Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sollathan Ninaikkirean!
Sollathan Ninaikkirean!
Sollathan Ninaikkirean!
Ebook118 pages1 hour

Sollathan Ninaikkirean!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு காதல் பூக்கிறது. ஆனால், அது கல்யாணத்தில் முடிவதில்லை.
சந்தர்ப்ப சூல்நிலைகளினால் காதலியை இழந்து வேறோரு பொண்ணை மணந்தாலும் அவளையும் நேசிக்கிறான். கணவனின் காதல் தெரிந்ததும் வெறுப்பு கொள்ளும் மனைவி, தன் மகங்களையும் வெறுக்க வைக்கிறாள்.
ஒரு புதிய பரிணாமத்தில் ஒரு தந்தையின் சகிப்புதன்மையும், மனைவியின் மேல் ஏற்படும் பிரியத்தையும் உணரலாம்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140606447
Sollathan Ninaikkirean!

Read more from R. Manimala

Related to Sollathan Ninaikkirean!

Related ebooks

Reviews for Sollathan Ninaikkirean!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sollathan Ninaikkirean! - R. Manimala

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    சொல்லத்தான் நினைக்கிறேன்!

    Sollathan Ninaikkirean!

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    சுடாத சூரியனின் வெப்பம் அந்த இளம் காலையில் கதகதப்பாய் இருந்தது.

    கத்தரிச் செடியில் புதிதாய் பூக்கள் முளைத்திருப்பதை ஆசையும், பரவசமுமாய்ப் பார்த்த புகழேந்தி, போனஸாய் மீண்டும் ஒரு பிடி, காய வைத்த சாணத்தை அள்ளி மணலில் கலந்தார்.

    ஒவ்வொரு முறையும், காற்றுக்கு சலசலத்த மாமரத்திலிருந்து ரிடையரான இலைகள் விழுந்து கொண்டே இருந்தன. அவைகளைப் பொறுக்கி சின்னக் குழிக்குள் போட்டு மூடினார்.

    புதிதாய் நிறைய கிளைகள்விட்டிருந்த முருங்கை மரத்தின் மண்ணைச் சுற்றிலும் கிளறி… இலகுவாக்கினார்.

    வாயில் பிரஷுடன் தோட்டத்திற்கு வந்த உத்ரா அப்பாவையும், பல வண்ணங்களுடன் பிரதிபலித்த தோட்டத்தையும் பார்வையால் படம் எடுத்தாள்.

    முக்கால் கிரவுண்டில் அரை கிரவுண்டு வீடு கட்டி, கால் கிரவுண்டைத் தோட்டத்துக்கு ஒதுக்கி, அதில் கை வித்தையையும் அழகான ரசனையையும் வெளிப்படுத்தியிருந்தார் புகழேந்தி!

    மாமரம், வாழை, கொய்யா, பலா, சப்போட்டா, தென்னை, அருநெல்லி, முருங்கை என நேர்த்தியாய் அததுக்கு இடம் ஒதுக்கி வளர்த்திருந்தார். முருங்கையைத் தவிர எல்லாவற்றிலும் காய் இருந்தது.

    ரோஜா, சம்பந்தி, மல்லி, கனகாம்பரம், குரங்குவால், இருவாட்சி என வரிசையாய்ப் பாத்தி கட்டி… எல்லாவற்றிலும் பூக்கள் தலையசைத்துச் சிரித்தன.

    அஞ்சுக்கு அஞ்சடியைக் கீரை வகைகளுக்கு ஒதுக்கி மணத்தக்காளி, சிறுகீரை, அரைக்கீரை என அது ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்க… சற்றுத் தள்ளி கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், கொத்தவரங்காய் பயிரிட்டிருந்தார். ஒரு ஓரமாய்… கிடைத்த பிடியில் கொடியைப் படர விட்டு ஓடிக் கொண்டிருந்தது பாகற்காய்.

    ஹோஸ் பைப்பில் செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அப்பாவின் அருகில், வாயைக் கழுவி விட்டுச் சென்றாள்.

    திரும்பிப் பார்த்த புகழேந்தி, குட்மார்னிங் உத்ரா என்றார்.

    வெரிகுட்மார்னிங்ப்பா! என்ன சொல்றாங்க… உங்க தோட்டத்துல பிள்ளைங்கள்லாம்!

    உன்னை மாதிரியே சந்தோஷமா சிரிச்சுட்டிருக்காங்க!

    கேக்கணும்னு நினைச்சேன். இதென்னப்பா… மெனக்கெட்டு இந்த முருங்கை மரத்தை இங்கே வச்சிருக்கீங்க? வீட்டுக்கு வெளியேதான் ஒரு மரம் இருக்கே? அங்கேயே வச்சிருக்கலாமே!

