கண் வரைந்த ஓவியமே!
By ஆர்.சுமதி
()
About this ebook
எமகாதகனாக இருப்பான் போலிருக்கிறது. எதுவும் தெரியக்கூடாது என்று தானே அப்படிப் பொய் சொன்னேன். ஆனாலும் எப்படியோ கண்டு பிடித்து விட்டானே?’
வீட்டிற்குத் திரும்பும் போது இதையே யோசித்துக் கொண்டிருந்தாள் மங்களா.
“ச்சே... எங்கெங்கெல்லாம் வேலைக்கு முயன்றேன். எதுவும் கிடைக்கவில்லை. கடைசியில் இந்தக் கம்பெனிக்கு வரவேண்டியதாகிப் போனதே! உண்மையை மறைத்தும் எல்லாம் தெரிந்து விட்டது. இவனுடைய
பேச்சில் நாகரீகம் தெரிகிறது. கடைசி வரை இதை கடைப்பிடிப்பானா? இல்லை மெல்ல மெல்ல ராஜி கம்பெனி பற்றிய விவரங்களைக் கிளறத் தொடங்குவானா? இவன் எப்படிப் பட்டவன்? அடுத்தவனைக் குப்புறத் தள்ளி விட்டு தான் முன்னேற வேண்டும் என நினைப்பது தானே உலகம்? அப்படி ஏதாவது கிளற நினைத்தால் வேலையை விட்டுவிட வேண்டியதுதான்.’
இப்படி நினைத்தபோது உள்ளுக்குள் மனதின் மூலை யின் ஒரு குரல் சிரித்தது.
‘பைத்தியம்! பழைய கம்பெனியிலிருந்து விலகிய பின் வேலை தேடி எவ்வளவு சிரமப்பட்டாய்! ஒரு வருடம் சரியாக ஒரு வருடம் வேலை இல்லாமல் அலைந்ததை மறந்து விட்டாயா? ஒவ்வொரு மாதத்தையும் ஓட்ட எவ்வளவு சிரமப்பட்டாய்? புதிதாக ஒரு வேலை கிடைத்ததும் பழைய அலைச்சலும், கஷ்டங்களும் மறந்து விட்டதா? வெகு எளிதாக வேலையைத் தூக்கி எறிவேன் என நினைக்கிறாயே? பைத்தியம். பணம்! பணம்தான் வாழ்க்கை. பணம் இல்லாவிட்டால் எதுவும் செய்ய முடியாது.
அந்தப் பணத்திற்காகத்தானே அக்கா அருந்ததி அடிக்கடி வந்து நிற்கிறாள். அந்தப் பணத்திற்காகத் தானே நான் அந்தக் கோசலை மைந்தனிடம் போய் நிற்க வேண்டியிருந்தது.’
‘பணம். பணம் என்னடா பணம் பணம்? குணம் தானடா நிரந்தரம்?‘கவிஞர் எப்படி இந்த வரிகளை எழுதியிருப்பார்? அவரே எவ்வளவோ தடவை பணத்திற்காக பரிதவித்த பின்னும் இப்படி எழுத எப்படி மனம் வந்தது?’
குணம் நிரந்தரமென்றால் அக்கா அருந்ததியை அத்தான் கொண்டாடியிருக்க மாட்டாரா? கொண்டு வாடி என ஏன் அடிக்கடி துரத்தியடிக்கிறார்?
வியாபாரத்திற்கு ஐம்பதாயிரம் பணம் வேண்டும் வாங்கி வா என புருஷன் அனுப்பியதாக வந்து நின்ற அருந்ததி திரும்பிப் போக வேண்டுமென்றால் கண்டிப்பாக ஐம்பதாயிரம் கொடுத்தே ஆக வேண்டும்.
