Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanavil Oviyame!
Vanavil Oviyame!
Vanavil Oviyame!
Ebook252 pages2 hours

Vanavil Oviyame!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580106004954
Vanavil Oviyame!

Read more from Jaisakthi

Related to Vanavil Oviyame!

Related ebooks

Reviews for Vanavil Oviyame!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanavil Oviyame! - Jaisakthi

    http://www.pustaka.co.in

    வானவில் ஓவியமே!

    Vanavil Oviyame!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    நல்வரவு! வாங்க! வணக்கம்! என்று உற்சாகமாக வரவேற்றார் ஞானமுத்து.

    வணக்கம்! என்று அரைப் புன்னகையுடன் உள்ளே நுழைந்தான் உமாசங்கர்.

    உமாசங்கர் உள்ளே நுழைந்ததும் என்னமோ அந்த அலுவலகமே ஒளியடைந்து விட்டாற்போலத் தோன்றியது ஞானமுத்துவுக்கு.

    அப்பாடா! என்றிருந்தது.

    நண்பரும் பார்ட்னருமான அம்மபலவாணனின் மகன். இதோ! அதோ! இப்ப வருவான்..! அடுத்த மாதம் வந்துடுவான் என்று அம்பலவாணன் சொல்லிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் ஞானமுத்துவுக்கு சந்தேகமே வந்து விட்டது.

    வரமாட்டான் என்பதைத்தான் இப்படிச் சொல்கிறாரோ என்று தோன்றியது. போன மாதம்தான் உறுதியான பதிலாகச் சொன்னார்.

    ஒரு வழியாத் தம்பி வர்ரேன்னு சொல்லிட்டான். அவனே சொந்தமா அவனுக்குன்னு பிடித்த தொழில்களைக் கைவசம் வச்சிருக்கறதாலே இதுல ஆர்வம் காட்ட மாட்டேங்கறான். இப்ப ஒரு வழியா அவனுக்குப் புரிய வச்சிருக்கேன்.. ஆனா.. அவன் ஒரு மாதிரியான பேர்வழி! ஜாக்கிரதை!" என்று எச்சரிக்கை வேறு செய்திருந்தார். அதனால் ஞானமுத்துவும் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க முடிவு செய்தார்.

    உமாசங்கருக்கென்று ஒதுக்கியிருந்த அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார்.

    உள்ளே நுழைகிற ஒரு கணத்துக்குள்ளாகவே அறையை நோட்டம் விட்டு விட்டான். முகத்தில் திருப்தி தெரிந்தது.

    ஞானமுத்துவும் கவனமாக அவனுடைய பார்வையையும், முகபாவத்தையும் கவனித்துக் கொண்டு வந்தாராதலால் அவர் முகத்திலும் திருப்தி தோன்றியது.

    தம்பி! என்ன சாப்பிடறீங்க? கூல்ட்ரிங்ஸ் என்று கேட்டார்.

    இல்லே! நான் அதிகமாக கூல்ட்ரிங்ஸ்.. சாப்பிடறதில்லே! காஃபியோ, டீயோ குடுக்கச் சொல்லுங்க! அதுவும் ஒரு நாளைக்கு ரெண்டு கப்தான் என்றான்.

    லேசாகப் புன்னகைத்தான்.

    அது சரி! அதுசரி! நல்லதுதான்! என்றார் ஞானமுத்து அவசரமாக.

    தன்னைத் திருப்திப் படுத்த வேண்டுமென்பதற்காகத் தான் சொல்கிற விஷயங்களுக்கெல்லாம் அவர் அவசரமாக ஆமாம் சாமி போடுவதைப் பார்த்து அவனுக்கு உள்ளுக்குள்ளே சிரிப்பு தோன்றியது போலும்.

    கண்களில் குறும்பு மின்னி மறைந்தது.

    அப்புறம்.. சொல்லுங்க.. அங்கிள்! என்றான் தீவிரமான முகபாவத்துடன்.

    தங்கள் தொழிலைப் பற்றி விளக்கமாகச் சொன்னார் ஞானமுத்து.

    ஏற்றுமதியில் இருந்தார்கள்! அதுபோக வியாபாரம் என்று இரண்டு மூன்று தொழில்கள் இருந்தன.

    பெரிய கம்பெனிகளோடு தொடர்பு வைத்துக் கொண்டு உதிரிப் பாகங்கள் தயாரித்துக் கொடுத்தார்கள்.

