Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Agni Siragugal
Agni Siragugal
Agni Siragugal
Ebook122 pages49 minutes

Agni Siragugal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580105705345
Agni Siragugal

Read more from Vidya Subramaniam

Related to Agni Siragugal

Related ebooks

Reviews for Agni Siragugal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Agni Siragugal - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    அக்னிச் சிறகுகள்

    Agni Siragugal

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    சலவை செய்த உடுப்புகள் நான்கு செட், மாற்றிக் கட்ட இரண்டு லுங்கிகள், ஷூவிற்கு மாற்றாக ஹவாய் சப்பல் ஜோடி. டூத் பேஸ்ட், பிரஷ், ஷேவிங் செட், டவல் இனனும் என்ன பாக்கி…? எதையாவது எடுத்து வைக்க மறந்து விட்டோமா? பூர்ணிமா யோசித்தாள். எதுவும் விடுபடவில்லை என்று தோன்றியது சூட்கேசை மூடினாள்.

    பாத்ரூம் கதவு திறந்தது.

    என்ன, எல்லாம் எடுத்து வச்சுட்டயா? தலையைத் துவட்டியபடி கேட்டுக் கொண்டே வந்தான் சிவராம்.

    எல்லாம் வெச்சிருக்கேன். வாட்டர் பாட்டில் வேணுமா? போன தரம் வெச்சப்போ லீக் ஆச்சுன்னீங்களே, வேற புதுசு வாங்கிக்கறீங்களா?

    ம்... என்றபடி டிரஸ் செய்து கொள்ளப் போனான்.

    எத்தனை மணிக்கு வண்டி?

    ஏழு மணிக்குதான்.

    மணி மூணுதான் ஆகுது. ஏன் இப்படி பரபரக்கிறீங்க?

    வண்டி ஏழு மணிக்குதான். அதுக்கு முன்னாடி ஆயிரம் வேலையிருக்கு.

    சிவராம் பேண்ட்டுக்குள் நுழைந்து ஷர்ட் மாற்றி, ஹேர் க்ரீம் தடவி தலைவாரி வெளிநாட்டு பவுடர் பூசி, சென்ட் ஸ்ப்ரே செய்து கொண்டு ட்ரிம்மாக வெளியில் வந்தான்.

    பூர்ணிமா அதற்குள் கீழே வந்திருந்தாள். அடுக்களையில் அடுப்பில் வைத்த பால் பொங்கி வழிந்து இருந்தது. இட்லி குக்கரின் அடியில் நீரில்லாமல் தீய்ந்த வாசனை அடித்தது. பூர்ணிமா அவசரமாக அடுப்புகளை அணைத்தாள். கூடத்திற்கு வந்தாள்.

    சோபாவில் அமர்ந்து கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருந்த சிவராமின் தங்கை சரஸ்வதியை ஏற இறங்கப் பார்த்தாள்.

    ஏம்மா சரசு, அடுப்புல பால் பொங்கி வழிஞ்சிருக்கு. இட்லிப் பாத்திரத்துல தண்ணியில்லாம நாறுது. கொஞ்சம் கவனிக்கக் கூடாதா? இங்கதானம்மா இருக்க!

    சரஸ்வதி அண்ணியை முறைத்துப் பார்த்தாள்.

    வெச்சுட்டு நீங்க எங்க போனீங்க?

    உங்கண்ணனுக்குப் பொட்டி ரெடி பண்ணப் போனேன்.

    எங்கிட்ட சொல்லிட்டா போனீங்க?

    என்னம்மா இது? சொல்லிட்டுப் போனாத்தான் செய்யணுமா? நம்ம வீடு இல்லையா இது?

    நீங்க அடுப்பைப் பெரிசா எரிய விட்டுட்டு எங்கேயாவது ஓடி ஓடிப் போய்டுவீங்க. உங்க பின்னாலேயே நீங்க விட்டுட்டுப் போற வேலையைச் செய்ய சுத்திட்டிருக்க முடியுமா என்ன? சரஸ்வதி அலட்சியமாய் எழுந்து போனாள்.

    பூர்ணிமா எரிச்சலோடு அவளையே பார்த்தாள். இப்படித் தான் நடக்கிறது எப்போதும். இது புதிதல்ல. கல்யாணமான இந்த இரண்டு வருடங்களில் இது போல் நிறையப் பார்த்தாகி விட்டது. சில நேரம் இதைப்பற்றி நினைத்தால் பொங்கிக் கொண்டு வருகிறது. இருப்பினும் எதுவும் செய்ய முடியாது. பூர்ணிமாவுக்கு ஒன்றே ஒன்று புரிந்தது. வேலையை விட்டது தப்பு.

    சுளையாய் இரண்டாயிரம் ரூபாய் வந்த நல்ல வேலையை இவர்களை நம்பி விட்டது தப்பு.

