Katrathu Kaadhal
5/5
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsAtchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Nadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 5 out of 5 stars5/5Maaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsAndroru Naal Rating: 3 out of 5 stars3/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Kaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Thennangkaatru Rating: 5 out of 5 stars5/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsNadhiyai Thedi Vandha Kadal Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsMadhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Aagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Aasai Thee Valarthen Rating: 5 out of 5 stars5/5
Related to Katrathu Kaadhal
Related ebooks
Thodaamal Naan Malarvean Rating: 5 out of 5 stars5/5Gangaikarai Pookkal Rating: 5 out of 5 stars5/5Oomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vandhean… Rating: 0 out of 5 stars0 ratingsIrukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Sollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsTholaintha Devathai Rating: 0 out of 5 stars0 ratingsPurusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Perazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Anbu Megame Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Manamagale Marumagale Vaaa Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Anbulla Maanvizhiye Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Vellai Kaadhalan Rating: 0 out of 5 stars0 ratingsVeliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Anantham Vilaiyadum Veedu Rating: 4 out of 5 stars4/5Janani Jagam Nee Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsKanney, Nerungathey! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Katrathu Kaadhal
1 rating1 review
- Rating: 5 out of 5 stars5/5Very nice story we have not only learnt love but also humanitarian concerns how many mothers are just like the character Girijamma and how many childrens get the opportunity to get advice from their grandmather and try to follow the same hats off to the writer
Book preview
Katrathu Kaadhal - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
கற்றது காதல்
Katrathu Kaadhal
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
கற்றது காதல் - 1
கற்றது காதல் - 2
கற்றது காதல் - 3
கற்றது காதல் - 4
கற்றது காதல் - 5
கற்றது காதல் - 6
கற்றது காதல் - 7
கற்றது காதல் - 8
கற்றது காதல் - 9
கற்றது காதல் - 10
கற்றது காதல் - 11
கற்றது காதல் - 12
கற்றது காதல் - 13
கற்றது காதல் - 14
கற்றது காதல் - 15
கற்றது காதல் - 16
கற்றது காதல் - 17
கற்றது காதல் - 18
கற்றது காதல் - 19
கற்றது காதல் - 20
கற்றது காதல் - 21
கற்றது காதல் - 22
கற்றது காதல் - 23
கற்றது காதல் - 24
கற்றது காதல் - 25
கற்றது காதல் - 26
கற்றது காதல் - 1
வீட்டைச் சுற்றி அழகான நந்தவனம். வீடு கொள்ளை அழகாயிருந்தது. நேர்த்தியான வர்ணங்கள், பளிங்குக்கற்கள் பதித்த தரை, விலைஉயர்ந்த கலைப்பொருட்கள், ஆள் விழுங்கும் சோபாக்கள், அறைக்கு அறை எல்சிடி டிவி, தொலைபேசி, குளிர்சாதனப்பெட்டி, ஏசி, கணிப்பொறி. அதிலும் ரஞ்சனியின் அறை தேவலோகம் போலிருந்தது. அந்த வீட்டின் மகாராணி அவள். அவளுடைய எந்த ஒரு ஆசையும் மனதுக்குள் துளிர்விடும்போதே அவை நிறைவேற்றப்பட்டுவிடும்.
ரஞ்சனி ஷவரைத் திறக்க, பன்னீர் வாசத்தோடு நீர் பொழிந்தது. பூக்களின் வாசமும் அதில் கலந்திருந்தது. அவள் குளியலுக்கென்று தனி தண்ணீர்த்தொட்டி, அதில் ரோஜாக்கள் போடப்பட்டு பன்னீர் கலந்திருக்கும். அந்த வாசனைநீரில் குளித்தால் நாள் முழுவதும் வாசனையும் புத்துணர்ச்சியும் உடலில் தங்கியிருக்கும்.
பன்னீர் வாசனை ஏனோ மெல்ல மெல்ல மாறி ஏதேதோ வாசனைகள் நாசியைத் தாக்க, ரஞ்சனி முகச்சுளிப்போடு சுற்றி முற்றிப் பார்த்தாள்.
