Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Varuvaayaa Vaasamullaiye
Varuvaayaa Vaasamullaiye
Varuvaayaa Vaasamullaiye
Ebook107 pages1 hour

Varuvaayaa Vaasamullaiye

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466237
Varuvaayaa Vaasamullaiye

Read more from Geetharani

Related to Varuvaayaa Vaasamullaiye

Related ebooks

Reviews for Varuvaayaa Vaasamullaiye

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Varuvaayaa Vaasamullaiye - Geetharani

    8

    1

    சேலம்.

    அடிக்கிற ஆரஞ்சு வர்ணத்தில் கதிரவக் குழந்தை மேற்கில் அஸ்தமனத்திற்காகத் தயாராகிக் கொண்டிருந்தது. கடைசியாக ஒருமுறை பூமியைத் தரிசித்துவிடும் ஆவலில் அடிவானத்தின் கீழ்த் தலையை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது ஏக்கமாக.

    அலுவலக வேலை நேரம் முடிந்து விட்டதால் சாலையில் ஏகப்பட்ட நெரிசலினூடே, ‘சர் சர் சர்’ரென விரையும் வாகனங்களின் இரைச்சல் அதிகரித்திருந்தது. பறவைகள் கூட காட்டை நோக்கித் திரும்பிக் கொண்டு இருந்தன. யாரோ வரிசையாக நிற்க வைத்துத் தலையில் கொட்டு வைத்துக் கண்டிப்பாக வழி நடத்துவது போல் வரிசைக் கிரமமாகப் பறந்து செல்வது பார்க்கையில் அழகாகத் தோன்றியது.

    பழைய பஸ் ஸ்டான்டினுள் பெயிண்ட் போன பேருந்து மழையினால் சேறை வாரி இறைத்துக் கொண்டு வந்து நின்றது.

    குழந்தையின் மூக்கு ஒழுகலாக இன்னும் ஒழுகிக் கொண்டிருந்தது, வானம். தீபாவளியை நெருங்கிக் கொண்டிருந்தது நாட்கள். ஜலதோசத்துடன் ‘ஹச்’ என்று தும்மிக் கொண்டே பஸ்ஸிலிருந்து இறங்கினாள் மீனாட்சி. அவளைப் பின் தொடர்ந்தாள் வளர்மதி.

    ச்சே... இந்த மழைச் சனியன் காலையிலேர்ந்து உயிரை வாங்குது. வீட்டுக்கு நடந்து போக முடியும்ங்ற...?

    அதெல்லாம் பார்த்தா ஆகுமா, மீனா... நடையெ எட்டிப் போடு. ஆறு மணிதான் ஆகுது. இப்பவே இருட்டிடுச்சு. மழை பலமா வர்றதுக்குள்ள வீடு போய்ச் சேரணும், என்று பேச்சு வேகத்திலேயே வளர்மதி குடையை விரித்தாள்.

    வளரு... மீராவுக்கு நோட் புக் வாங்கணும். ரெண்டு நாளா சொல்லிட்டு இருக்கா. நான் மறந்து போயிட்டேன். கொஞ்சம் வாங்கிட்டுப் போயிடலாம்டி. இல்லைன்னா இன்னைக்கி அவ என்னை உண்டு இல்லைன்னு செஞ்சிடுவா. ப்ளீஸ்...

    சரி... சரி... சீக்கிரம் கடைக்குப் போயி வாங்கிட்டு, கிளம்பு...

    இருவரும் குட்டிக் கண்காட்சியைக் கடந்து, கோட்டை மாரியம்மன் கோவில் வாசலில் நின்று சம்பிரதாயத்திற்காகக் கும்பிடு போட்டு விட்டு நேதாஜி ஸ்டோர்ஸினுள் நுழைந்தனர். ‘ச்சட ச்சட’வென்று பலத்த மழை பிடித்துக் கொண்டு விட்டது, கடையை விட்டு வெளியே வந்தபோது...

    இப்ப என்னடி பண்றது, மழை ரொம்ப பலமாயிட்டது...

    நீதான் சொல்லணும். என்னைக் கேட்டா... நேரா பஸ்ஸோ இல்லை. பொடி நடையோ... இன்னேரம் வீடு போயி சேர்ந்திருக்கலாம். ச்சே...

    சரி சரி, ரொம்பத்தான் அலுத்துக்காதே. ஆட்டோவுல போயிடலாம்...

    அடேயப்பா! யார், மீனாட்சியா பேசறது? சர்தான் மழை பெய்றதுகூட! என்று வானத்தைப் பார்த்தாள் வளர்மதி,

    ஆட்டோ... ஏ... ஆட்டோ... என்ற மீனாட்சியின் கத்தலுக்குச் சேற்றை வாரியிறைத்துவிட்டு விரைந்தது ஆட்டோ.

    ச்சே... கண்ணே தெரியாது இவனுங்களுக்கெல்லாம்! ஆட்டோவுல உட்கார்ந்துட்டா பெரிய ஏரோப்ளேன் ஓட்றதா நெனப்பு... என்று தன் மீது இறைத்திருந்த சேற்றைப் பார்த்துச் சலித்துக் கொண்டாள் ஓட்டுநரை.

    ஏரோப்ளேன்லெ போனாகூட சேறு தெறிக்குமா மீனாட்சி...!

    அபத்தமா ஒளறாதடி. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு அவன் மட்டும் என் கையில கெடைச்சிருந்தான்… என்று பற்களை நறநறத்தாள்...

