Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Mana Thottathu Vanna Paravai
En Mana Thottathu Vanna Paravai
En Mana Thottathu Vanna Paravai
Ebook65 pages1 hour

En Mana Thottathu Vanna Paravai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466237
En Mana Thottathu Vanna Paravai

Read more from Geetharani

Related to En Mana Thottathu Vanna Paravai

Related ebooks

Reviews for En Mana Thottathu Vanna Paravai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Mana Thottathu Vanna Paravai - Geetharani

    10

    1

    செம்மண் புழுதியைக் கிளப்பிக் ரெண்டு தொலைவில் ஏதோ ஒரு வாகனம் வருவது தெரிந்தது. புரியாமல் பார்த்தார் பெரியவர் ராஜாங்கம். மாருதி ஸென் தட்டுத் தடுமாறிக் குலுங்கல்களுடன் குடிசையின் அருகே வந்த போது பூரித்துப் போனார்.

    காரின் முன் கதவைத் திறந்து டிரைவர் இருக்கையிலிருந்து இறங்கினார் சரவணன். பின் கதவைத் திறந்து விட்டான். பார்வதி அம்மாள் இறங்கினாள். பெரியவரின் கண்களில் நீர்ப் படலம். தழுதழுத்த குரலில் சொன்னார். வாம்மா பார்வதி, எப்படியிருக்கே?

    நல்லாயிருக்கேன் மாமா! அருகிலிருந்த சரவணனைப் பார்த்தபடி சொன்னாள், என் பையன் சரவணன் டாக்டருக்குப் படிச்சு முடிச்சிட்டான்.

    சரவணனை மேலிருந்து கீழ்வரை பார்த்தார். அஞ்சு வயசில பார்த்தது. ஏக்கத்துடன் பேசினார். அவங்கப்பா மாதிரியே இருக்கான்! அவனையே இமை பிசகாமல் பார்த்தார்.

    அவர் பார்வையைத் தவிர்த்துச் சுற்றும் முற்றும் பார்த்த சரவணனின் கண்களில் தெரிந்தது குடிசை மறைவில் இரு விழிகள். படபடக்கும் இமைகளுடன் பளபளக்கும் செவ்வழகியின் விழிகள்.

    சரவணன் பார்த்த இடத்தில் பெரியவரும் பார்த்தார். மகிழ்ச்சியான குரலில் அழைத்தார். வாம்மா செவ்வழகி. ஏன் ஓடி ஒளிஞ்சிக்கிட்டே? வா வெளியே!

    தயக்கமாய் வெளியே வந்தாள் செவ்வழகி. தரையைப் பார்த்தபடி நின்றாள். அதற்குள் கிராமத்து மக்கள் நான்கைந்து பேர் வேடிக்கையாகப் பார்வதியம்மாளையும், சரவணனையும் பார்த்தார்கள்.

    என் பேரன். மகன் வயிற்றுப் பிள்ளை. சரவணன் டாக்டருக்குப் படிச்சிருக்கான். இது என் மருமகள்! - பார்வதியம்மாளைச் சுட்டிக் காட்டினார். கிட்டத்தட்ட இருபது வருஷங்கள் கழிச்சு வந்திருக்காங்க. உள்ளே வாங்க. பிரயாணக் களைப்பு. குளிச்சிட்டு ஓய்வெடுங்க! - குடிசைக்குள் நுழைந்தவர் நின்றார். மீண்டும் சரவணனைப் பார்த்தார்.

    குனிஞ்சு வாப்பா. தலையிலே தட்டிக்கப் போறே?

    சரவணனும், பார்வதியும் குடிசைக்குள் நுழைய, குடிசையைச் சுற்றிக் கொண்டு பின்புறமாக உள்ளே நுழைந்த செவ்வழகி, மூலையில் சாத்தி வைத்திருந்த கயிற்றுக் கட்டிலை நேராக்கித் தரையில் போட்டாள். பார்வதி அம்மாள் ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

    உட்காருங்க! என்று சொல்லிவிட்டு நகர்ந்தவளை நிறுத்தினார்.

    நில்லு! எங்கே ஓடறே? வெட்கப்படாதே! அந்நியரில்லை! என்ற ராஜாங்கம், பார்வதி அம்மாளைப் பார்த்துச் சொன்னார், உன் நாத்தனார் பொண்ணு செவ்வழகி!

    சரவணன் உறவு முறை புரியாமல் நெளிய - தெளிவாகவே சொல்றேன். உன் அப்பாவோட அக்கா பொண்ணு. உன் முறைக்கு அத்தை பொண்ணு. இன்னும் சுலபமாகச் சொல்லணும்னு நினைச்சா உனக்கு முறைப்பெண். சரவணா! அமைதியா இருக்கான்னு நினைக்காதீங்க. ஊரையே வித்துடுவா. வாயாடி...

    போங்க தாத்தா! என்று ஓடியே விட்டாள் செவ்வழகி.

    தொண்டையைக் கனைத்துக் கொண்டு கேட்டாள் பார்வதி. இவளோட அம்மா - அப்பா எங்கேயிருக்காங்க?

    பெங்களூர்ல இருக்காங்க. இவள்தான் என்னை விட்டுப் போகாமல் இங்கேயே இருக்கா. அப்பப்ப அவங்க வருவாங்க. போயிடுவாங்க. இங்கே எனக்கிருக்கும் ஒரே துணை இவள்தான்! - குரலில் ஓர் ஏக்கம் தெரிந்தது.

    அதான் நாங்க வந்துட்டோமே மாமா. இனி உங்களுக்குத் துணையாக நாங்களும் இருப்போம்.

    சிரித்துக் கொண்டார் ராஜாங்கம். பின் பக்கம் திரும்பிப் பார்த்தார். குரல் கொடுத்தார். செவ்வழகி! அத்தைக்கும் சரவணனுக்கும் குளிக்க வெந்நீர் தயார் செய்!

    முகம் தெரியாமல் குரல் மட்டும் வந்தது. தயாராயிருக்கு. வரச் சொல்லுங்க.

    ஆச்சர்யப்பட்டுப் போனான் சரவணன்.

    "குளிச்சிட்டு வாங்க. பலகாரம் சாப்பிட்டு உங்க வீட்டை - அதான் என்

    Enjoying the preview?
    Page 1 of 1