Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Minnal Pookkal
Minnal Pookkal
Minnal Pookkal
Ebook96 pages26 minutes

Minnal Pookkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.

இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.

காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.

இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.

1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.

2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580115705724
Minnal Pookkal

Read more from Lakshmi Rajarathnam

Related to Minnal Pookkal

Related ebooks

Reviews for Minnal Pookkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Minnal Pookkal - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    மின்னல் பூக்கள்

    Minnal Pookkal

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajaratnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    *****

    அத்தியாயம் 1

    லஞ்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு மேஜையடியை விட்டு நகர்ந்த பொழுதுதான் போன் வந்தது.

    போன் மேஜைக்கு அருகில் இருந்த சுந்தரி போனை எடுத்தாள்.

    அபர்ணா, உனக்குத்தான் போன்அபர்ணாவுக்கு முகம் சிவந்தது. விவேக்தான் இந்த நேரத்தில் போன் செய்வான்.

    சுந்தரி அபர்ணாவின் முகத்தையே கவனித்தாள். நாணத்தால் சிவந்த முகத்தைப் பார்த்துப் புன்னகை பூத்தாள்.

    ரொம்ப சிலிர்த்துக்காதே

    ஏண்டி?

    போன் பண்றது உங்களாள் இல்ல உங்கப்பா

    முகம் மாறுகிறது அபர்ணாவுக்கு. அப்பா எதுக்காக இந்த நேரத்துல போன் பண்றார்?

    அப்பாவை நினைத்தாலே கோபம் பொங்குகிறது. சர்வாதிகாரத்தனம். ஒரு பைசாவைக் கூட விடாம கணக்கு காட்டவேண்டும். அவர் வீட்டில் இருந்தால் வீடு அமைதி காக்கும். டி.வி. போடக்கூடாது படிப்பு படிப்பு படிப்புத்தான்.

    அதிலும் அவள் ஒரே பெண்.

    அண்ணா ஒருவன் இருந்தான். போன வருடம் கல்லூரி நண்பர்களுடன் எஸ்கர்ஷன் போன பொழுது அருவியில் போய்விட்டான்.

    அப்பா சாதாரண குமாஸ்தா. அவன் படிப்பு முடிந்து ஏற்கப் போகும் பெரிய வேலையைத் தான் நம்பிக் கொண்டிருந்தார். அவனே இல்லை என்று ஆன பின்பு தலையில் இடி இடித்த மாதிரி குடும்பம் நிலை குலைந்து போயிற்று.

    அவனுடைய இஞ்ஜினீயரிங் படிப்பிற்காகவே அவளுடைய படிப்பை அப்பா நிறுத்திவிட்டார். தட்டெழுத்து, சுருக்கெழுத்து என்று படித்தாள்.

    அப்பா, இந்தப் படிப்புக்கு வேலை எதுவும் கிடைக்காது

    அப்பா கொஞ்சம் இறங்கி வந்தார்.

    என்ன பண்ணலாம்னு சொல்றே?

    கம்ப்யூட்டர் படிக்கறேம்பா. அதுலதாம்பா வேலை கிடைக்கும். வரப்போற யுகம் கம்ப்யூட்டர் யுகம் தாம்ப்பா

    அப்பா யோசித்தார். மகனைப் படிக்க வைப்பதற்காக மகளின் படிப்பை நிறுத்தியாயிற்று. அவளுக்கும் ஒரு வழி காட்ட வேண்டியது என் கடமை அல்லவா? கல்யாண மார்க்கெட்டில் வேலைதானே ஒரு லைசென்ஸ்?

    சரி போ. சேர்ந்துக்க... கடுகடு முகத்துடன் சொன்னார். இதையே சிரித்துக் கொண்டு சொன்னால் என்ன! கம்ப்யூட்டர் வகுப்பில் சேர்ந்து கொண்டாள்.

    பல கம்பெனிகளுக்கு அப்ளிகேஷன் போட்டதில் ஒரு கம்பெனியில் வேலை கிடைச்சது.

