Maththaappoo Kanavugal
By Usha
()
About this ebook
Read more from Usha
Minsaara Kannaa Rating: 4 out of 5 stars4/5Vilagatha Sirakugal Rating: 5 out of 5 stars5/5Kangal Solkindra Kavithai Rating: 4 out of 5 stars4/5Nagarnthu Varum Nathigal Rating: 4 out of 5 stars4/5Velicha Poove Vaa Rating: 4 out of 5 stars4/5Vellai Niraththil Oru Vannaththupoochi Rating: 4 out of 5 stars4/5Mayil Pola Ponnu Onnu Rating: 5 out of 5 stars5/5Vannathupoochikku Vazhi Vidu Rating: 4 out of 5 stars4/5Neeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Vannam Konda Vennilave Rating: 5 out of 5 stars5/5Enakkaakave Vanthaai Rating: 3 out of 5 stars3/5Nenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Ithu Pol Mazhaikkaalam Rating: 5 out of 5 stars5/5Vaanam Thedum Paravaikal Rating: 5 out of 5 stars5/5Innoru Koodu Innoru Paravai Rating: 5 out of 5 stars5/5Oreedam Nee Koduthaai Rating: 4 out of 5 stars4/5Pookkal Thinamum Malaginrana Rating: 0 out of 5 stars0 ratingsPattaampoochigal Parakkum Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsJarigai Siraigal Rating: 4 out of 5 stars4/5Urangaatha Pookkal Rating: 5 out of 5 stars5/5Aalkaatti Paravaikal Rating: 5 out of 5 stars5/5Oru Roja Oru Idhayam Rating: 5 out of 5 stars5/5Thaai Veedu Rating: 0 out of 5 stars0 ratingsPogumidam Vegu Thooramillai Rating: 5 out of 5 stars5/5Aval Oru Sittu Rating: 5 out of 5 stars5/5Veethiyellaam Pooppanthal Rating: 0 out of 5 stars0 ratingsViral Thodum Thooraththile Rating: 5 out of 5 stars5/5Erimalai Pookkal Rating: 4 out of 5 stars4/5Netru Nila Indru Nee Rating: 5 out of 5 stars5/5Mazhaithuli Mattum Unakku Rating: 5 out of 5 stars5/5
Related to Maththaappoo Kanavugal
Related ebooks
Neeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Vannam Konda Vennilave Rating: 5 out of 5 stars5/5Sevvanathil Oru Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsKannan Varum Neramithu Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணன் வரும் நேரமிது... Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsபாச மலர்கள் Rating: 0 out of 5 stars0 ratingsSooriyakanthi Pookkal Rating: 5 out of 5 stars5/5Dhvani Rating: 0 out of 5 stars0 ratingsமனசே... மனசே! Rating: 0 out of 5 stars0 ratingsManase Manase Rating: 5 out of 5 stars5/5Kaagitha Kappal Rating: 0 out of 5 stars0 ratingsThayumanavan Rating: 0 out of 5 stars0 ratingsThamizhkodiyin Kaathal Rating: 5 out of 5 stars5/5Penalla Penalla Rojapoo Rating: 0 out of 5 stars0 ratingsகானலைத் தேடும் காவிரி Rating: 0 out of 5 stars0 ratingsKaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Panthal Rating: 0 out of 5 stars0 ratingsOondru Kol Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Malarum Kaaththiru Rating: 0 out of 5 stars0 ratingsகாதல் மலரும் காத்திரு... Rating: 0 out of 5 stars0 ratingsஅழகே வா... அருகே வா... Rating: 0 out of 5 stars0 ratingsகாதலடி நீ எனக்கு..! Rating: 0 out of 5 stars0 ratingsKaathaladi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Valaiyil Vizhalama! Rating: 0 out of 5 stars0 ratingsItharkuthane Kathiirunthom Rating: 5 out of 5 stars5/5Puthiya Appa Rating: 0 out of 5 stars0 ratingsArunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsGanga Rating: 5 out of 5 stars5/5October Pouranami Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Maththaappoo Kanavugal
0 ratings0 reviews
Book preview
Maththaappoo Kanavugal - Usha
23
1
தீபாவளிக்கே உரிய ஆரவாரங்கள் வெளியே கேட்கத் தொடங்கி விட்டன.
பாரி உற்சாகமாக எழுந்தான்.
சரியான தூக்கம் பிடிபடாத இரவாக இருந்தாலும், அந்த இரவு அவனுக்குள் வண்ண வண்ணக் கற்பனைகளை அள்ளி வீசியிருந்தது. மத்தாப்பூ கனவுகளாகச் சொரிந்து தள்ளியிருந்தது.
நடக்கப் போவது என்ன சாதாரண விஷயமா?
