Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rojaavai Thaalaattum Thendral
Rojaavai Thaalaattum Thendral
Rojaavai Thaalaattum Thendral
Ebook136 pages50 minutes

Rojaavai Thaalaattum Thendral

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466268
Rojaavai Thaalaattum Thendral

Read more from Geetharani

Related to Rojaavai Thaalaattum Thendral

Related ebooks

Related categories

Reviews for Rojaavai Thaalaattum Thendral

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rojaavai Thaalaattum Thendral - Geetharani

    14

    1

    பங்கயத் தவிசின் மேவியிருந் துடற்பற்று நீக்கி

    யங்குநற் பூதசுத்தி யடைவுடன் செய்த பின்னர்க்

    கங்கை யைத் தரித்த சென்னிக் கற்பகத் தருவைச் செம்பொற்

    கொங்கை வெற்பனைய பச்சைக் கொடியொடு

    உளத்தில் வைத்தே...

    துளசிலெட்சுமி சிவகவசத்தைப் பாராயணம் செய்து கொண்டிருக்கும் ஓசை அந்த இளங்காலை நேரத்தில் மிகத் துல்லியமாய் ஒலித்துக் கொண்டிருந்தது பூஜையறையில். இன்ஸ்டண்ட் சாம்பிராணி வில்லைகளின் கமகம நறுமணத்துடன் கூடிய புகை மூட்ட வளையங்கள். கனவுலோகம் போன்ற ஒரு மாயத்தைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது. திருவிளக்கின் ஐந்து சுடர்முக ஒளிப்பிரகாசம் ஜாஜ்வல்யமாய் ஜொலித்துக் கொண்டிருக்க சிவபார்வதி தம்பதி சமேதராய் ஒருமித்து அருள் பாலித்துக் கொண்டிருந்த புகைப்படம் பிரதானமாய்க் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

    கண்ணீர் மல்க சூட தீபார்த்தி காண்பித்து வணங்கி நெக்குருகி ஒரு சில கணங்கள் துளசிலெட்சுமி பூஜையறையில் அமர்ந்திருந்தார்.

    துர்கா அப்பொழுதுதான் எழுந்திருந்தாள் போலும். கலைந்து அலைபாயும் முடிக் கற்றையினை அள்ளிக் கோடாலி முடிச்சிட்டவளாய் நேரே பாத்ரூமினுள் அடைக்கலமானாள். ஷவரின் பூந்தூறல் சாரல் மழையில் இதமாய் நின்றாள். குளிரின் சில்லிப்பு முதலில் நடுக்கிப் பின் சரீரத்திற்கு ஈடு கொடுத்தது தண்ணென்று.

    துர்கா... எழுந்துட்டியாம்மா...? பூஜை முடித்து வந்த துளசிலெட்சுமி மென்மையாக வினவிக் கதவைத் தட்டினார்.

    ம்... குளிச்சிட்டிருக்கேன் அத்தை... இதோ அஞ்சே நிமிஷம், வந்துடறேன்...! என்றவளாய்த் துர்கா பரபரப்பாய்க் குளித்தாள்.

    துளசிலெட்சுமி மருமகளுக்கு உதவிகரமாய் இருக்கட்டும் என்று கேஸ் அடுப்பைப் பற்ற வைத்துப் பால் குக்கரை அடுப்பில் ஏற்றினாள். மணி ஆறரை என்றடித்து ஓய்ந்தது அழகிய மணிப்பரல்கள் பதித்த அந்த பெல்ஜியம் கடிகாரக் கூடு. தோட்டத்துப்புறம் பூங்கோதை வாசல் பெருக்கும் ஓசையும் தொடர்ந்தாற் போல் சாணிப்பால் தெளிக்கும் ‘சளப் சளப்’ ஓசையும் காலைக் காற்றில் தென்றலோடு மண்ணின் மணத்தினைக் குழைத்து ஒருவித சுகந்தத்தை உண்டு பண்ணிற்று.

    என்ன... பூங்கோதை? லேட்டாயிடுச்சு...!

    ஆமாம்மா... சின்னதோட ஒரே தொந்தரவு. ராவு முச்சூடும் பொட்டுத் தூக்கமில்லாமல் இருமல்... உடம்பு கணகணன்னு கொதிக்குது. முழிச்சுக்கிடந்து பார்த்துகிட வேண்டியதாப் போச்சு. விடியற்காலையில செத்தோட்டம் கண்ணசந்துட்டேன். பொழுது பொலபொலன்னு விடிஞ்சுட்டது... பேச்சுவாக்கில் பூங்கோதையின் விரல்கள் கோலப் புள்ளிகளை இட்டு, நெளி நெளியாய் இணைத்து நிமிஷத்தில் பூக்களைச் சிரிக்க வைத்தன - சாணிப்பால் தெளித்த மண்ணும், சாணத்தின் இளம் பச்சை வெளிர் மஞ்சளுடன் கூடிக் கிடந்த தரைப்பரப்பில்!

