Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unakkena Manakoyil
Unakkena Manakoyil
Unakkena Manakoyil
Ebook214 pages1 hour

Unakkena Manakoyil

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703324
Unakkena Manakoyil

Read more from Vidya Subramaniam

Related to Unakkena Manakoyil

Related ebooks

Reviews for Unakkena Manakoyil

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    vidya madam ungalukkaga oru manakovil kattanumnu thonradu Only u can reach the readers mind an sole with ur awseme stories

Book preview

Unakkena Manakoyil - Vidya Subramaniam

C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

https://www.pustaka.co.in

உனக்கென மனக்கோயில்

Unakkena Manakoyil

Author:

வித்யா சுப்ரமணியம்

Vidya Subramaniam

For more books

https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

1

மூன்று மணிக்கே விழிப்பு வந்துவிட்டது விசாலத்திற்கு. அன்றைக்கு இரண்டாம் நாத்தனார் மைதிலியை பெண் பார்க்க வருகிறார்கள். பெண் பார்க்கும் படலம் சம்பிரதாயத்திற்குத் தான். ஏற்கனவே எல்லா விஷயமும் பேசி முடிவு பண்ணியாகிவிட்டது. பாக்கு வெற்றிலையும் அன்றைக்கே மாற்றிக் கொள்வதாக சொல்லியிருந்ததால் விருந்து பலமாக அமைய வேண்டும். முதல் ஓர்ப்படி தங்கம் மூன்று நாளாய் வெளியில், சின்ன ஓர்ப்படி சங்கரி பிள்ளைப்பேறுக்கு பிறந்தகம் சென்றுவிட்டாள்.

ஒத்தாசைக்கு ஆள் இல்லை என்னும் போது எல்லாம் நல்ல படியா நடந்து முடியவேண்டுமே என்ற கவலையில் உறக்கம் வரவில்லை.

லேசாய் சிணுங்கிய குழந்தை கெளரியை தட்டி தூங்கப் பண்ணிவிட்டு வெளியில் வந்து பின் பக்கம் சென்றாள். பல்தேய்த்து குளித்துவிட்டு வரும்போது தொழுவத்திலிருந்து காமாட்சி ம்மா…! என்று குரல் கொடுத்தது. அதை தடவிக் கொடுத்து தொட்டியில் பொட்டும் பிண்ணாக்கும் போட்டுவிட்டு வெங்கலப்பானை நிறைய பால் கறந்து கொண்டாள். இளஞ்சூடோடு நுரை பொங்கின பாலிலிருந்து ஒரு டம்ளர் எடுத்துக்கொண்டு மாமியாரிடம் வந்தாள்.

அம்மா…

ம்… என்ன விசாலம்?

ராத்திரியெல்லாம் கமறக் கமற இருமினேளே. அதான் கறந்த பால் கொண்டு வந்தேன்.

அலமு பாலை வாங்கி குடித்தாள்.ரொம்ப சீக்கிரம் எழுந்துட்ட போலிருக்கு?

ம்! நா போய் பாலைக் காய்ச்சிட்டு காபி போடறேன். நீங்க வேணா கொஞ்ச நாழிகூட படுத்துக்கோங்கோ.

ம்ஹும்! தூக்கம் போய்டுத்து, என்றபடி அலமு எழுந்து பின்பக்கம் போனாள்.

கறிகாயெல்லாம் முதல் நாள் இரவே நறுக்கி வைத்துக் கொண்டதால் கேஸ் அடுப்பை பற்ற வைத்து குக்கரில் பருப்பையும் அவியலுக்கான காய் கறிகளையும் வேகப்போட்டுவிட்டு மற்றொன்றில் உலை நீரை வைத்தாள்.

சின்ன திரி ஸ்டவ்வை காப்பி கலப்பதற்கென பற்ற வைத்துக்கொண்ட போது கொல்லைப் புறமிருந்து விசாலம் என்ற குரல் கேட்டது.

