Nenjamellaam Neeye
By Geetharani
()
About this ebook
Read more from Geetharani
Yenazhuthaai Enuyire Rating: 5 out of 5 stars5/5Thoorathu Nilavu Rating: 4 out of 5 stars4/5Vaa Ini Vasanthame Rating: 5 out of 5 stars5/5Kannaadi Thirai Rating: 4 out of 5 stars4/5Anbulla Mannavane Rating: 4 out of 5 stars4/5Poo Pookkum Osai Rating: 5 out of 5 stars5/5Thanthuvitten Ennai Rating: 4 out of 5 stars4/5Vasantha Kaala Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsMadiyil Pootha Malar Rating: 5 out of 5 stars5/5Nilave Thaalaattu Rating: 0 out of 5 stars0 ratingsThaalaattum Poongaattru Naanallavaa Rating: 5 out of 5 stars5/5Unakkaakave Rating: 0 out of 5 stars0 ratingsEn Mana Thottathu Vanna Paravai Rating: 5 out of 5 stars5/5Anbulla Maanvizhiye Rating: 5 out of 5 stars5/5Magizhampoo Rating: 0 out of 5 stars0 ratingsMuthamitta Soppanangal Rating: 0 out of 5 stars0 ratingsVanakkathirkuriya Kaathaliye Rating: 0 out of 5 stars0 ratingsVaruvaayaa Vaasamullaiye Rating: 5 out of 5 stars5/5Thavamindri Kidaitha Varame Rating: 0 out of 5 stars0 ratingsUn Paarvai Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsMaragatha Ponveenai Rating: 0 out of 5 stars0 ratingsVenkakalap Paravai Rating: 0 out of 5 stars0 ratingsSolai Malare Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Paingili Rating: 3 out of 5 stars3/5En Vizhiyil Yen Vizhunthaai Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Thedi Vaa Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nenjamellaam Neeye
Related ebooks
Nee En Sanrothayam Rating: 0 out of 5 stars0 ratingsIrukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Idhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Vasanthame Varuga Rating: 5 out of 5 stars5/5Prayachchitham Rating: 4 out of 5 stars4/5Radhai Manadhil...! Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsSoodikodutha Sudarkodiye Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsNee Sooriyan, Naan Thamarai Rating: 5 out of 5 stars5/5Un Ninaive Pothumadi Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Kalathil Vanthaai Rating: 5 out of 5 stars5/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Kallil Vaditha Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsEn Anbu Kanavane! Unnai Kaadhalikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsThirumagal Thedi Vanthal Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Nilavey Rating: 4 out of 5 stars4/5Engey En Jeevan Rating: 5 out of 5 stars5/5Perazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Manase Manase Rating: 5 out of 5 stars5/5Mayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Maayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsOonjalaadum Nenjam Rating: 4 out of 5 stars4/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5Manamagale Marumagale Vaaa Rating: 0 out of 5 stars0 ratingsNaanendrum Neeyendrum...! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Kal Vadiyum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Rani Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nenjamellaam Neeye
0 ratings0 reviews
Book preview
Nenjamellaam Neeye - Geetharani
9
1
நிலாப் பெண் நாணத்துடன் மேகப் போர்வைக்குள் ஒளிந்தவளாய் மெல்ல முகம் காட்டுவதும், பின் மேகப் போர்வைக்குள் தஞ்சம் புகுவதுமாய் வான வீதியில் வலம் வந்து கொண்டிருந்தாள்.
கஸ்தூரி மொட்டை மாடியில் தனித்து நின்றவளாய் வான்வெளியை ரசித்துக் கொண்டிருந்தாள்.
இன்று மனசு ஏக சந்தோஷத்தில் ததும்பிக் கொண்டிருந்தது. காரணம், அவள் ஆசை அத்தான் கமலக்கண்ணன் ரஷ்யாவிலிருந்து நாளை திரும்பி வரப் போகிறான். இன்னும் சரியாய் பன்னிரண்டு மணி நேரத்தில் அவன் இந்தியாவிற்குத் திரும்பி விடுவான்.