    ம்... ஒரு நாள் போல எழுந்துக்க உடம்பு சூழ்நிலை எல்லாம் ஒத்து வரணுமில்லே... அதனால என்ன பூங்கோதை, பையனுக்கு உடம்பு பரவாயில்லைதானே இப்போ... துளசிலெட்சுமியின் குரலில் பரிவான விசாரிப்பு இழையோடிற்று.

    ம்... இன்னைக்கு பள்ளிக்கூடத்துக்கு மட்டம்தான். பெரியவ சந்திராவை எழுப்பிப் பார்த்துச் சொல்லிட்டு ஓடிவந்தேன்...! என்றவாறே இடது புறம் கட்டுக்கல் பரப்பில் குவியலாய்க் கிடந்த வைக்கோல் போரைப் பிரி பிரியாய் அள்ளி மாட்டுக் கொட்டிலில் கிடந்த தாய்ப்பசுவின் முதுகை வருடினவாறு முன் வைத்தாள். கொழும்பில் கட்டிக் கிடந்த கன்றுக் குட்டிகள் இரண்டும் ‘ம்மா... அ’ எனத் தம் பசிக் குரலை எழுப்பிற்று, துள்ளியெழுந்த வண்ணம்.

    ம்... உங்களுக்கு இல்லாததா...! வாங்கடி... என் கண்ணுங்களா? பூங்கோதை பிரியமாய் அதன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

    குட்டிகளின் இளம் திமில் ஸ்பரிசமும் அதன் செந்நிற மேனியின் ஜொலிப்பும் அதுகளை வெகு ஆவலுடன் பராமரிக்க வைத்தன பூங்கோதையை. பூங்கோதை அந்த வீட்டின் சுற்றுவட்டு வேலைகளையும், தோட்டப் பராமரிப்பையும் கடந்த மூன்றாண்டுகளாகப் பார்த்து வருகிறாள். துளசிலெட்சுமிக்கு அறுபத்திரண்டு கடந்து போன தேகவாகு என்றாலும் ஒரு துளிர் நரைகூட அரும்பாத ஆச்சர்யம் காண்பவரை வியக்க வைக்கும்.

    துர்காகூட அடிக்கடி மாமியாரின் கேசத்தைப் பற்றியும், அதன் வனப்பைப் பற்றியும் பார்த்து ஆனந்திப்பாள்.

    ஈரத் தலையை உலர வைக்கும் முயற்சியுடன் வெய்யில் கண் முகவாட்டம் பார்த்த வாக்கில் துளசிலெட்சுமி நின்று சிக்கொடித்த கோலம்கூடக் காண அழகாயிருந்தது. இளமைதான் அழகா... இல்லையில்லை, அறுபதிலும் பொழியும் அழகுதான் உன்னதமான நிறைவான வாழ்வின் வசந்தம் பறைசாற்றும் மனத்தெளிவின் பேரழகு எனக் கூறலாம்.

    உண்மையில் துளசிலெட்சுமி பேரழகான பேரிளம் பெண். துர்காவைக் காட்டிலும் நிறம். அடர்த்தியான தலைக்கேசம். மருளும் அகன்ற கரிய விழிகள். ஒப்பனை துளியுமற்ற முகமென்றாலும் பளீரிடும் பொலிவு எதிராளியைத் தன்னையறியாது கை கூப்பித் தொழ வைக்கும்.

    துர்கா சுடச்சுடக் காபி டபரா செட்டைக் கொண்டு வந்து தோட்டத்து வாயிற்படியை ஒட்டின திண்ணைப் பரப்பில் வைத்தாள்.

    அத்தை... காபி எடுத்துக்கோங்க! வெண்பொங்கல் செய்து தேங்காய்ச் சட்னி அரைச்சுடலாம்ன்னு இருக்கேன்...!

    ம்... உன் விருப்பம் போலச் செய் துர்கா. இன்னைக்குப் பிரதோசம், தெரியுமில்லே... பூஜை முடிஞ்சபிறகுதானே டிபன் சாப்பிடுவேன். பால் மட்டும் போதும் துர்கா!

    ஹோ... மறந்துட்டேன் அத்தை!

    ஹரிஹரன் எழுந்துட்டானா துர்கா? காபி டபராவைக் கைகளில் பற்றிக் கொண்டவராய் மருமகளின் முகம் ஏறிட்டார்.

    ம்... அவரோடதான் இன்னும் படுத்துக் கிடக்கிறான்...!