    அம்மாடி, ஆட்டோ கூப்பிடறதுக்கும் ஒரு அந்தஸ்து வேணும். நீ கூப்பிடற மாதிரி எல்லாம் கூப்பிட்டா ஆட்டோ வராது. தெருவுல இருக்கற சேறு எல்லாம் சேர்ந்து சேதி சொல்லத்தான் வரும். இப்ப பாரு... ஆட்டோ நிக்குதா இல்லையான்னு... என்ற வளர்மதி இரண்டு கைகளையும் தட்டினதுமே ஒரு ஆட்டோ முன் வந்து நின்றது. வளர்மதி வெற்றிப்புன்னகையுடன் மீனாட்சியைப் பார்த்தாள்.

    ஆங்... என்னமோ இமயத்தையே வளைச்சிப் புடிச்சிட்டே பாரு! பார்த்து... ஏறுடி... என்று அவளைப் பின்தொடர்ந்து மீனாட்சியும் ஏறியமர்ந்தாள்.

    பொன்னம்மா பேட்டை நாலாவது தெரு போப்பா...

    மீட்டர்க்கு மேலே போட்டுக்குடும்மா. மழை வேற...

    மழையாயிருந்தாலும் சரி, கொளுத்தற வெயிலாயிருந்தாலும் சரி. இதே பல்லவிதான். போப்பா... என்று மீனாட்சி பேரம் பேசினாள். ஆட்டோ மழைநீரை விலக்கிக் கொண்டு விரைந்தது.

    இங்கேயிருந்து கொஞ்சம் தொலைவு. பாழாப்போன மழை வந்ததால தண்டம் அழ வேண்டியிருக்கு. என்ன பண்றது...

    நீ ஒண்ணும் தெண்டம் அழ வேண்டாம். நானே அழறேன். ஏன்னா என்னாலதானே லேட்டு... என்று பேசிக் கொண்டே வந்த மீனாட்சி திடீரென்று ‘ஹையய்யோ’ என்று அலறின அலறலில் ஆட்டோ பிரேக்கிட்டு அரைக் கிலோ மண்ணை மழை நீரில் கரைத்துச் சேறாக ஒரு சைக்கிள் வாலாவின் மீது வாரியிறைத்து நின்றது.

    என்னடி... என்னாச்சி? என்று பதறினாள் வளர்மதி.

    நோ... நோட் புக்கை ஸ்டோர்ஸ்லயே வெச்சிட்டு வந்துட்டேன்டி.

    இவ்வளவுதானா? நான்கூட என்னமோ ஏதோன்னுல்லெ பயந்துட்டேன். மூஞ்சியையும் மொகரக்கட்டையையும் பாரு. நோட்டு வாங்கப் போயிட்டு, அதை அங்கயே வெச்சிட்டு வர்றதுக்காகவா கடைக்குப் போனே. சரியான ஞாபக மறதிப் பேராசிரியைடி நீ...

    இப்ப என்னடி பண்றது?

    ம்... அந்தக் கோட்டை மாரியம்மன் கோவில் வாசல்லெ ஒரு கிளி ஜோசியக்காரன் இருந்தான். நான் வேணா போயி கேட்டுட்டு வந்துடட்டுமா? என்று கிண்டலடித்தாள் வளர்மதி...

    என்னடி கிண்டலா! நீ என்ன பண்ணுவே, எல்லாம் என் நேரம். ஆட்டோ... கொஞ்சம் கடைத் தெருவுக்குப் போப்பா... மீனாட்சி சொல்லி முடிக்கும் முன்னர் ஒரு சுசூகி ஆட்டோவிற்கு மிக நெருக்கமாக வந்து நின்றது.

    எக்ஸ்க்யூஸ்மி... இது உங்க நோட்தானே. கடையிலேயே விட்டுட்டு வந்துட்டீங்க. நீங்க ஆட்டோவுலெ ஏறுறதைப் பார்த்துட்டுதான் நான் ஃபாலோ பண்ணினேன்...

    ரொம்ப தேங்க்ஸ்! என்ற மீனாட்சி கையை நீட்டி நோட்டைப் பெற்றுக் கொண்டாள். அடுத்த நொடி அந்த சுசூகி நொடியில் விரைந்தது.

    யார்டி அது? கொட்டற மழையிலெ ரொம்ப அக்கறையா கொண்டாந்து குடுத்துட்டுப் போறது...

    அதான்... எனக்கும் தெரியலை... என்றாள் மீனாட்சி. ரெயின் கோட் அவன் உருவத்தை முற்றிலுமாக மறைத்துவிட்டிருந்ததால் அவன் யார் என்பதுகூடத் தெரியவில்லை. நொடியில் வந்தவன் அதே நொடியில் விரைந்து விட்டது மீனாட்சிக்கு ஆச்சர்யமாயும் குழப்பமாயும் இருந்தது.

    ம்... இந்தக் கதை எல்லாம் என்கிட்டே வேண்டாம். எனக்குக் காது குத்தி ரொம்ப நாளாச்சி... வளர்மதி வேண்டுமென்றே சீண்டினாள்.

    அதானே பார்த்தேன். உன் புத்தி உன்னை விட்டுப் போவாதே...

    ம்... நீர்ல போட்ட பந்து மேலே வராமயா போய்டும்...

    "ம்... மேலே வரும். தூக்கிப்

    Enjoying the preview?
    Page 1 of 1