Thithithatho… Ninaivugal!
By R. Manimala
()
About this ebook
நந்தகுமார்...நிவேதா...பத்மஜா.ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.நந்துவும் பத்மஜாவும் காதல் கிளிகள்.முறைப்பெண்ணான நிவேதாவுக்கும் நந்து மீது ஒருதலைக் காதல்.ஒரு சந்தர்ப்பத்தில் பத்மஜா காணாமல் போக தாயின் மரணப்போராட்டத்தின் முன் நிவேதாவை திருமணம் செய்து கொண்டாலும் நண்பர்களாக மட்டுமே வாழ்ந்தனர்.பதமஜா வரும்வரை ஊருக்காக அவர்கள் கணவன் மனைவி.ஒரு மழைப் பொழுதில் தன்னிலை மறந்து இணைய... குழந்தை பிறக்கிறது.பத்மஜா தேடி வருகிறாள்.நிவேதா என்ன முடிவு எடுத்தாள்?
Read more from R. Manimala
Kanney, Nerungathey! Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Thean Kinnam? Rating: 4 out of 5 stars4/5Uyire Nerungi... Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKalavadinean Kanapozhuthil! Rating: 0 out of 5 stars0 ratingsUn Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Nindrai Kaaviyamai! Rating: 0 out of 5 stars0 ratingsNee En Nila Rating: 0 out of 5 stars0 ratingsSollathan Ninaikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Nee Ena Kandean! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Pon Veedhiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsAlaigal Amaithi Theda…! Rating: 0 out of 5 stars0 ratingsEnakkenave... Nee… Kidaithai! Rating: 0 out of 5 stars0 ratingsPesu... Malarey... Pesu! Rating: 0 out of 5 stars0 ratingsPoovum Naanum Veru... Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Megangal Rating: 0 out of 5 stars0 ratingsNinaithathu Yaro... Neethaney! Rating: 0 out of 5 stars0 ratingsKannathil Muthathin Eeram! Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Banthalitten! Rating: 0 out of 5 stars0 ratingsMalare Mounama? Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Valaiyil Vizhalama! Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kodi Sumanthu! Rating: 0 out of 5 stars0 ratingsNinaivennum Sannathiyil? Rating: 0 out of 5 stars0 ratingsMugarasi Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Jeevan Rating: 5 out of 5 stars5/5Kaadhal Theriniley... Rating: 0 out of 5 stars0 ratingsEnathu Nila Kanniley...! Rating: 0 out of 5 stars0 ratingsAnal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsUn Ninaivil Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thithithatho… Ninaivugal!
Related ebooks
வானில் விழுந்த கோடுகள் Rating: 0 out of 5 stars0 ratingsMounamenum Siraiyil...! Rating: 0 out of 5 stars0 ratingsRishiyum Manushiyum Rating: 0 out of 5 stars0 ratingsKann Simittum Nerathil... Rating: 0 out of 5 stars0 ratingsThulluvatho Ilamai Rating: 5 out of 5 stars5/5Aayul Dhandani Rating: 5 out of 5 stars5/5Kaadhal Sadugudu Rating: 5 out of 5 stars5/5Kalaiyum Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsகலையும் கனவுகள்..! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kathaigal Rating: 5 out of 5 stars5/5Anal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsஒரு தப்புத் தாளம் ஒரு சரியான ராகம் Rating: 0 out of 5 stars0 ratingsOru Thappu Thaalam Oru Sariyaana Raagam Rating: 5 out of 5 stars5/5Nilavukkum Niramundu Rating: 0 out of 5 stars0 ratingsநிலவுக்கும் நிறமுண்டு..! Rating: 0 out of 5 stars0 ratingsKangal Solkindra Kavithai Rating: 4 out of 5 stars4/5Ivale En Manaivi Rating: 5 out of 5 stars5/5En Vazhvin Thean Thuli... Rating: 4 out of 5 stars4/5Amuthai Pozhiyum Nilavey! Rating: 0 out of 5 stars0 ratingsNetru Nila Indru Nee Rating: 5 out of 5 stars5/5Pani Vizhum Malar Vanam! Rating: 0 out of 5 stars0 ratingsPoonkili Kaivarum Naal Varumaa Rating: 0 out of 5 stars0 ratingsபூங்கிளி கைவரும் நாள் வருமா..? Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsPoisugam Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Jeevan Rating: 5 out of 5 stars5/5Muthamida Neramillai Rating: 0 out of 5 stars0 ratingsUravum Pirivum Rating: 0 out of 5 stars0 ratingsAasai Nenjin Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsNandha En Nila Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thithithatho… Ninaivugal!
