Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaa... Ponmayiley!
Vaa... Ponmayiley!
Vaa... Ponmayiley!
Ebook120 pages48 minutes

Vaa... Ponmayiley!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெற்றோர்களை இழந்து, அண்ணன்களும் கைவிடப்பட்ட நிலையில் நிராதரவாக கைவிடப்பட்ட கீர்த்தனா என்ன ஆனாள்? இரண்டாவது திருமணம் செய்யாமல் தனிமரமாக, மகள் ரம்யாக்காக வாழும் இளமாறன் வாழ்க்கையில் கீர்த்தனா எவ்வாறு நுழைந்தால்? படிப்போம் வாருங்கள் வா பொன்மயிலை....

Languageதமிழ்
Release dateJul 16, 2022
ISBN6580140608581
Vaa... Ponmayiley!

Read more from R. Manimala

Related to Vaa... Ponmayiley!

Related ebooks

Reviews for Vaa... Ponmayiley!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaa... Ponmayiley! - R. Manimala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வா... பொன்மயிலே!

    Vaa... Ponmayiley!

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. எதிர் வீடுக்கூட தென்படாத அளவில் வெண்ணிற போர்வையால், மழையால் மசமசப்பாய் இருந்தது. கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுத்துக் கொள்ளாமல் ஒரே வேகத்துடன் பூமியைத் துளைப் போட்டுக் கொண்டிருந்ததை ஏக்கமாய் பார்த்தாள் கீர்த்தனா.

    அவளுக்கு பெருமழையில் என்றுமே விருப்பம் இருந்ததில்லை. பன்னீராய் தூவும் சிறு ஊசி மழையே பிடித்தமானது. ஆனால்... இப்போது இந்த மழை நிற்கவே கூடாது என்று மனசுக்குள் வேண்டினாள்.

    ‘விடாமல் பெய்தால் ஒருவேளை இந்தப் பயணம் தள்ளிப் போகலாம். அதனால் இவர்கள் மனசு மாறலாம். என்னையும் இவர்களுடனே அழைத்துச் செல்லலாம். நடக்குமா? வருணபகவானே... என்னை கைவிட்றாதே!’

    பூஜை அறையிலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்தாள்.

    ஆனால்…

    அவர்கள் பொருட்களை மூட்டைக் கட்டுவதில் மும்முரமாய் இருந்தார்கள்.

    குழந்தைகளின் உடைகளை சூட்கேஸிலும், லெதர் பேகிலும் அழுத்தி அழுத்தி அடுக்கிக் கொண்டிருந்த சாந்தி… எங்கேயோ பார்ப்பதுபோல் கீர்த்தனாவைப் பார்த்தாள்.

    நாசி விரிந்து முகம் சுருங்கியது.

    அவளைப் பார்த்தீங்களா? கிளம்பறப்ப வந்துப் பிரச்னை பண்ணப் போறாப் பாருங்க! அவனுக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுத்தாள்.

    நீ டென்ஷன் ஆகாம, ஆகற வேலையை மட்டும் பாரு, நான் பார்த்துக்கறேன்! என்றான் சுகந்தன்.

    கீர்த்தனா மனமேயின்றி பூஜையறையில் மாட்டப்பட்டிருந்த தெய்வப் படங்களை ஒவ்வொன்றாய் கழற்றினாள். முதல் நாள் வைக்கப்பட்ட சாமந்திப் பூக்கள் வாடாமல் அப்படியே இருந்தது. படங்களை எடுக்கவே மனம் வரவில்லை.

    சற்று நேரத்தில் பூஜையறையின் சுவர் வெறுமையானது.

    அண்ணா... சாமி போட்டோ!

    வச்சிட்டுப் போ! முகம் பார்க்காமல் சொன்னான்.

    கிட்டத்தட்ட வீடு காலியாகியிருந்தது.

    ஒரு ஓரமாய் பேப்பர், வார இதழ்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என்று தரையில் குவிந்திருந்தது.

    அண்ணா... இதையெல்லாம் இந்தக் கோணிப் பையில் எடுத்து வைக்கவா?

    அதெல்லாம் வேஸ்ட்! நாளைக்கு இதை எடுத்துட்டுப் போக ஆள் வருவாங்க! போட்டு காசு வாங்கிக்க!

    அதை கோணியில் போட்டு தனியா வச்சுக்க! என்றாள் பெருந்தன்மையாய் சாந்தி

    நாளைக்கு போட்டு, காசை வாங்கிக்க என்றால், அர்த்தம் புரிந்து மனசு கனத்தது... கலக்கமானது.