இதோ வந்துட்டேன் என்ற விசாலம் பாத்ரூமிலிருந்து மஞ்சள் ஒன்றை கொண்டு வந்து ஓர்ப்படி தங்கத்திடம் கொடுத்தாள்.

ரொம்ப இருட்டார்க்கே. தனியா போய்டுவேளா ஆத்தங்கரைக்கு?

அதெல்லாம் போய்டுவேன். ஆமா கெளரி ரொம்ப படுத்திட்டாளா ராத்திரி? தூங்கவிட்டாளா உன்னை? பாவம் மூணு நாளா உனக்கு நல்ல வேலை. நாளைலேர்ந்து நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நா பாத்துக்கறேன் எல்லா வேலையும்.

சரியா போச்சு. கொழந்தை ராத்திரி சிணுங்கக் கூட இல்லை. அவ சமத்தா தான் இருந்தா. அவள விட்டுட்டு நீங்க தான் தூங்கலை போலருக்கு?

அதெல்லாம் இல்லையே…

ஒரு வாய் காப்பி குடிக்கறேளா மன்னி?

வேண்டாம்மா! அம்மா தப்பா நெனச்சுப்பா. குளிச்சுட்டு வந்தே குடிக்கறேனே. தங்கம் புழக்கடை கதவை திறந்து கொண்டு இருட்டில் இறங்கி நடந்தாள். விசாலம் அடுக்களைக்குள் திரும்ப நுழையும் போது ஒவ்வொருவராக எழுந்திருக்கத் தொடங்கியிருந்தனர்.

அந்த பொண்ணை எழுப்பும் விசாலி! மணி அஞ்சாகப் போறது. இன்னும் என்ன தூக்கம் அவளுக்கு? வரவர சோம்பேறியாயிண்டு வரா அவ.

விசாலம் சிரித்துக்கொண்டே கூடத்திற்கு வந்து மைதிலி மைதிலி! எழுந்திரும்மா அம்மா திட்றா பார் என்று எழுப்பினாள்.

மைதிலி சிணுங்கினாள்.போங்கோ மன்னி! ரெண்டு நாளா என்னை எல்லாரும் ரொம்பத்தான் படுத்தறேள்!

ச்சீ! அசடு! உனக்கு காரியம் கத்து குடுத்தா படுத்தறதுன்னு பேரா? நாளைக்கு ஆம்படையான் ஏ தானம் பண்ணித்தான்னு கேட்டா திருதிருன்னு முழிப்ப!

போங்கோ மன்னி…!

ஏய் எழுந்திருடின்னா கொஞ்சிண்ருக்கயாக்கும் மன்னிட்ட!

அப்பாவின் குரலைக் கேட்டதும் விருட்டென்று எழுந்து மன்னியைப் பார்த்து அழகு காட்டிவிட்டு பின்பக்கம் ஓடினாள் மைதிலி.

விசாலம் உக்கிராண உள்ளுக்கு போய் இரண்டு மூன்று தேங்காய்களும் நறுக்கி வைத்திருந்த சக்கைப் பழத் துண்டுகளையும் கொண்டு வந்தாள்; வீடே பழவாசனையில் நிறைந்தது.

காபி குடிப்பதற்காக அடுக்களைக்குள் வந்த சங்கரன் மூக்கை இழுத்து வாசனையை அனுபவித்து விட்டு சக்கப்பழம் நிறைய இருந்தா பாயசம் பண்ணினப்பறம் சக்க வரட்டியும் பண்ணிடேன் என்றான்.

பண்ணிட்டா போச்சு என்ற விசாலம் எல்லாருக்கும் காபி கலக்க ஆரம்பித்தாள்.

அடுத்த ஒருமணி நேரம் விசாலத்துக்கு பெண்டு நிமிர்ந்துவிட்டது. அவியலுக்கும் பச்சடிக்கும் தேங்காய் அரைத்து, வடைக்கு உளுந்தரைத்து, சாம்பார் வைத்து, ரசம் வைத்து, அப்பளம் பொரித்து, டப்பாவில் போட்டு மூடி, வடையும் தட்டி முடித்து சாமான்களை எடுத்து வைத்து, ஒழித்து பெருக்கி… ஒரு வழியாக அடுக்களையைவிட்டு வெளியே வந்த போது வியர்வை ஆறாக ஓடியது அவள் முகமெங்கும்.