அவளுக்கு ஐந்தாண்டுகள் கழித்து அவன் முகம் காணப் போகிறோம் என்ற நினைவே பெரும் பரவசத்தைத் தந்தது. வந்ததுமே கஸ்தூரியைத்தான் முதலில் வம்பிற்கு இழுப்பான். அவளைச் சீண்டி வம்பிற்கு இழுக்காது போனால் அவனுக்கு உறக்கமே வராது, எப்பொழுதும். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழிகளாலே பேசப் போகிறோம் என்ற நினைவு அவளின் சிவந்த கன்னத்தை மேலும் செம்மையாக்கியது.
கஸ்தூரி...
கீழே ஹாலிலிருந்து அத்தையின் குரல் ஒலித்தது.
இதோ... வந்துட்டேன் அத்தே...
என்றவளாய்ப் படியிறங்கிச் சென்றாள்.
கஸ்தூரி நான்கு வயதுக் குழந்தையாக இருந்தபோது டூர் சென்ற அவளின் தாயும் தகப்பனும் சாலை விபத்தொன்றில் பலியாகிவிட அம்மா... அப்பா என்று அழ மட்டும் தெரிந்த கஸ்தூரி அநாதை மாதிரியாக நின்ற நேரத்தில்தான் நந்தகோபால் தன் தமக்கையின் குழந்தை தவிப்பதா என்று எடுத்துக் கொண்டு வந்து விட்டார். ராஜேஸ்வரி பெண் குழந்தைகள் இல்லாத காரணத்தினால் கஸ்தூரியைத் தாராளமாக ஏற்றுக் கொண்டுவிட்டாள். இதோ இருபது வயது மங்கையாய் அவளை ஆளாக்கியும் விட்டாள். எந்தக் குறையுமே சொல்ல முடியாது அவளின் வளர்ப்பில். தாய்க்கும் மேலாக அவள் காட்டும் பாசம் அக்கம் பக்கத்தினரையே ‘இப்படிக் கூட ஒருத்தியா... தன் நாத்தனாரின் மகள் மீது இப்படியா அன்பைப் பொழிவாள்!’ என்று வியப்பில் ஆழ்த்தும். கஸ்தூரிக்கு என்ன என்ன பிடிக்குமோ அதை மறுக்காது மனம் கோணாது செய்வாள் ராஜேஸ்வரி. அவள் ஆசைப்பட்டாள் என்பதற்காகவே அக்கம் பக்கத்தினர் எத்தனையோ சொல்லியும் அவளைக் கல்லூரிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறாள்.
கஸ்தூரி அறிவும், அழகும், அடக்கமும் ஒருங்கே நிறைந்த பெண். அதிர்ந்து பேசிப் பார்க்க முடியாது. சதா அமைதியும், புன்னகையும் தவழும் அவள் முகத்தைப் பார்த்துவிட்டுப் போனால் அன்றைய வியாபாரமே களை கட்டுகிறது என்பார் நந்தகோபால். எது வாங்கி வந்தாலும் நந்தகோபால் முதலில் கஸ்தூரியிடம்தான் கொடுப்பார்.
‘அத்தைகிட்ட கொண்டு போய்க் குடும்மா...’ என்று பணக் கற்றைகள் அடங்கிய பையைக் கூட அவளிடம்தான் கொடுப்பார். அத்தனை பிரியம் அவள் மீது. பெண் குழந்தைகள் எல்லாம் அம்பாளின் அவதாரம் என்று நினைப்பவர் அவர்.
நந்தகோபால். ராஜேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மட்டுமே. அவினாசி ரோடில் பெரிய ஜவுளிக்கடை. அதுவுமில்லாது சொந்தமாய் நஞ்சை, புஞ்சை நிலங்கள் என்று ஏக்கரா கணக்கில் விரிந்து நின்றன. அத்தனை சொத்துக்களுக்கும் வாரிசு கமலக்கண்ணனும், செந்திலும்தான்.