0 ratings0 reviews
Book preview
Thithithatho… Ninaivugal! - R. Manimala
https://www.pustaka.co.in
தித்தித்ததோ... நினைவுகள்!
Thithithatho… Ninaivugal!
Author:
ஆர். மணிமாலா
R. Manimala
For more books
https://www.pustaka.co.in/home/author/r-manimala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
கனத்த மவுனத்தை சுமந்துக் கொண்டு... தயங்கி... தயங்கி நகர்ந்தன வெண்ணிற மேகங்கள்! சென்னை நகரத்தின் எல்லாப் பகுதியிலும்... முடுக்கி விட்டது போல்... வேலைகள் ஆரம்பித்த... காலை ஆறுமணிப் பொழுது!
முழுக்கவே ஏஸியால் குளிரூட்டப்பட்டிருந்த... அந்தப் பெரிய கல்யாண மண்டபம்... மலர்களால் மூடப்பட்டு... வாசலில் யானைப்போல் உருவத்தினுள் மறைந்திருந்த மனிதர்கள் வருபவர்களுக்கு தும்பிக்கையால் ரோஜாவை நீட்டி வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
மண்டபத்தினுள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மணமேடையின் அருகே வீல்சேரில் அமர்ந்திருந்தாள் கோகிலா, மணமகனின் தாய் முகத்தில் நோயின் களைப்பை மீறிய ஒரு எதிர்பார்ப்பு! அந்த நொடியும் வந்திடாதா என்ற ஏக்கத்தை உள்ளடக்கிய கண்கள்... அணிந்திருந்த கண்ணாடியின் வழியேப் பெரிதாய் தெரிந்தது. விபூதி அணிந்த நெற்றி அவள் துணையற்றவள் என்றது.
ஐயர்... குண்டத்தில் ஏதேதோப் போட்டு மந்திரங்கள் உச்சரிக்க... பட்டுச்சேலைகள் சரசரவென ஓடியாட... செண்ட்டும்... மல்லிகைப்பூவும் கலந்த... அந்த இடத்திற்கே உரிய நறுமணம் விரவிக் கிடக்க...
சில மணித்துளிகளுக்குப் பிறகு... மணமக்கள்... சுற்றிலும் புடைசூழ அமர்ந்திருந்தனர்.
தேங்காய் மீதமர்ந்திருந்த தங்கத்தாலி... எல்லோராலும் ஆசிப் பெறப்பட்டு... ஐயர் கைக்கு வந்தது.
நிவேதா... சும்மாவே அழகு! இப்போது பட்டைத் தீட்டப்பட்டு அம்மன் கழுத்திலிருக்கும் ஆபரணம்போல் ஜொலித்தாள்.
அவள் உதட்டில் வெற்றியை சுகித்த புன்னகை உறைந்திருக்க... மை விழியோரம்... பக்கத்தில் அமர்ந்திருந்த நந்தகுமாரை... காதலாய் நிறைத்து நாணப்பட்டுக் கொண்டிருந்தாள்.
ஆனால்... அவனோ?
கண்கள் ஒரே இடத்தில் நிலைத்திருக்க... தாடைகள்... இறுக்கங்களால் அவ்வப்போது நரம்புகள் நெளிய... எண்ணங்கள் எங்கோ பறந்து... ஐயர் சொன்ன மந்திரங்களை அவன் உதடுகள் மட்டுமே உயிர்ப்பின்றி உச்சரித்துக் கொண்டிருந்தன.
இவர்களை பார்த்தபடி முன்வரிசையில் அமர்ந்திருந்த கல்யாணின் கண்களில்... நீர்ச்சலனம்.
நினைத்தவனே கணவனாக வாய்த்த சந்தோஷக் குவியலாய் நிவேதா...
இதயக் கருவறையில் வைத்து பூஜிக்கப்பட்டவள் வேறு எல்லைக்குச் சென்றுவிட்ட வேதனையுடன் கல்யாண்.
கெட்டிமேளம்... கெட்டிமேளம்...
குரல் ஒலிக்க மண்டபமே அதிரும்படி மேளச்சத்தம் காதைப் பிளக்க. கைகள் நடுங்க... அவள் கழுத்தில் தாலி கட்டினான் நந்தகுமார். அப்போது அவன் முகம் மேலும் இறுகிற்று.
சிலிர்த்துப் போன நிவேதாவின் கண்கள் மகிழ்வுடன்... நீர் சிந்தின.
கல்யாண் விரக்தியுடன் கையிலிருந்த அட்சதையை மணமேடை நோக்கி எறிந்து... அடுத்தகணமே... கனத்த உள்ளத்துடன் வெளியேறினான்.