    ‘‘குழந்தையை ரொம்ப நேரம் தூங்க விடாதேன்னு சொல்லியிருக்கேனில்லே... சீக்கிரம் எழுப்பிக் குளிக்க வெச்சு சூரிய நமஸ்காரம் பண்ண வெச்சாத்தான் புத்தி தீட்சண்யமாகும். ஐந்தில் வளையாதது அப்புறம் ஐம்பதிலும் வளையாது. உங்க தங்கை செல்லம் கொடுக்கலாம். மத்தது எல்லாம் ஸ்ட்ரிக்ட்டா இருக்கணும் துர்கா! குழந்தை அது போக்குல விட்டுப் பிடிக்கிறது இல்லை!"

    ம்... அட்வைஸ் ஆரம்பமாகிப் போச்சா... அருமைப் பேரனைத் தூக்கிக் கொண்டு வந்து கொடுத்துடறேன். அறிவோட ஒழுக்கத்தை ஊட்டி வளர்க்க வேண்டியது உங்க பொறுப்பு...! துர்கா உள்ளே சென்றாள்.

    ஹரிஹரன் போர்வைக் குவியலுக்குள் அமிழ்ந்து கிடந்தான். பிஞ்சு விரலை வாய்க்குள் அடக்கி ஆழ்ந்த உறக்கத்தில் அழுந்திக் கிடந்த உதட்டுச் சுழிவின் அழகினை ஒரு கணம் நின்று ரசித்தவள் பஞ்சு மிட்டாய் வர்ண நிறத்தில் இருந்த கன்னக்கதுப்பில் குனிந்து மெத்தென்று முத்தம் பதித்தாள்.

    "செல்லக்கண்ணா... குட்டிப் பையா அரி... குட் மார்னிங்டா...’’ காதோரம் மென்மையாய்க் கிசுகிசுத்து உசுப்பினாள்.

    ஹரன் மென்மையாகச் சிணுங்கினான். எழுந்திரிடா... பாட்டிம்மா கூப்பிடறாங்க! பூப்பந்து போல மகனைத் தூக்கி மார்பில் சாய்த்தாள்.

    ‘ம்... மா... அ...’ மிழற்றினான். இமை பிரிக்கயியலா உறக்கத்தின் ஆலிங்கனத்திலிருந்து மீள முடியாத ஒரு சிணுங்கல்.

    குட்டி ராஜா... செல்லத் தங்கம்! துளசிலெட்சுமி இருகரம் நீட்டிப் பேரனை வாங்கிக் கொண்டாள்.

    இனி வேலை விட்டது... பாட்டியாயிற்று... பேரனாயிற்று... என்று துர்கா தனது அலுவலைக் கவனிக்கச் சென்று விட்டிருந்தாள்.

    அம்மா... டி... துர்கா... இன்னைக்குச் சாயந்திரம் பிரதோச கால பூஜை நம்ம சங்கர சுவாமிகள் ஆசிரமத்துக்குப் போகலாம்ன்னு இருக்கேன். நாலரையிலிருந்து ஆறு மணி வரைக்கும் அங்கேயே இருந்தா ரொம்பவும் சுபீட்சம். ரவியையும் வரச் சொல்லி, கிளப்பறது உன் பொறுப்பு! உத்தரவிட்டவளாய்ப் பேரனை இடுப்பில் அமர்த்திக் கொண்டு குளியலறையின் கெய்ஸரை ஆன் செய்தாள், பேரனைக் குளிப்பாட்ட... சூடுநீர் தயாரிக்க... மனதிற்குள் சங்கரலிங்க சுவாமிகளின் திருஉரு ஒரு கணம் வந்து போனது. சிலிர்த்துப் போனாள். ‘அவசியம் இன்னைக்கு வர்றேன் சங்கரா...!’ உளம் நெக்குருகிச் சிலிர்த்துக் கண்ணீர் மல்கிப் போனாள் பிரார்த்தித்து.

    ம்... துர்கா... இயர் எண்டிங் அக்கவுண்ட்ஸ் ஆடிட் வர்றாங்க ஏ.ஜி. ஆபீஸ்லயிருந்து. பூஜை, புனஸ்காரம்னு லீவ் போட்டேன்னு வெச்சுக்கோ... வீட்டோட உட்கார வெச்சுடுவான் சீஃப். வேற வினையே வேண்டாம். கார் அனுப்பறேன். அம்மாவும், நீயும் போயிட்டு வாங்க. சரியா...? மிருதுவான துர்காவின் கன்னத்தில் தட்டினான் செல்லமாய்.

    "ம்... உங்கம்மாகிட்டே நீங்களே சொல்லிடுங்க. இல்லை... ஆசிரமம் போய்ச் சேர்ற வரைக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1