கலைக் கல்லூரியிலோ, அரசுக்கல்லூரியிலோ, மருத்துவக் கல்லூரியிலோ, பொறியியற் கல்லூரியிலோ அல்ல!
திரைப்படக் கல்லூரி!
திரைப்படக் கல்லூரி!
நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் தித்தித்தது. உணர்வுகளில் உற்சாகம் கொப்பளித்தது. வெறும் வானத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுகிற மாதிரி இருந்தது.
பாரி இரு கைகளையும் உயரத் தூக்கி சோம்பல் முறித்தான் எளிமையாக உடற்பயிற்சி செய்தான். தரையிலிருந்து எழும்பி குதித்துக் குதித்து புத்துணர்வை அதிகப்படுத்திக் கொண்டான்.
ஜன்னல் வழியாகத் தெரிந்த தெருவில் சிறுவர்கள் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அநேகமாக எல்லார் கைகளும் ஊதுபத்தியும் வெடிகளுமாக இருந்தன. லட்சுமி வெடி வைத்திருந்த முகங்கள் பெருமையும் வெங்காய வெடி வைத்திருந்த முகங்கள் பொறாமையும் பிரதிபலித்தன. பட்டாசு வாசம் ஒரு வித ரம்மியத்துடன் காற்றில் கலந்திருந்தது. சிறுமிகள் வீட்டு வாசலில் வந்து வெயிலில் அக்கறையுடன் கூம்பு, கம்பி மத்தாப்பூ என்று காய வைத்துக் கொண்டிருந்த காட்சி அழகிய ஓவியம் போலிருந்தது.
அதுவும் சிகப்புப் பாவாடையும் பச்சை சட்டையும் அணிந்தபடி செக்கச் செவேலென்ற முகம் பளபளக்க தரைச் சக்கரங்களை பொறுமையாக வெயில் படுமாறு அமைத்துக் கொண்டிருந்த சிறுமியைப் பார்த்தபோது சீதாவின் நினைவு மகிழம்பூ நறுமணமாக இருதயத்தைச் சுற்றி வரத்தொடங்கியது.
சீதா!
என் கண்ணே!
கோடி கோடி நன்றியபடி உனக்கு!
நீ மட்டும் என் மனதை சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் இதோ இந்த நிமிடத்து என் சந்தோஷம் சாத்தியமே இல்லை பெண்ணே!
அம்மாவிடம் பொறுமையாகப் பேசி, நீ எனக்காக சிபாரிசு செய்யாவிட்டால், நான் ஏரைத் தூக்கிக் கொண்டோ பேனாவை சுமந்து கொண்டோ ஒரு சராசரி வட்டத்து மனிதனாக என் வாழ்க்கையை துவக்கியிருப்பேனே!
கண்ணே சீதா!
நன்றியடி என் கண்மணி!
சரசரவென்று நெருப்புப் பொறி பற்றிக் கொள்ள, நடுத்தெருவில் வைத்திருந்த வாலாச்சரம் ஒன்று படபட சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கியது.
சிறுவர்கள் ஹோவென்று கத்தினார்கள்.
பாரியும் சந்தோஷமாக அவர்களின் கூவலை ரசித்தான்.
இன்னிக்கே விட்டு தீர்த்துடு எல்லாத்தையும்... மத்தப் பசங்க தீபாவளி அன்னிக்கு வெடிக்கும் போது கையை கட்டிகிட்டு வேடிக்கை பாரு. மக்கு...
என்று எதிர்வீட்டு சரவணனின் அம்மா திட்டுவதைக் கேட்ட போது தன் சிறு வயது நாட்கள் நினைவுக்கு வந்தன அவனுக்கு.
கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத அந்த நிலாவூரில் பொங்கலும் தீபாவளியும் ஆடிமாதமும் அல்லோல கல்லோலப்படும். ஊரின் ஒரே பெருமாள் கோவில் திருவிழா கோலம் பூண்டிருக்கும். எல்லா வீடுகளிலும் மக்கள் பண்டிகையை ஆர்வத்துடன் வரவேற்பார்கள். தொலைக்காட்சி சானல்களும், விசிடிக்களும், கடற்கரையும், பூங்காக்களும் இல்லாத அந்த எளிய ஊரின் ஒரே முக்கிய எதிர்பார்ப்பு இந்த பண்டிகைகள்தான்.
அம்மாவுக்கும் இதில் நிறைய ஆர்வம்.