கூடமெங்கும் பெருக்கி துடைத்து பளிச்சென்று மாக்கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் தங்கம். வாசலில் காவியிட்ட பெரிய கோலம். ஸ்வாமி உள்ளிலிருந்து கம்மென்ற ஊதுவத்தி மணம். வெளிக்கூடத்தில் ஊஞ்சலில் அமர்ந்து லேசாய் ஆடிக்கொண்டிருந்தாள் மைதிலி.

என்ன மைதிலி தலைபின்னி விடலாமா.

ஓ நா ரெடி! மைதிலி வாகாய் உட்கார விசாலம் அவளுக்குத் தலைபின்னி, அடர்த்தியாய் தொடுத்து வைத்திருந்த மல்லிகைச் சரத்தை அழகாய் வைத்தாள்.

சரியார்க்கான்னு பாத்துக்கோ. மைதிலி எழுந்து உள்ளறைக்குச் செல்ல, விசாலம் மாடிக்குச் சென்றாள்.

மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்த வண்டி வாசலில் நின்றதும் வீடு முழுக்க அலை அலையாய் பரபரப்பு பரவ, விசாலமும் தங்கமும், அலமுவும் வாசல் வரை வந்து வரவேற்று பட்டுப்பாயில் உட்கார வைத்தனர்.

விசாலம் காப்பி கலக்க உள்ளே போனாள்.

காப்பியெல்லாம் அப்பறம் ஆகட்டும் பொண்ணை அழச்சுண்டு வாங்கோ, என்று வந்தவர்கள் கூற தங்கம் மைதிலியை அழைத்துவரச் சென்றாள்.

தங்கத்தோடு மயிலென நடந்து வந்த மைதிலியைக் கண்டு பிரமித்துப் போனான் மாப்பிள்ளை நாணா. அலமுவே கூட மைதிலியின் அழகைக் கண்டு மனங்குளிர்ந்தாள்.

பொன்னிற உடலில், உடம்பெங்கும் சரிகை பொட்டுக்கள் வாரியிறைத்த கருநீலப் பட்டுப்புடவை கொள்ளை அழகை அளித்திருந்தது. கருநீலப் பட்டில், சரிகை வைத்த ரவிக்கை புடவைக்கு ஏற்றாற் போல் அமைந்திருக்க, தளரப் பின்னியிருந்த கூந்தலிலிருந்து ஒன்றிரண்டு முடிச்சுருள்கள் நெற்றியில் புரண்டு ஆடியது. மல்லிகைப்பூவும், செந்தூரப் பொட்டும் பளிச்சிட… அப்பப்பா என்ன அழகு என்று எல்லாருமே பிரம்மித்து தான் போய்விட்டனர் ஒரு கணம்.

கூடத்திற்கு வந்து அனைவரையும் நமஸ்கரித்துவிட்டு திரும்பியவளை உள்ளே அழைத்துச் சென்று கட்டியணைத்துக் கொண்ட விசாலத்தின் விழிகளில் நீர் படர்ந்திருந்தது.

ஒரு பக்கம் உனக்கு கல்யாணம்னு சந்தோஷமாவும் இருக்கு. இன்னோரு பக்கம் மன்னிய விட்டுட்டு நீ போய்டுவயேன்னு வருத்தமாவும் இருக்கு மைதிலி.

கரெக்ட் மன்னி. அப்பாட்ட சொல்லிடுங்கோ எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாமே! என்னமோ பயம்மார்க்கு மன்னி!

அது சரி! மன்னியும் நாத்தனாரும் ஆரம்பிச்சாச்சா திரும்பவும். தங்கம் கேலி செய்தாள் உள்ளே வந்து.

விசாலம் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு மன்னியைப் பார்த்து சிரித்தாள்.