    ஞானமுத்து எல்லாத் தொழில்களையும் பற்றி விவரமாகச் சொன்னார். முதலில் லேசான அலட்சியப் பார்வையுடன் அவர் பேசுவதைக் கேட்க ஆரம்பித்த உமாசங்கர் ஓரிரு நிமிடங்களிலேயே தன் பார்வையின் தன்மையை மாற்றிக் கொண்டான்.

    ஞானமுத்து தொழில்களைப் பற்றிய அடிப்படைகள் சந்தையின் போக்கு பற்றியெல்லாம் தெளிவாகத் தெரிந்தவராகவே இருந்தார். அதனால் அவன் கண்களிலும் மரியாதை கூடியது.

    பொறுமையாகவும் ஆழமாகவும் உள்வாங்கிக் கொண்டான். அதேபோல அவன் கேட்ட கேள்விகளில் இருந்தும் அவருக்கும் சில விஷயங்கள் புரிந்தன. அவனும் ஏதோ மேம்போக்கான இளைஞன் அல்ல. நவீனமாக உடையுடுத்திக் கொண்டிருந்தாலும், தொழில் உழைப்பு என்று வரும்போது தெளிவாகவே இருக்கிறான் என்பது புரிந்தது.

    பரஸ்பரம் மரியாதை கூடியது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பேச்சுக்குப் பிறகு சொந்த விஷயங்களுக்குத் தாவினார்கள்.

    தம்பி! தங்கறதெல்லாம் எப்படி? என்று கேட்டார் ஞானமுத்து.

    அங்கிள்! மூணு நாள் இங்கே! மத்த நாட்கள் என்னோட மத்த தொழில்களைப் பாக்கணும் என்றான்.

    நல்லது.. தம்பி!

    அப்போதுதான் அவன் அந்தக் கேள்வியைக் கேட்டான்.

    அங்கிள்! நீங்களே நல்லா நிர்வாகம் செய்யக் கூடியவர்னு தெரியுது.. அப்புறம் ஏன்? என்று நிறுத்தினான்.

    ஞானமுத்து ஒரு பெருமூச்சு விட்டார். பிறகு சொன்னார்.

    எனக்கு எல்லாத்துலயும் ஒரு வெறுப்பு வந்துருச்சுப்பா.. என்று.

    அங்கிள்! எனக்கு உங்க மனக்கஷ்டம் புரியுது! ஆனா..! இப்பத்தான், அட்லீஸ்ட் கொஞ்ச நாளைக்காவது நீங்க உங்களை பிஸியா வச்சுக்கணும்! இல்லேன்னா.. மனசு ரொம்பத் கெட்டுடும்.. என்றான்.

    இல்லப்பா! நான் வெட்டியா பொழுதைப் போக்கப் போறது இல்லே! விவசாயம் பாக்கப் போறேன். இங்க வந்தா.. அடிக்கடி.. என்று நிறுத்த உமாசங்கர் பரிவாகப் பார்த்தான்.

    கலாதர் ஞாபகம் வருதா? அவரு இருந்திருந்தா... இந்தத் தொழில்களோட பொறுப்பெல்லாம் எடுத்துகிட்டிருப்பார் என்றான் ஆறுதலாக.

    அது தெரியலப்பா! ஆனா.. ஒரு பெரிய பொறுப்பை எனக்கு வச்சிட்டுப் போயிருக்கான் என்றான்.

    அங்கிள்! மனசு வருத்தப்படாதீங்க! நல்ல வேளையா அவருக்குன்னு ஒரு வாரிசு இருக்கு..! அந்தக் குழந்தையை சிறப்பா வளர்க்கப் பார்க்கலாம் என்றான்.

    அதில் அவன் தன்னையும் இணைத்துக் கொண்ட போது அவர் மனத்துக்கு ஆறுதலாக இருந்தது.

    அப்புறம்.. யாழினி..! என்று நிறுத்தினான்.

    யாழினி.. இப்பத்தான் தேறிட்டு வருது. அது மட்டும் இல்லப்பா.. அதுவும்.. தொழில்கள்ல கொஞ்சம் பழகணும். நானே ட்ரெயினிங் குடுப்பேன். ஆனா.. அதைப் பாக்கும் போதெல்லாம் எனக்கு என் மேலயே கோபம் வருது. பேசாமக் கலாதருக்குக் கல்யாணம் பண்ணாமயே இருந்திருக்கலாம்னு தோணுது. அந்தப் புள்ளையப் பாக்கும்போதெல்லாம் எனக்கு சங்கடமாகும்.. என்று நிறுத்தினார்.