அப்பா, பாட்டிக்கு பிண்டத்தைலம் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார். அம்மாவின் தாளிப்பு நெடியில் தொண்டை கமறியது. அடுத்த வீட்டு டிவியின் சப்தம் காதைக் கிழித்தது. சுவர்க்கடிகாரம் காலை ஆறு மணி என்பதை நினைவூட்டியது.
நந்தவனமும், பளிங்குத்தரையும், பங்களாவும், பன்னீர்க்குளியலும் வெறும் கனவென உறைக்க, ரஞ்சனியின் முகம் சுருங்கியது. நடுத்தர வகுப்புக் குடும்பங்கள் குடியிருக்கும் மிகச்சாதாரணமான அடுக்குமாடிக் குடியிருப்பு அது. ஐநுாறு சதுர அடிக்குள்தான் அவர்களது ராஜாங்கம். சுமாரான . முன்னறை, சின்னச் சின்னதாய் இரண்டு படுக்கையறை. மிகச்சிறியதாய் நீளப்போக்கில் ஒரு சமையலறை. இதுதான் நிஜம். இவள் பெருமூச்சு விட்டாள்.
ஏம்மா ரஞ்சனி, காலேஜ் இல்லையா உனக்கு?
பாட்டி கேட்க 'உண்டு' என்றபடி அவள் எழுந்து குளிக்கப் போனாள்.
ஒன்பது மணிக்கு வீடு காலியாகி விடும். அம்மா, அப்பா இருவரும் அலுவலகம் செல்கிறவர்கள். அக்கா தன் படிப்புக்காக மாமா வீட்டில் தங்கியிருக்கிறாள். ஒன்பது மணிக்குப் பிறகு பாட்டி மட்டும்தான் வீட்டில் இருப்பாள்.
'யார் வந்தாலும் கதவைத் திறக்க வேண்டாம்' அப்பா அனுதினமும் மறக்காமல் பாட்டியிடம் கூறும் வசனம் இது.
அம்மாவின் அவசர உப்புமாவில் உப்பு சற்று துாக்கலாயிருந்தது. அதை விழுங்கியபடி ரஞ்சனி அம்மாவிடம் கேட்டாள்.
எனக்குக் கொஞ்சம் பணம் வேணும்மா!
எதுக்கு?
என் சிநேகிதி ஒருத்திக்குப் பிறந்த நாள், பார்ட்டி வச்சிருக்கா. அதுக்குப் போகணும்
நுாறு ரூபா போதுமா?
பரிசு வாங்கவே ஐநூறு வேணும்.. பார்ட்டிக்குப் போட்டுக்க நல்லதா டிரஸ்சே இல்ல. அதுக்கு ஒரு அறுநுாறு ரூபாயும் வேணும். அதுக்குப் பொருத்தமா ஒரு செருப்பு. மொத்தமா ஆயிரத்து ஐநூறு வேணும்!
என்னது?
அம்மா அதிர்ந்தாள், நல்லாருக்குடி. எவ்ளோ ஒரு சிநேகிதி பிறந்தநாளுக்கு என் தலையை மொட்டை அடிப்பயாக்கும்? அவ்ளோ பணம் எங்கிட்ட இல்ல. நூறு ரூபாய்க்கு மேல ஒற்றை ரூபாகூட இல்ல. இருக்குறதுல பளிச்சுனு ஒரு டிரஸ்சைப் போட்டுக்கோ.
அவங்க பணக்காரங்கம்மா!
அப்ப போகாதே!
அம்மா அலட்சியமாய் சொல்லி விட்டுப் புடவை மாற்றப் போனாள். ரஞ்சனி ஏமாற்றமும் எரிச்சலுமாய் தன் அலமாரியைத் திறந்தாள். ஒன்று கூடப்பிடிக்கவில்லை, தினப்படி போட்டுப் போட்டு நிறம் மங்கிப் போய் பழசாயிருந்தன. பணக்கார வீட்டில் பிறக்கச் செய்யாததற்காகக் கடவுளை நொந்தபடி ஏதோ கொஞ்சம் பரவாயில்லையாக இருந்த ஒன்றை அணிந்து கொண்டு கிளம்பினாள் அவள்.
