Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pesu... Malarey... Pesu!
Pesu... Malarey... Pesu!
Pesu... Malarey... Pesu!
Ebook125 pages36 minutes

Pesu... Malarey... Pesu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திவ்யா தன் அத்தை மகனான கோபியை உயிருக்கும் மேலாக நேசிக்கிறாள். கோபிக்கு ஆரம்பத்தில் திவ்யாவின் மீது காதல் இருந்தாலும் அவன் படித்து கொண்டிருந்த டாக்டர் படிப்பு, அதிக ஆடம்பரம் என மாறி தன் வாழ்க்கையை வேறொருத்தியுடன் தீர்மானித்து கொள்கிறான். இதனால் திவ்யாவின் வாழ்க்கை என்னானது? என்ன செய்ய போகிறாள்? வாங்க வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateSep 24, 2022
ISBN6580140608578
Pesu... Malarey... Pesu!

Read more from R. Manimala

Related to Pesu... Malarey... Pesu!

Related ebooks

Reviews for Pesu... Malarey... Pesu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pesu... Malarey... Pesu! - R. Manimala

    http://www.pustaka.co.in

    பேசு... மலரே... பேசு!

    Pesu... Malarey... Pesu!

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத... நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட... என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற...

    ரேடியோவில் அருமையான பழைய கானமொன்று ஒலிபரப்பாகிக் கொண்டிருக்க... கூடச் சேர்ந்து பாடியபடி நீளமான கருங்கூந்தலைப் பின்னிவிட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.

    மரப்பீரோவில் ஒரு பக்கமாய்ப் பதிக்கப்பட்டிருந்த நீளமான கண்ணாடி முன் நின்றிருந்தவள் தன்னை முன்னும் பின்னும் ஆராய்ந்தாள்.

    பளிச்சென்ற அழகு முகம். குவிந்த சிவந்த இதழ்கள். மாநிறத்திற்கும் சற்றுத் தூக்கலான நிறம். அந்த முகத்தில் ஹைலைட்டான விஷயமே நீள் விழிகளும், அனாயசமாய் வளைந்திருந்த புருவங்களும்தான். சிரிக்கும் போது ‘பதினாறு வயதினிலே’ ஸ்ரீதேவியை நினைவுபடுத்தினாள்.

    பாவாடை தாவணியில் அவளின் வனப்புகள் புதரில் மறைந்திருந்து பார்க்கும் மான் போன்ற இலக்கியத்துவமான கற்பனையைத் தோற்றுவித்தன.

    என்னம்மா ரெடியாய்ட்டியா? ஹாலிலிருந்து அப்பா குரல் கொடுத்தார்.

    இதோ... அஞ்சு நிமிஷத்திலேப்பா!

    "இதையேதாம்மா ஒரு மணி நேரமா சொல்லிக்கிட்டிருக்கே!

    வந்துட்டேன்ப்பா! ஈரத் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த குண்டு மல்லிகைச் சரத்தைப் பிரித்துத் தலையில் வைத்துக் கொண்டாள்.

    வீடே கும்மென்று மணத்தால் நிரம்பியது.

    தலை நிறையப் பூச்சூடியதால் அழகிற்கு அழகு சேர்த்தாற்போல் தெய்வீகமாய் இருந்தது.

    ‘கோபி மாமாவிற்கு மல்லிகைப் பூவென்றால் ரொம்பப் பிடிக்குமே!’

    அதெப்படி... தனியே பார்க்கிறப்ப இல்லாத அழகு... உன் தலையில் சூடியதும் இந்தப் பூவிற்கு வந்தது? என்பானே!

    மாமாவின் நினைவு வந்ததும் வெட்கத்தில் முகம் மலர்ந்தது.

    பத்து நிமிஷம் ஆச்சும்மா... நீ அஞ்சு நிமிஷம்னு சொல்லி! பொறுமையிழந்தார் கதிரேசன்.

    நான் ரெடி! அப்பாவின் முன் வந்து நின்றாள் திவ்யா.

    ஒரு கணம் மூச்சடைத்தது கதிரேசனுக்கு.

    ‘என் பொண்ணு இம்புட்டு அழகா! ஒரு விவசாயிக்கு இப்படியொரு தேவதை மாதிரிப் பொண்ணா!’ மலைத்துப் போனார்.

    என்னப்பா... கிளம்பலாம்... கிளம்பலாம்னு கத்திட்டு இப்ப என்னையே வாயைப் பொளந்துக்கிட்டு பார்க்கறீங்க?

    நம்ம குலதெய்வம் அங்காளம்மன் மாதிரி எம்புட்டு அழகாயிருக்கே தாயி! இதையெல்லாம் பார்க்க ராஜத்துக்குக் கொடுத்து வைக்கலை! பெருமூச்சு விட்டபடி பூச்சரம் மாட்டியிருந்த தன் மனைவியின் போட்டோவைப் பார்த்தார்.

    சரிப்பா... பஸ் புறப்பட்டுடப் போகுது... கிளம்பலாம்!

    இதை நீ சொல்றே? எல்லாம் நேரம்! தோளில் இருந்த துண்டைச் சரிப்படுத்தியபடி வாசலை நோக்கி நடந்தார்.

