Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Magizhampoo
Magizhampoo
Magizhampoo
Ebook121 pages1 hour

Magizhampoo

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466220
Magizhampoo

Read more from Geetharani

Related to Magizhampoo

Related ebooks

Reviews for Magizhampoo

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Magizhampoo - Geetharani

    16

    1

    யாரோ தொட்டு எழுப்பினது போல அவளுக்கு விழிப்பு ஏற்பட்டது. சுற்றுச் சுவர்களெல்லாம் கண்ணாடி பதிக்கப்பட்டு, மேற்கூரையும் கண்ணாடி பதிக்கப்பட்ட அறை. மங்கலான நீல விளக்கில் கண்ணாடிகளில் பல வசுந்தராக்கள். அவளை ஒட்டினாற்போல் மார்புவரை போர்த்தப்பட்ட அவள் கணவன் வினித்.

    சுருண்ட கரிய மார்பு ரோமங்களுக்கிடையே கனத்த பொன் சங்கிலி சுருண்டிருக்க, களையான முகம், மாநிறம். இவனை, இந்தச் செல்வம் கொழிக்கும் ஆண் மகனை அடைய அவள் எந்தப் பிறவியில் என்ன தவம் செய்தாளோ...?

    அவன் தூக்கம் கலையா வண்ணம் வேலைப்பாடு மிகுந்த தேக்கு மரக் கட்டிலிலிருந்து தரையில் குதித்தாள், துளி சத்தமில்லை. தரை முழுவதும் கனத்த காஷ்மீர் கம்பளம். ஒவ்வொரு சென்டிமீட்டரும் பல ஆயிரங்களை விழுங்கியிருக்கும் அறை.

    அவனைத் திரும்பிப் பார்த்தாள். வினித் கண் அயர்ந்திருந்தான். இரவு முழுவதும் அவளுடன் பகிர்ந்து கொண்ட துடிப்புக்கள் அவனை அயர்த்தியிருந்தன.

    திருமணமாகி ஐந்தாவது நாள். நினைக்கும்போதே வசுந்தராவின் கன்னத்தில் வெட்கச் சுமை செவ்வர்ணமாய்க் கூடியிருந்தது. குளியலறைக்குப் போய் முகத்தை வெந்நீரில் அலம்பி அங்கிருந்த சாளரக் கண்ணாடிகளை இறக்கி...

    மாளிகைக்கு வெளியே அவள் விழிகள் தாவின. எத்தனை பெரிய மாளிகை. எண்ண முடியாத செல்வம். இத்தனைக்கும் அவள் சொந்தக்காரியா...? நினைக்கும்போதே எலும்பிலிருந்து எழுந்தது சிலிர்ப்பு.

    போன வாரம்வரை மாற்றுச் சேலைக்குக் கூட வழியற்று இருந்தவளா அவள்? யாராவது சொன்னால் நம்புவார்களா? பாவம்! இவள் சம்பளம் இல்லாமல் அம்மா எத்தனை கஷ்டப்படுகிறாளோ...? கழுத்தில் ஊஞ்சலாடும் கனத்த சங்கிலிகள் வாஷ் பேஷினில் பட்டு ஒலி எழுப்பி அவளின் இன்றைய செல்வ வளம் சொல்கின்றன. கரங்களை அலம்பிக் கொண்டே சாளர இருட்டில் அவள் விழிகள் துழாவின. வானம் கறுத்திருக்க, சிதறிக் கிடக்கும் முல்லை மொட்டுக்களாய் நட்சத்திரங்கள்.

    தொலை தூரத்தில் நெருப்பு மேலே மேலே எழுந்து... அதைச் சுற்றி மூன்று ஆண்கள். புரியாத மனிதர்கள். இந்த மாளிகையைச் சுற்றி இருக்கும் பல ஏக்கர் நிலம் அவள் கணவனுக்குச் சொந்தமானது. சவுக்குத் தோப்பு. அதில் மீன்பிடி படகுகள் கூட உண்டு. அப்படி இருக்க யார் அங்கே என்ன செய்கிறார்கள்? அதுவும் இந்த நடுநிசியில்...

    வேகமாய் மேக்ஸியைக் கையில் பிடித்தபடி கணவரருகே வந்தாள் வசுந்தரா.

    அவன் அருகே கொஞ்சலாய்ச் சாய்ந்து, என்னங்க... என்னங்க... எழுப்பினாள். அவன் விழி திறக்கவில்லை.

    நகம் கடித்துச் சில விநாடிகள் தயங்கினாள். பெயர் சொல்லி அழைக்கலாம் என நினைக்கையில் இனித்தது. உடலால் மிக மிக நெருங்கின வினித், அவளிடம் சில சொற்களைத் தவிர வேறு பேசினவன் அல்ல. அது உறுத்தலாய் இருந்தது.

    வினித்... வினித்... எழுந்திருங்களேன். அவளின் அவசர அவசரமான உலுக்கல்கள் அவனை விழிக்க வைத்தது. சிடுசிடுப்பாய்ப் பார்த்தான்.

    தூங்கறப்ப என்னடி இது... அவள் முகம் சுண்டிற்று. மனமும்...

    அங்கே... அங்கே... நம்ம தோட்டத்தில் யாரோ எதையோ எரிக்கிறாங்க. பாத்ரூம்ல ஸ்மெல் கூட வருது. தாங்கலை வினித், எனக்கு... எனக்குப் பயமா இருக்கு... சொல்லும்போதே அவள் பூமேனி நடுங்கிற்று. பயம் கண்ணில் தெரிந்தது. வினித் கொட்டாவியுடன் திரும்பிப் படுத்துப் போர்த்திக் கொண்டான்.