இல்லாவிட்டால் அவளை வீட்டோடு வைத்துக் கொள்ள வேண்டியதுதான். எல்லாப் பொறுப்புகளையும் உதறிவிட்டு இறைவனைத் தேடி இமயமலைக்குச் செல்லும் துறவிகளைப் போல் அப்பா காவி கட்டாமலேயே கைலாசத்திற்குப் போய் விட்டார். இருப்பதைப் போட்டு அக்காவை கட்டிக் கொடுத்துவிட்டு அவர் போய்விட்டாலும், இன்னும் என்ன இருக்கு எடுத்து வா என அக்கா புருஷன் அனுப்பிக் கொண்டேயிருக்க அவளுடைய தேவைகளைத் தீர்க்கும் தேவதையானாள் மங்களா.
அந்தத் தேவையைத் தீர்க்க இந்தத் தேவதை போய் நின்றது கோசலை மைந்தனிடம்!
அவர் தன் தேவையைத் தீர்த்துக் கொள்ள நினைத்தார்.
‘இந்தப் பணம் தானே கோசலை மைந்தனை என்னைத் தவறாக எடை போட வைத்தது!’
நெஞ்சு கொதித்தது நிமிடத்தில்! மறக்க முடியுமா அந்த மனவேதனையை?
மோதி மிதித்து விட்டாள். முகத்தில் உமிழ்ந்து விட்டாள். விலகி வந்து விட்டாள். விவேகத்துடன் மன்னித்து விட்டாள்.
ஆனால்? ஆனால்..?
உள்ளுக்குள் கூனி குறுகிப் போய் விட்டாளே!
கடனாகப் பணம் கேட்டதற்கு அவன் சம்பளத்தில் கழித்துக் கொள்ளாமல் சல்லாபத்தில் கழித்துக் கொள்ள நினைத்தது எதனால்?பெண்! பெண் என்ற ஒரே காரணத்தில் தானே?
பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்கிறார்கள். அது முற்றிலும் சரியான வார்த்தையே!
அந்தக் கோசலை மைந்தனிடம் வலியச் சென்று விழும் பெண்களால் தானே அவன் என்னையும் அதே கோணத்தில் பார்த்தான். ஆபாசம் கூடாது என மேடை போட்டு பெண்கள் பேசுகிறார்கள். போஸ்டரைக் கிழிக்கிறார்கள். சினிமா எடுத்த இயக்குனர்களை சாடுகிறார்கள். ஆண்கள் காமப்பேய்கள் என்கிறார்கள். அரைகுறை ஆடையில் பெண்கள் ஆடமுடியாது. நடக்க முடியாது என்று சொன்னால் அவரைகளைக் கட்டி வைத்து அடித்தா நடிக்க வைக்கிறார்கள்? அரைகுறை ஆடையில் நடிக்க நாங்கள் தயார் எனச் சொல்லும் நடிகைகள் பெண்கள் தானே? அவர்கள் தானே முதல் எதிரிகள்?
பெண் கொடுமைகள் மட்டுமல்ல சமுதாயத்தில் பெண்களின் கேவலமான நிலைக்கும் பெண்களே காரணம்.
