Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sakkarai Nilavey
Sakkarai Nilavey
Sakkarai Nilavey
Ebook53 pages17 minutes

Sakkarai Nilavey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குடிகார தந்தை நமச்சிவாயம் - தாய் சரஸ்வதி ஆகியோரின் மகள் ஆர்த்தி. தன் அக்கா இறந்துவிட, அக்காவின் கணவன் சீனிவாசனை ஆர்த்திக்கு திருமணம் செய்து கொடுக்க நினைக்கும் பெற்றோர்கள். இந்நிலையில் ஆர்த்தியின் தம்பிபியான மாதேஷ் தன் மாமாவை எதற்காக மிரட்டுகிறான்? ஆர்த்திக்கும் சீனிவாசனுக்கும் திருமணம் நடக்குமா? சீனிவாசனின் முடிவு என்ன? சக்கரை நிலவு தித்திக்குமா... வாசிக்கலாமா...

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580140606473
Sakkarai Nilavey

Read more from R. Manimala

Related to Sakkarai Nilavey

Related ebooks

Reviews for Sakkarai Nilavey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sakkarai Nilavey - R. Manimala

    https://www.pustaka.co.in

    சக்கரை நிலவே

    Sakkarai Nilavey

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author. All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    கோவில் மணியோசை எழுந்தது. மாடத்தில் அமர்ந்திருந்த புறாக்கள், பதறி சிதறி பறந்தன. ரம்மியமான காலைப்பொழுதை மேலும் அழகூட்டின அக்காட்சி!

    விநாயகர் கோவிலில் கூட்டம் அதிகமிருந்தது.

    ‘இன்றைக்கு ஏதோ விசேஷ நாள் போலும்’ என்றெண்ணிய ஆர்த்தி, கோவிலுக்கு வந்தாள்... முக்கியமான காரணத்திற்காக!

    அய்யர், விநாயகர் சுலோகத்தை கணீர் குரலில் பாடியபடி, மலர்களால் அர்ச்சனைப் பண்ணிக்கொண்டு இருந்தார்.

    கையில் அர்ச்சனைக் கூடையுடன் நின்றிருந்தாள், ஆர்த்தி. எதிர்வரிசையில் ஐம்பது வயது மதிக்கத்தக்கப் பெண். இவளையே விழியகலாது பார்த்துக்கொண்டிருந்தாள்.

    மெல்லிய சிவந்த தேகம், அளவான உயரம், வசீகரமான முகம், கனிவை தேக்கியிருந்த காந்த விழிகள். ரோஜா இதழ்களில் ‘குளுகோஸ்’ புன்னகை. உலராத ஈரக்கூந்தலில் தளர்வாகப்பின்னி, மல்லிகைப்பூ சூடியிருந்தாள். பச்சைநிறப் பட்டுச்சேலைக்கு ஏற்றாற்போல் சின்னதாய் பச்சைக்கல் கம்மல் என தேவதையைப்போல் நின்றிருந்த ஆர்த்திக்கு இருபத்தி ஐந்து வயது.

    ‘யார் இந்தப் பெண்? அம்பாள் சிலை மாதிரி அம்சமாக இருக்கிறாளே! நம்ம தேவனுக்கு பொருத்தமாய் இருப்பாளே!’ அவளை மருமகளாக்கிக்கொள்ளும் ஆசை துளிர்விட்டது. அந்த அம்மணிக்கு.

    அய்யர் தந்த பிரசாதத்தை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு சென்றவள், ஆர்த்தி வருகைக்காக பிரகாரத்தில் காத்திருந்தாள்.

    அய்யரிடம் அர்ச்சனைக் கூடையை நீட்டிய ஆர்த்தி, பரத், உத்திர நட்சத்திரம், சிவகோத்திரம் என்றாள். அய்யர் விலகியதும், கண்மூடி - கரம் குவித்து மனமுருக வேண்டினாள்.

    கடவுளே... பரத் நல்லா இருக்கணும். நூறு வயசு வாழணும். ஈடுபடுகிற காரியங்களில் வெற்றியைத் தரணும்! அவள் உதடுகள் முணுமுணுத்தன.

    ஆராதனைத் தட்டை நீட்டினார், அய்யர். தீபத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டவள் தட்டில்

    Enjoying the preview?
    Page 1 of 1