Varathachanai
()
About this ebook
வான் மதிக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு மகள், ஒரு மகன், கணவன் இல்லை. மகள் அபிராமி நூறு சவரன் நகை போட்டு திருமணம் செய்து வைக்கப் பெற்றவள். ஆனால் அவளுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் பிறந்த வீட்டிற்கு துரத்தப் பட்டவள். மகன் அஸ்வின் திருமணம் ஆகாதவன். நல்ல வேலை, கை நிறைய சம்பளம்.
அஸ்வின் பல வருடங்களாக ரோஜா என்ற பெண்ணை காதலித்து வந்தான். ரோஜாவும் அவனை காதலித்தாள். ரோஜாவின் தாய் வீட்டு வேலை செய்பவள். தந்தை டீ கடை வைத்திருப்பவன். ரோஜாவிற்கு வெண்ணிலா என்ற தங்கையும் உண்டு. வெண்ணிலா படித்து கொண்டிருந்தாள். ரோஜா அஸ்வின் வேலை செய்யும் அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றினாள்.
வான் மதிக்கு தனக்கு வர போகும் மருமகளை பற்றிய எண்ணம் பெரியதாக இருந்தது. தனக்கு வர போகும் மருமகள் குறைந்தது ஐம்பது சவரன் நகைகள் போட்டுகொண்டு வர வேண்டும் என எதிர்பார்த்தாள். ஆனால் அஸ்வினுக்கு தனக்கு வரப்போகும் மனைவியை தன் வீட்டு ராணியாக மட்டுமே பார்க்க ஆசைப்பட்டான். அவனுக்கு நகைகள் மீது விருப்பம் இல்லை. இதனால் அம்மாவிற்கும் மகனுக்கும் அடிக்கடி சண்டை வந்தது. இனி தொடர் கதை காணலாம்.
Related to Varathachanai
Related ebooks
Kattil Pazhakkam Rating: 0 out of 5 stars0 ratingsKadhali Ilavasam Rating: 0 out of 5 stars0 ratingsPoimai Perunthee! Rating: 0 out of 5 stars0 ratingsVazhikatti Vazhi Thavarugirathu! Rating: 5 out of 5 stars5/5Dhrogam Puthithu! Rating: 0 out of 5 stars0 ratingsAmmavum Pussykuttyium Rating: 0 out of 5 stars0 ratingsMothers Touch! Rating: 0 out of 5 stars0 ratingsThelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5என் வீட்டு பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsEn Veettu Pookkal Rating: 5 out of 5 stars5/5Kadaisi Varai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsMaalai Idum Sontham Rating: 0 out of 5 stars0 ratingsIlavu Kaatha Nilavu! Rating: 0 out of 5 stars0 ratingsNetru Varai Nee... Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsNee Eppa Varuvey? Rating: 0 out of 5 stars0 ratingsOru Gangaiyin Kadhai Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsPoruthathu Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsKettathu Kidaikkum! Rating: 0 out of 5 stars0 ratingsSakkarai Nilavey Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Ilankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5En Vazhvin Thean Thuli... Rating: 4 out of 5 stars4/5Pennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsNandha Rating: 0 out of 5 stars0 ratingsEnnulle Nirainthai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaaniley Rating: 5 out of 5 stars5/5Vizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsNee Enthan Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsஇப்போது இல்லை! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Varathachanai
0 ratings0 reviews
Book preview
Varathachanai - Meena Saravanan
http://www.pustaka.co.in
வரதட்சணை
Varathachanai
Author:
மீனா சரவணன்
Meena Saravanan
For more books
http://www.pustaka.co.in/home/author/meena-saravanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
வெண்ணிலா, சீக்கிரம் எழுந்திரு! ஸ்கூலுக்கு டைம் ஆச்சி! ஆட்டோ வந்திடும்
என ரோஜா காலையிலேயே கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். வெண்ணிலா தூக்க கலக்கத்தில் மெதுவாக எழுந்து வந்தாள்.
அம்மா எங்க அக்கா?
அவங்க காலையிலேயே வீட்டு வேலைக்கு கிளம்பி போய்ட்டாங்க! நீ போய் சீக்கிரம் ரெடியாகிட்டு வா! தோசை சுடறேன். சாப்பிட்டு சீக்கிரம் கிளம்பு, எனக்கும் நேரமாச்சி!
ரோஜா தோசை சுட்டுக்கொண்டே ஒரு டிபன் பாக்ஸில் லெமன் சாதம் வைத்தாள். அதனுடன் ஒரு சிறிய கிண்ணத்தில் கத்தரிக்காய் கூட்டு வைத்தாள். கிண்ணத்தையும் சேர்த்து டிபனுக்குள் வைத்து மூடினாள். சிறிது நேரத்தில் வெண்ணிலா கிளம்பி வந்தாள். ரோஜா ஒரு தட்டில் தோசை வைத்து சாம்பார், சட்டினி ஊற்றினாள்.
