Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Palinginaal Oru Maaligai
Palinginaal Oru Maaligai
Palinginaal Oru Maaligai
Ebook117 pages44 minutes

Palinginaal Oru Maaligai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466244
Palinginaal Oru Maaligai

Read more from Geetharani

Related to Palinginaal Oru Maaligai

Related ebooks

Reviews for Palinginaal Oru Maaligai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Palinginaal Oru Maaligai - Geetharani

    15

    1

    "ஐயா இன்னும் எழுந்திருக்கலையா?" என்றான் சரவணன்.

    இல்லீங்க. நானும் எவ்வளவோ கூப்பிட்டுப் பார்த்திட்டேன். கதவு தட்டித் தட்டி விரல்தான் வலியெடுத்துப் போச்சு. ஒண்ணும் வேணாம். வெறும் காப்பியை மட்டுமாவது குடிச்சிட்டுத் திரும்பப் படுத்துக்கங்கன்னுகூடச் சொல்லிப் பார்த்துட்டேன். கோபம் வருது. சத்தம் போடறாங்க. எதுவுமே வேணாம். உன்னுடைய வேலையைப் பார்த்துக்கிட்டுப் போன்னு கத்தறாங்க.

    நேற்றைக்குப் பூரா என்ன சாப்பிட்டாங்க?

    ஒண்ணும் இல்லீங்க. ரெண்டு வாய் தண்ணி மட்டும் குடிச்சாங்க. சாயந்திரம் ஆறரை மணி இருக்கும். பேண்ட் கூட மாத்தாம கட்டியிருந்த வேட்டியோட சட்டை மட்டும் போட்டுக்கிட்டு காரை எடுத்துப் போக உக்காந்தாங்க. டிரைவர்தான் பாய்ஞ்சி தடுத்துட்டான். ‘அண்ணே! நான் ஓட்டறேன். நீங்க இருக்கிற மன நிலையில் டிரைவ் பண்ண வேணாம்!’னு தடுத்து அவனே ஓட்டிப் போனான். வெளில போயிட்டுப் பத்தரை பதினொன்னு வாக்குலதான் வீடு திரும்பினாங்க.

    எங்கே போனாங்களாம்?

    டிரைவரைக் கேட்டேன். கடற்கரைக்குப் போய் உக்கார்ந்திருந்தாங்களாம்.

    சரி, கொஞ்ச நேரமாகட்டும், பார்க்கலாம். நீ போய் உன் வேலையைக் கவனி, என்றான்.

    மணி உள்ளே போனதும் முதல் வேலையாய் டெலிபோனின் பிளக்கைச் செருகினான். காத்திருந்தது போல் உடனே அடித்தது.

    ஹலோ.

    குட்மார்னிங்... டைரக்டர் பிரபுராஜ் வீடுதானுங்களே?

    ஆமாம்.

    டைரக்டரோடு பேசணும்.

    நீங்க யார் பேசறது?

    நான் குமாரசாமின்னு... பெங்களூர்லருந்து வந்திருக்கேன். அவரோட பேசணும்.

    என்ன விஷயம்?

    வந்து... அவரோட பேசணுங்க. வீட்லதானே இருக்காங்க?

    நான் அவருடைய பி.ஏ. பேசறேன். என்ன விஷயம் சொல்லுங்க.

    பி.ஏ. என்றதும் மறுமுனையில் கொஞ்சம் சுருதி குறைந்தாற் போலிருந்தது. இது வழக்கமான விஷயம்தான். யாருமே பி.ஏ.க்களிடம் பேசுவதை விரும்புவதில்லை.

    இவன் எதற்குக் குறுக்கே என்றுதான் நினைக்கிறார்கள்.

    அது வந்து சார்... சென்னைப் பக்கம் வந்தா வந்து பாருங்கன்னு சொல்லியிருந்தார் டைரக்டர். ஒரு நல்ல பிளானோட வந்திருக்கேன். அதான் அவரைப் பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு.