அப்போது வாசலில் தந்தி என்ற குரல் கேட்க பதறிப்போய் எழுந்தாள் அலமு.

2

கூடம் முழுக்க இரண்டு பக்கமும் நுனி இலை போடப்பட்டிருந்தது. இரண்டு பக்கத்து ஆண்களையும், அக்கம் பக்கத்திலிருந்து வந்திருந்த ஆண்களையும் முதல் பந்தியில் உட்கார வைத்திருந்தனர்.

என்ன அலமு மாமி! பேரன் பொறந்தானாக்கும்? என்று வந்திருந்தவர்கள் அனைவரும் மாற்றி மாற்றி விசாரிக்க, அலமுவும் வாயெல்லாம் பல்லாக ஆமா ஆமா பரணில பொறந்துருக்கான் என் பேரன். ‘தந்தி’ன்னு கேட்ட உடனே நடுங்கி போய்ட்டேன். சுபச் செய்தியா வந்து என் வயத்துல பாலை வார்த்துடுத்து. விசாலி! மாப்பிள்ளைக்கு இன்னும் கொஞ்சம் பிரதமன் விடு! வரும்போதே பேரன் பொறந்த சேதியையும் கொண்டு வந்திருக்கார். தரையில் கால் பாவாமல் ஓடினாள் அலமு. பாவம்! அவள் சந்தோஷம் அவளுக்கு. வரிசையாய் எட்டு பிள்ளைகளையும் மூன்று பெண்களையும் பெற்று இரண்டு பிள்ளைகளை மூன்று வயசிலும் ஐந்து வயசிலும் நோவுக்கு பறிகொடுத்த வயிறு அது. மூத்த மகன் ராமநாதனுக்கு தங்கத்தைக் கல்யாணம் பண்ணி வைத்தாள். அவளுக்குப் பிறந்த மூன்றும் பெண் குழந்தைகள். அடுத்த பிள்ளை சங்கரனுக்கு விசாலியைப் பண்ணி வைத்து வருஷம் ஐந்தாகிவிட்டது. விசாலியின் மணிவயிறு இன்னும் திறந்த பாடில்லை. அடுத்த பிள்ளை சேஷனுக்கு சங்கரி மனைவியானாள். அவளுக்காவது தெய்வம் கண் திறந்து ஒரு பிள்ளையை கொடுத்ததே என்ற சந்தோஷம்தான் அவளை இந்த வயதிலும் துள்ள

வைத்தது.

அடுத்தவன் கணேசன் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஹெட்மாஸ்டராக இருந்தான். அதற்கடுத்த முரளி போன வருஷம் தான் சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவன் மூலம் தான் நாணாவின் ஜாதகம் கிடைத்து இந்த திருமணம் நிச்சயமாயிருந்தது.

கடைசி பிள்ளை ஹரி கோவையில் இரண்டாம் வருடம் என்ஜினீயரிங் படித்துக் கொண்டிருந்தான். பரிட்சை காரணமாக அவன் மட்டும்தான் இந்த வைபவத்திற்கு வரவில்லை என்பதில் விசாலிக்குதான் வருத்தம் நிறைய.

அதற்குப் பின் தான் அலமுவுக்கு மைதிலி, மீனா, ராஜி என்று கடைசியாய் அடுத்தடுத்து பெண்கள் பிறந்தனர்.

என்ன நாணா பிரதமன் எப்படியிருக்கு? எங்க விசாலி மன்னி பண்ணின தாக்கும். சமையல்ல மன்னிக்கு முன்னாடி எங்கம்மாகூட நிக்க முடியாது தெரியுமோ? முரளி பிரதமனை புகழோ புகழ் என்று புகழ்ந்துவிட்டு விசாலியைப் பார்த்து சிரித்தான்.

