Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கண்ணன் வரும் நேரமிது...
கண்ணன் வரும் நேரமிது...
கண்ணன் வரும் நேரமிது...
Ebook123 pages42 minutes

கண்ணன் வரும் நேரமிது...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புருஷன் இருக்கறவரைதான் நமக்கு மதிப்பு மரியாதை. அப்பறம் ஒண்ணும் கிடையாது.’
சுசீலாவைப் பார்த்தபடியே லட்டு பிடிக்கத்துவங்கிய பிரபாவதிக்கு சற்று முன் செண்பகம் சொன்ன இந்த வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.
‘புருஷன் இருக்கறவரைதான் மதிப்பும், மரியாதையும் கிடைக்குமாம். புருஷன் இருந்து இவளுக்கென்ன கிடைத்தது? கடைசியில் ஹோமில் இருக்க வேண்டிய நிலமை.’
‘அதுக்கென்ன பண்றது? இவளை யாரு ஹோம்ல இருக்கச் சொன்னா? புருஷனும் பொண்ணுங்களும் பேரும் புகழுமாயிருக்காங்க. பணத்துலயே புரள்றாங்க. இவ நினைச்சா மகாராணி மாதிரி வாழலாம். திமிர் வேற என்ன? வரட்டு கௌரவம். தானே தன்னை வருத்திக்கறா. இவளுக்கென்ன ஹோம்ல வந்து கெடக்கணும்னு தலையெழுத்தா? காசுதான் வாழ்க்கை என நினைப்பவர்கள் அவளைப்பற்றி பேசும் பேச்சு இது.’
‘வாழ்க்கைன்னா விட்டுக் கொடுத்துத்தான் போகணும்!
வாழ்க்கையைப் பற்றிய தத்துவங்களை பேசுவதற்காகவே அவதாரம் எடுத்த அரிஸ்டாட்டில்கள் அவளுக்கு தரும் அறிவுரை இது!’
இத்தனைக்கும் வயது சுசீலாவிற்கு ஐம்பதுதான். அதற்குள்ளேயே வாழ்க்கையை வெறுத்துவிட்டாள்.
‘யாருக்காக ஓடி ஓடி உழைக்கணும்? உழைச்சு உழைச்சு என்னாகப் போகுது? நம்ம உழைப்பு மத்தவங்களோட முன்னேற்றத்துக்கு உதவுறவரைதான் நம்ம உழைப்புக்கு மதிப்பு. அதுக்கு பிறகு நம்ம உழைப்பு அவங்களுக்கு கால் தூசு!’
இதுதான் சுசீலா தன் வாழ்க்கையிலிருந்து கத்துக்கிட்ட பாசம்தன் உழைப்பு பிறருக்கு கால்தூசியான போது அவள் உழைப்பதை நிறுத்தி விட்டாள்.
வேலையை ராஜினாமா செய்துவிட்டாள். எடுத்துக்கொண்டிருந்த டியூஷனையெல்லாம் மூடினாள். கையிலிருக்கும் பணமே காலம் முழுவதும் என் ஒருத்திக்கு போதும் என இந்த ஹோமில் வந்து சேர்ந்து விட்டாள்.
முதியோர் இல்லத்தில் வந்து சேருமளவிற்கு அவள் ஒன்றும் வயதானவளில்லை.
ஐம்பதை நெருங்குகிறாள். அவ்வளவுதான். தனியாக வாழப் பிடிக்கவில்லை. இங்கு வந்துவிட்டாள்.
இங்கு வந்துவிட்டாலே தவிர யாருடனும் நெருங்கிப் பழகமாட்டாள். மனவேதனையை யாரிடமும் பகிரமாட்டாள்.
மனம் விட்டு சிரிக்கமாட்டாள்.
அவள் கதையை அவள் பகிர வேண்டிய அவசியமே இல்லை. ஊரே அறிந்த ஒன்று.
சுவாரசியமாக பேசும் ஒன்று.
‘சுசீலா இந்த நீயூஸை படியேன். உன் புருஷனுக்கும் புதுசா நடிக்க வந்த கேரள நடிகைக்கும் கிசுகிசுன்னு போட்டிருக்கு. இந்த நடிகைகளுக்கு விவஸ்தையே இல்லையா? அழகாயிருக்காளுங்க வயசும் திறமையும் இருக்கு. அப்பன் வயசுலயிருக்கற நடிகர்களை எதுக்கு சுத்தறாளுங்க...’
அந்த இல்லத்தில் அடிக்கடி சுவாரசியத்தோடு பேசப்படும் விஷயம், கவர்ச்சிகரமான விஷயம்.
‘அடடா... உன் பொண்ணு நிக்கற கோலத்தைப்பாரு.
உவ்வே. அது டிரஸ்ஸும் மேக்கப்பும்!’
அட்டைப்படத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி நிற்கும் அவளுடைய பெண்ணின் புகைப்படம் வந்திருக்கும் பத்திரிகையை அனைவரும் முகச் சுளிப்புடன் பார்க்கும் போது எதுவுமே தன்னை பாதிக்காததைப் போல் மாத நாவலில் மூழ்கியிருப்பாள் சுசீலா