Read more from ஆர்.சுமதி
எண்ணம் போலக் கண்ணன் வந்தான் Rating: 0 out of 5 stars0 ratingsசினேகிதனே... Rating: 0 out of 5 stars0 ratingsதென்றலே என்னைத் தொடு! Rating: 0 out of 5 stars0 ratingsஉனக்கே உயிரானேன் Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணன் வரும் நேரமிது... Rating: 0 out of 5 stars0 ratingsஅன்பிற்குப் பஞ்சமில்லை Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னிடம் மயங்குகிறேன் Rating: 0 out of 5 stars0 ratingsமறவாதே மனமே! Rating: 0 out of 5 stars0 ratingsபுதிராக ஒரு பூ! Rating: 0 out of 5 stars0 ratingsநிலவுக்கும் நிறமுண்டு..! Rating: 0 out of 5 stars0 ratingsபார்வைகள் புதிதா? Rating: 0 out of 5 stars0 ratingsவெண்ணிலா நேரத்திலே...! Rating: 0 out of 5 stars0 ratingsபொன்னாடை Rating: 0 out of 5 stars0 ratingsபோவோமா பொன்னுலகம்! Rating: 0 out of 5 stars0 ratingsமனசுக்குள் வரலாமா? Rating: 0 out of 5 stars0 ratingsநான் பேச நினைப்பதெல்லாம்... Rating: 0 out of 5 stars0 ratingsவேரினை வெறுக்கும் விழுதுகள் Rating: 0 out of 5 stars0 ratingsகேட்கும் வரம் கிடைக்கும் வரை... Rating: 0 out of 5 stars0 ratingsபாச மலர்கள் Rating: 0 out of 5 stars0 ratingsஅன்பிற்கு தலைவணங்கு! Rating: 0 out of 5 stars0 ratingsமாயத் தோற்றங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsகாதல் மலரும் காத்திரு... Rating: 0 out of 5 stars0 ratingsகற்பூர ஜோதி Rating: 0 out of 5 stars0 ratingsவிழியிலே மலர்ந்தது Rating: 0 out of 5 stars0 ratingsமலருக்குத் தென்றல் பகையானால்... Rating: 0 out of 5 stars0 ratingsமலரே, மயங்காதே! Rating: 0 out of 5 stars0 ratingsஎன் இனிய இளமானே Rating: 0 out of 5 stars0 ratingsமயக்கத்திற்குரிய மந்திரமே! Rating: 0 out of 5 stars0 ratingsவாசமில்லா மலரிது! Rating: 0 out of 5 stars0 ratings
Related to கண் வரைந்த ஓவியமே!
Related ebooks
Kan Varaintha Oviyame Rating: 0 out of 5 stars0 ratingsKann Varaintha Oviyamey! Rating: 0 out of 5 stars0 ratingsKattru Marakkumo Kaadhal? Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsNadunisi Thendral Rating: 0 out of 5 stars0 ratingsThendral Vanthu Ennai Sudum Rating: 0 out of 5 stars0 ratingsMadhil Mel Manasu Rating: 5 out of 5 stars5/5Soozhnilaik Kaithigal Rating: 0 out of 5 stars0 ratingsVizhi Pesum Mozhi Puthithu Rating: 0 out of 5 stars0 ratingsInaiyaana Ilamaane Rating: 4 out of 5 stars4/5இணையான இளமானே Rating: 0 out of 5 stars0 ratingsSanthaikku Vantha Kili Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsPani Nilavai Pathanidu Rating: 0 out of 5 stars0 ratingsPani Nilavai Pathiyanidu Rating: 0 out of 5 stars0 ratingsபிருந்தா... அன்பிருந்தா... Rating: 0 out of 5 stars0 ratingsBirunthaa Anbirunthaa Rating: 5 out of 5 stars5/5Kathal Rajjiyam Unathu Rating: 0 out of 5 stars0 ratingsPerazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Marakka Muyandrean... Mudiyavillai! Rating: 5 out of 5 stars5/5Anjuvatharkku Manju Rating: 5 out of 5 stars5/5Kaadhal Kaayangal Rating: 0 out of 5 stars0 ratingsKuthiraiyil Oru Rajakumaran Rating: 0 out of 5 stars0 ratingsKooramal Sanyasam Rating: 0 out of 5 stars0 ratingsNila Veliyil Rating: 4 out of 5 stars4/5ஒரு அழகான ஆபத்து Rating: 0 out of 5 stars0 ratingsOru Azhagana Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsMarakkumo Anbu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsOru Malarin Payanam Rating: 5 out of 5 stars5/5
Reviews for கண் வரைந்த ஓவியமே!
0 ratings0 reviews
Book preview
கண் வரைந்த ஓவியமே! - ஆர்.சுமதி
1
ஓவியர்கள் மறைந்தாலும் அவர்கள் வரைந்த ஓவியங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவளைப் பார்க்கும்போது கூட நிரஞ்சனுக்கு அப்படித்தான் தோன்றியது.
