வாழ்க்கைய விட்ற கூடாது’ என்றும் ஆழ் மனதில் சொல்லிக் கொண்டான்.
என்னங்க என்ன யோசனை?
ம்ம்ம்
என்றவனை மீண்டும் பேச விடாமல் வர்ஷா தன் இதழ் பதிக்க, அந்த உணர்வுகளையும் மீறி விஷ்வாவிற்கு மீண்டும் மீண்டும் அந்த சம்பவம் நினைவுக்கு வர,
வர்ஷா ப்ளீஸ் என்னைய தப்பா நினைக்காத. இப்போதைக்கு இதுவரை மட்டும் போதும். மத்த விஷயங்களுக்கு இப்போ அவசரப்பட வேண்டாம். நான் முன்னாடி சொன்ன மாதிரி ரெண்டுபேரும் கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டு அப்புறமா மத்த விஷயங்களை பாத்துக்கலாமே
என்றான்.
அவன் சொன்னதன் அர்த்தம் அவளுக்கு நன்றாக புரிந்தது. இவ்வளவு நேரம் நல்லாதானே இருந்தீங்க. இப்ப என்ன ஆச்சு
என வர்ஷா கேட்க,
அது ஒன்னும் ஆகல வர்ஷா. ரெண்டுபேரும் புரிஞ்சுகிட்டு, அப்புறம், அப்புறம்
என்று அவன் மேற்கொண்டு வார்த்தை வராமல் தடுமாற, அவள் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து கொஞ்சம் குடித்து விட்டு காலைல பேசிக்கலாம் நீ படுத்துக்கோ" என்றான்.
வர்ஷாவிற்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் சிறு புன்னகையோடும் பலத்த சிந்தனையோடும் படுத்துக் கொண்டாள்.
விஷ்வாவின் மனதில் மீண்டும் மீண்டும் அந்த சம்பவம் நினைவிற்கு வந்து அவனை ஆட்டிப் படைத்து நிம்மதி இழக்கச் செய்தது.
பகுதி – 2
வர்ஷாவின் அன்பும் அரவணைப்பும் ஒரு பக்கம் தவிக்க வைத்தது.
அவள் எதுவும் யோசித்து விடக்கூடாது
என்று அவளின் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு குட் நைட் சொன்னான் விஷ்வா.
இந்த சுகம் ஒன்று போதும்
, என அவனை கட்டி அணைத்து அவனது மார்புக்குள் அடைக்கலமானாள்.
அதிகாலை 5.30 மணியாக எழுந்து பார்த்துவிட்டு கொஞ்சம் வெட்கப்பட்டாள். நேற்றுவரை தனியாக உறங்கி பழகியவள் இன்று ஒரு ஆணுடன் கட்டியணைத்து உறங்கியதை எண்ணி தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள். அவனது தோளுக்கு கீழ் இருந்த தனது புடவையை மெதுவாக இழுத்துக் கொண்டு உட்கார்ந்தாள். அவனது தூக்கத்தை கண்டு ரசித்தாள்.
அவனது நெற்றியில் மென்மையாக இதழ் நோகாமல் முத்தமிட்டாள். பிறகு குளித்துவிட்டு அத்தையை தேடிப் போனாள்.
மாமியார் மரகதம் கோலம் போட்டுக் கொண்டு இருக்க, அத்தை இனிமேல் இந்த வேலை எல்லாம் நான் பார்த்துக்கிறேன் கொடுங்க
என்றாள்.
இருக்கட்டுமா. நாளைக்கு நீ போடு
என்று கூறிவிட்டு கோலத்தை முடித்துவிட்டு வர்ஷாவை உள்ளே அழைத்துச் சென்றாள்.
அத்தை சமைக்க எந்த பொருள் எங்க எங்க இருக்குன்னு சொல்லுங்க. நான் சமைக்கிறேன்.