    உன் வேலையைப் பாரு. வேற விஷயத்தில் நீ தலையிடாதே.

    வினித்! அது வந்து...

    டூ வாட் ஐ சே...

    தாய் பாராட்டுவாள் எனக் குறும்பு செய்த குழந்தை அவளிடம் அடி வாங்கியது போல அவள் சுருண்டு போனாள். அவன் மார்பில் இருந்த தன் வலக்கரத்தை அவள் எடுக்கும்போது அவன் பிடித்துக் கொண்டான். உடும்பின் பிடி இப்படி இறுகுமோ, அப்படி. மலைப் பாம்பிடம் சிக்கினால் இப்படி... சிந்திக்கக்கூட அவளால் முடியவில்லை.

    வேண்டாம் வினித். எனக்குப் பிடிக்கலை. கொஞ்சம் முன்னாடி... வேண்டாம். விடுங்க, ப்ளீஸ்...

    அதை முடிவு செய்யறது நான். நீயில்லை...

    அவள் கன்னத்தில் விழுந்த அறையில் பார்வை மங்கிற்று. அவள் மென்மையான இதயத்தில் முள்ளொன்று சதக்கென இறங்கிற்று.

    போ... உனக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிடாமே போய்ப் படு. நான் அனுமதிச்சாத்தான் நீ யார்கிட்டயும் பேசணும். இல்லை, நீ ஊமையாத்தான் இருக்கணும்.

    வினித்...

    ஆமாம். அப்படித்தான். உங்க குடும்பத்துக்கு மாசா மாசம் பணம் போய்ச் சேரும். வேறு ஏதாவது செய்தியானா...

    இதயத்தில் குத்தின முள்முனை ஒடிந்து அங்கேயே தங்கிற்று.

    அவன் பிடியிலிருந்து விலகி விட்டாள். தவறு. தள்ளி விட்டாள்.

    அவள் அவனுக்குத் துணையா, அடிமையா? நான்கு நாட்கள் மகாராணி போல மலர்ந்திருந்தவள் - தன் இரண்டு தங்கைகளையும் இங்கே கொண்டு வந்து சீராட்ட நினைத்தவள், இப்போது தனக்காகவே துக்கப்பட ஆரம்பித்தாள்.

    முதன் முறையாய்த் தன் பேரழகின் மீது கோபம் வந்தது. வெறுப்புத் தட்டிற்று.

    இந்த அழகால்தானே இவளை மணந்தான். இந்த அழகு இல்லையென்றால் இவன் யாரோ... இவள் யாரோ.

    ஃபோம் மெத்தையில் புதைந்து அவன் தூங்கும்வரை தூங்குவதாய்ப் பாசாங்கு செய்தாள். மெல்லிய அவன் குறட்டை ஒலி அவளுக்குத் தைரியம் கொடுத்தது.

    எழுந்தாள். அந்த ஏஸி குளிரிலும், அவளுக்கு வியர்வை பெருகிற்று.

    ஓசையில்லாமல் அறையைத் திறந்தாள். பால்கனிக்குப் போனாள். இருளில் அந்த ‘உட் பேலஸ்’ என்கிற மாளிகை அரக்கர் மாளிகையாய் எழுந்து நிற்க, அதன் தோட்டம்,

    பெரிய இரும்பு கேட், பெரிய மதில் சுவர், சவுக்குத் தோப்பு, மரஞ்செடி கொடிகள் எல்லாம் மௌனம் அனுஷ்டிக்க -

    காற்றுக்கு யாரோ கால் விலங்கிட்டது போல ஒரு அமானுஷ்யம். கரை மோதும் கடலலைகள் மட்டுமே தூரத்திலிருந்து மெல்லிய ஒலி எழுப்ப...

    அந்த நெருப்புத் தழல் தரையிலிருந்து பெரிதாக எழுந்து எரிய... அதைச் சுற்றி மூன்று ஆண்கள்... சின்னப் பொம்மைகளாய்... காற்றில் ஏதோ புலப்படாத வாடை.

    வசுந்தராவிற்கு வாந்தி வருவது போலிருந்தது. மூக்கைப் பொத்திக் கொள்ளச் சொல்லிற்று. பிடிவாதமாய் பால்கனியில் நின்றாள்.

    நெருப்புத் தழல் மெல்லக் கரைய, மூவரும் மண்ணை வாரி வாரிப் போட்டார்கள். நெருப்பு அணைந்து போக, காட்சி தெரியவில்லை. யாரோ டார்ச் அடிக்க, பெரிய குழிக்குள் மணல் அள்ளிப் போடுவது தெரிந்தது. என்ன செய்கிறார்கள்? யார் அவர்கள்? வினித்துக்குச் சொந்தமான சவுக்குத் தோப்பில் என்ன செய்கிறார்கள்?

    அவள் பால்கனியிலிருந்து திரும்ப நினைக்கையில் அவன் கண்ணில் கனல் எரிய நின்றிருந்தான்.

    ஏய்... பால்கனியில் என்ன செய்யறே. அநாவசியமா ஏதாவது செய்தே. உன் தலை இருக்காது.

    வசுந்தராவின் செண்பகப் பூக் கழுத்தில் அவன் வலக்கரம் அழுத்திற்று.

    அவள் மூச்சுவிடச் சிரமப்பட்டாள்.

    2

    புறாக் கூண்டுகளுக்குக் கூட கொஞ்சம் காற்றும் வெளிச்சமும் கூடுதலாய்க் கிடைக்கலாம். அதைவிடக் குறுகலான ஸ்டோர்ஸ் அது. பெரிய நடைபாதையில் கடைசியாய் இருப்பதிலேயே சிறிதாய் இருந்தது, அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1