Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malare Vaa Manathai Thaa
Malare Vaa Manathai Thaa
Malare Vaa Manathai Thaa
Ebook113 pages1 hour

Malare Vaa Manathai Thaa

By Usha

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 200 novels and 100+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466282
Malare Vaa Manathai Thaa

Read more from Usha

Related to Malare Vaa Manathai Thaa

Related ebooks

Reviews for Malare Vaa Manathai Thaa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malare Vaa Manathai Thaa - Usha

    24

    1

    மதிமலர் காத்திருந்தாள்.

    பவானி இன்னும் வரவில்லை.

    நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.

    கையிலிருந்த செல்பேசியை நான்காவது தடவையாக அழுத்தினாள்.

    பவானியின் எண்ணுக்கு அழைப்பு போய்க்கொண்டே இருந்தது. அவள் எடுக்கவே இல்லை.

    மெல்ல, மெல்ல எரிச்சல் பரவத் தொடங்குவதை உணர்ந்தாள் மதிமலர்.

    ‘இதென்ன இப்படி இருக்கிறாள் பவானி? வாக்கு முக்கியமல்லவா நமக்கு?’

    நேற்று மாலை கிளம்பும்போது இருவரையும் ஒன்றாக அழைத்துத்தானே ஆசிரியர் சொன்னார்?

    நாளை காலை பத்தரை மணிக்கு ஐ.ஜி. அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு. சமீபத்தில் நடந்த படுகொலையில் காவல்துறை எப்படித் துப்பு துலக்கி கொலையாளியைக் கண்டுபிடித்தது என்று சொல்லப் போகிறார்கள். உங்கள் வசதிப்படி போய் வந்துவிடுங்கள் என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்-பவானி தானாகக் குறுக்கிட்டாள்.

    நீங்கள் கவலைப்படாதீங்க சார்... என் ஸ்கூட்டி இருக்கிறதே ரதம் போல! அதில் போய் வந்துவிடுகிறோம். மலர் நாளை காலை தேனாம்பேட்டை. ‘சிக்னல்’ அருகில் பத்து மணிக்கு வந்து நான் காத்து நிற்பேன்... சரிதானா? என்றாள், தன் ‘கேமிரா’வை துப்பட்டாவால் துடைத்தபடி.

    ஓ... நான் வந்துடுவேன் பவானி... என்று இவளும் உடனே பதில் சொன்னாள்...

    ஆனால், கடிகாரம் பத்தடித்து பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகியும் இன்னும் பவானியைக் காணவில்லை.

    சரி, ஆட்டோவில் போய்விடலாம் என்று தோழியிடம் சொல்லலாம் என்று பார்த்தால், செல்பேசி அழைப்பைத் தொடமாட்டேன் என்கிறாளே! அய்யோ! நேரமாகிக் கொண்டிருக்கிறதே... போய்விடலாமா? என்னைத் தேடிப் பார்த்துவிட்டு அவளாக அழைக்கட்டும் என்று விட்டு விடலாமா? மனசு கேட்கவில்லையே! காத்திருக்கிறேன் என்று சொன்னபிறகு அதை மீற மனம் வரவில்லையே! அய்யோ, நேரம் பத்து இருபதைத் தாண்டிக்கொண்டு இருக்கிறதே!

    ஹலோ மதி! குட்மார்னிங்... என்று திடீரென்று பக்கவாட்டில் குரல் கேட்டது.

    திரும்பியபோது... பவானி!

    ஆட்டோவுக்குள் இருந்து அவள் தலை எட்டிப் பார்த்தது. வா... மதி... ஏறிக்கொள் என்று கை பிடித்து இழுக்காத குறையாக என்னை உள்ளே இழுத்துக்கொண்டாள்.

    இன்னும் இரண்டு நிமிடங்கள்தான் இருக்கிறது. பத்தரை ஆக... அவள் பொறுமையாக ஒவ்வொரு வார்த்தையையும் உச்சரித்தாள்.

    என்ன நடந்தது தெரியுமா மதி? அறையைப் பூட்டிக்கொண்டு வந்து ‘ஸ்டார்ட்’ செய்தால்... வண்டி கிளம்புவேனா என்கிறது. மறுபடி உள்ளே போய் ‘டூல் பாக்ஸ்’ எடுத்து வந்து எனக்குத் தெரிந்த ‘மெக்கானிக்’ வேலையெல்லாம் செய்து பார்த்தேன். மசியவே இல்லை. மறுபடி வண்டியை உள்ளே தள்ளி பூட்டிவிட்டு... இதோ ஆட்டோ பிடித்து வருகிறேன்.

    உன் செல்போன் என்ன ஆச்சு?

    இந்த ரகளையில் அதை மறந்துவிட்டேன் மதி. அறை மேசையிலேயே இருக்கிறது. என் ரூம்மேட் பிரமிளாவுக்கு கை வேறு நீளம். எங்கே களவு போய்விடப் போகிறதோ என்று பயமா இருக்கு.