    குடும்பம் அவளுடைய சம்பளத்தையும் சேர்த்துக் கொண்டதில் கொஞ்சம் வளப்பம் கண்டது. அண்ணனின் படிப்புக்கு பணம் ஒதுக்க முடிந்தது. கௌரவமாக உடைகளை வாங்கிக் கொள்ள முடிந்தது.

    குடும்பம் நிமிர்ந்து நின்ற பொழுது தான் அண்ணன் அருவியில் மாண்டு போனான்.

    அண்ணன் போனதும் அப்பா ஒடுங்கிப் போனார். ஆனாலும் கோபமும் கெடுபிடியும் குறையவே இல்லை. அனாவஸ்யமாக அவள் அலுவலகத்திற்கு போன் பண்ண மாட்டார்.

    இப்பொழுது எதற்காக போன் பண்ணுகிறார்! அம்மாவுக்கு உடம்பு ஏதாவது தொல்லையோ? அம்மாவுக்கு ஆஸ்துமா தொந்தரவு உண்டு மழைக் காலம் என்றாலே கஷ்டம்தான்.

    அம்மாவை நினைத்ததும் பதை பதைப்பு கூடுகிறது. 'அம்மாவுக்கு ஏதாவது ஒன்று என்றால் என்னால் தாங்க முடியாது!’ வேகத்தோடு ரிஸீவரை எடுத்தாள்

    அபர்ணா, அப்பா பேசறேம்மா...

    சொல்லுங்கப்பா

    அரை நாள் விடுப்பு எடுத்துகிட்டு உடனே கிளம்பி வாம்மா. உன்னைப் பெண் பார்க்க வராங்க

    அப்பா அப்பா பேசு முன் அப்பா போனை வைத்து விட்ட ஙொய்.. ஒலி.

    சுந்தரி இவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார். முகத்தில் கவிழ்ந்து கிடக்கும் ஏமாற்றம், துயரம், வேதனை எல்லாம் அவளுக்குக் கதையைத் தருகின்றன.

    என்ன அபர்ணா, பெண் பார்க்க வராங்களா!

    உம்... எப்படி தெரிஞ்சுகிட்டே?

    உன் முகமே எழுதிக் காட்டிருச்சேடி

    சிலையாக நின்றாள் அபர்ணா.

    அபர், இப்படி நின்னுட்டா எப்படி?

    என்ன பண்றதுன்னு தெரியல்லடி

    விவேக்கிட்ட சொல்லிடு.

    விவேக் இல்லையே. கல்கத்தா பேயிருக்காரு சுந்தரி மேஜை இழுப்பறையை இழுத்து இழுத்து மூடினாள்.

    அபர், பெண் பார்க்கத்தானே வராங்க. பெண் பிடிச்சு, டேம்ஸ் எல்லாம் தகைஞ்சு அப்புறம் தானேடி கல்யாணம்? ஏன் பயப்படறே? பெண் பார்த்துட்டுப் போகட்டுமே!

    சுந்தரி மனத்துக்கு இதத்தைத் தந்தாள்.

    வா, சாப்பிடலாம்

    வீட்டுக்கே போயிடறேன் சுந்தரி

    பசியோட போகாதே பிரச்சினை பூதாகாரமாத் தெரியும்

    அதுவும் உண்மைதான்.

    சாப்பாட்டைப் பிரித்து வைத்துக் கொண்டார்கள். தன்னுடைய டிபன் பாத்திரத்தில் இருந்த பூரியில் இரண்டை எடுத்து சுந்தரியின் டிபன் பாத்திரத்தில் வைத்தாள்.

    சுந்தரி இட்லி இரண்டை வைத்தாள். உனக்கு எப்படி கல்யாணம்?

    பூரியின் சுவையில் லயித்த சுந்தரி நிமிர்ந்து பார்த்தாள்.

    கிண்டலா!

    சீ... உண்மையாத்தான் கேட்டேன்

    "ரெண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1