பள்ளிக்குச் சென்றவரை பெரிதாய் ஒன்றும் பிரச்னையில்லை. எல்லாருக்கும் ஒரே போல சீருடைகள்தான். நல்ல மதிப்பெண்களோடு பிளஸ்டூ தேர்ச்சி பெற்றபோது அவளது கனவுகளும் விரிந்தன. பொறியியல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் வந்தபோது சந்தோஷம் கூடியது. நான்காம் நாள் கவுன்சிலிங்கில் அவளது பெயர் இருந்தது.
நாலாம் நாளா? சரிதான், ஊருக்கு வெளியில ஏதாவது ஒரு நாலாந்தர காலேஜ்லதான் கிடைக்கும். முதல் ரெண்டு நாள்னா நீ கேட்ட காலேஜ்ல சீட் கிடைக்க வாய்ப்பிருக்கும்
ஆளாளுக்கு ஒவ்வொன்று சொன்னார்கள். அவர்கள் சொன்னது போல்தான் நடந்தது. கட்டணம், மெஸ் கட்டணம், கல்விக்கட்டணம், நூலகக் கட்டணம் என்று விதவிதமான கட்டணங்களின் கூட்டுத்தொகை கண்டு அப்பாவுக்கு மயக்கமே வந்தது.
பேசாம டிகிரி ஏதாவது படி போதும்
. என்றார்.
நல்லாருக்கு..பாங்க்ல வேலை செய்யறவன் பேசுற பேச்சாடா இது? கல்விக்கடன் எதுக்கு இருக்கு? அவ இஷ்டப்படி அவளப் படிக்கவைடா
பாட்டி ஆதரவுக்கரம் நீட்டினாள்.
ஏற்கனவே ராகினி படிப்புக்கு கடன் வாங்கினதை மறந்துட்டியா?
ஏண்டா, புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும் சம்பாதிக்கும் போது படிக்க வைக்கிறதுல என்ன பாரபட்சம்?
பாட்டியின் நியாயத்தீர்ப்புக்குப் பலன் கிடைத்தது, ஒரு சில நிபந்தனைகளுடன்.
சாப்பாடு கையில் கொண்டு போய்விட வேண்டும். பஸ் கட்டணமும் தவிர்க்க வேண்டும். தினசரி மாநகரப் பேருந்தில் சென்று வரவேண்டும்.
வேறு வழியின்றி ஒப்புக்கெண்டாள். விடியற்காலையில் எழுந்து ஒரு டம்ளர் பாலைக்குடித்து விட்டு அரைவயிறுக்கு வேண்டியும் வேண்டாமலும் அம்மா தரும் டிபனைக் கொறித்துவிட்டு மதிய உணவை டப்பாவில் அடைத்துக்கொண்டு கிளம்பினால் வீடு திரும்ப இரவு ஏழெட்டு மணிகூட ஆகிவிடும்.
முதல் நாள் வியர்க்க விறுவிறுக்க கல்லுாரியை அடைந்த போது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போலிருந்தது. பள்ளிக்கும், கல்லுாரிக்கும் இடையிலிருந்த வித்தியாசம் அயர வைத்தது. உடன் படித்த வர்கள் பிரமிக்க வைத்தார்கள். 'பாதிப்பேர் பணக்கார வீட்டுப் பிள்ளைகள். பெண்கள் நவநாகரீகமாக இருந்தார்கள். அவர்களின் ஆடையும், அலங்காரமும் வியப்பை ஏற்படுத்தியதோடு ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையையும் தூண்டிவிட்டது. யாருடனும் பேசக்கூட பயமாயிருந்தது. அப்படி இப்படி என்று ஆரம்பத் தயக்கம்
உன் காலம் வேற. எங்ககாலம் வேறம்மா. ஒரு நாள் வந்து என் பிரண்ட்சை பாரு. நீயே புரிஞ்சுக்குவ. நான்தான் அசிங்கமா காலேஜ் போறேன். பெத்தா மட்டும் போதுமா?
கற்றது காதல் - 2
ஹார்லிக்ஸ் தீர்ந்து போச்சு. அம்மாவோட கஞ்சிப்பொடியும் காலி!