    ஆட்டோ விரைந்தது. வெயில் சுரீரென்று ஏறி இருந்தது.

    முன்னால் சென்ற லாரி கொஞ்சம்கூட அக்கறையற்று... கரிய வாயுவை ஊர் முழுக்க விநியோகித்துக்கொண்டே சென்றது.

    என்ன மதி... கோபமா? பேசாமலே வருகிறாயே? பவானி தன் ஜீன்ஸ் பேண்ட் மேல் வந்து உட்கார்ந்த பூச்சியைத் தட்டிவிட்டபடி பேசினாள்.

    ஏன் கோபம்?

    இல்லையா?

    இல்லை.

    உன் கன்னங்களுக்கு பொய் சொல்லத் தெரியாது மதிமலர்... கோபத்தில் அவை ஜிவுஜிவுக்கின்றன.

    அது தன்னுணர்வு உண்டாக்கும் ஜிவுஜிவுப்பு.

    அதென்ன?

    என் மேலான கோப உணர்வு!

    அய்யோ, புரியலையே...

    வண்டி ஓட்டுகிற தைரியம் இல்லையே எனக்கு. ‘உன்னைத்தானே நம்பி நின்றுகொண்டிருந்தேன்? எனக்கு வண்டி ஓட்டுகிற ஆற்றல் இருந்திருந்தால் நேரத்திற்கு போயிருக்க முடியும்தானே?’ எதற்காக இப்படி சார்ந்து நிற்கிற நிலையில் என்னை வைத்துக்கொண்டு இருக்கிறேன்? அவள் பொறுமையாக, ஆனால் அழுத்தமாகச் சொன்னாள்.

    தப்புதான் மலர்... என்னை மன்னித்துவிடு. வண்டியை சரியாக வைத்துக்கொள்ளாதது ஒன்று, செல்பேசியை மறந்தது ஒன்று என்று இரண்டு தவறுகள். பவானி குரல் இறங்கிச் சொன்னாள்.

    போகட்டும் பவானி. இறங்கலாம். இடத்திற்கு வந்துவிட்டோம்.

    கடற்கரையைப் பார்த்தபடி நிற்கிற அந்த ஐ.ஜி. கட்டடம் அவளுக்கு மிகவும் பிடித்த இடம். அதன் தாராள புல்வெளிகளும் நடைபாதையும், குழந்தை போல் காற்று வந்து நுழைந்து நுழைந்து வெளியேறும் அழகிய தூண்களும் எப்போதும் அவள் விருப்பத்திற்குரியதாகவே இருந்தன.

    அதிலும் மாணவ நிருபராக அவள் கலந்து கொண்ட பிரபலங்களின் சந்திப்புகள் இப்போதும் பசுமையாக நினைவில் இருப்பதற்கு இந்த இடமும், இதமும்கூட முக்கியக் காரணங்கள்தான். காக்கிச் சட்டைகள் புழங்கும் இடத்தில் பூச்செடிகளுக்கும், புல்தரைகளுக்கும் இடம் கொடுத்த புண்ணியவான் யாரானாலும் வாழ்க!

    ஐ.ஜி-க்கு திடீரென்று ஒரு முக்கிய வேலை. பத்திரிகையாளர் சந்திப்பு பதினைந்து நிமிடங்கள் தள்ளிப் போகிறது... என்று அறிவித்தார்கள்.

    பவானி சிரித்தாள்.

    என் மேல் அவ்வளவு கோபித்தாயே? பார்த்தாயா இங்கே நடப்பதை? என்றாள்.

    உன்னை எங்கே கோபித்தேன்? என்னைத்தான் கோபித்துக்கொண்டேன். அப்பாவிடம் சண்டை போட்டாவது ‘டூ வீலர்’ வாங்கிவிடுவேன்... எத்தனை பெண்கள் வண்டி ஓட்டுகிறார்கள்? என்னை மட்டும் தடுத்து வைக்கிறாரே, தவறில்லையா? அவள் புன்னகையுடன் சொன்னாள்.

    திடீரென்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது.

    ஒரு இளைஞனும், நான்கைந்து காவலர்களுமாக விரைந்து வந்தார்கள்.

    அவன் முகத்தை எங்கோ பார்த்ததைப் போலிருந்தது அவளுக்கு...

    2

    அப்பா தன் மகளையே ஒரு கணம் கூர்ந்து பார்த்தார். கையிலிருந்த மீதி திருநீறை நெற்றி நிறைய குழைத்துப் பூசிக்கொண்டார். ‘ஓம் நமசிவாய’ என்று தனக்குள் கண்மூடி சொல்லிக்கொண்டு நிமிர்ந்தார்.

    என்னம்மா மலர், ஒரு மாதிரி இருக்கிறாயே? என்று அருகில் வந்தார்.

    அப்பா...

    சொல்லும்மா.

    இந்த முறை என் ஆசையை நீங்கள் நிறைவேற்றியே தீர வேண்டும்.

    "பட்டுச்சேலை

    Enjoying the preview?
    Page 1 of 1