கமலக்கண்ணன் டாக்டர் பட்டம் பெற்ற பிறகு, அரசாங்கமே மேற்கல்விக்காக என்று மெரிட்டில் ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்தது. இதோ, மேற்கல்வியையும், தனது ஆராய்ச்சியையும் முடித்துவிட்டு வெற்றிகரமாக நாளை தாயகம் திரும்பப் போகிறான்.
அடுத்தவன் செந்திலுக்கு அத்தனை புத்தி சாதுர்யம் கிடையாது. வகுப்பில் முட்டி போடாது ஒரு நாள் கூடச் செல்லாது. எட்டாம் வகுப்பைத் தாண்டுவதற்குள்ளேயே உன்பாடு என்பாடு என்று திண்டாட்டமாகிப் போனது அவன் நிலை. அதனால், அவனைக் கடையில் உட்கார வைத்திருந்தார் நந்தகோபால்.
ராஜேஸ்வரி... யம்மாடி... உஸ்... அப்பாடா... என்ன மழைன்றே போ... கிளம்பறப்போ பொட்டுத் தூறல் இல்லை. இப்பப்பாரு தெப்பமாக நனைஞ்சு போயி...
கூடத்தில் குரல் கேட்டுக் கஸ்தூரி எட்டிப் பார்த்தாள். ராஜேஸ்வரி அத்தையின் கூடப் பிறந்த அக்கா சொரூப சுந்தரி வந்திருப்பதை அறிந்து, ஓடிச் சென்று வரவேற்றாள்.
வாங்க... பெரிய அத்தை... வாங்க... ரொம்ப நனைஞ்சிட்டீங்க போலிருக்கு...
என்று கேட்டவாறே உள்ளே கொடியில் கிடந்த பூத்துவாலையை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.
எங்க... ராஜேஸ்வரியைக் காணோம்...
அத்தை... இந்தப் பக்கத்துலதான் போயிருக்காங்க... இப்ப வந்துடுவாங்க!
கஸ்தூரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராஜேஸ்வரி வீட்டிற்குள் நுழைந்தாள்.
வாக்கா... எப்ப வந்தே...
இப்பத்தான் வந்தேன்... ஒரே மழை வேற...
அக்காவும், தங்கையும் அருகருகே அமர்ந்து கொண்டு ஊர்க் கதை பேச ஆரம்பித்து விட்டார்கள். இன்று இரவு சிவராத்திரிதான் என்று நினைத்தவளாய்க் கஸ்தூரி காபி டம்ளரை எடுத்துக் கொண்டு சென்றாள்.
நாளைக்குக் கமலக்கண்ணன் வந்துடுவான்... இருந்து பார்த்துட்டுப்போ. இப்ப என்ன அவசரம்றேன்... அதுக்குள்ளே...
கூடத்தில் பேசிக் கொண்டிருந்தது அடுப்படியில் நின்ற கஸ்தூரியின் காதுகளிலும் விழுந்தது.
அந்த வீட்டுப் பிரஜைகள் எல்லாம் ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் கமலக்கண்ணனின் வருகைக்காகக் கஸ்தூரியும் இரவிலிருந்தே காத்திருந்தாள்.
பொழுது விடிந்தது.
என்ன... கஸ்தூரி... இன்னைக்கி ஸ்பெஷல் கிளாசா... ரொம்ப சீக்கிரமா எழுந்துட்டே...
கேட்டவாறே அத்தை பல் துலக்கினாள் கிணற்றடியில்.
ஆ... ஆமா... அத்தை...
சொன்னவாறே ஈரக் கூந்தலைத் துவட்டினாள்.
சரி... அப்ப இட்லியை ஊத்தி எடுத்துக்கோ. நான் எனக்கு வந்து சமைச்சுக்கறேன். முதல்ல ஏர்போர்ட் கிளம்பணும் மாமாவும், நானும்.
‘நீயும் கூட வாயேன் கஸ்தூரி’ என்று அத்தை அழைக்க மாட்டாளா என்று மனசு ஏங்கியது. ச்சே... காலேஜ் போகாது வீட்டில் கிடந்தால் ஏன் எதற்கு என்று கேட்டுத் துளைத்து விடுவாள் அத்தை. பதில் சொல்லி மீள