Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pookkal Thinamum Malaginrana
Pookkal Thinamum Malaginrana
Pookkal Thinamum Malaginrana
Ebook154 pages1 hour

Pookkal Thinamum Malaginrana

By Usha

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 200 novels and 100+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466268
Pookkal Thinamum Malaginrana

Read more from Usha

Related authors

Related to Pookkal Thinamum Malaginrana

Related ebooks

Reviews for Pookkal Thinamum Malaginrana

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pookkal Thinamum Malaginrana - Usha

    27

    1

    முதுகு வலித்தது.

    யாமினி நிமிர்ந்து உட்கார்ந்து நாற்காலியை இன்னும் இழுத்து டேபிளுக்கு அருகில் போட்டுக் கொண்டாள்.

    இரண்டு கைகளையும் உயரத் தூக்கி சோம்பல் முறிப்பது போல உதறிவிட்டு மறுபடி எழுதத் தொடங்கினாள்.

    ‘… நொய்டா படுகொலைகளைப் பார்த்து நாடே திகிலடித்துப் போயிருக்கிறது உண்மைதான். ஆனால் உறங்கும் உண்மைகளை அந்த சிறுவர், சிறுமிகளின் எலும்புகள் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. நாற்பது சிறுவர்கள் ஒன்றரை வருடங்களாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

    காவல்துறை என்ன செய்தது என்று பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் படபடக்கின்றன. யதார்த்த நிலை என்ன? நாட்டில் எத்தனை காவல் நிலையங்கள் இருக்கின்றன? எத்தனை காவலர்கள், அதிகாரிகள், உயர் அதிகாரிகள் பணிபுரிகிறார்கள்? எத்தனை மக்களுக்கு எத்தனை காவலர் என்ற விகிதாசாரம் ஏதாவது, யாருக்காவது தெரியுமா? பந்தோபஸ்து என்ற பெயரில் பத்தடிக்கு ஒரு காவலர் நிறுத்தப்படுவது, பெரிய வி.ஐ.பி.க்களின் பாதுகாப்புக்காக வண்டி வண்டியாக ரோந்து சுற்றுவது என்று காவலர்களின் கணிசமான பகுதியினரும் நேரமும் செலவாகிறது.

    லா அண்ட் ஆர்டர், க்ரைம் என்று இரு பிரிவுகளாக காவல்துறை செயல்படுவது போதாது. பந்தோபஸ்து என்கிற புதிய துறையை ஏற்படுத்துவதும், புது ஆட்களை நியமிப்பதும்தான் மக்களுக்காக காவலர் என்கிற கோஷத்திற்கும், உங்கள் நண்பன் போலீஸ் என்கிற முழக்கத்திற்கும் அர்த்தம் கிடைக்கும்.

    ஆள் பற்றாக்குறை, ஆள்குறைப்பு போன்ற உலகமயமாக்கலின் ராட்சத கைகள் காவல்துறையையும் நெருக்கிக் கொண்டிருக்கும் வரை, சூழந்தைகள் காணாமல் போவதும், பிறகு அவர்கள் சிதைந்த எலும்புக்கூடுகளாக கண்டெடுக்கப்படுவதும் நடந்துகொண்டேதான் இருக்கும்.’

    காமாட்சி பின்னால் வந்து நின்றாள்.

    சிந்தனையும் செயலும் ஒருமுகப்படுத்தப்பட்ட வேகத்துடன் வெண்மைத்தாளில் விறுவிறுவென்று எழுதிக் கொண்டிருக்கும் மகளையே அவள் விழிகள் கவலையுடன் பார்த்தன.

    உழைப்பு... உழைப்பு... உழைப்பு!

    இதைத் தவிர யாமினிக்குத் தெரிந்த அடுத்த விஷயம், ஒரே விஷயம், மனிதநேயம்!

    எங்கோ நடக்கிறது, யாருக்கோ நடக்கிறது என்று செய்தியைப் படித்து விட்டு அடுத்த பக்கத்திற்குப் புரட்டுவது என்பது எல்லோரையும் போல அவளுக்கு முடியாது. முடிந்தால் நேரடிடையாகப் போய் அந்தத் தீர்விலும் அலசலிலும் பங்கு கொள்வாள். இல்லையென்றால் குறைந்தபட்சம் தன் தார்மீக கோபத்தை எழுத்துகளில் வடித்து முன்னணிப் பத்திரிகைகளுக்கு அனுப்புவாள்.

    இதனால் என்ன பயன் உனக்கு? யார் வந்து கிரீடம் வைக்கப் போகிறார்கள் என்று கேட்பது அவளுக்குப் பிடிக்காது. தொழிற்சங்கத் தலைவராக இருந்து, அடுத்தவர் பிரச்சினையை தலைக்கு மேல் வைத்துக் கொண்டு அவதிப்பட்டே திடீரென்று ஒரு நாள் மாரடைப்பில் மரித்துப் போன தந்தைக்குப் பிறந்தவளல்லவா?

