Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vedikkai Manithargal…!
Vedikkai Manithargal…!
Vedikkai Manithargal…!
Ebook86 pages33 minutes

Vedikkai Manithargal…!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352852079
Vedikkai Manithargal…!

Read more from Vidya Subramaniam

Related to Vedikkai Manithargal…!

Related ebooks

Reviews for Vedikkai Manithargal…!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vedikkai Manithargal…! - Vidya Subramaniam

    https://www.pustaka.co.in

    வேடிக்கை மனிதர்கள்...!

    Vedikkai Manithargal…!

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    காத்யாயனி அடித்துப் போட்டாற் போல் தூங்கிக் கொண்டிருந்தாள். சுற்றிலும் சாமான்கள், மூட்டை முடிச்சுகள். சுருட்டப்பட்ட புதுப் படுக்கைகள், சுற்றி நடந்து கொண்டிருந்த உறவுக் கூட்டம். இத்தனைக்கும் மத்தியில் களைத்து உறங்கியவளை உறவுகள் சில நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தன.

    அத்தைக் கிழவியொருத்தி அவளைத் தட்டி எழுப்ப, அடித்துப் புரண்டு எழுந்தவள், மலங்க மலங்கச் சுற்றிலும் பார்த்தாள்.

    ஏங்கண்ணு, மருமவப் பிள்ள ராத்திரி உறங்க விடலன்னு இப்படியா மத்தவங்களுக்குத் தமுக்கடிச்சுக் காட்டுவாங்க! ராத்திரி நடந்துச்சா நடக்கலயான்னு நாலுபேரு மசிரப் பிச்சிக்கணும்டி. உறக்கம் வந்தாலும் உறங்கப்படாது. நல்லா தூங்கின போ. கிழவி பொங்கிப் பொங்கிச் சிரிக்க, காத்யாயனி வெட்கத்தில் முகம் சிவந்து போனாள்.

    அது சரி... மாப்பிள்ள அன்பா இருந்தாரா? இல்ல, இதுல மட்டும்தான் ஆவேசமா இருந்தாரா...? எதுனா பேசினாரா...? கிழவி தணிந்த குரலில் கேட்டாள்.

    அன்பாத்தான் இருந்தார்.

    என்ன பேசினார்?

    அதெல்லாம் உனக்கெதுக்கு?

    ஓஹோ, நேத்துவரை இந்தக் கிழவிகிட்ட கண்டதைக் காணாததை எல்லாம் சொல்லுவ. இன்னிக்கு உனக்கெதுக்குன்னு கேக்கறியா...? அப்படி என்னடி மயக்கிட்டான் அந்தப் பய?

    ச்சீ, போ கிழவி. காத்யாயனி அத்தையைத் தள்ளியபடி எழுந்து முகம் கழுவப் போனாள்.

    கொல்லையில் விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. அண்ணன் யாரையோ விரட்டிக் கொண்டிருந்தார். காத்யாயனியைப் பார்த்ததும் அருகில் வந்தார். அவள் களைப்பையும், உறக்க விழிகளையும் கண்டு புன்னகைத்தார்.

    மாப்பிள்ளைக்குப் பொழுது போவல போலருக்கு. குடிக்க ஏதாச்சும் வேணுமான்னு கேட்டுக் கொண்டு போய்க் கொடு.

    நான் மாட்டேன்.

    ஏன்? வெக்கமாக்கும்.

    'பின்ன...?"

    எத்தினி நாளு வெக்கப்படுவ?

    வெக்கம் போகற வரைக்கும்.

    அவள் பதில் கேட்டு அவர் சிரித்தார். பரிவோடு அவள் தலையில் கை வைத்தார்.

    நல்ல மழைநாள் ஒன்றில் சாலையோர மழை நீரில் அறுந்து விழுந்திருந்த மின்கம்பியால் மின்சாரம் தாக்கி அம்மா அப்பா இருவரும் அலறித் துடித்து இறந்தபோது, அவளுக்குப் பதின்மூன்று வயது. பெரிய பெண்ணாகி நாலு நாளாகியிருந்தது. பட்டுப் புடவையும், வெள்ளிக்கொலுசும் வாங்கிக் கொண்டு சொந்தங்களை மஞ்சள் நீராட்டு விழாவுக்கு அழைத்துவிட்டு வரும்போதுதான் இந்த மின்சார மரணம் நேரிட்டது.

    அண்ணன் பன்னீர் செல்வத்திற்குத் திருமணமாகி ஐந்து மாதமாகி இருந்தது. அம்மா அப்பாவின் எதிர்பாராத மரணத்தால் காத்யாயனியின் சடங்குகள் நின்று போயின. பட்டுப் புடவையும் வெள்ளிக் கொலுசும் வாங்கிய கடனோடு சாவுச் செலவுக்கான கடனும் அண்ணனின் தோளில் ஏறிக்கொண்டது. அண்ணி சில நேரம் நல்லவள். சில நேரம் அக்னிக் குஞ்சு. எரித்துச் சாம்பலாக்கி விடுவாள்.

    காத்திக்குச் சடங்கு செய்யணும்.

    எதுக்கு.? நாமளும் கரண்ட் ஷாக்கடிச்சு சாவறதுக்கா...? ஒண்ணும் வேணாம். விடுங்க.

    அண்ணியின் வார்த்தைகளை விட மின்சாரம் பரவாயில்லை என்று தோன்றும் காத்யாயனிக்கு. ஆனால் அடுத்த வாரமே வீட்டில் வெல்லப் பாகு காய்ச்சும் வாசம் வந்தது.

    அக்கம் பக்கத்துச் சொந்தங்கள் வீட்டை நிறைக்க, காத்யாயனியின் சடங்கு எளிமையாய் நடந்தது.

    ஏதுடி பணம்? அண்ணன் கேட்க, அண்ணி காதைத் தொட்டுக் காட்டினாள். காதில் பிளாஸ்டிக் தோடு.

    இதுக்கெதுக்கு அன்னிக்கு அப்படிப் பேசின?

    அண்ணி பதில் சொல்லவில்லை. அவள் அப்படித்தான். எப்படியோ ஊர்ப் பேச்சுக்கு இடமின்றிச் சடங்கு நடந்ததில் அண்ணனுக்கு சந்தோஷம். இதே போல் தங்கைக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணிவிட்டால் பெரிய கடமை முடித்த மாதிரி என்று நினைத்தார்.

    ஆனால் அது மட்டும் லேசில் நடக்கவில்லை. தாயில்லை என்பது பல விதங்களில் வரன் பேச வந்தவர்களை யோசிக்க வைத்தது. அண்ணி எந்த அளவுக்குப் பின்னால் ஆதரவாக இருப்பாள் என்று சந்தேகம் கொண்டு தயங்கிப் பின்வாங்கினர்.

    "போகட்டுமே. அதுக்காக கற்பூரம் அணைச்சுச் சத்தியம் செய்தா கொடுக்க முடியும்? இல்லை, பத்திரம் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பாங்களா? நம்பிக்கையில்லாதவங்களுக்குப் பொண்ணைக் குடுக்கறதும், கிணற்றில் தள்ளி விடறதும் ஒண்ணுதான். மவராசி புருஷனையும் கூட்டிட்டுப் போய்ச் சேர்ந்தா. எல்லாத்தையும் என் தலையில போட்டுட்டு. ஆளாளுக்கு எம் மண்டைய

    Enjoying the preview?
    Page 1 of 1