    "வச்சிருக்கலாம். ஆனா சரியா இருக்காது. இந்தக் கிளை… பாலவாக்கத்துல என் நண்பனோட வீட்டு மரத்துலேர்ந்து வெட்டி எடுத்துட்டு வந்தது. ஒரு காயோட நீளம் ஒரு மீட்டர். கொத்துக் கொத்தாய் பாம்பு மாதிரி தொங்கற காய்களைப் பார்க்கணுமே! உங்கம்மாவுக்கு முருங்கைக் காய்னா அவ்ளோ பிடிக்கும். இந்த மரத்தோட காய் பத்தி நான் சொல்லலே. நீயும் சொல்லாதே! இப்பதானே வச்சிருக்கேன்? ரெண்டு வருஷத்திலே காய்க்க ஆரம்பிச்சிடும். அப்ப அதைப் பார்த்து வாயப் பொளக்கணும்.

    சர்ப்ரைஸா இருக்கட்டும் என்ன" சிறு குழந்தையைப் போல் கண்களில் பரவசம் மின்ன பேசிய தகப்பனை வியப்பாய்ப் பார்த்தாள்.

    ‘அம்மா மீதுதான் எத்தனை காதல்? ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் அதை வெளிப்படுத்தத் துடிக்கிற ஆசை? ஆனால் அம்மா?’

    உத்ரா…

    என்னப்பா…

    நேத்து நூறு கிராம் வெந்தயம் வாங்கி கிச்சன்ல வச்சேன். அம்மாக்கிட்டே கேட்டு எடுத்துட்டு வா! அடுத்த வாரம் வெந்தயக் கீரை கூட்டு வைக்கணுமே… ஓடு… ஓடு… விதைப்பதற்காக மண்ணைக் கிளற ஆரம்பித்தார்.

    சரிப்பா…!

    அப்படியே… டீயும்!

    இன்னும் நீங்க டீ சாப்பிடலையாப்பா?

    பாவம்… சரசு எவ்வளவுன்னுதான் வேலை செய்வா? இப்பப் போட்டுட்டிருப்பா… எடுத்துட்டு வந்துடு!

    கிச்சனுக்குள் அம்மா இல்லை. ஒரு டம்ளரில் டீ இருந்தது… ஆடையோடு!

    சரஸ்வதி வந்தாள்.

    உன் பிள்ளைகளுக்கு எல்லாம் டீ கொடுத்தாச்சா?

    அதென்ன என் பிள்ளை? உன் அண்ணனுங்கன்னு சொல்லு. குடுத்துட்டுத்தான் வர்றேன்.

    இது யாருக்கு?

    உங்கப்பாவுக்கு!

    அதென்ன என் அப்பா? உன் புருஷன்னு சொல்லு!

    காலையிலே ஏன் வாயைக் கிளர்றே? என்ன வேணும் உனக்கு,

    அப்பா வெந்தயம் வச்சிருந்தாராமே!

    இதோ இருக்கு பாரு!

    டீ?

    எடுத்துட்டுப் போ!

    போட்டதும் கொண்டு போய்த் தரக் கூடாதா? ஆறிப் போயிருக்கு… சூடு பண்ணித் தா!

    வேலையிருக்கு… எடுத்துட்டுப் போ… குடிப்பாரு!

    உன்கிட்டே சொல்றேன் பாரு! வழி விடு… ஸ்டவ்விலிருந்து குக்கரை இறக்கி… ஒரு சின்னக் கிண்ணத்தில் டீயை ஊற்றிச் சூடு பண்ணினாள்.

    சரஸ்வதி… மௌனமாய் மிக்ஸியில் சட்னி அரைத்தாள்.

    ***

    துப்பட்டாவைத் தலையைச் சுற்றிக் கழுத்தில் படர விட்டிருந்தாள் உத்ரா. பைக் வேகமாய் மேடு பள்ளத்தில் ஏறி இறங்கினாலும்… அவன் மேல் மோதாமலிருக்க பில்லியனை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

    உன்னையெல்லாம் பைக்ல ஏத்தறதே வேஸ்ட் உத்ரா! என்றான் வசீகரன். பெயருக்கேற்ற ஹாண்ட்ஸம் பாய்.

    ஏன்?

    கஷ்டப்பட்டு, பள்ளத்திலேயும் ஸ்பீட் பிரேக்கர்லேயும் ஏறி இறங்கினாலும்… கொஞ்சமாவது மேலே சாயறியா? நாளைலேர்ந்து ஷேர் ஆட்டோவிலேயே போகலாம்.

    படவா… அலையாதே… பார்த்து ஓட்டு…!

    அதைத்தானே செஞ்சிட்டிருக்கேன்… என்றான் பாதையோர மக்களைப் பார்த்தபடி.

    உத்ரா சற்று நேரம் அம்மாவையும் அப்பாவையும் எண்ணி வியந்தபடி அமைதியாய் வந்தாள்.

    ஒரு வளைவில்… ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வாசலில் நின்றிருந்த இளம் பெண்ணைப் பார்த்து வியந்தாள்.

    ப்பா… எவ்ளோ மேக்கப்?

    Enjoying the preview?
    Page 1 of 1