Unakkagave Naan
()
About this ebook
திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.
இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.
காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.
இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.
1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.
2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.
Read more from Lakshmi Rajarathnam
En Anni - En Manaivi? Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakavillai Nenjam! Rating: 0 out of 5 stars0 ratingsNavagrahangal Rating: 1 out of 5 stars1/5Thiruppugal Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Swarangalukkul… Rating: 0 out of 5 stars0 ratingsVaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsNinaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsBhavishya Puranam Rating: 2 out of 5 stars2/5Arputha - Athisaya Aalayangal Rating: 5 out of 5 stars5/5Marakkuma Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Thanthaiyumaagi Thayumaagi Rating: 5 out of 5 stars5/5Minnal Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsBramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Aanmeega Amudham Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsAshtalakshmi Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhali… Ennai Kaadhali… Rating: 0 out of 5 stars0 ratingsYaarukku Mappillai Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsEnakkul Nee! Rating: 5 out of 5 stars5/5Aanmeega Amudham Part - 2 Rating: 5 out of 5 stars5/5Lakshmi Rajarathnam Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAbiyum Azhaganum Rating: 2 out of 5 stars2/5
Related to Unakkagave Naan
Related ebooks
Deivam Thantha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsEllame Nee Sonnathu... Rating: 0 out of 5 stars0 ratingsSaathaga Paravai..! Rating: 0 out of 5 stars0 ratingsAval Rating: 0 out of 5 stars0 ratingsGanga Rating: 5 out of 5 stars5/5Anal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Kannamochi Yenada? Rating: 0 out of 5 stars0 ratingsNee Sooriyan, Naan Thamarai Rating: 5 out of 5 stars5/5Mangai Necklace Rating: 5 out of 5 stars5/5Kumari Penne! Kuyilaale! Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Ennul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Thelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Yerikkadiyil Sila Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsAndroru Naal Rating: 3 out of 5 stars3/5Lakshmi Rajarathnathin Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Vaanam Vittu Vaa Nilave Rating: 0 out of 5 stars0 ratingsNeerindri Oru Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsVaa Pon Mayile Rating: 0 out of 5 stars0 ratingsUyirum Unakkaga Rating: 0 out of 5 stars0 ratingsEn Yavana Rani Rating: 5 out of 5 stars5/5Sippikkul Muthu Rating: 5 out of 5 stars5/5Kaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Kaadhalin Pidiyil... Rating: 0 out of 5 stars0 ratingsOrey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Puli Vettai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Unakkagave Naan
0 ratings0 reviews
Book preview
Unakkagave Naan - Lakshmi Rajarathnam
http://www.pustaka.co.in
உனக்காகவே நான்
Unakkagave Naan
Author:
லட்சுமி ராஜரத்னம்
Lakshmi Rajarathnam
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
1
மதியம் பன்னிரெண்டு மணி வெய்யில் தகித்தது. ஓலமிடும் நாய்கள் கூட ஓரங்கட்டிப் படுத்துக் கிடந்தன. மரங்கள் அசையவில்லை. மரத்தடியில் கொய்யா, கார மாங்காய் துண்டுகள், நெல்லிக் காய்கள், கடலை மிட்டாய் என்று சாக்கு விரித்துப் போட்டு விற்கும் ஆயா வெய்யில் சூட்டில் கண்ணை அசத்தும் தூக்கத்தில் தலையைச் சாய்த்து சரிய முயன்றாள்.
ஐஸ் விற்கும் வியாபாரி பள்ளிக்கூடம் விட்டதும் பெட்டியைத் திறக்கக் காத்திருந்தான். வேக வேகமாகக் காலை எட்டிப் போட்டு வீட்டை அடைந்தாள் காவேரி. புடவைத் தலைப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டாள். மூலையில் இருந்த பானையிலிருந்து நாலைந்து தம்ளர் தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்தாள். கொஞ்சம் களைப்பு நீங்கியது.
ஓரமாகக் கட்டப்பட்ட கொடியில் கிடந்த பழைய புடவைத் தலைப்பை எடுத்து வாசற்படிக்கு எதிராக விரித்துப் போட்டுக் கொண்டு படுத்து விட்டாள். கலீர் கலீர் என்று தாயக்கட்டை உருளும் சத்தம்...
ஒரு தாயம்... இரு தாயம்...
பானுவின் குரல் பலமாக - வயசுப் பெண் என்ற அடக்கம் இல்லாமல் வந்தது. தூக்கக் கிறக்கத்தில் ஆழ்ந்த காவேரியை இக்குரல் இம்சித்தது. வாசலில் பானு உட்கார்ந்திருப்பது - அதுவும் தங்கக் குருத்தாகக் கால்கள் தெரிய உட்கார்ந்திருப்பதும் தெரிந்தது. காற்றின் அசைவில் வேப்பமரத்தின் சலசலப்பாகத் தாயின் நெஞ்சில் பாசத்தின் பீறிடல்.