    பின்தொடர்ந்த திவ்யாவுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது.

    அப்பா!

    என்னம்மா?

    அத்தைக்காகச் செஞ்ச பால் கொழுக்கட்டையை எடுத்துக்க மறந்துட்டேன்ப்பா!

    அத்தை வீட்டுக்குப் போறதுன்னாலே தலைகால் புரியாதே உனக்கு. போம்மா... போய்ச் சீக்கிரம் எடுத்துட்டு வா! கிண்டலடித்தபடி பூட்டு சாவியைக் கையில் எடுத்துக்கொண்டார் கதிரேசன்.

    வயல்வெளிகளின் பச்சைவாசம் காற்றில் மிதந்து முகத்தில் மோதியது.

    பஸ் விரைந்து சென்றது. கதிரேசன் கோழித் தூக்கம் போட்டிருந்தார். அவரைப் போலவே நிறையப் பயணிகள் கண்களை மூடி பஸ்ஸின் குலுக்கலுக்கேற்றபடி தலையாட்டிக் கொண்டிருந்தனர்.

    ஜன்னலோரம் அமர்ந்திருந்த திவ்யாவிடம் ஒரு குழந்தையின் குதூகலம் மிளிர்ந்தது.

    ‘பஸ் ஏன்... ஆமை வேகத்தில் நகர்கிறது? சீக்கிரம் ஸ்ரீரங்கம் போய்ச் சேரக்கூடாதா?’ டிரைவரை விரோதியைப் போல் பார்த்தாள்.

    கதிரேசனுக்குத் திவ்யா ஒரே பெண்! அவளுக்குப் பத்து வயதாயிருக்கும்போதே மனைவி ராஜம் விஷக் காய்ச்சலில் கண்ணை மூடிவிட்டாள்.

    தாயில்லா மகளை அருமை பெருமையாய் வளர்த்தார். அவள் கண்களில் எதற்காகவும் கண்ணீர் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தார்.

    விவசாயம்தான் அவருக்குத் தொழில். வாழைத்தோப்பையும், தென்னந்தோப்பையும் குத்தகைக்கு விட்டிருந்தார். போதுமான வருமானம் வருகிறது. அதனால் மகளை எந்தக் குறையும் தெரியாமல் வளர்த்தார்.

    அவள் திருமணத்திற்குத் தேவையானவைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். மண்ணச்சநல்லூரிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு மாதம் ஓரிரு முறையாவது செல்வார். அங்குதான் கதிரேசனின் அக்கா பாமா இருக்கிறாள்.

    கதவு திறந்துதான் இருந்தது.

    கோதுமையைப் புடைத்துக் கொண்டிருந்தாள் பாமா.

    அக்கா...!

    அடடே... கதிரு... வாப்பா... திவ்யா கண்ணு... எப்படிடி இருக்கே?

    நல்லாயிருக்கேன் அத்தை... நீங்க எப்படியிருக்கீங்க? என்றவளின் கண்கள் நாலாபுறமும் அலை பாய்ந்தன.

    என் புள்ளை வீட்லேயில்லே...! என்றாள் குறும்பாக.

    நான்... எப்படியிருக்கீங்கன்னுதானே...

    வாய்தான் கேக்குது... கண்ணு தேடுதே!

    போங்கத்தே...! எழுந்தோடினாள்.

    நிஜமாத்தான் சொல்றேன். உள்ளேயும் இல்லே...

    பாருங்கப்பா, அத்தையை! சிணுங்கினாள்.

    கதிரேசன் மனம்விட்டுச் சிரித்தார்.

    ஏன்க்கா... என் குழந்தையைக் கிண்டல் பண்றீங்க?

    குழந்தையா அவ? மாமன் இருக்கானான்னு வீடு முழுக்கத் தேடறா பார்... வந்ததும்!

    நான் ஒண்ணும் மாமாவைப் பார்க்க வரலே. உங்களைத்தான் பார்க்க வந்தேன். இதோ இந்தப் பால்கொழுக்கட்டையக்கூட உங்களுக்காகத்தான் சமைச்சு எடுத்து வந்தேன்.

    அட.. பால் கொழுக்கட்டையா? கோபிக்கு ரொம்ப பிடிக்குமே!

    பொருளெல்லாம் இறைஞ்சு கிடக்கே? என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள் திவ்யா... ஒழுங்குபடுத்தும் சாக்கில், அக்காவும் தம்பியும் சத்தமாகச் சிரித்தனர்.

    நெடு நெடுன்னு புடலங்காய் மாதிரி வளர்ந்துட்டா திவ்யா!

    ஆமாங்க்கா... அவளுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடிச்சிட்டேன்னா... நிம்மதியா தூங்குவேன்!

    அதைப்பத்தி ஏன் கவலைப்படறே கதிரு? அவளுக்காகவே பிறந்திருக்கிறான் என் பிள்ளை!

    கோபியோட படிப்பெல்லாம் எந்தளவிலே இருக்கு?

    "மகாபுத்திசாலி கதிர். எல்லாத்திலேயும் முதல் மார்க் வாங்கறானாம். நிறையப் படிக்கணும்... டாக்டராகணும்னு எப்பவும் அதே

    Enjoying the preview?
    Page 1 of 1