    உள்ளே பொங்கிய உணர்வைக் கட்டுப்படுத்திக் கொள்ள கஷ்டப்பட்டார்.

    அங்கிள்.. ப்ளீஸ்! வேற பேசலாம் என்றான்.

    இல்லப்பா! பேசுவோம்! எனக்கும் என் மனசுல இருக்கறதையெல்லாம் கொட்டறதுக்கு ஆள் வேணும் இல்லே! உங்க அத்தைகிட்ட எதுவும் பேச முடியாது! பேச ஆரம்பிச்சாலே பொல பொலனு கண்ணீர்தான். யாழினிகிட்டயும் பேச முடியாது.. ஆனா.. நான் இதையெல்லாம் பேசறதுனாலே உன்னை ஒண்ணும் கஷ்டப் படுத்தலியே என்றார்.

    இல்லைங்க.. அங்கிள்! பேசுங்க..! உங்க மனசுக்கும் ஆறுதலாகட்டும்! உங்களுக்கு இன்னொரு மகனா நான் இருக்கேன்.. என்றான்.

    அவர் விடுபட்ட உணர்வோடு தொடர்ந்தார்.

    தம்பி! எனக்கு ஒரே ஒரு உதவி செய்யணும்! கொஞ்சம் பொறுமையா யாழினிக்கும் இந்த நிர்வாகமெல்லாம் கத்துக் குடுக்கணும் என்றார்.

    உமாசங்கர் கொஞ்சம் திடுக்கிட்டுப் போனான். அப்பா தன்னிடம் இப்படியொரு விஷயத்தைச் சொல்லவேயில்லையே! இளம்விதவை அப்படி ஒரு பொண்ணுக்கு.. நீ தொழில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் ஒரேயடியாக இந்தத் திசைக்கே கும்பிடு போட்டிருப்பான். ஆனால் உள்ளே காலை வைத்தாகியது. அதுவும் அங்கிள் இப்படி உருக்கமாக வேண்டிக் கொள்ளும்போது எப்படி மறுப்பது என்றும் தோன்றியது.

    அங்கிள்! என்று தயங்க அவர் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

    தம்பி! மறுத்துச் சொல்லிடாதே! எங்களுக்கும் வயசாகிட்டே போகுது. அந்தப் பொண்ணைத் தயார் பண்ணினாத்தான் அவளோட எதிர்காலத்துக்குப் பாதுகாப்பு.. என்றார் கெஞ்சுவது போல.

    உமாசங்கரின் மனம் நெகிழ்ந்து விட்டது. செய்யறேன்.. அங்கிள்! செய்யறேன்! என்றான் அவசரமாக.

    ஞானமுத்து அதற்குப் பிறகுதான் மனம் தெளிந்தார். பேச்சிலேயே உற்சாகம் கூடியது.

    உமாசங்கரின் ஊர் மூன்று மணி நேரப் பயணத்தில் இருந்தது. தினமும் ஆறு மணி நேரம் காலையும், மாலையும் பயணம் செய்வது தேவையற்றது என்று நினைத்தான்.

    அம்மாவும் அப்பாவும் கோயமுத்தூருக்கே வந்து விடுகிறோம். ஆனால் ஆறுமாதம் போகட்டும் என்றார்கள். அதிலும் அப்பா ஏனோ கோயமுத்தூருக்கு அவன் வந்து அங்கே இருக்கிற தொழில்களைத் மேம்படுத்திக் கொடுக்க வேண்டும் எண்ணத்திலே மிகவும் ஆர்வமாக இருந்தார்.

    கடந்த ஆறுமாதமாகவே தொடர்ந்து அது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அதனால்தான் சரி என்று ஒத்துக் கொண்டான். இப்போது ஞானமுத்துவிடமும் அதையே சொன்னான்.

    அங்கிள்! தினமும் சேலம் போயிட்டு வர்றது தேவையில்லேனு நினைக்கிறேன். அதனால இங்க எனக்குன்னு ஒரு வீடு.. பாக்கணும் என்று அவன் முடிக்கு முன்பாகவே ஞானமுத்து குறுக்கிட்டார்.

    என்ன தம்பி! எதுக்காக வீடு பாக்கறது! நம்ம பக்கத்து பங்களாவே சும்மாதான் கிடக்குது. நீங்க வந்து தங்கிக்குங்க என்றார்.

    அது.. வந்து.!