ம்! சங்கரன் கொடுத்து வெச்சவன். வக்கணையா பொண்டாட்டி பண்ணிப்பண்ணி போட்டு, பாருங்கோ! தொந்தி கூட வெளில தள்ளிருக்கு. தங்கத்துக்கும் எல்லாம் தெரியும். ஆனா உப்புதான் போட மறந்துடுவா, இல்லன்னா போட்டோமா இல்லையான்னு சந்தேகம் வந்து ஒரு தரத்துக்கு ரெண்டு தரமா தாராளமா போட்டுருவா என்று ராமனாதன் கூறவும் கூடம் முழுக்க சிரிப்பலைகள் பரவ, தங்கமும் கலகலவென்று அந்த சிரிப்பில் கலந்து கொண்டாள்.

நாளைக்கு நிஜம்மாவே ரெண்டு தரம் உப்பு போட்டு உங்களுக்கு மட்டும் சமைச்சுப் போடறேன் பாருங்கோ என்றாள்.

முதல் பந்தி முடிந்து இரண்டாவது பந்தியில் பெண்கள் எல்லாரையும் உட்காரச் சொல்லிவிட்டு ஆண்கள் தாங்களே பரிமாறத் தொடங்கினர்.

டேய் சங்கரா! எம் பொண்டாட்டிக்கும் கொஞ்சம் அவியல் போடுடா! எல்லாத்தையும் உன் பொண்டாட்டி இலைலயே போட்டுடாத ராமனாதன் கிண்டல் பண்ணவும்,

ஐயோ பாவம் அண்ணா, மன்னி! ஏற்கனவே அவளுக்கு போட்டது எறங்காம உன்னையே பாத்துண்ருக்கா. ஊட்டி விடணுமோ என்னமோ என்று சங்கரன் பதிலுக்கு கிண்டல் செய்ய,

டீ மைதிலி இலையப் பாத்து சாப்டுடி. நாணா சாயங்கால வண்டில தான் ஊருக்குப் போறான். நிறைய நேரம் இருக்கு. அப்பறம் பாத்துக்கலாம். கழுத்து வலிக்கப் போறது. வேணுன்னா இப்டி முன்னாடி வந்து உட்காரச் சொல்லட்டா என்று முரளி சீண்ட,

பாவம் சேஷு தான் பொண்டாட்டி இல்லாம சரியாவே சாப்டலை.

யார் சொன்னா, பிள்ளை பொறந்த சந்தோஷத்துல தான் சாதம் எறங்கலை அவனுக்கு.

அடுத்த வருஷம் நாணாவுக்கு கூட இப்டி சாதம் எறங்காம போய்டும் பாருங்களேன்.

ச்சீ போ என்று மைதிலி சிணுங்க,

இப்படி மாற்றி மாற்றி கலகலப்பாக அனைவரும் பேசிக் கொண்டதிலேயே விசாலிக்கு வயிறு நிறைந்துவிட்டது. அப்பா! எத்தனை மகிழ்ச்சியான குடும்பத்திற்கு நான் வந்திருக்கிறேன் என்று மகிழ்ந்து போனாள்.

அவளுக்கு மட்டும் என்ன, அலமுவுக்கும் கூட அப்படித்தான், தனக்கென்றே பிள்ளைகளும் மாட்டுப் பெண்களும் தங்கக் கம்பிகளாகக் கொடுத்திருக்கிறான் கடவுள் என்று அகமகிழ்ந்து போனாள்.

ஆண்டவன் புண்யத்தில் முதல் மூன்று மாட்டுப் பெண்களும் ஒற்றுமையாய் சின்னச் சச்சரவுகள் கூட இல்லாமல், கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து போகவேண்டும் என்று எண்ணாமல் அலமுவை தாய்க்குமேல் நினைத்து அன்பு செலுத்தும் குணத்துடன் அமைந்துவிட்டனர்.

தங்கம் வீட்டுக்கு பெரியவளே தவிர மனத்தளவில் குழந்தை உள்ளம் கொண்டவள் தான். அவள் கண்ணுக்கு எல்லாமே வெள்ளையாய்த் தான் தெரியும். அலமு எது சொன்னாலும் அது

Enjoying the preview?
Page 1 of 1