    என்னம்மா, இன்னும் நீ தூங்கலே? பதினோரு மணிக்கு மேல் ஆச்சே? என்று யாமினி பேனாவைக் கீழே வைத்து விட்டு விரல்களைப் பிடித்து விட்டுக் கொண்டாள்.

    நான் கேக்கறதுக்கு முன்னால நீ கேட்டுட்ட... நல்ல சாமர்த்தியக்காரிடி நீ... காமாட்சி கொஞ்சம் சிரிப்பும் நிறைய கோபமுமாக படபடத்தாள்.

    சரி... என் வேலை முடிஞ்சது. நாளை காலைல சேதுகிட்ட கொடுத்தா கொரியர்ல அனுப்பிடுவான். வா படுக்கலாம்.

    தெரியாமத்தான் கேக்கறேன். இது என்ன தலை போற வேலையா? நாள் பூரா அடுப்படிலயும் டேபிள்லயும் வேகறே. ஓடி ஓடி கால்கள் கெஞ்சற அளவுக்கு வேலை பாக்கறே... கடைய மூடினோம், கட்டில்ல விழுந்தோம்னு இல்லாம இது தேவையா?

    அம்மா... அம்மா... என்று அவள் திரும்பி அம்மாவைப் பார்த்தாள்.

    ராத்திரி படுக்கறதுக்கு முன்னால பத்து நிமிஷம் நீ என்ன பண்றே? சொல்லு.

    கண்ணை மூடிக்கிட்டு சாமி கும்பிடுவேன். என் கவலைகளையெல்லாம் கொட்டி மனசுக்குள்ள அழுவேன். இதுவரை நாங்க பட்டதெல்லாம் போதும், மேற்கொண்டு எந்த கஷ்டத்தையும் கொடுத்துடாதே தாயேன்னு அச்சப்பட்டு கேட்டுக்குவேன். தெரியாதாடி யாமினி உனக்கு? என்றாள் காமாட்சி ஆற்றாமையுடன்.

    தெரியும்மா... ஏன் தெரியாம? ஏன் அப்படி சாமி கும்பிடுறேன்னுதான் கேக்கறேன்... பதில் சொல்லு.

    அப்பதான் நிம்மதியா இருக்குது.

    இன்னும் தெளிவா சொல்லு பாக்கலாம்...

    மனசுக்கு ஒரு திருப்திடி யாமினி... செய்ய வேண்டிய கடமையை செஞ்சுட்டோம்னு மனநிறைவு. மனசாட்சியை மதிச்சு நடந்துட்டோம்னு உணர்வு...

    கரெக்ட்மா... வெரி கரெக்ட்... நீ எப்படி சாமி கும்பிடறியோ அப்படித்தான் எனக்கு எழுத்தும்... நீ எதுக்காக பிரார்த்தனை பண்றியோ அதுக்காகத்தான் நான் எழுதறதும். எப்பவும் நான், எனக்கு, என் வேலை, என் பணம்னே இருக்க முடியாதும்மா... நம்மைச் சுத்தி இருக்கறவங்களுக்காகவும் துரும்பை அசைச்சுகிட்டே இருக்கணும்... என் திருப்தி இதுலதான் இருக்கு...

    உலகம் உன் மேல ஒண்ணும் கருணையா பொழியலையே யாமினி... என்றாள் காமாட்சி, குரல் கரகரக்க.

    அப்பா திடீர்னு செத்தப்போ உறவு நட்புன்னு யாருமே வந்து நிக்கலையே... நடுத்தெருவுலதானே நின்னோம்? காலேஜ்ல இருந்து பி.எஸ்ஸி. சர்டிபிகேட்டோட சின்னப் பொண்ணா இருந்த உன் மேலயும், வீடே உலகம்னு கெணத்துதவளையா இருந்த என் மேலயும் யாருக்கு இரக்கம் வந்ததுடி யாமினி? ஆறு மாசம் வேலை வேலைன்னு அலைஞ்சு நீ உருக்கொலைஞ்சே... சேமிப்பெல்லாம் கரைஞ்சு வீடு ஒண்ணு மட்டும் தங்கறதுக்கு இருக்க அரிசிப் பானைல தூங்கற பூனையப் பாத்துதான் உருக்கொலஞ்சேன். திடீர்னு ஒரு வேகம் வந்து பாங்க்ல லோன் வாங்கி தமிழ் மெஸ்னு போர்டைப் போட்டு வீட்டுலயே கேன்டீன் ஆரம்பிச்சு படிப்படியா வளர்ந்து அய்யோ, யாமினி இப்ப நெனைச்சாலும் கொலை நடுங்குதுடி...

