Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Santhana Malargal
Santhana Malargal
Santhana Malargal
Ebook112 pages45 minutes

Santhana Malargal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105704032
Santhana Malargal

Read more from Vidya Subramaniam

Related to Santhana Malargal

Related ebooks

Reviews for Santhana Malargal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Santhana Malargal - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    சந்தன மலர்கள்

    Santhana Malargal

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    அஞ்சு மணிக்கு அலாரம் வெச்சுடும்மா.

    படுக்கையை விரிந்தபடி அம்மாவிடம் சொன்னாள் ரஞ்சினி, தங்கையும் தம்பியும் தூங்கிப் போயிருந்தார்கள். படுத்தாளே தவிர தூக்கம் வரவில்லை. மனசுக்குள் ஏராளமான கவலைகள் அப்பா காணாமல் போய் மூன்று மாதமாகிறது. நிம்மதியாய் அவர் போய் விட்டாலும் வீட்டில் யாராலும் தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை. அப்பாவின் புகைப்படத்தைக் கூடப் பார்க்க பிடிக்காமல் அம்மாவும் அவளும் அதை பரணில் தூக்கிப் போட்டு விட்டார்கள். இருக்கும் போது மனிதன் வாழ்வது பெரிதல்ல. இறந்த பின்னும் மற்றவர் மனதில் வாழும்படி வாழ வேண்டும். அப்பா இதுவரை சரியாய் வாழவில்லை. இப்போது இன்னும் குப்பையாகி விட்டார்.

    அப்பாவுக்கு பணம் என்றால் கொள்ளை பிரியம். ஒரு சைக்கிள் பாக்டரியில் சாதாரண குமாஸ்தாவாகத்தான் அவர் இருந்தார். மாத சம்பளம், வருடாந்திர ஊக்கத் தொகை, தீபாவளி போனஸ் இதிலெல்லாம் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. அதிக சிரமமின்றி நிறைய பணம் எப்படி சம்பாதிக்கலாம் என்று யோசித்தவருக்கு ஒரே ஒரு வழிதான் தோன்றியது. சின்னச் சின்ன தொகைக்கு சீட்டு பிடிக்க ஆரம்பித்தார். ஐந்தாயிரம் பத்தாயிரம் பதினைந்து இருபது என்று நிறைய தள்ளு போகவே நிறைய பேர் ஆர்வமாகச் சேர்ந்தார்கள். பணம் ஒழுங்காக வசூலாயிற்று. இரண்டாவது சீட்டு அவருக்கு என்பதால் ஆரம்பித்து இரண்டாவது மாதமே நாற்பதாயிரம் ரூபாய் வங்கியில் டெபாசிட் ஆயிற்று. மாதா மாதம் கிடைத்த ஏலகமிஷனோடு சேர்த்து கூடக் கொஞ்சம் பணம் போட்டு தன் பங்குக் குரிய சீட்டுத் தொகையும் கட்ட முடிந்தது. ஒரு வருடம் வரை பிரச்சனை எதுவுமின்று தான் ஓடியது.

    நினறய தள்ளு. ஒழுங்காக கிடைத்த சீட்டுப் பணம், ஷூரிட்டி, டாக்குமென்ட் என்று எந்த பிடுங்கலும் இல்லாமல் கைமா றிய சீட்டுத் தொகை என்று நிறைய விஷயங்கள் காரணமாக போகப் போக சீட்டு சேர நிறைய பேர் ஆர்வம் காட்டினார்கள். நாலே நாலு குரூப்பில் அனைவரையும் சேர்க்க இயலவில்லை. என்பதால் சீட்டுத் தொகையை முப்பதாயிரம் ஐம்பதாயிரம் என்று அதிகரித்து இன்னும் பல குருப்புகளை ஆரம்பித்தார். சக ஊழியர்கள் அல்லாது அவர்களுடைய உறவுகளையும் கூட சேர்த்து விட்டார்கள். டெபாசிட் பணம் லட்சக்கணக்கில் சேரச் சேர அப்பாவின் புத்தி கோணலாயிற்று. அம்மாவையும் பெண்களையும் நகைகளால் இழைத்தார். நிலம் நீச்சு வீடு என்று வாங்கிப் போட்டார்.