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
கண்ணன் வரும் நேரமிது...

Read more from ஆர்.சுமதி

Related to கண்ணன் வரும் நேரமிது...

Related ebooks

Reviews for கண்ணன் வரும் நேரமிது...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கண்ணன் வரும் நேரமிது... - ஆர்.சுமதி

    1

    விடிந்தால் தீபாவளி. ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. திரும்பிய இடமெல்லாம் தீபாவளியின் ஒளிவெள்ளம், பரபரப்பு, ஆர்ப்பரிப்பு. கொண்டாட்ட குதூகலிப்பு.

    அந்த முதியோர் இல்லம் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை என்பதுதான் ஆச்சரியம்.

    தீபாவளி என்றால் குழந்தைகள்தான் கொண்டாட்டமாகயிருப்பார்கள் என்பதை பொய்யாக்கிவிட்டிருந்தது அங்கிருந்த முதியோர்களின் உற்சாகமும் உள்ள குதூகலிப்பும்.

    தன் - அறையில் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த பிரபாவதிக்கு உண்மையில் ஆச்சரியமாகயிருந்தது.

    சிறு குழந்தைகளைப் போல் தீபாவளியை வரவேற்கத் தயாராகயிருக்கும் அவர்களுடைய உற்சாகமும் சுறுசுறுப்பும் நிஜமாகவே உண்மைதானா என்று தோன்றியது.

    ஏனென்றால் -

    அங்கிருக்கும் வயதானவர்களில் அவளும் ஒருத்தி. அவளால் அப்படி இருக்க முடியவில்லை.

    இவர்களெல்லாம் சந்தோஷமாக எப்படியிருக்கிறார்கள்?

    எப்படியிருக்க முடிகிறது? நிச்சயமாக இருக்க முடியாது.

    நிச்சயம் இவையெல்லாம் வெறும் நடிப்புத்தான். தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

    உற்சாகம், மனதைரியம் என்ற சட்டையை மாட்டிக்கொண்டு அலைகிறார்கள்.

    பொய்யான பேச்சு. கற்பனை வாழ்க்கை இவற்றிலேயே உழலும் கிழடுகள்.

    இல்லாவிட்டால் செண்பகம் இந்த அறுபது வயதில் சமையலறையில் மைசூர் பாக் கிளறிக் கொண்டிருப்பாளா?

    அவளுடைய கணவர் சுந்தரேஸ்வரர்... அதோ... தோட்டத்தில் தன்னை ஒத்த கிழங்களை சுற்றி உட்கார வைத்துக்கொண்டு ராணுவத்தில் தான் ஆற்றிய சாதனைகளைப் பட்டியல் போட்டுக் கொண்டிருப்பாரா?

    பெயர் சொல்ல ஒரு பிள்ளை கூட இல்லை.

    இவர் ராணுவத்தில் சாதனை புரிந்து என்னாகப் போகிறது? புருஷனும் பொண்டாட்டியும் சம்பாதித்ததையெல்லாம், நமக்கு பிள்ளை இல்லைன்னா என்ன? அண்ணனோட பிள்ளைகளே நம்பிள்ளைகள், தம்பியோட பிள்ளைகளே நம் பிள்ளைகள் என அவர்களை ஊட்டி ஊட்டி வளர்த்து, பார்த்து பார்த்து படிக்க வைத்து, தேடித் தேடி வேலையில் அமர்த்தி இறுதியில் இவர்கள் வந்து சேர்ந்திருக்கும் இடம் இந்த முதியோர் இல்லம்.