வீட்டுக்கு வந்து ஒரு நாள்தான் ஆகுது. போகப்போக தெரிஞ்சுக்கலாம் கண்ணு. நீ கூட கொஞ்சம் ஒத்தாசையா இருந்தா போதும்.
ம்... சரி" என்றாள் வர்ஷா.
விஷ்வா தனியார் வேலையில் இருக்கான். கை நிறைய சம்பாதிக்கிறான். இது உனக்கு தெரிஞ்ச விஷயம்தான். ரொம்ப தங்கமான பையன். என்னடா நானே என் புள்ளைய பெருமையா பேசறேன்னு நினைக்காத வர்ஷா.
ஐயோ! அதெல்லாம் ஒன்னும் இல்லங்க அத்தை. நிஜமாகவே உங்க புள்ள சொக்கத் தங்கம்தான்
என்று இருவரும் பேசிக்கொண்டே சமையலை முடிக்க, விஷ்வா குளித்துவிட்டு வரவும் சரியாக இருந்தது.
விஸ்வா எத்தனை நாள் ஆபிசுக்கு லீவு சொல்லி இருக்க?
இன்னும் மூணு நாள் இருக்குமா. ஏம்மா?
சரி இரண்டுபேரும் உட்காருங்க. நான் சாப்பாடு போடுறேன்
என மரகதம் கூற,
நீங்க உட்காருங்க அத்தை
என்று வர்ஷா கூற,
மரகதம் பிடிவாதமாக வர்ஷாவை உட்கார வைத்தாள்.
அத்தையின் அரவணைப்பு அவளுக்கு தன் தாயை நி கொண்டு வந்தது. வர்ஷா கண் கலங்கினாள். அத்தையை இருக்கமாக கட்டிக் கொண்டாள். புகுந்த வீட்டில் இப்படி ஒரு அன்பு கிடைக்கும்
என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
விஷ்வா, வர்ஷா இருவருமே வீட்டிற்கு ஒரே பிள்ளைகள்தான். இருவருமே நல்ல தாய் தந்தையின் அரவணைப்பில் அன்பான சூழ்நிலையிலும் வளர்ந்தவர்கள்தான். வர்ஷா ஒரு டிகிரி மட்டுமே படித்திருந்தாள். அதற்குள் திருமணம் நடந்து முடிந்தது.
விஷ்வா எம்.பி.ஏ படித்து விட்டு தாயின் பிடிவாதத்தால் உள்ளூரிலேயே தனியார் கம்பெனியில் கை நிறைய சம்பளம் வாங்கும் அம்மாவின் செல்ல மகன். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. அவன் மனதில் மட்டுமே ஒரு மர்மம் இருந்தது.
விஷ்வா இன்னைக்கு லீவுதானே. வர்ஷாவை எங்கயாவது வெளில கூட்டிட்டு போயிட்டு வாயேன்
என்று மரகதம் கூற,
ஆமாடா மகனே. ஏதாவது நல்ல கோவிலா பாத்து கூட்டிட்டு போ
என்று சொல்லிக்கொண்டே விஷ்வாவின் அப்பா ராஜா அங்கு வர,
என்னங்க அதெல்லாம் நம்ம காலம். இப்பதான் என்னென்னமோ இருக்கே. எங்கயாவது போய்ட்டு வரட்டும்
என்றாள்.
இல்லம்மா முதல்ல உங்களுக்கு பிடிச்ச மாதிரி கோவிலுக்கு போயிட்டு அப்புறமா நாங்க வெளில போறோம்
என்றான் விஷ்வா.
சரிப்பா சாப்பிட்டு ரெண்டுபேரும் கிளம்புங்க
என்று மரகதம் கூற,
சாப்பிட்டுவிட்டு இருவரும் ஜோடியாக கிளம்பினார்கள். மரகதம் மகிழ்ச்சியாக நின்று வழியனுப்பி வைத்தார்.
முதலில் கோவிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு அதன் பிறகு சினிமா, ஹோட்டல்
என சுற்றிவிட்டு மாலை வீடு வந்து சேர்ந்தனர்.