சாப்ட்டுட்டு போய் வாங்கிட்டு வர்றேன். ரஞ்சனி இன்னும் வரலியே!
யாரோ பிரண்டுக்கு பிறந்த நாள்னு காலைல சொன்னா. ஒரு வேளை அங்கே போயிருப்பான்னு நினைக்கிறேன். ஆயிரத்தி ஐநுாறு ரூபா பணம் வேற கேட்டா. இல்லைன்னுட்டேன்!
எதுக்காம்?
சிநேகிதி பிறந்த நாளுக்கு போட்டுட்டு போக நல்ல டிரஸ் வாங்கணும். புது செருப்பு வாங்கணும்னா. சிநேகிதி பிறந்தநாள் என்ன பெரிய பண்டிகையா? புது டிரஸ் போட்டுட்டு இவ கொண்டாட..அதெல்லாம் முடியாதுனுட்டேன்
பொறுப்பே வரமாட்டேங்குதே இந்தப் பொண்ணுக்கு? வீட்டுக் கஷ்டம் தெரிஞ்சு நடந்துக்க வேண்டாமா?
எங்கிட்ட கேட்டா? அவ வந்ததும் அவகிட்டயே கேளுங்க!
சித்ரா சாப்பாட்டு மேஜையை ஒழித்து சுத்தம் செய்துவிட்டு உள்ளே போக, ரமணன் ஷர்ட்டை அணிந்து கொண்டு கடைக்குக் கிளம்பினார்.
நேரம் கடந்து கொண்டிருந்தது. மணி ஒன்பதைத் தாண்ட, சித்ராவின் முகத்தில் கோபம் படர்ந்தது. நேரத்துக்கு பெண் வீட்டுக்கு வரவில்லையே என்ற கோபம். 'வரட்டும். விடுற டோஸ்ல இனி இப்படி பண்ணக் கூடாது' என்கிற முடிவோடு மனசுக்குள் வார்த்தைகளைக் கோர்க்க ஆரம்பித்தாள்.
மணி ஒன்பதரையைக் கடந்தபோது கோபம் கவலையாய் உருமாறியது.
என்னங்க... இவளை இன்னும் காணல. எனக்கு பயமாயிருக்கே....!
லேட்டாகும்னா ஒரு போன் பண்ணக் கூடாதா உன் பொண்ணு!
அதென்ன எம் பொண்ணுன்னு ஒரு அழுத்தம். உங்களுக்கு பெண்ணில்லையாக்கும்!
இப்போ எங்கன்னு போய்த்தேட. எங்க பார்ட்டின்னு ஏதாவது சொன்னாளா?
பணம் தரமுடியாதுன்னதும் விர்ருன்னு கிளம்பிப் போயிட்டா. இவ்வளவு லேட்டாகும்னு நான் கண்டேனா?
- .
ஒரு வேளை பணம் தராத கோபத்துல இந்தப் பொண்ணு கோவிச்சுக்கிட்டு ஏடாகூடமா ஏதாவது...
ஐயோ, சொல்லாதீங்க. முதல்ல அவங்க காலேஜ்க்கு போன் பண்ணி இன்னிக்கு யாருக்கு பிறந்த நாள், எங்கே, என்னன்னு விஷயத்தைக் கேளுங்க!
பைத்தியமா நீ?.. மணி பத்தாகப் போகுது. இந்நேரம் எவன்டி காலேஜ்ல இருப்பான்?
பயம் அடிவயிற்றில் பந்தாய்ச் சுருள சித்ரா அழுகைக்கு தயாரானாள். 'காலை எட்டு மணிக்கு கிளம்பிய பெண் இன்னும் வீடு திரும்பவில்லை என்றால்.... ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்திருந்தால் எந்நேரமாக இருந் தாலும், எங்கிருந்தாலும் தொடர்பு கொண்டு விசாரித்திருக்கலாமோ? கேட்ட பணத்தைக் கொடுக்கவில்லை என்பதற்காக இப்படி பயமுறுத்துகிறாளோ?'