    சீட்டில் நிறைய குளறுபடிகள் செய்தார். யார் யார் பெயரையோ சொல்லி இவரே சீட்டுத் தொகையோ எடுத்துக் கொண்டார். யாருக்கும் ஆரம்பத்தில் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. நிறைய பேர் அவரை முழுவதும் நம்பினார்கள். பாதி பேர் அவரிடம் எந்த சந்தேகமும் கேட்கச் கூட பயந்தார்கள். சீட்டு எடுத்தவர்களுக்கு பணத்தை ஒழுங்காக கொடுக்காது தாமதப்படுத்தினார். கேட்டால் எடுத்தவர்கள் யாரும் ஒழுங்காகப் பணம் கட்டவில்லை என்றும், அதனால் தான் தாமதம் என்றும் கூறி சமாளித்தார். சிலருக்கு கொஞ்சம் பணம் கொடுத்தார். சிலருக்கு இதோ அதோ என்று சால்ஜாப்பு சொன்னார். முதலில் ரகசியக் குரலில் குறை சொல்லிக் கொண்டிருந்தவர்கள் போகப் போக சத்தமாக பேசினார்கள். அவர் சட்டையைப் பிடித்து பணம் கேட்க ஆரம்பித்தார்கள். அப்பா ஒரு தேதியைச் சொல்லி அன்று எல்லாருக்கும் பணம் பட்டு வாடா செய்து விடுவதாய் சத்தியம் செய்தார். வேறுவழி யின்றி பணம் கட்டியவர்கள் நம்பினார்கள். இடைப்பட்ட அந்த பதினைந்து நாட்களும் அப்பா நாள் முழுக்க சுற்றியலைந்தார். பணம் பட்டுவாடா செய்வதாக சொன்ன தேதிக்கு முதல் நாள் காலையில் இதோ வருகிறேன் என்ற போனவர், போனவர்தான். வரவேயில்லை. மறுநாள் பணம் கட்டியவர்கள் சாரி சாரியாக வந்து வீட்டு வாசலில் கூடினார்கள்.

    உம் புருஷன் எங்கே...?

    தெரியாது. எங்கயோ போனார். இன்னும் வரல என்ன விஷயம்?

    ஒண்ணு தெரியாத மாதிரி கேக்கறதைப் பாருடா...

    நிஜமாவே புரியலிங்க, எல்லாரும் எதுக்கு வந்திருகீங்க?

    உம் புருஷன் எங்களுக்கெல்லாம் பணம் தரணும் இன்னிக்கு தரேன்னு சொல்லியிருக்கார்.

    பணமா...உங்க எல்லார்க்குமா...? அம்மா பதறினாள். பிரம்மித்தாள். முதல் நாள் போன புருஷன் வரவில்லையே என்ற கவலை இப்போது பயமாய் மாறியது. வந்திருந்தவர்கள் சொல்லித்தான் அப்பா சீட்டு பிடிப்பதே தெரிந்தது.

    நேரமாக ஆக ஆட்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று. அக்கம் பக்கத்து மனிதர்களுக்கு எல்லாம் விஷயம் தெரிந்து மானம் போயிற்று. அப்பா வரவேயில்லை. அவர் காசோடு ஓடி விட்டார் என்று வந்திருந்தவர்கள் ஆத்திரத்தோடு சொன்னார்கள்.

    எங்களை நம்புங்க, எங்களுக்கு ஒண்ணும் தெரியாது.

    நகை வாங்கிப் போடும் போது நல்லார்ந்துச்சா. மினுக்கிட்டு சுத்தினப்போ நல்லார்ந்துச்சா.

    சத்தியமா அதெல்லாம் உங்க பணம்ணு தெரியாது. ஏதோ சைடு பிசினஸ் செய்யறதா சொன்னார்.

    இப்ப தெரிஞ்சுடுச்சு இல்ல? உம் புருஷன் போனா என்ன? எங்க கணக்கை நீ பைசல் பண்ணு. நாங்க போயிடறோம்."

    அம்மா பீரோ திறந்து நகை எல்லாம் வாரிக் கொண்டு வந்து போட்டாள்.

    இவ்ளோதான் இருக்கு. எடுத்துக்குங்க.

    கதை விடறயே. இது எங்க ஒருத்தன் கணக்கு கூட செட்டிலாகாது. ஒண்ணா ரெண்டா அம்பது லட்சம் சுருட்டியிருக்கான் உம் புருஷன்."

    தலை சுற்றியது.

    எங்க அடிவயித்துல நெருப்பு வெச்சுட்டான் உம் புருஷன். உங்களை சும்மா விட மாட்டோம். அவன் வர்ற வரை உன் வீட்டு முன்னாலதான் டேரா போடுவோம்.

    "நீ வேறப்பா, இதுங்க நாடகத்தை நம்பறயா நீ? புருஷன் சீட்டு நடத்தற விஷயம் தெரியாதாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1