    யாமினி தாயின் கையை ஆதரவுடன் பற்றிக் கொண்டாள். அந்த விரல்கள் நடுங்குவதை உணர்ந்து மெல்ல வருடினாள். மனத்தவிப்பு அடங்கட்டும் என்று அமைதியாக காத்திருந்தாள்.

    உண்மைதான். மிக திகிலான தினங்கள் தான் அவை.

    அடுத்த நாள் சோற்றுக்கு உத்தரவாதம் இல்லாத காலகட்டம் அது. எப்படி தீரப் போகிறது வாழ்க்கைப் பிரச்சினை என்று திக்குதிசை தெரியாமல் பரிதவித்த நேரம் ஆனால், ஏதோ ஜோதியின் சுடர் போல உள்ளே ஒரு பொறி இருந்து கொண்டே இருந்தது. அப்பா படிக்கக் கொடுத்த புத்தகங்களின் ஆசிரியர்கள், போதனைகள், வாழ்க்கை சரித்திரங்கள், சாதனைகள் என்று நெஞ்சு முழுக்க ஆக்கபூர்வமான அலைகள் அடித்துக் கொண்டே இருந்தன... வேலை தேடி வேட்டையாடிக் கொண்டிருந்தபோதும் நமக்கான வேலை வெளியே எங்கும் இல்லை என்று ஒருகுரல் உள்ளே கேட்டபடியே இருந்தது.

    அம்மாவின் திருப்திக்காக ஒயிட் காலர் ஜாப், அலுவலக வேலை என்று அலைந்தாள். கடைசி இருப்பும் தீர்ந்து அம்மாவின் எல்லா சாமிகளும் அவளைக் கைவிட்டு விட, யாமினி நீ என்னடி செய்யப் போறே என்று கலங்கியழுத போது, கொஞ்சம்கூட யாமினி பொறுமையிழக்காமல் வங்கிக்கடன் மனுவைக் காட்டினாள். தன் எந்த உணர்வையும் வெளிக்காட்டும் மனநிலையில் இல்லாத அம்மா உடனே தலையாட்டினாள்.

    அடுத்த பத்து தினங்களில், அப்பா கட்டிய இதே வீடு, தமிழ் மெஸ் என்று ஆனது இப்படித்தான்.

    அம்மா... பன்னிரண்டு அடிக்கப்போகுது பாரு, சேதுவும் நட்டுவும் டேபிள் சேர்களை நகர்த்திட்டு தரையைக் கழுவிக்கூட விட்டுட்டாங்க... படுத்துக்கம்மா... என்றபடி அவள் தாயின் தோளில் தட்டி விட்டு எழுந்து கொண்டாள்.

    ஆமாமா... பொழுது விடிஞ்சாத்தான் செய்யுறதுக்கு வண்டி வண்டியா வேலை காத்துக்கிட்டிருக்குதே...

    அய்யோ அம்மா, ஏன் அனாவசியமா கவலைப்படுற? நான் எதுக்கு இருக்கேன்? பார்த்துக்க மாட்டேனா? பார்த்துக்கறதுதான் இல்லையா?... கண்ணை மூடிக்கிட்டு படும்மா...

    உன்னைப் பத்தித்தாண்டி யாமினி பேசறேன் என்று கொட்டாவி விட்ட அம்மாவைப் பெருமூச்சுடன் பார்த்தபடி அவள் படுக்கையைத் தட்டிப் போட்டாள்.

    மனிதர்களில்தான் எத்தனை வகை?

    தேடித் தேடி கவலைப்படும் அம்மா ஒரு வகை. மற்றவர்களைப் பற்றிய கவலையே படாமல் வீட்டுக்கொரு குழந்தையாக தேடிப்பிடித்து கொன்று தீர்த்த மொகீந்தர்கள் ஒரு வகை.

    அவள் விழிகளில் சோர்வு படர்ந்தது.

    2

    ‘இரண்டெழுத்து இளம் நடிகரும், மூன்றெழுத்து இளம் நடிகையும் ஈ.சி.ஆர். கடற்கரைச்சாலை ஐந்து நட்சத்திர ஓட்டலில் கும்மாளம் கொள்ளாமல் எஸ்கேப் ஆகி விடுகிறார்களாம். அவர்கள் வருகைக்காக யூனிட்டே எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறதாம் தினந்தோறும்.’

    சிபி தன் முத்து முத்தான கையெழுத்தால் நிரப்பப்பட்ட அந்த காகிதத்தை ஒரு மஞ்சள் உறைக்குள் வைத்தான். சுற்றிலும் ஒரு தடவை பார்த்து விட்டு சற்று வேகமாக நடந்தான். படப்பிடிப்பு நடக்கப்போகிற

    Enjoying the preview?
    Page 1 of 1