கற்றது காதல் - 3
கவலை கவலை....கவலைகள் நிறைந்ததுதான் வாழ்க்கையோ? கவலைகள் தானாக வருகிறதா? நாமாக ஏற்படுத்திக் கொள்கிறோமா? விடை தெரியாத குழப்பத்தோடு வாசலில் நின்றிருந்தாள் சித்ரா. கணவனும் மாமியாரும் வருவதைக் கண்டதும் அவர்களை சற்றே பதட்டத்தோடு பார்த்தாள்.
என்னாச்சு?
அவ காலேஜுக்கே போகலையாம். உடம்பு சரியில்லன்றா. அழுதிருப்பா போலருக்கு. கண்ணும் மூக்கும் சிவந்து கிடக்கு. எனக்கென்னமோ பயம்மார்க்கு.
சித்ரா சொல்ல ரமணன் அம்மாவைப் பார்த்தார்.
தூங்கிட்ருக்காளா?
ம்
தூங்கட்டும். எது பத்தியும் இப்போதைக்கு கேக்கவேண்டாம். எதுவுமே நடக்காதது போலே இருங்க. அவகிட்ட சாதாரணமாவே பேசுங்க சரியா?
அவர்களிடம் சொல்லிவிட்டு பாட்டி குளிக்கச் சென்றாள்.
"நா என்ன செய்யட்டும்? ஆபீஸ்க்கு லீவு போட்டுடவா? சித்ரா ரமணனுக்கு இரண்டாவது டோஸ் காப்பியைக் கொடுத்துவிட்டுக் கேட்டாள்.
வேண்டாம் நீ போ. நா லீவு போடறேன்
நீங்களா?
சித்ரா வியப்போடு பார்த்தாள். தலையே போனாலும் லீவு போட யோசிப்பவர் ரமணன்.
ஆமா. நான் பாத்துக்கறேன். நீ கிளம்பு
ரமணன் பேப்பரை எடுத்துக் கொண்டு அமர்ந்தார்.
ஹாட்பேக்ல இட்லியும். டப்பர்வேர்ல சட்னியும் வெச்சிருக்கேன். சமையலும் ஆச்சு. மத்தியானம் காப்பி சாப்டதும் பாலை உறை குத்திடுங்க
கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவள் மறுபடியும் தயங்கினாற் போல் அவரருகில் நின்றாள்.
அவ எழுந்தப்பறம் ஏதாவது சொன்னா எனக்கு போன் பண்ணிச் சொல்லிடுங்க. ஆபீஸ்ல வேலையே ஓடாது
சொல்றேன். பஸ் ஸ்டாண்ட்ல விடட்டுமா?
'வேண்டாம் நா போய்க்கறேன். நீங்க எங்கயும் வெளில போகவேண்டாம் சரியா?"
சித்ரா போனதும் அவர் செய்தித்தாளில் கவனம் செலுத்தினார்.
பத்தரை மணிக்குத்தான் படுக்கையை விட்டு எழுந்து வந்தாள் ரஞ்சினி. அப்பா வீட்டிலிருப்பதைக் கண்டதும் வியந்தாள். பல்தேய்த்துக் குளித்து விட்டு வந்ததும், அப்பா பேப்பரை மடித்து வைத்துவிட்டு எழுந்தார்.
டிபன் சாப்டலாமா? உனக்காகத்தான் காத்துட்டு இருக்கேன்
எனக்கு வேண்டாம் நீங்க சாப்டுங்க
எவ்ளோ நாள் வேண்டாம்?
அவர் இட்லியை எடுத்துத் தட்டில் வைத்து நீட்டியபடி கேட்டார். தனக்கும் எடுத்து வைத்துக்கொண்டு இருவருக்கும் சட்னி வைத்தார்.
சாப்ட்டுட்டு வா, நாம வெளில போறோம்
அவள் எங்கே என்பது போலப் பார்த்தாள்.
சாப்டு சொல்றேன்
அவள் தயங்கியபடி அவர் எதிரில் அமர்ந்தாள்.
பாட்டி சாப்ட்டாங்களா?