    எம் பிள்ளை எட்டாயிரம் சம்பாதிக்கிற பெரிய ஆபீசர். வேலைக்குப் போற பொண்ணு வேணாம்னு அவன் சொல்றான். உன்னை அவனுக்குப் பிடிச்சிருக்காம். வேலையை விட்டுடறதுன்னா உன்னையே கட்டிக்கறானாம்.

    பெண் பார்க்க வந்த சமயத்தில் மாமியார் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவள் குடும்பம் மகிழ்ந்துதான் போனது. வேலையை விடுவதா என்று அவள்தான் தயங்கினாள். அப்பா அவளைச் சமாதானப்படுத்தினார்.

    வேலை செய்யற பொண்ணுதான் வேணும்னு அவங்க வங்க சொல்லும்போது இவங்க வேலையை விட்டிருன்னு சொல்றது பெரிய அதிர்ஷ்டம்மா. வேலை செய்யற பொண்ணுங்க சில வீடுங்கள்ள என்னவெல்லாம் கஷ்டப்படுது தெரியுமா? வீட்டு வேலையையும் செய்துகிட்டு, ஆபீசுக்கும் போய்ட்டு, சம்பாதிச்சுக் கொடுத்தும் மாமியார், நாத்திகிட்ட இடிபட்டுகிட்டு, புள்ளை பெத்துக்கிட்டு... இந்த அவஸ்தை எல்லாம் உனக்கிருக்காது பூர்ணி. கை நிறையச் சம்பளம். நல்ல படிப்பு, அழகு... இப்படி ஒரு வரன் கிடைக்க நாம குடுத்து வெச்சிருக்கோம். ஹாய்யா வீட்டுல உட்கார்ந்து புஸ்தகம் படிச்சுகிட்டு, தூங்கிக்கிட்டு, வேளா வேளைக்குச் சாப்பிட்டுக் கிட்டு இருக்கலாம். மனுஷங்களும் நல்ல மாதிரியாத்தான் தெரியறாங்க. சரின்னு சொல்லும்மா.

    அப்பா இவ்வளவு சொன்ன பிறகு பூர்ணிக்குக் கூடத் தினம் அரக்கப் பரக்கப் புறப்பட்டு பஸ்சில் இடிபட்டு, மிதிபட்டு அட்டெண்டென்ஸ் பிடிக்க பாதி ஓட்டமும், நடையுமாய்ப் பறந்தடித்துச் சென்று, மேல் அதிகாரிகளிடம் பேச்சு வாங்கிக் கட்டிக் கொண்டு... இந்த அவஸ்தைகள் எல்லாம் தேவை தானா என்று தோன்றியது. இளகின இரும்பை மேலும் மேலும் அவர்கள் அடிக்க, பூர்ணிமா ஒரு நல்ல நாள் பார்த்து ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்தபோது ஆபீசே வியந்தது.

    2

    ஹாய், பூர்ணி என்ன இன்னிக்கு சிகியூட்டா இருக்கா? ஆபீஸில் தோழி ஒருத்தி கேட்டாள். பூர்ணிமா சிரித்தாள்.

    லஞ்ச் டைம்ல சொல்றேன்.

    ஏய், என்ன டி விஷயம்?

    லஞ்ச் டைம்ல!

    பூர்ணிமா அழுத்தமாகச் சொல்லி விட்டுப் போனாள்.

    லஞ்ச் டைமில் தோழிகள் அனைவரும் ஆஜரானார்கள். டிபன் பாக்ஸ்களிலிருந்து பலவித மணங்கள் ஒன்று கலந்து வீசியது.

    பூர்ணி எங்க?

    ஏடி ரூம்க்குப் போயிருக்கா, நோட்ஸ் எடுக்க.

    என்னமோ சொல்றேன்னு சொன்னாப்பா.

    அம்மா காலையிலேர்ந்து ரொம்ப சந்தோஷமா இருக்கா. என்ன விஷயம்னு தெரியலை.

    மாரேஜ் ஃபிக்ஸ் ஆயிருக்குமோ? அப்படித்தான் இருக்கணும். மூஞ்சி காட்டுது.

    நோட்ஸ் எடுத்து முடித்துவிட்டுப் பூர்ணிமா யோசனையோடு வந்தாள். அனைவரையும் பார்த்துச் சிரித்தாள். டிபன் பாக்ஸைத் திறந்தாள். உள்ளே மிளகாய்ப் பொடி தடவிய இட்லி இருந்தது. கூடவே கேசரியும்.

    என்னடி ஸ்வீட்?

    நேத்து என்னைப் பெண் பார்த்துட்டுப் போனாங்கப்பா.

    வெரிகுட்...! பையன் யாருடி?

    எப்படி இருக்கான்?

    உனக்குப் பிடிச்சிருக்கா?

    "என்ன செய்யறான்?

    Enjoying the preview?
    Page 1 of 1