தோற்றமே யாருக்கும் ரசாயன மாற்றத்தை உண்டு பண்ணிவிடும். விழிகளுக்கு வேலி போல் கரிய இமைகள். ஆளை காலி செய்து விடுவதைப்போல் கருவிழிகள். செதுக்கிய மூக்கு. பதுக்கிய முத்துக்களைக் கொண்ட செவ்வாய். நிமிர்ந்து, அமர்ந்திருந்த முடுக்கில் தெரியும் துணிவு. பயமில்லாத விழிகளில் தெரிந்த அறிவு என்று நிறைந்த ஓவியமாகத் தோன்றினாள்.
மிஸ், மஞ்சுளா...
எஸ் சார்.
இதுக்கு முன்னாடி நீங்க எங்கே வேலை பார்த்தீங்க?
ராஜி மோட்டார் கம்பெனியில.
அந்த பதில் அவனுக்குள் சரக்கென தீக்குச்சியைக் கிழித்திருக்க வேண்டும். லேசாக நிமிர்ந்து அமர்ந்தான்.
முகத்தில் அலட்சியமாக அவளுடைய அழகை ரசித்துக் கொண்டிருந்த நிலைமாறி ஒரு மரியாதை கலந்த மதிப்பு உண்டானது.
ராஜி மோட்டார் கம்பெனிதான் அவனுடைய போட்டிக் கம்பெனி. மாவரைக்கும் இயந்திரங்கள் மின் சாதனங்களுக்கு மோட்டார் தயாரித்து விற்பதில் முன்னிலையில் இருக்கும் நிறுவனம். அதே மின்சாதனங்களுக்கான மோட்டார் உற்பத்தியில் இவனும் இறங்கியிருக்கிறான். அதுவும் ராஜி மோட்டார் தொடங்கிய அதே காலத்தில் தான். ஆனால் அந்தக் கம்பெனியை வீழ்த்த முடியவில்லை. இணையாகக் கூட இருக்க முடியவில்லை. இரண்டாமிடத்தில்தான் இருக்கிறான். தன் நிறுவனத்தை எப்படியாவது முதலிடத்திற்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது அவனுடைய லட்சியம். இந்த நிலையில் அங்கே வேலை பார்த்த ஒருத்தி தன்னிடம் வேலை கேட்டு வந்திருக்கிறாள்.
லேசாகத் தொண்டையைச் செருமிக் கொண்டு அவளை ஆழ்ந்து நோக்கினான்.
அங்கே நீங்க என்ன வேலை பார்த்தீங்க?
ரிசப்ஷனிஸ்ட்டாயிருந்தேன்.
உங்க அழகைப் பார்த்ததுமே நினைத்தேன்.
அவளிடம் எந்தச் சலனமும் இல்லை.
சரி எதனால அந்த வேலையை விட்டுட்டீங்க.
மும்பைக் கிளைக்கு என்னை மாத்தினாங்க. சம்பளம் கூடுதலா கிடைக்கும்ங்கற ஆசையில நானும் போனேன். ஆனா அந்தக் க்ளைமேட் எனக்கு ஒத்துவரலை. அதனால ஒரு வருஷம் கழிச்சுத் திரும்ப சென்னைக்கே மாற்றல் கேட்டேன். கொடுக்கலை. அதனால வேலையை விட்டுட்டு உங்க கம்பெனிக்கு விண்ணப்பம் செய்தேன். இங்கேயும் ரிசப்ஷனிஸ்ட் போஸ்ட்ங்கறதால வந்தேன்.
ஐ.ஸீ...
அவன் அவளுடைய சான்றிதழ்களைப் பார்த்தான். பின் திருப்தியுடன் அவளிடம் நீட்டினான்.
ஓ.கே.! உங்களை மாதிரி ஒரு அழகு தேவதை என் ஆபீஸ் வரவேற்பறையை அலங்கரிச்சா மங்களகரமாயிருக்கும்னு நினைக்கிறேன். மிஸ். மங்களா? உங்க பேர் கூட ரொம்ப மங்களகரமாயிருக்கு. நீங்க இப்பவே வேலையில ஜாயின் பண்ணலாம்.
நன்றி சார்! ரொம்ப நன்றி!