    குமாரசாமி! என்ன விஷயம் பேசணும்... சொல்லுங்க.

    அதுங்க... அண்ணன் டைரக்ஷனில் ஒரு படம் செய்யறதைப் பற்றிப் பேசினோம். நல்ல ஃபைனான்சியரை அரேஞ்ஜ் பண்ணிக்கிட்டுச் சென்னைக்கு வா, பேசலாம்னு சொன்னாங்க. பைனான்சியரையும் கையோட கூட்டிட்டு வந்திருக்கேன்.

    சரி... ஒண்ணு செய்யுங்க. இன்னைக்கு அவங்களைப் பார்க்க முடியாது. நாளைக் காலையில் போன் செய்யுங்க. பார்க்க முடியுமான்னு சொல்றேன்.

    சார், சார், நீங்க என்னமோ என்னை நம்பலை போலத் தெரியுது. நம்மளை ஏதோ உப்புமாக் கம்பெனின்னு நெனைச்சுட்டீங்க போல... ஃபைனான்சியர் நல்ல சவுண்ட் பார்ட்டி. முப்பத்தேழு லாரிகள் ஓடுது. நாமக்கல் பக்கத்திலே இருபது ஏக்கருக்குக் கோழிப் பண்ணை...

    பதில் பேசாமல் டெலிபோனைத் துண்டித்தான். சரியான சமயத்தில் இப்படித்தான் மாட்டுவார்கள். மழுங்கிப்போன கத்தியை வைத்துக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட அறுத்துத் தீர்த்து விடுவார்கள்...

    மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடிதங்களைப் பார்த்தான். இரண்டொரு விமர்சனக் கடிதங்கள். இரண்டொரு பாராட்டுக் கடிதங்கள்...

    அவ்வளவையும் கூடையில் போடப் போகவிருக்கும் போது இந்திய அரசாங்கக் கவர் ஒன்று கிடைக்க, பிரித்துப் பார்த்தான். சர்வதேசக் குழந்தைகள் பட விழா பெர்லினில் நடக்கவிருப்பதாகவும் இந்தியக் குழுவில் இடம் பெற்றுப் போய் வர டைரக்டர் பிரபுராஜைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கடிதம் சந்தோஷம் பேசியது. ஒப்புதலை நான்கு நாட்களுக்குள் தெரிவிக்கச் சொல்லி அவசரப்படுத்தியது.

    மணி... மணி, என்று கத்தினான் சரவணன். ஐயாவை எழுப்ப முடியுமா பார். பெர்லின் ஃபிலிம் பெஸ்டிவலுக்குப் போகக் கடிதம் வந்திருக்கு. போவதும் போகாததும் உடனடியாய் டெல்லிக்குத் தெரிவிக்கணும். கொஞ்சம் பார்த்துட்டு வாயேன்.

    மணி மாடி நோக்கிச் செல்ல, இரு, நானும் வர்றேன், என்று அவன் பின்னாலேயே போனான். இப்படி வா. நான் தட்டறேன், என்று ஒரு நிச்சயமற்ற மனத்துடன், அண்ணேன் அண்ணேன், என்று கூப்பிட்டுக் கதவு தட்டினான்.

    நீங்க அப்புறம் வேணும்னா கோவிச்சுக்கங்க. ஒரேயொரு நிமிஷம் கதவைத் திறந்துட்டு... சொல்லி முடிப்பதற்குள் தாழ் நீக்கப்பட்டுக் கோபத்துடன் திறந்து கொண்டது கதவு.

    என்னய்யா...? எதுக்கு இப்படித் தொந்தரவு பண்றீங்க? மனுஷனைக் கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விட மாட்டேன்றீங்களே... சாகக்கூட விட மாட்டீங்க. என்ன விஷயம்? என்ன அவசரம்? கதவு பரக்கத் திறந்து உச்ச ஸ்தாயியில் சத்தம் போடும் பிரபுராஜைப் பார்த்துக் கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனான் சரவணன். இரண்டே நாட்களில் எப்படி மாறிப் போயிருக்கிறார்... உடம்பு இளைத்துக் கண்களில் குழி விழுந்து தலையெல்லாம் கலைந்து போய்...