    கோணிப்பைக்குள் அவைகளை எடுத்துப் போட்டாள் அந்த வேஸ்ட்களிடையே வேஸ்ட்டாய் மேக்ஸி சைஸில் அவள் பெற்றோரின் கலர் போட்டோ இருந்தது.

    மனசு பதற இரு கைகளால் குழந்தையை அள்ளிக் கொள்வதுபோல் எடுத்தாள்.

    மற்ற இருவரும் தங்கள் வேலையில் கண்ணுங்கருத்துமாக இருக்க… அந்த போட்டோவை ஒரு புத்தகத்தினுள் பத்திரப்படுத்தினாள்.

    ***

    "எனக்கு இட்லி வேணாம் அத்தை! பால் மட்டும் போதும்!" தன்யா தன் முன் வைத்த தட்டை நகர்த்தினாள். பன்னிரண்டு வயதான அண்ணன் மகள்.

    ரெண்டு இட்லியாவது சாப்பிடு தனு விடியற்காலை கிளம்பணும். போற வழிலதான் எங்கேயாவது நிறுத்தி டிபன் சாப்பிடணும். மதியம் கூட நீ சரியா சாப்பிடலையே நான் ஊட்டி விடவா?

    எ... எனக்கு இங்கேர்ந்து போகவே பிடிக்கலே! நீ எங்களோட வரமாட்டியா அத்தை?

    இல்லடா... கும்பகோணம் உங்க அம்மம்மா வீடாச்சே! அங்கெல்லாம் நான் வந்தா சரியா வரால்திலியா?

    நீ மட்டும் இங்கே எப்படி தனியா இருப்பே? இந்த வீட்டைக் கூட வித்துட்டதா அம்மா சொன்னாங்க, அப்புறம் நீ எங்கே போவே அத்தே? அவளின் சின்ன மனசைப் போல் உதடுகளும் துடித்தது.

    அந்த சின்னவளின் அன்பு, விம்மிய நெஞ்சை நீவி விட்டதுபோல் இருந்தது.

    யாருமே இல்லேன்னாலும் எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கைய வாழ்ந்துதானே ஆகணும் செல்லம்? அத்தைய நினைச்சு இவ்வளோ கவலைப்படறியேடா! சந்தோஷமா இருக்கு. ஆனா, இதையெல்லாம் நினைச்சி நீ ஃபீல் பண்ணக்கூடாது! என்னை அப்பப்ப நினைச்சுக்க அது போதும்!

    போன் பண்ணுவேல்ல?

    அப்பாக்கிட்ட கேட்டு நீயே பண்ணு தனும்மா. நான் பண்ணினா உன்கிட்ட போன் தருவாங்களான்னுத் தெரியாதே! என் மொபைல் நம்பர் தெரியும்தானே? ஆனா, அவங்களுக்குத் தெரியாம எனக்கு போன் பண்ணக்கூடாது. சரியா?

    ம்!

    சரி... சாப்பிடு… நானே ஊட்டி விடறேன்!

    நீ சாப்ட்டியா அத்தை?

    இதோ நீ சாப்பிட்டு முடிச்சதும்.

    எங்கே... நேற்றிலிருந்தே அவளால் ஒரு பிடிக்கூட சாப்பிட முடியாமல்… தொண்டைக்குள் கனமாய் வேதனை அடைத்துக் கொண்டு கொலைப்பட்டினியாய் அல்லவா இருக்கிறாள்?

    ஒவ்வொரு பார்சலையும் ஹாலுக்கு கொண்டு வந்து வைத்துக் கொண்டிருந்த சாந்தி அவர்களைப் பார்த்து விட்டாள்.

    குபுக்கென கோபம் பொங்கிவர. ஏய் என்ன இது? அவ என்ன குழந்தையா? ஊட்டி விட்டுக்கிட்டிருக்கே?

    இ… இல்லே அண்ணி... தனு சாப்பிட மாட்டேன்னு சொன்னா... அதான் கட்டாயப்படுத்தி ஊட்டி…

    அதுக்காக ஊட்டி விடுவியா? ஏய் தனு... வாங்கி சாப்பிடு…!

    இன்னையோட கடைசி நாள்ம்மா... அத்தைய இதோட எப்ப பார்ப்பமோ? அதான்…! இழுத்தாள்.

    என்ன இப்ப… அவ என்ன தூக்குப் போட்டு செத்துடவாப் போறா? அவளால நாலு பேரு சாகாம இருந்தா சரி எந்திரி... சாப்பிட்டது போதும்!

    எப்போதும் அண்ணி இப்படிதான் நாக்கில் கசையை மாட்டிக் கொண்டு வார்த்தைகளால் சுழற்றி அடிப்பாள்.

    எப்பவும் போல் இப்போதும்

    Enjoying the preview?
    Page 1 of 1