இந்தா, சீக்கிரம் சாப்பிடு!
வெண்ணிலா சாப்பிட ஆரம்பித்தாள். ரோஜா சென்று வெண்ணிலாவின் பள்ளிகூடப் பையை எடுத்து வந்தாள்.
ஹோம் ஒர்க் எழுதின நோட்டெல்லாம் உள்ள வச்சிட்டியா?
ம்... ம்...
ரோஜா டிபனை எடுத்து வெண்ணிலாவின் பைக்குள் வைத்தாள். ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதையும் உள்ளே வைத்தாள். வெண்ணிலா சாப்பிட்டு முடித்து தட்டிலேயே கை கழுவினாள்.
என்னடி, போதுமா?
போதும்க்கா
சரி, சரி, நீ உன் பேக்கை கைல எடுத்துக்கோ! கிளம்பலாம்.
வெண்ணிலா தனது பையை எடுத்துக் கொண்டாள். ரோஜாவும் தனது கைப்பையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டாள். இருவரும் வீட்டு வாசலை விட்டு வெளியே வந்தனர். ரோஜா வீட்டை பூட்டினாள். ஒரு ஆட்டோ வந்து வாசலின் முன் நின்றது.
அக்கா, ஆட்டோ வந்துருச்சி! நான் கிளம்பறேன்
சரி, பார்த்து போ
வெண்ணிலா ஆட்டோவில் ஏறினாள். ஆட்டோ கிளம்பியது. ரோஜா, வெண்ணிலாவை ஆட்டோவில் வழியனுப்பி வைத்து விட்டு தனது அலுவலகம் நோக்கி புறப்பட்டாள்.
அஸ்வின் தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தான். வான் மதி அவனுக்கு பரிமாறினாள்.
ஏன்டா, போன வாரமே ஒரு பத்தாயிரம் கேட்டேனே!
நீங்க ஆரம்பிச்சிடீங்களா! நான்தான் அன்னைக்கே சொன்னேன்ல, என் கிட்ட பணம் இல்லனு. ஆமா... எதுக்கு அவ்ளோ பணம்?
அது ஒண்ணுமில்லடா, அபிராமியும் நானும் போன வாரம் நகை கடைக்கு போயிருந்தோம்! அங்க ஒரு டாலர் வச்ச செயின் அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்னா! அதான், அத வாங்கிடலாம்னு கேட்டேன்
ம்... இங்க அவனவனுக்கு சோத்துக்கே வழி இல்லாம, பகல் டூட்டி, நைட் டூட்டினு பாத்து சம்பாதிச்சி குடுத்தா... செயின் வாங்குறது ரொம்ப முக்கியமா?
டேய்! உன் தங்கச்சிக்கு நீ வாங்கி குடுக்காம வேற யாருடா வாங்கி தருவா?
நான் ஏன் வாங்கி தரணும்? அதான் கல்யாணம் ஆகிடுச்சில! அவ புருஷன்கிட்ட போய் கேக்க சொல்லுங்க!
இருவரும் பேசிக்கொண்டு இருக்கையில் அபிராமி வந்தாள்.
அவன் வாங்கி குடுக்குறதுக்கு நீ எதுக்குடா அண்ணன்னு உயிரோட இருக்க?
ம்... அதான் அவ கல்யாணத்துக்கு கோடி கோடியா பொட்டச்சில்ல! இன்னும் என்னவாம்?
ஹ்ம். இப்போ உன்னால வாங்கி தர முடியுமா, முடியாதா?
காலம் காத்தால நிம்மதியா சாப்பிடவாச்சும் விடுறீங்களா, எப்ப பாரு பணம் சேக்கணும், நகை வாங்கணும்னு!
அஸ்வின் பாதி சாப்பாட்டில் தட்டில் கையை கழுவினான். வான் மதி தடுத்தாள்.
என்னடா! பாதி சாப்பாட்டுல கைய கழுவிட்ட?
எனக்கு ஒன்னும் வேணாம்
என்று எழுந்து சென்றான். தன் அலுவலகப் பையை எடுத்துக் கொண்டு தனது பைக்கில் புறப்பட்டு சென்றான்.
ரோஜா அலுவலகத்தில் தனது டேபிள் மற்றும் நாற்காலியை சுத்தம் செய்தாள். பின் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில்.... என அனைத்தையும் எடுத்து டேபிளின் மேல் வைத்துக் கொண்டாள். இறைவனை வேண்டிக் கொண்டு தனது பணியைத் துவங்கினாள்.