    "அண்ணே, இது பாருங்க, டெல்லி இன்ஃபர்மேஷன் அன்ட் பிராட்காஸ்டிங் மினிஸ்ட்ரிலருந்து லெட்டர் வந்திருக்கு.

    பெர்லின்ல நடக்கவிருக்கற இன்டர்நேஷனல் சில்ரன் ஃபிலிம் பெஸ்டிவலுக்கு உங்களை அனுப்ப இருக்கிறதாகவும்..."

    சட்டென்று சரவணன் கையிலிருந்த அந்தக் கடிதத்தைப் பிடுங்கினான் பிரபுராஜ். இரண்டாக, நான்காக, எட்டாகக் கிழித்தான். முகத்துக்கு நேரே வீசினான். இதுதான் இப்ப அவசரமா? இதுக்குத்தான் எழுப்பினியா? ஸ்டுப்பிட்ஸ்! கதவு முகத்துக்கு நேரே சாத்தப்பட்டது. சரவணன் படியிறங்கி வந்தான்.

    இன்டர்காம் ஒலித்தது.

    ஹலோ! என்றான்.

    சரவணன்தானே?

    ஆமாண்ணே, என்றான் உயிர் பெற்று.

    நான் அப்படிப் பண்ணியிருக்கக் கூடாது. மனசு சரியில்லை. கோபம் வந்துட்டது.

    அதுக்கென்ன... அதெல்லாம் பரவாயில்லை. நீங்க மூணு நாளா சாப்பாடே இல்லாம இருக்கீங்க. முதல்ல பல் துலக்கிட்டு சாப்பிடுங்க. அது போதும்.

    சரி, எழுந்துக்கறேன். எந்த விவகாரமும் வேணாம். எல்லா எங்கேஜ்மென்ட்டையும் கேன்சல் பண்ணிடு. யாரையும் சந்திக்க விருப்பமில்லை. ஒரு நாலைஞ்சு நாட்களுக்கு ஊர்ப் பக்கம் போய் வரலாம்னு இருக்கேன். டிரைவர்ட்ட சொல்லிக் காரை ரெடி பண்ணச் சொல்லிடு.

    அண்ணே! தனியாகவா போறீங்க? நானும் கூட வர்றேனே.

    வேணாம். யாருடைய தொடர்புமே இல்லாம இருக்கணும். பிறகு பார்க்கலாம். ஒரு பத்து நிமிஷம் விட்டு மேலே வா.

    இன்டர்காமை வைத்தபோது சந்தோஷமாயிருந்தது. இத்தனை நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்தது போல் இருந்தது.

    மணியைக் கூப்பிட்டுச் சிற்றுண்டி தயார் செய்யச் சொன்னான். டிரைவரைக் கூப்பிட்டு காரை ரெடி பண்ணச் சொன்னான். வந்த அத்தனை போன்களுக்கும் மூன்று நாட்கள் கழித்துத் தொடர்பு கொள்ளச் சொல்லி வைத்தான்.

    மேலே போனபோது கட்டிலில் உட்கார்ந்திருந்தான் பிரபுராஜ். தலை கலைந்திருந்தது. முகம் ஊதினாற் போலிருந்தது.

    சரவணன்! வாழ்க்கையில் எதையுமே யாரையுமே நம்ப முடியலை. மனிதர்கள் எந்தச் சமயத்தில் என்ன மாதிரி நடந்துக்கறாங்கன்னு யாராலும் தீர்மானிக்க முடியலை.

    நாற்காலியைக் கொஞ்சம் பக்கத்தில் இழுத்துப் போட்டு, டைரக்டருக்கு அருகில்

    Enjoying the preview?
    Page 1 of 1