    என்ன அது.. இதுன்னுகிட்டு..! தனியா எதுக்கு வாடகை வீடு. தனி பங்களா.. எந்த விதத்திலுயும் நாங்க உங்களுக்குத் தொந்தரவா இருக்க மாட்டோம். தனிக் காம்பவுன்ட்! இன்டிப்பென்டன்ட்டா.. இருக்கும் என்றார்.

    உமாசங்கர் யோசித்தான்.

    நான் ஏற்கனவே உங்கப்பாகிட்டே பேசிட்டேன். தம்பி! அப்பா.. சரின்னுட்டார் என்றார்.

    இப்போது உமாசங்கருக்கு வேறு வழியிருக்கவில்லை.

    சரி.. அங்கிள்! நான் இன்னைக்கு ஈவ்னிங் வந்து பாக்கறேன்.. எனக்கு மனசுக்குப் பிடிச்சா.. என்று இழுத்தான்.

    மிகவும் அருகில் இருப்பது தேவையற்றது என்று நினைத்தான்.

    அது எதுக்குத் தம்பி! சாயங்காலம்! இப்பவே போலாம்.. என்றார் ஞானமுத்து ஆர்வமாக.

    அவன் உறுதியான மறுப்புத் தெரிய அவர் முகம் பார்த்தான்.

    இல்லிங்க.. அங்கிள்! நாம ஆஃபீஸ் அவர்ஸ்.. கீப் அப் பண்ணினாத்தான் நம்ம ஸ்டாஃப்கிட்டே வேலை வாங்க முடியும். நான் ஈவ்னிங் சிக்ஸ் ஓ கிளாக்குக்கு வர்றேன் என்றான்.

    ஞானமுத்துவின் கண்களில் மரியாதை கூடியது.

    சரிப்பா! என்றார்.

    அங்கிள்! சாப்பிட்டு முடிஞ்சதும் இங்க இருக்கிற யூனிட்டெல்லாம் பாத்துரலாம் என்றான்.

    பிற்பகல் முழுக்க அருகிலே இருந்து யூனிட்டெல்லாம் பார்த்தார்கள். பாக்கும்போதே தனது நிர்வாக முறைகளைப் பற்றி மனதுக்குள் திட்டம் வகுத்துக் கொண்டான் உமாசங்கர்.

    ஞானமுத்துவை ரொம்பவும் அலைக்கழிக்காமல் அவரை அலுவலகங்களில் அமர வைத்து விட்டு மேனேஜரை வரவழைத்துக் கொண்டு சளைக்காமல் சுற்றி வந்தார்கள்.

    ஞானமுத்து உள்ளுக்குள் அவனை மெச்சிக் கொண்டார். பேசுகிற பேச்சுக்களிலும், மேனேஜர்களிடம் கேட்கிற கேள்விகளிலும் இருந்து அவருக்கு ஒன்று புரிந்தது. அவன் தனக்கே சலுகைகள் அளித்துக் கொள்வதில்லை என்ற உண்மைதான் அது.

    இப்படி.. ஒருவரிடம்தான் தனது மருமகள் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

    கலாதரின் நினைவு வந்தது. அவன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால்.." என்று எண்ணினார்.

    உயிரோடு இருந்திருந்தால்.. மட்டும்..! உமாசங்கரின் அளவுக்கு.. திறமையாய் இருந்திருப்பானா? திறமை.. இருக்கட்டும்.. அட்லீஸ்ட் என்று எண்ண ஓட்டம் ஓட சட்டென்று மனதுக்குத் தடை போட்டுக் கொண்டார்.

    வேண்டாம்..! பழைய நினைவுகளில் இருந்து மீள வேண்டும் என்று தனக்கே சொல்லிக் கொண்டார்.

    செல்ஃபோனை எடுத்து வீட்டுக்குப் ஃபோன் செய்தார்.

    மருமகளிடம் பேசினார். முகத்தில் சுருக்கங்கள் விழுந்தன. குரலைச் சற்றே உயர்த்தினார்.

    பாரும்மா! நீ என்ன சொன்னாலும் நான் கேக்கறதா இல்லை! என்றார் கறாராக. மேலும் ஒன்றிரண்டு கட்டளைகள் இட்டார். இணைப்பைத் துண்டித்தார்.

    மீண்டும் அலுவலகம் வந்தார்கள். மாலை ஐந்து மணியிருக்கும்.

    அலுவலகத்தின் உதவியாளர் வந்து ஞானமுத்துவிடம்.

