Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mouna Thedal
Mouna Thedal
Mouna Thedal
Ebook75 pages26 minutes

Mouna Thedal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தர்ஷினி ஒரு கல்லூரி மாணவி. தன் தாயுடன் வாழ்ந்து வரும் அவள் சக மாணவன் மீது காதல் வயப்படுகிறாள். அவன் மாமா தான் தனது தந்தை என்று அறிந்தவள் தன் தாயின் வாழ்க்கையில் புதைந்து கிடக்கும் மர்மத்தை அறிய முயல்கிறாள். அந்த மர்மம் என்ன? அவள் குடும்பம் ஒன்று சேர்ந்ததா?

அசத்தலான குடும்ப நாவல் மௌனத் தேடலை வாசிப்போமா?

Languageதமிழ்
Release dateAug 9, 2021
ISBN6580145507217
Mouna Thedal

Read more from Gavudham Karunanidhi

Related to Mouna Thedal

Related ebooks

Reviews for Mouna Thedal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mouna Thedal - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    மௌனத்தேடல்

    Mouna Thedal

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    தர்ஷினி எழுந்திடு 

    அம்மா கமலத்தின் குரல் தூரமாய் எங்கிருந்தோ கேட்பதுபோல் தர்ஷினிக்குத் தோன்ற 

    அதைக் கண்டு கொள்ளாத தர்ஷினி உறக்கத்தைத் தொடர்ந்தாள்.

    உறங்கிக்கொண்டிருந்த தர்ஷினியின் அருகில் வந்த கமலம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். நேரமாகிவிட்டது இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று திட்டியபடி அறைக்குள் வந்த கமலம் தர்ஷினியின் முகத்தைப் பார்த்து அன்பு வழிய பார்த்துக்கொண்டே நின்றாள்.

    எதார்த்தமாகக் கண்விழித்த தர்ஷினி கமலம் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து புன்னகைத்தபடி கேட்டாள்.

    என்னம்மா காலையிலேயே பாசமலர் ட்ராக் ஆரம்பிச்சிட்டியா?

    பேசுவடி நீ. இன்னிக்கி பிரசன்டேஷன் இருக்கு சீக்கிரம் எழுப்பிவிடும்மான்னு சொன்னது யாரு?

    பிரசன்டேஷன் என்ற வார்த்தை தர்ஷினியை எழ வைத்தது. எழுந்து அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.

    இன்னும் சின்னப்பிள்ளைன்னு உனக்கு நெனப்பு. 

    கமலம் பொய்க்கோபத்துடன் சொல்ல தர்ஷினி சிரித்தாள்.

    என்னிக்கு இருந்தாலும் நான்தான் உன்னோட பிள்ளை உனக்கு சின்ன பிள்ளை 

    தர்ஷினி சொல்ல கமலம் மலர்ந்தாள். 

    தர்ஷினி இறுதியாண்டு பொறியியல் படிக்கும் மாணவி. கமலம் அரசுப் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியை. செய்யுள்களை எடுத்துக்காட்டுகளுடன் கமலம் விளக்குகையில் மாணவர்கள் மெய்மறந்து உட்கார்ந்திருப்பர். 

    அம்மா மகள் இருவர் மட்டும்தான். தர்ஷினிக்கு நினைவு தெரிந்ததிலிருந்து தன் தந்தை யார் என்று தெரியாது. சிறுவயதில் எல்லா குழந்தைகளுக்கும் அப்பா இருக்கும் போது தனக்கு மட்டும் ஏன் இல்லை என்று எண்ணி இருக்கிறாள். கமலத்திடம் பலமுறை கேட்டு அழுதிருக்கிறாள். அப்போதெல்லாம் கமலத்தின் ஒரே பதில் மௌனம் தான். 

    இப்போது விவரம் தெரிந்த பிறகு கூட அம்மா அப்பாவைப் பற்றி ஏதாவது சொல்லுவாளோ என்று தர்ஷினி எதிர்பார்த்திருந்தாள். 

    கமலம் அதைப்பற்றி மூச்சுவிட மறுக்க இப்போதெல்லாம் தர்ஷினி கமலத்திடம் அப்பாவைப் பற்றி பேசுவதில்லை.

    என்றாவது ஒருநாள் அம்மாவிற்கு சொல்லத் தோன்றும் அப்போது சொல்லட்டும் என்று அமைதியாகிவிட்டாள்.

    கமலம் வேலை பார்க்கும் பள்ளி பவானியில் உள்ள காளிங்கராயன் பாளையத்தில் உள்ளது. 

    பள்ளியின் அருகிலேயே அவர்களின் வீடு உள்ளது. அது ஒரு அவென்யு போல வரிசையாய் வீடுகள் அமைந்திருந்தன.

    ஒவ்வொரு வீட்டின் முன்பும் பூச்செடிகள் நடப்பட்டு வாசம் வீசிக் கொண்டிருந்தன.

    அன்று தர்சினிக்கு இறுதியாண்டு ப்ராஜக்ட் பிரசன்டேஷன். ஏற்கனவே தயார் செய்து விட்டாலும் மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்ப்பதற்காக நேரமாக எழ வேண்டும் என்று கமலத்திடம் சொல்லிவிட்டு படுத்திருந்தாள் தர்ஷினி

    கமலம் கொடுத்த காபியை கடகடவென்று குடித்துவிட்டு குளியலறைக்குச் சென்று குளித்துவிட்டு புது மலராய் வெளியே வந்த தர்ஷினியின் எழிலை மௌனமாய் பருகினாள் கமலம்.

    'என் மகள் இப்பொழுதுதான் கைக்குழந்தையை பார்த்தது போல் இருக்கிறது அதற்குள் வளர்ந்துவிட்டாள். படிப்பையும் முடிக்கப் போகிறாள். அவளுக்கு ஒரு வரன் பார்த்து ஒரு நல்லவன் கையில் ஒப்படைத்து விட்டால் நான் இந்த பூமிக்கு வந்ததற்கான பயன் முடிவடைந்துவிடும்'

    தனக்குள்

    Enjoying the preview?
    Page 1 of 1