    எஞ்சிய பணம் கையில் இருக்கிறது. கடைசிவரை இந்த முதியோர் இல்லத்தில் வசதியாக வாழலாம்.

    ஆனால், மனதில் மிஞ்சியிருப்பது வெறுமையும் விரக்தியும்.

    எல்லாவற்றையும் உறிஞ்சிக்கொண்ட அண்ணன் பிள்ளைகளும் தம்பி பிள்ளைகளும் வந்து பார்ப்பது கூட இல்லை.

    அண்ணன் பிள்ளைகள், தம்பி பிள்ளைகள் அடுத்தவர் பிள்ளைகள்தானே?

    சொந்த பிள்ளைகளிடமே பாசத்தை எதிர்பார்க்க முடியாத போது மற்றவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

    சமையலறையிலிருந்து மைசூர் பாக் செய்யும் வாசனை மூக்கைத் துளைத்தது.

    உடம்பு முழுவதும் சுகர். ஒரு துணுக்கைக் கிள்ளி வாயில் போட முடியாது. ஆனால் மூச்சைப் பிடித்துக்கொண்டு மைசூர் பாக்கை கிளறிக் கொண்டிருக்கிறாள் செண்பகம்.

    இவள் மட்டுமே...

    உட்கார்ந்த இடத்திலிருந்தே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். கூடத்தில் அமர்ந்து உற்சாகமாக பேசி சிரித்தபடி மற்ற பெண்மணிகளும் லட்டு பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

    ஐம்பத்தைந்துக்கு மேல் வயதாகிவிட்ட அவர்களில் அனைவருக்கும் சுகர், பி.பி. என ஏதாவது ஒன்று சொந்தமாகயிருக்கிறது.

    ஒரு பூந்தியைக்கூட வாயில் எடுத்துப் போடாமல் சிரத்தையாக லட்டு பிடிக்கின்றனர்.

    கொஞ்சம் எடுத்து வாயில் போடலாம் என்று எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் இந்த வயசான காலத்தில் சுகர், பி.பீ ஏறி மயக்கம் போட்டு விழுந்தால் கவனிக்க யார் இருக்கிறார் என்ற கவலையிலேயே வாயையும், வயிற்றையும் கட்டுப்படுத்தும் நிலை.

    ச்சை... என்ன வாழ்க்கையிது. பிரபாவதிக்கு எரிச்சலாகயிருந்தது.

    அவளைப் பொறுத்தவரை இது ஒரு ஜெயில். மற்றவர்களெல்லாம் சாதாரணமாகயிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் வாழ்க்கையிலேயே இப்பொழுதுதான் நிம்மதியை அனுபவிப்பதாக கூறுகின்றனர்.

    எல்லாம் நடிப்பு.

    பிரபாவதியக்கா...

    செண்பகத்தின் குரல்தான்.

    அதற்குள் மைசூர் பாக் செய்து முடித்துவிட்டாளா என்ன?

    அக்கா... அக்கா கூப்பிட்டபடியே உள்ளே வந்தாள் செண்பகம்.

    ‘என்னைவிட ரெண்டு வயசு மூத்தவள். ஏதோ வம்சாவழி பயனாக நிறைய தலைமுடி நரைக்கவில்லை. பிள்ளையே பெற்றுக் கொள்ளாததால் இந்த வயதிலும் கட்டுக்கலையாத உடம்பு, அதற்காக மனதில் பதினாறு வயதுப் பெண் என்ற எண்ணமா? அக்காவாம் அக்கா.’

    மனதிற்குள் சிடுசிடுத்தாள் பிரபாவதி.

    வயதிற்கான சோர்வை கொஞ்சமும் காட்டிக்கொள்ளாமல் சிரிப்பும் பேச்சுமாய் பருவப் பெண்ணைப் போல் வளையவரும் செண்பகத்தை எல்லோருக்கும் பிடிக்கும்.

