Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalukkum Undo Adaikkum Thazh?
Kaadhalukkum Undo Adaikkum Thazh?
Kaadhalukkum Undo Adaikkum Thazh?
Ebook60 pages17 minutes

Kaadhalukkum Undo Adaikkum Thazh?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விஷ்ணு சரண்யா இருவரும் கணவன் மனைவி. தன்னால் தாயாக முடியாதென்று தெரிந்த சரண்யா தேர்ந்தெடுத்த வழி என்ன? அது அவளை எப்படி பாதிக்கிறது?

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580145507390
Kaadhalukkum Undo Adaikkum Thazh?

Read more from Gavudham Karunanidhi

Related to Kaadhalukkum Undo Adaikkum Thazh?

Related ebooks

Reviews for Kaadhalukkum Undo Adaikkum Thazh?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalukkum Undo Adaikkum Thazh? - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    காதலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

    Kaadhalukkum Undo Adaikkum Thazh?

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    அதிகக் குளிர் விஷ்ணுவை நேரமாகவே எழுப்பியிருந்தது. தூங்கிக் கொண்டிருந்த மனைவி சரண்யாவைப் பார்த்தான்.

    'உறங்கும் போதும்

    உன் எழில்

    உறங்குவதில்லை

    கிறங்க வைக்கிறாய்

    மயங்க வைக்கிறாய்

    முயங்க வைக்கிறாய்'

    மனதிற்குள் கவிதை ஓடியது. சட்டென்று ஒரு சந்தேகம் வந்தது. முயங்க வைக்கிறாய் சரியான பதம் தானோ?

    தமிழ் அகராதி எடுத்துப் பார்த்தான். முயங்குதல் என்றால் புணர்தல் என்றிருந்தது. அதற்குப்பதில் உணர்தல் என்றிருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு.

    உண்மைதானே?

    புணர்தல் என்றாலே இன்பத்தை அன்பை நேசத்தை ஒருவருக்கொருவர் உணர வேண்டும் என்பதால் உணர்தல் சரியான பொருள்தான். தனக்குள் சொல்லிக் கொண்டான்.

    'புணர வைத்து

    உணர வைக்கிறாய்

    என்  உலகம் நீ

    என்பதை!'

    என்ன இது? விடியற்காலையில் இப்படிப்பட்ட கிறுக்கல்கள்? விஷ்ணுவிற்கு சிரிப்பாய் வந்தது.

    விஷ்ணு நிறைந்திருந்தான். மலர்ந்திருந்தான். அதற்கு காரணம் சரண்யா. கொண்டாட வைக்கும் அழகில்லை என்றாலும் உறவுகளைத் துண்டாடும் குணமோ கணவனிடம் அதையும் இதையும் சொல்லித் திண்டாட வைக்கும் குணமும் இல்லாதிருந்ததால் விஷ்ணுவிற்கு சரண்யாவை நிறையவே பிடித்துப்போனது.

    தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருக்கும் விஷ்ணு பள்ளி முடிந்த அடுத்த நிமிடம் வீட்டில் இருந்தான்.

    நிறைய பேர் கேட்டும் ட்யூஷனைத் தவிர்த்திருந்தான்.

    அதற்குக் காரணம்

    'என் சரண் தனியாக இருப்பாள். அவளுடன் நேரம் செலவழிப்பதை விட எனக்கு வேறு ஒன்றும் பெரிதல்ல'

    விஷ்ணு அடிக்கடி சொல்வது.

    சரண்யாவும் விஷ்ணு மீது உயிராக இருந்தாள். அவனை அவன் விழிகளில் புரிந்திருந்தாள். பசியறிந்து உணவிடுவதும் தன்னை உணவாகக் கொடுப்பதும் அவன் விழியறிந்து செய்ததால் எளிதில் அவன் மனதைக் கவர்ந்து கொண்டாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1