நிவேதாவின் அம்மாவும்... அண்ணன் அண்ணியும்... உறவினர்களும் சூழ்ந்து கைப்பற்றி வாழ்த்துச் சொல்ல... கோகிலா அவர்களைப் பார்த்து சந்தோஷத்தில் விசும்பினாள்.
***
நிவேதாவின் சொந்த தாய்மாமன் மகன்தான் நந்தகுமார். இருவர் குடும்பமும் பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவு வசதியானவர்கள்தான்.
ஒரே கல்லூரியில் நிவேதாவும், பத்மஜாவும் படித்தனர். வகுப்புத்தோழி! அவள் மூலமாக நந்துவுக்குப் பழக்கமானவள்தான் பத்மஜா.
தன் உயிராய்... மூச்சாய்... காற்றாய் அவளை சுவாசித்த நந்து... இக்கட்டான சூழ்நிலையில் நிவேதாவின் கழுத்தில் தாலி கட்ட வேண்டிய தாயிற்று.
அன்று மாலையே ரிசப்ஷன்! இன்னும் அழகாய் அலங்கரிக்கப்பட்டத் தேராய் நிவேதா...!
பக்கத்தில் முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு நந்தகுமார்.
என்ன நிவி... உன் ஆளு சிரிக்கமாட்டாரா? கிச்சு கிச்சுப் பண்ணு!
என்று அவள் காதில் தோழிகள் உசுப்பி விட...
சங்கடத்துடன் அவனிடம் முணுமுணுத்தாள்.
நந்து... இன்னும் ஒரு மணிநேரமோ... ரெண்டு மணி நேரமோ? பார்க்கறவங்க தப்பா நினைச்சுக்கப் போறாங்க... கொஞ்சம். முகத்தை சிரிக்கிறமாதிரி வச்சுக்குங்க...
ஸாரி... நிவி... ஐ வில் ட்ரை!
ட்ரைப் பண்ண நேரமில்லே... உங்கம்மாவும் பார்த்துட்டிருக்காங்க... சிரிங்க...!
மெல்ல அவள் பக்கம் திரும்பிச் சிரித்தான் நந்தகுமார்.
அதன்பிறகு வருபவர்களின் வாழ்த்துகளை ஏற்று, கைகுலுக்கி... கேமராவிற்கு புன்னகைக் காட்டி நடிக்கத் துவங்கினான்.
பெரிய ஓட்டலில் முதலிரவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் யாருக்கும் விருப்பமில்லை என்றாலும் நந்தகுமாரின் வற்புறுத்தல் தான் ஜெயித்தது.
தேவையற்ற கிண்டல்கள்... இத்யாதிகள்... அலங்கரிப்பட்ட கட்டில், பால், பழங்கள்... சிரிப்பொலிகள் பின்வர... நிவேதாவை அறைக்குள் தள்ளி கதவை அடைத்தல்...
இவை எதுவும் அவனுக்குப் பிடிக்கவில்லை.
இதற்கெல்லாம் அவனும் ஆசைப்பட்டவன்தான்... கற்பனை செய்தவன் தான்... ஆனால் அறையில் தள்ளிவிடப்படும் பெண் பத்மஜாவாக இருக்கும் பட்சத்தில்.
நிவேதாவின் அண்ணன் பரமுதான் அந்த ஸ்டார் ஓட்டலில் முதலிரவிற்காக 'சூட்’டைத் தேர்ந்தெடுத்திருந்தார்.
விஸ்தாரமான கட்டிலில் மிக நேர்த்தியான மலர்களால் அலங்காரம். நறுமணமும், அறையின் சூழலும்... கல்லுக்கே காதலை ஏற்படுத்தும். ஆனால், நந்தகுமார்... கல்லாய் மாறிப் போயிருந்தான்.
ஒரு பூங்கொத்தாய்... அலங்காரத்தில் மனம் கவர்ந்தாள் நிவேதா.
அவனருகில் வந்தாள்.
தனியறை... அழகிய சூழல்... இளமை சுமந்த பெண்... மனசு மாறிடாதா?
சின்ன ஆசையுடன்... எதிர்பார்ப்புடன் அவனைப் பார்த்தாள்.
சிறு சலனமுமின்றி ஏறிட்டான்.
என்னெல்லாம் நடந்துடுச்சி பார்த்தியா நிவி? ச்சே... எல்லாம்... அவளால...
....?!
ட்ரஸ் சேஞ்ச் பண்ணிக்கல? பட்டுப் புடவை, ஜூவல்ஸ்... தலையில் பூ...ன்னு... கஷ்டமாயில்லே?
ம்...!
தூங்கப் போறியா?
ஏன் கேக்கறீங்க?
சிறு ஆர்வம்.