அவங்க கோயிலுக்குப் போனாங்க. இன்னும் வரல
இதோ வந்துட்டேனே
சொன்னபடியே பாட்டி உள்ளே நுழைந்தாள். பிரசாதத்தை இருவர் நெற்றியிலும் இட்டுவிட்டு தானும் டிபன் சாப்பிட அமர்ந்தாள். சாப்பிடும்போது மெல்லக் கேட்டார் ரமணன்.
உடம்புக்கென்ன ரஞ்சினி?
ஒண்ணுமில்ல. டயர்டா இருந்துது
இப்போ பரவால்லையா?
ம்
நேத்து எங்க பார்ட்டி நடந்துச்சு?
அவள் ஹோட்டலின் பெயரைச் சொன்னாள்.
பெரிய ஹோட்டலாச்சே. ரொம்பப் பணக்காரங்களோ?
ஆமா. கோடீஸ்வரங்க
போகும்போது அவங்க கார்லயே கூட்டிட்டு போயிட்டாங்களா?
அடுத்த கேள்வியை மெல்லக் கேட்ட அப்பாவை ஏறிட்டுப் பார்த்தாள்.
இப்போ உங்களுக்கு என்ன தெரியணும்? எதுவா இருந்தாலும் நேரா பளிச்சுனு கேளுங்க. எதுக்கு விசாரணை கமிஷன்?
ரமணனின் முகம் மாறியது. "சரி நேராவே கேக்கறேன். நேத்து எப்டி வீட்டுக்கு வந்த? அவர் சற்றே குரல் உயர்த்திக் கேட்டதும், பாட்டி அவசரமாய்க் குறுக்கிட்டாள்.
ரமணா..நீ எங்கயோ வெளில போகணும்னயே. நேத்து கதை பழங்கதை. இன்னி கதையைப் பாரு.
அம்மா சொல்ல ரமணன் அமைதியானார்.
சாப்பிட்டுக் கைகழுவியவர் அவளிடம் வந்தார்.
நாம கடைக்குப் போறோம். பத்து நிமிஷத்துல கிளம்பிவா
என்றார்.
ரஞ்சினி நிமிர்ந்து நோக்கினாள். 'எங்கே?' என்றாள்.
உனக்கு செல்போன் வாங்க கடைக்குப் போறோம்.
அவர் சொன்னதும் நம்பமுடியாமல் அவரைப் பார்த்தாள்.
திடீர்னு என்ன
வெளில போயிட்டுவர பெண்ணுக்கு இதுவரை வாங்கித் தராதது தப்புதான். நேத்து மட்டும் உன் கைல ஒரு செல்போன் இருந்திருந்தா எங்களுக்குத் தகவல் சொல்லி இருப்ப இல்ல? அதான் வாங்கிடலாம்னு. அதுக்குதான் இன்னிக்கு லீவு போட்டேன்.
ரஞ்சினியின் முகத்தில் அவளையும் மீறி ஒருவித மலர்ச்சி படர்ந்தது. அதை உடனே மறைத்துக் கொண்டாள். ஆனால் அந்த சந்தோஷமும் கடைக்குப் போனதும் சுத்தமாய் மறைந்து போயிற்று. இருப்பதிலேயே படு சீப்பான ஒரு பழைய மாடல் மொபைலை அப்பா தேர்ந்தெடுத்தார். அதில் கேமரா வசதி கூட இல்லை. அவரவர் தொடுதிரை, துல்லியமாய்ப் படமெடுக்கும் கேமரா, பாட்டு கேட்கும் வசதி என்று உயர்தர ஆண்டராய்டு போன் உபயோகிக்கும் இக்காலத்தில், இப்படி ஒரு போனை வாங்கித் தருவதற்கு அவர் பேசாமலே இருந்திருக்கலாம். அவள் முகம் வாடிப் போயிற்று. அப்பா போன் வாங்கித் தருவதாகச் சொன்னதும், ஒரு நிமிடத்தில் மனசு பெரிசாய் கற்பனை எல்லாம் செய்து விட்டது.
இன்னும் கொஞ்சம்கூட பெட்டரா வாங்கலாமாப்பா?
கேட்டு விட்டாள்.
ஏன்? இதுக்கென்ன?
ரொம்ப சிம்பிளா இருக்கு?
"இதோ பார் ரஞ்சினி...இது