    ஐயா.. மேடம்.. வந்திருக்காங்க! என்றார்.

    வரச்சொல்லு.. வரச்சொல்லு..! என்றார்.

    வந்தாள்!

    ஞானமுத்துவிடம் பேசிக் கொண்டே திரும்பிய உமாசங்கர் அந்தப் பெண்ணைப் பார்த்தான்.

    அப்படியே பேச்சை நிறுத்தினான்!

    எதிரே நின்ற அந்த இளம்பெண்ணைப் பார்த்தவுடன் அடி மனத்தில் தோன்றிய உணர்வுகளை அடக்கப் படாதபாடு பட்டுவிட்டான்.

    2

    பெரியப்பா! இவ்வளவு பெரிய பங்களா தேவையான்னு யோசிக்கறேன் என்றான் உமாசங்கர்.

    ஞானமுத்து அன்புடன் புன்னகைத்தார்.

    இருக்கட்டும்ப்பா! அதான்.. அம்மாவும், அப்பாவும் ஆறு மாசத்திலே வரப்போறாங்கன்னு சொல்றியே..! அப்புறம் மறுபடி எதுக்கு இன்னொரு இடம் தேடறது. எனக்கும் அம்பலவாணன் பக்கத்துல இருந்தா தெம்பா இருக்கும்பா! இப்ப நீ வந்ததே என்னமோ எனக்கு யானை பலம் வந்த மாதிரி இருக்கு.. என்றார்.

    உமாசங்கருக்கு அவருடைய உணர்வுகள் புரிந்தது. இளம் வயது மகனைப் பறி கொடுப்பது என்பது எவ்வளவு கடினமான விஷயம் என்றும் அதை ஜீரணித்துக் கொள்வது என்பது எவ்வளவு கடினமானது என்பதும் அவனுக்குப் புரிந்தது. பங்களா வசதியாகவே இருந்தது. கீழே பெரிய ஹால். பக்கவாட்டில் ஒரு விருந்தினர் அறை ஹாலைக் கடந்து உள்ளே போனால் மீண்டும் ஒரு பெரிய ஹால். கீழேயே நான்கைந்து பெட்ரூம்கள் மாடியிலும் அதே போல ஒத்தை மனிதனுக்கு அதுவும் கட்டை பிரம்மச்சாரிக்கு இத்தனை தேவையா? என்று தோன்றியது.

    சரி.. மெது மெதுவாகப் பேசிப் புரிய வைக்கலாம் என்று இவன் எண்ணிக் கொண்டான்.

    சரிங்க.. பெரியப்பா! உங்க இஷ்டம்! என்றான். அதற்குப் பிறகுதான் ஞானமுத்துவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

    நம்ம வீட்டுக்குப் போலாம்பா! என்றார்.

    வீட்டை விட்டு முன்பகுதிக்கு வந்தவுடனே ஒரு விஷயம் கவனித்தான். இரண்டு பங்களாக்களுக்கும் இடையே உள்ள மதில் சுவர் சற்றே உயரம் குறைந்திருந்தது. அவன் முகத்தில் சிந்தனை ஓடியது. மெதுவாகத் திரும்பி ஞானமுத்துவிடம் சொன்னான்.

    பெரியப்பா! தப்பா நினைக்காதீங்க! ரொம்பப் பக்கத்தில் இருந்தா.. உறவு கெட்டுடும். ஆனாலும் இப்ப உங்களோட இருக்கறது உங்களுக்கும் ஒரு ஆறுதலா இருக்கும்! அப்பா.. அம்மாவுக்கும் மனசு திருப்தியா இருக்கட்டும்கறதுக்காகத்தான் நான் இந்த ஏற்பாட்டுக்கே ஒத்துக்கறேன். ஆனாலும் அவங்கவங்களுக்குப் பிரைவஸின்னு கொஞ்சம் இருக்கணும். அதனாலே இந்த மதில் சுவரைக் கொஞ்சம் உசத்திரலாம்.. என்றான்.

    ஞானமுத்து ஏதும் நினைத்துக் கொள்வாரோ என்ற கவலை கூட அவன் மனதில் தோன்றியது. ஆனால் அவர் நல்ல விதமாகவே எடுத்துக் கொண்டார்.

    சரிப்பா! செஞ்சர்லாம்! என்றார்.

    ஞானமுத்துவின் வீட்டுக்குப் போனார்கள்.

    அன்னபூரணி அவர்களைக் கண்டதும்

    Enjoying the preview?
    Page 1 of 1