மரகதம் இரவு உணவை தயார் செய்து கொண்டிருக்க,
இருவரும் ஒரு குளியல் போட்டு இரவு உணவை முடித்துவிட்டு தனது அறைக்கு வந்தனர்.
வர்ஷா ஆயிரம் கனவுகளோடும் ஆசையோடும் மெல்ல அவனை நெருங்கி தனது மைவிழி பார்வையால் பார்க்க அந்தப் பார்வையில் ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்தது. இன்றாவது நம்மை முழுமையாக ஏற்றுக் கொள்வானா?
என்ற ஏக்கமே.
‘விஷ்வாவும் இனியாவது தனது மனைவியை முழுமையாக ஏற்று சந்தோஷமாக வாழ வேண்டும்’ என்று நினைத்தான்.
என்னங்க கண்ண திறந்துட்டே கனவா?
என்று அவனருகில் அமர்ந்தாள். அவனது தலையை மென்மையாக வருடினாள். அந்த மென்மையான தீண்டல் அவனை கிறங்கடிக்கதான் செய்தது.
இ... இல்ல வர்ஷா. நீ பக்கத்துல இருக்கும் போது எனக்கு எப்படி வேற கனவு வரும்
என்று அவளை அப்படியே இழுத்து அணைத்துக் கொண்டான்.
வர்ஷாவின் முகம் குங்குமமாய் சிவக்க. இருவரின் உணர்வுகளும் அன்பு என்னும் நெருக்கத்தால் மெல்ல மெல்ல சங்கமம் ஆகத் தொடங்க, அதன் முதல் கட்டமாக அவளை இழுத்து கன்னங்களில் இதழ் பதிக்க, அவள் மேலும் முகம் சிவந்தாள்.
வர்ஷா அவனை மேலும் இழுத்து அணைத்துக் கொண்டு தன் இதழால் அவன் கன்னத்தை வருடி மென்மையாக இதழோடு இதழ் பதிக்க விஸ்வாவின் முகம் மெல்ல மெல்ல மாறியது.
வர்ஷா ப்ளீஸ். என்ன தப்பா எடுத்துக்காத. இதுக்கு மேல இப்போ வேண்டாம்
என்று அவசரமாக அவளை விட்டு விலகினான்.
வர்ஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் ஈட்டியால் குத்தியது.
பகுதி – 3
வர்ஷாவின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்த விஷ்வா அவளுக்கு குழப்பம் வர கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அவளது குழப்பத்தை திசை திருப்பும் வகையில் அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
ரெண்டு, மூனு நாளா ஒரு அலச்சல் வர்ஷா. அதான் கொஞ்சம் தலைவலி தாங்க முடியல.
அச்சோ! என்னங்க டாக்டர்கிட்ட போலாமா?
அதெல்லாம் வேண்டாம் வர்ஷா. ஒரு மாத்திரை போட்டா போதும்.
இருங்க. தலைவலிக்கு மாத்திரை கொண்டு வரேன்
என்று வர்ஷா மாத்திரையோடு தண்ணீரும் கொண்டு வந்து கொடுத்தாள்.
மாத்திரையைப் போட்டுக்கொண்டு விஷ்வா அமைதியாக படுத்துக் கொண்டான். வர்ஷா என்மேல கோவமா?
என்று கேட்டான்.
இல்லையே எதுக்குங்க கோபப்படனும். இதுல கோபப்பட என்னங்க இருக்கு. நீங்க அமைதியா கண்ண மூடி தூங்குங்க. நாளைக்கு பேசிக்கலாம்
என்றாள் வர்ஷா.
தேங்க்ஸ் வர்ஷா
என்று கண்களை மெல்ல மூடிக்கொண்டான். "மனமெல்லாம் ரணமாய் வலித்தது. பழைய நினைவுகள் வாட்டி வதைத்தது. மனதிற்குள் குற்ற உணர்வினால் புழுவாய் துடித்தான். பேசாம வர்ஷாகிட்ட