அஸ்வின் அலுவலகம் வந்தடைந்தான். தனது பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றான்.
குட் மார்னிங் சார்
அலுவலகத்தில் ஒவ்வொருவராக அவனை வரவேற்றனர். அவனும் பதிலுக்கு மரியாதை செய்தான்.
குட் மார்னிங்
அவன் குரல் கேட்டதும் ரோஜா நிமிர்ந்து பார்த்தாள். அஸ்வின் வந்து தனது பையை ஓங்கி டேபிளின் மேல் வைத்தான். ரோஜா சிறு புன்னகையுடன் எழுந்து அஸ்வின் பக்கத்தில் வந்தாள். அஸ்வின் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
என்ன சார், இன்னைக்கும் வீட்டுல சண்டையா?
வீட்டுல கொஞ்ச நேரம் கூட நிம்மதியா இருக்க விடுறதில்ல! எப்ப பாரு பணம் வேணும், அத வாங்கணும், இத வாங்கணும்னு... ! வீட்டுக்கு போறதுக்கே இஷ்டம் இல்ல.
சரி விடு! எல்லாம் கொஞ்ச நாளைக்கு, அப்பறம் எல்லாம் அதுவே சரியாகிடும்!
அஸ்வின் ரோஜாவின் கரங்களைப் பற்றிக் கொண்டான்.
கூடிய சீக்கிரம் உன்ன கல்யாணம் பண்ணிக்கணும். நமக்குன்னு தனியா ஒரு வீடு. அங்க நீயும் நானும் மட்டும்...
ரோஜாவின் முகம் மாறியது.
அப்போ உன் அம்மா, தங்கச்சி...?
அஸ்வின் மௌனம் காத்தான்.
இங்க பாரு அஸ்வின், ஒரு வீட்டுல ஆம்பள துணை இல்லேன்னா, அந்த வீட்டுல உள்ள பொம்பளைங்க நிலைமையை யோசிச்சி பாரு ! பாவம் அவங்க, தனியா என்ன பண்ணுவாங்க! நீ வீட்டுல இல்லாத நேரம் அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா...?
அஸ்வின் அவள் கூறியதை கேட்காதது போல் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். ரோஜா அவள் பேச்சை மாற்றினாள்.
சரி... அத விடு! நம்ம லவ் பத்தி வீட்டுல சொன்னியா?
எங்க சொல்றது...! நான் சொல்றதுக்கு முன்னாடி அவங்க புராணத்தை ஆரம்பிச்சிடுறாங்க! நான் இன்னும் சொல்லல...!
நீ உன் வீட்டுல சொல்லி பெர்மிஷன் வாங்கினாதான் நான் என் வீட்டுல தைரியமா சொல்ல முடியும்!
இன்னைக்கே எப்படியாவது நான் சொல்லிடறேன் சரியா...!
அலுவலகத்தின் உரிமையாளர் வந்தார். ரோஜா அவரைப் பார்த்தாள்.
சரி. சரி. ஓனர் வர்ராரு! நான் என் இடத்துக்கு போறேன்!
ரோஜா வேகமாக சென்று அவள் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அலுவலகத்தில் வழக்கம் போல வேலைகள் தொடர்ந்தன.
மாலை நேரம் ஆனது. அலுவலகத்தில் இருந்த அனைவரும் கிளம்பினர். அஸ்வின் ரோஜாவை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு அவளின் வீட்டிற்கு பாதி தூரத்தில் இறக்கி விட்டான். ரோஜா பைக் ஐ விட்டு இறங்கினாள்.
சொன்னதெல்லாம் நியாபகம் இருக்குல்ல! இன்னைக்கு எப்படியாவது உன் வீட்டுல சொல்லிடு!
அஸ்வின் சரி என் தலை ஆட்டினான். ரோஜா தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அஸ்வினும் தனது பைக்கில் புறப்பட்டான். ரோஜா வீடு வந்தடைந்தாள். வெண்ணிலா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். ரோஜா உள்ளே நுழைந்தவுடன் டீவியை நிறுத்தினாள்.
எப்ப பாரு... வந்த உடனே டிவி தானா? அடுத்த மாசம் பரீட்சை வருதுல்ல! ஒழுங்கா போய் படி!
ஹ்ம்
வெண்ணிலா விருட்டென்று எழுந்து உள்ளே சென்றாள். ரோஜா தனது கைப்பையில் இருந்த டிபனை எடுத்து கழுவும் இடத்தில் போட்டாள். வெண்ணிலாவின் அறைக்குள் சென்றாள். அவள் பள்ளிகூடப் பையை எடுத்து அவளது