கணுக்கால் அசைவில் கொலுசு சப்தம்... பிடிவாதம் பிடித்து வாங்கிப் போட்டுக் கொண்ட கொலுசு... தன் சக்திக்கு மீறி காவேரி வேலை பார்க்கும் வீட்டில் முன்பணம் வாங்கி பெண்ணுக்குப் போட்டு அழகு பார்த்த கொலுசு.... நிறைய சதங்கைகள் கட்டிய கொலுசு....
அதன் அசைவுகள் காவேரியின் கடுமையைக் குறைத்து விடும். இப்பொழுதும் குரல் அழுந்தி பாசம் மிளிர்ந்தது.
பானும்மா, உள்ளே வந்து ஆடக் கூடாதாம்மா
போம்மா
என்ற பானு, என்ன விழுந்ததோ என்னவோ கலீரென்று சிரிக்கிறாள்.
சந்தர் - பானுவின் அண்ணன் படி ஏறி வந்தான். தங்கை பானு இப்படி உட்கார்ந்திருப்பது கண்களை உறுத்தியது. பானுவை விட மூன்று வயசு பெரியவன்.
டீ, போடி உள்ளே
பானு கண்களை மலர்த்தினாள்.
விசாலமான விழிகள்.
கருவிழிகள் பாலில் மிதக்கும் கருந்திராட்சையாக உருள விட்டாள்.
போடின்னா
கையை ஓங்கினான்.
"வெவ்வெவ்வே...''
காய்களைத் திரட்டிக் கொண்டாள் பானு.
இப்பப்போ அப்புறம் விளையாடலாம்
விசாலம் ஓடிப் போனாள்.
சந்தர் உள்ளே வந்தான்.
"என்னடா இந்த நேரத்துல?'' காவிரி கவலையுடன் விசாரித்தாள்.
ஒண்ணுமில்ல
சின்னத் தயக்கம். தாயருகில் வந்து நின்றான். பானு, அண்ணன் அருகில் வந்து நின்றாள். சந்தரின் பார்வை பானுவின் பக்கம் திரும்பியது. பானு மெல்ல நகர்ந்து கொண் டாள். பற்களைக் கடித்தான் சந்தர்.
இந்த ரெண்டுங்கெட்டான் கூட உனக்கு என்ன? பேசாம போ
என்றாள் அம்மா.
என்னம்மா நீ? பாவாடையை வழிச்சுண்டு கால் தெரிய உட்கார்ந்திருக்காம்மா வாசல்ல
சீறினான் சந்தர்.
சரிடா, நீ வந்த வேலையைச் சொல்லு. இவளை நான் கண்டிக்கிறேன்
பரீட்சைக்குப் பணம் கட்டணும்மா
காவேரி சட்டென்று தனக்குள் ஒடுங்கிக் கொண்டாள்.
சந்தருக்குத் தாயின் நிலைமை தெரியாதா என்ன?
நீ வருத்தப்படுவேன்னுதாம்மா சொல்லலே
காவேரி மெல்லச் சிரித்தாள்.
இதுல வருத்தப்பட என்னடா இருக்கு? மண்டூ... மண்டூ
என்று மகனின் தலையை மெல்ல பிடித்துத் திருப்பினாள்.
மறந்தே போய்ட்டேன். நீ போ... நாளைக்குத் தர ஏற்பாடு பண்றேன். போன்னா போயிடாதே. காபியை சுட வச்சுத்தரேன்.
என்றவள், காபியைக் கலந்து மகனுடைய கையில் கொடுத்தாள்.
காபி என்று அம்மா கலந்து கொடுத்த சுடு கலர்த் தண்ணீரைக் குடித்துவிட்டு சந்தர் போனான்.
காற்று இல்லாத புழுக்கம். விசிறியால் விசிறியபடியே படுத்துக் கொண்டாள் காவேரி. பானு ஸ்கிப்பிங் கயிறை எடுத்துக் குதிக்கத் தொடங்கினாள்.
பானு குதித்த குதியில் படுத்துக் கொண்டிருந்த காவேரியின் காதுகளில் தம்தம் என்று தரை அதிர்ந்தது.
தடி முண்டமே, என்ன குதியல்?
என்ற காவேரி, தலையைத் தூக்கி வயசு பதினாறு ஆகப்போறது. ஒருத்தொருத்தி என்னமா சம்பாதிக்கிறா? குடும்பத்தைக் காப்பாத்தறா.... ஒண்ணு கிடையாது
என்று வயிற்றெரிச்சல் தாங்காமல் கத்தினாள்.