அதுவும் அப்பா இல்லாத பையன் என்பதால் பாரியின் மேல் எப்போதும் தனிப்பரிவு உண்டு அவளுக்கு. ஏதாவது காரணம் கிடைத்தால் போதும், இனிப்பு காரம் அது இது என்று அசத்தி விடுவாள். தீபாவளி சமயங்களில் அவள் உழைப்பு மிக அதிகப்படியாக இருக்கும். கழனி மேட்டு வேலை முடித்து பணியாட்களுக்கு கூலியை விநியோகித்து விட்டு, வீடு வந்து சேர்ந்ததும், முந்தானையை ஒரு உதறு உதறி அடுப்பை பற்ற வைப்பாள். ஏலம், முந்திரி, திராட்சை, வெண்ணை என்று அடுப்படியிலிருந்து வரும் வாசத்தில் மயங்கிப் போய் சிறுவன் பாரி ஓடி வரும்போது பாய்ந்து அணைத்துக் கொள்வாள்.
எதுப்பா வேணும் உனக்கு மொதல்ல? ஜிலேபி சாப்பிடறியா இல்லே மைசூர்பாகா?
என்று முத்தமிடுவாள்.
பெட்டி நிறைய வாங்கி வைத்திருக்கும் பட்டாசுகளை கடைபோல பரப்பி அவனை சந்தோஷப்படுத்தி தானும் சந்தோஷப்படுவாளே, அந்தக் காட்சி இதோ நேற்றுதான் நடந்தது போலிருக்கிறது.
தீபாவளி ஒரு தனி அழகுதான்.
பாரி... பாரி...
அம்மாவின் குரல் கேட்டது.
இதோ வரேம்மா...
என்றபடி அவன் குளியலறைக்குள் நுழைந்தான்.
ஐந்து நிமிடங்களில் வெளிப்பட்டபோது அம்மா ஜன்னலைப் பற்றியபடி வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பக்கத்தில் போனான்.
என்னம்மா பாத்திட்டிருக்கே?
என்று ஜன்னல் கதவை பெரிதாகத் திறந்தான்.
பதில் சொல்லாமல் அம்மா பெருமூச்சு விட்டாள்.
அம்மா, ஒன்னைத்தான்...
என்று மெல்ல அவள் தோளைத் தொட்டான். வருத்தமா இருக்கா? முழு சம்மதம் இல்லையா உனக்கு, நான் சினிமா கல்லூரியில் சேர்றதுல?
என்றான் பொறுமையாக.
அப்படியெல்லாம் இல்லேப்பா?
பின்னே ஏம்மா டல்லா இருக்குறே?
சொல்லத் தெரியலப்பா.
அப்படின்னா நீ சந்தோஷமா இல்லையா எப்பவும் போல?
லேசா ஏதோ உறுத்துதுப்பா பாரி.
சினிமான்னா தப்பான விஷயம்னு நினைக்கிறே, இல்லம்மா?
அம்மா மவுனமாக இருந்தாள்.
அப்படி இருந்தது பழைய காலம்மா... நான் ஒத்துக்கறேன்... அதிர்ஷ்டத்தையும் அழகையும் நம்பி வந்த அரை வேக்காட்டு மனிதர்கள் சினிமா மேல அருவருப்பான இமேஜை உருவாக்கி இருந்தது உண்மைதான். ஆனா இப்ப அப்படி இல்லே அம்மா. நிச்சயமா இல்லே. திறமை எது இருக்கு நம்பகிட்டன்னு அவனவன் சுயமா சிந்திச்சு வரான். திறமைய எப்படி எப்படியெல்லாம் வளர்த்துக்கலாம்னு வெறியோட வர்றான். மத்தவங்க கிட்ட இருந்து வித்தியாசமா சிந்திக்கணும். ஜெயிக்கணும் என்கிற லட்சிய தாகத்தோட வறாம்மா ஒவ்வொருத்தனும் இப்படி கனவுகள் சுமந்து கிட்டு கைநிறைய தகுதியோட வர்றவனை சினிமா நல்லபடியா மேலே ஏத்திவிடுமே தவிர, கீழே தள்ளி விடாதும்மா. இங்க பாரேன்.
தாயின் முகத்தை மெல்ல பற்றினான் அவன்.
"நீதானே வளர்த்தே என்னை? மண்ல விழுந்ததுல இருந்து, உன் மடில புரண்டதுல இருந்து இதோ இந்த இருபத்தைஞ்சு வயசு வரைக்கும் என் நிழல் போல என் கூடவே இருந்துதானே கவனிச்சுகிட்டு வரே? நானா விரும்பினாலும் என்னால் கெட்டுப் போக முடியுமாம்மா? எந்தச் சூழ்நிலைலயும் மன உறுதி கெடாம இருக்க முடியும்மா என்னால. கவலைப்படாம என்னை தைரியமா அனுப்பும்மா. திரைக்கதை ஆசிரியரா, நல்ல இயக்குனரா,