    பிரபாவதி மட்டும் ‘ரொம்பத்தான் ஆடறா’ என மனதில் நினைப்பாள்.

    அக்கா... மைசூர் பாக்கை கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பார் என்று கையிலிருந்த தட்டை நீட்டினாள்.

    ஏற்கனவே உடம்பு பூரா சுகர். இதைக் கொடுத்து என்னை பரலோகத்திற்கு அனுப்பப் பார்க்கறியா? சிரிப்பும் முறைப்பும் முகத்தில் படர அவளைப் பார்த்தாள்.

    அக்கா... ரொம்ப கட்டுப்பாடாயிருந்தா வாழ்க்கையை ரசிக்க முடியாது. கொஞ்சம் சாப்பிடுக்கா.

    இந்த கிழட்டு வயசில் அனாதைமாதிரி உறவுகள் யாரும் இல்லாமல் இந்த ஹோமில் இருந்து கொண்டு வாழ்க்கையில் எதை ரசிக்க முடியும்?

    மனசோர்வுடன், உன் புருஷனுக்கு கொண்டு போய் கொடு. ஒரு மணி நேரமா தன் மிலிட்ரி அனுபவங்களை சொல்லி சொல்லி டயர்டாயிருப்பார். அவருக்குத்தான் க்ளுகோஸ் தேவை.

    இந்த தட்டை அவர்கிட்ட கொடுத்தா அத்தனையையும் சாப்பிட்டுடுவார். மிலிட்ரி உடம்பு இல்லையா? சுகர் பி.பி. இந்த வயசுவரைக்கும் எதுவும் இல்லை. அதனால அவருக்கு பிடிச்ச மைசூர் பாக்கை ஒவ்வொரு தீபாவளிக்கும் தவறாம செய்துடுவேன். குழந்தைமாதிரி ரசிச்சு ரசிச்சு சாப்பிடுவார். ரொம்ப டேஸ்ட்டாயிருந்ததுன்னு வச்சுக்க புதுமாப்பிள்ளை மாதிரி என் கன்னத்தைப் புடிச்சு கிள்ளிடுவார்.

    அந்த வயதிலும் கன்னம் சிவக்க செண்பகம் மயக்கமாக சிரிக்க, ‘வெட்கம் கெட்ட கிழவி. இந்த வயதிலும் குசும்பைப் பாரு. புருஷனோட லீலைகளை வெட்கமில்லாம பேசறா. புள்ளை இல்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாண்ட கதையா புள்ளைங்களெல்லாம் கைவிட்டவர்கள் இருக்கற இந்த ஹோம்ல இந்த கிழவி துள்ளி விளையாடறாள்.’

    புருஷன் இருக்கற வரைக்கும்தான் நமக்கு மதிப்பு, மரியாதை எல்லாம். இல்லையாக்கா...

    ஆமாம். நீ போய் மிலிட்ரிக்கு மைசூர்பாக் கொடு. அவளை அறையிலிருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தாள்.

    அக்கா... எல்லாரும் உற்சாகமாயிருக்காங்க. நீ ஏன் ரூமுக்குள்ளயே அடைஞ்சுக்கிடக்கறே. அவங்களோட சேர்ந்து லட்டு பிடிக்கலாம் இல்லையா?

    போகிற போக்கில் உத்தரவு போட்டுவிட்டுப் போனதோடல்லாமல் லட்டு பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் சுசீலா... பிரபாவதியக்காவை போய் அழைச்சுட்டு வந்து இங்க உட்கார வை. சும்மா ரூமுக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு எதையாவது யோசிச்சுக்கிட்டு டென்ஷனாயிருக்கா. போ... போய் கூட்டிக்கிட்டு வா. - சொல்லிவிட்டு மிலிட்ரிக்கு மைசூர்பாக் கொடுக்கவும் கன்னத்தில் கிள்ளு வாங்கும் சந்தோஷத்துடனும் தோட்டத்திற்குச் சென்றாள்.

    சுசீலா எழுந்திருப்பதற்குள்

    Enjoying the preview?
    Page 1 of 1