பானுவின் முகம் சுண்டியது. அம்மாவின் மன உளைச்சல் புரியவே இல்லை. அம்மா ஏன் இப்படி கத்துகிறாள். முகம் சிறுத்துப் போக சுவரோரம் சரிந்து உட்கார்ந்து கொண்டாள். கொலுசு சிணுங்கியது. அம்மா சொல்லும் சில வார்த்தைகள் அவளுக்குப் புரிவதில்லை. என்ன சொல்லுகிறாள்? என்ன பண்ண வேண்டும்? குரங்கு போல் தலை முடிக்குள் விரலை விட்டு இலேசாகச் சொரிந்து கொண்டாள். வெய்யிலின் வெக்கையும், சுகமான கண்ணழுத்தமும் தூக்கத்தைத் தர, சுவரோரம் சரிந்து அப்படியே படுத்துத் தூங்கிப் போனாள்.
காவேரியின் கணவர் ஒரு புரோகிதர். வயிறு வாடாமல் தான் காலம் சென்றது. தீபா, சந்தர், பானு என்று மூன்று குழந்தைகள். வருமானம் பசியைத் தீர்த்தது. வறுமையைத் தரவில்லை. அதற்கு மேல் எதையும் எதிர்பார்க்க முடியாது. அவர் புரோகிதம் செல்லும் இடங்களில் நவராத்திரி என்றால் பெண் குழந்தைகள் இருவருக்கும் துணிகள் கிடைத்தன. சுமங்கலி பிரார்த்தனை என்றால் காவேரிக்குப் சால் புடவையும் கிடைத்தது.
நவக்கிரக பூஜைகள், கிரகப்பிரவேசம் என்றால் அவருக்கும் வேஷ்டி துண்டுகள், ரவிக்கை துணிகள் எல்லாம் அளவுக்கு அதிகமாகவே கிடைத்தன. கோயில் கும்பாபிஷேகம் என்றால் வைதிகர்களுக்கும் கணிசமான பணமும் சம்பாவனையாகக் கிடைத்தது. சந்தருக்கும் புரோகிதம் பண்ணும்இடங்களில் ஏதாவது துணிகள் கிடைத்துவிடும். பணம் கிடைத்ததே என்று செலவு செய்து விடாமல் காவேரி இழுத்துப் பிடித்து செலவு பண்ணினாள்.
அதனால் குழந்தைகள் பள்ளிப் படிப்பிற்கு சரியாக இருந்தது. கடன் வாங்காமல் குடும்பச் சக்கரம் ஓடியது.
ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு - இடியும், மின்னலும் வானத்தைக் குத்தகை எடுத்தாற்போல கொட்ட வைத்த மழையைக் கண்டு நகரத்தினர் பயந்தே போனார்கள். ஏதோ வேலையாகக் காவேரியின் கணவர் வெளியே போனார். குழந்தைகள் மூவரும் மழையை வேடிக்கை பார்த்தனர்.
அம்மா, சூடா பஜ்ஜி போட்டுத் தாம்மா
புரோகிதம் பண்ணுவதால் தான்யங்களுக்கும் வாழைக்காய்க்கும் பஞ்சம் இல்லை. காவேரி பஜ்ஜி போட்டாள்.
அப்பா வந்தால் சூடா போட்டுத்தரேன். நீங்க இப்ப தின்னுங்கோ
வெளியே பிரளயமாகக் கொட்டிய மழை நிற்கவே இல்லை. காவேரியின் கணவரும் வரவே இல்லை. மழையில் எங்கேயோ தங்கி இருப்பார் என்று காத்திருந்தாள். விடியற் காலையில் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்த குழந்தைகள் அப்பாவைத் தேடினார்கள்.
அவர் வரவே இல்லை. வீடு வீடாகச் சந்தரையும், மூத்த மகள் தீபாவையும் அனுப்பித் தேடினாள் காவேரி. அவர் எங்கேயும் இல்லை. தன் சக்தியை மீறி செலவு பண்ணித் தேடினாள். கழுத்தில், கையில் கிடந்த நகைகள் எல்லாவற்றையும் விற்றுத் தேடினாள்.
அவர் வந்துட்டா போதும். இன்னும் ரெண்டு உபாத்யாயத்துக்குப் போனா நகைகளைப் பண்ணிப் போட்டுப்பேன். அவர் வருவாரா?
என்று அழுதாள் காவேரி.
காவேரி, ரிஷிகேஷத்தில் உன் புருஷனைப் போலவே ஒருத்தரைப் பார்த்தேன்டி
என்றாள் ஜானுப்பாட்டி.
மாதிரியா இருந்தவரை எல்லாம் கணவரா நினைக்க முடியுமா என்ன?
பாட்டி, ரிஷிகேஷம் போய் வர எங்கிட்ட பணமோ, சக்தியோ இல்லையே பாட்டி நீங்க அவரை யார் என்னன்னு விசாரிச்சுண்டு வந்திருக்கலாமே?
"அடிப்பாவிப் பெண்ணே. என்னைப் பாத்ததுமே அந்த மனுஷன் காவித் துணியை முகத்துல போட்டு மறைச்சுண்டு சந்யாசிகளோட