ஆங்கிலத்தில் சொன்னாள்.
வேலைக்கான உத்தரவை இப்பவே ரெடி பண்ணச் சொல்றேன்.
அவள் மறுபடியும் நன்றி கூறிவிட்டு எழுந்து கொண்டாள். கம்பீரமான அந்த அழகில் அவன் சற்றே அசைந்தான்.
**
மறுநாள் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது வரவேற்பறையில் இருந்த மங்களா குட்மார்னிங் சார்
என்றாள். ஒரு நிமிடம் நின்று குட்மார்னிங்
என்றவன் அவளைத் தலைமுதல் கால்வரை நோட்டமிட்டான்.
நேற்றே சொல்லணும்னு நினைச்சேன். வரவேற்பறையில் இருக்கறதால கொஞ்சம் மாடர்னா டிரஸ் பண்ணினா நல்லாயிருக்கும்னு. ஆனா... இப்ப தோணுது இந்த மங்களகரமான தோற்றமே சிறப்புன்னு
என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
அழகான பருத்திப் புடவை. காதில் ஆடும் ஜிமிக்கி. புருவங்களுக்கு இடையில் வட்டமாக சாந்துப் போட்டு. காலையில் அம்மா கூடச் சொன்னாள்.
இன்னைக்கு ரொம்ப அழகாயிருக்கேடி!
மென்மையாகச் சிரித்துக் கொண்டவள், தன் வேலையை கவனிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொலைபேசி ஒலித்தது.
மிஸ் மங்களா, ஒரு நிமிஷம் என் அறைக்கு வந்து விட்டுப் போங்கள்.
தொலைபேசியை வைத்துவிட்டு அவனுடைய அறைக்கு வந்து கதவை விரலால் தட்ட அவனுடைய குரல் உள்ளிருந்து அனுமதி கொடுத்ததும் உள்ளே வந்தாள்.
இருக்கையில் சாய்ந்த வண்ணம் அவளை ஒரு நிமிடம் ஏற இறங்கப் பார்த்தவன்,
ராஜி மோட்டார் கம்பெனியில நீங்க என்னவாயிருந்தீங்க மிஸ். மங்களா?
என்றான்.
ரிசப்ஷனிஸ்ட்டா.
அவன் இருக்கையை விட்டு எழுந்து மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டியவாறே அவளருகே வந்தான்.
பொய்!
திக்கென்ற அதிர்வு அவளிடம் உண்டானதை அவன் கவனித்தான். அவள் மௌனமாக நின்றாள்.
நீங்க அங்கே அந்தக் கம்பெனி முதலாளி கோசலை மைந்தனுக்கு செகரட்ரியா இருந்திருக்கீங்க. கிட்டத்தட்ட ரைட் ஹேண்ட். கம்பெனி பற்றிய எல்லாத் துறை சம்பந்தமான விவரங்களும் உங்களுக்கு அத்துப்படி. என்ன நான் சொல்றது சரியா?
அவனுடைய இதழ்களில் குறுநகை பரவியது.
அவள் எதுவும் பேசாமல் மௌனமாகவே நின்றிருந்தாள்.
ரெண்டாவது நீங்க மும்பைக்கு இதே கம்பெனியோட கிளைக்கு மாற்றலாகிப் போனதுன்னு சொன்னதும் பொய்!
இப்பொழுது அவள் மெல்ல நிமிர்ந்தாள்.
நீங்க போன வருஷமே அந்தக் கம்பெனியிலிருந்து விலகிட்டிங்க.
சார்...
நீங்க ஏன் பொய் சொன்னீங்கன்னு நான் கேட்க மாட்டேன். ஏன்னா காரணம் எனக்குத் தெரியும்.
கூடுதலான அதிர்வு அவள் முகத்தில் தெரிந்தது.
"என் கம்பெனிக்கு வேலைக்கு வர்ற ஒவ்வொருத்தரைப் பத்தியும் எனக்குத் தெரியணும். அவங்க கேரக்டர் எப்படி என்ன ஏதுன்னு? அதிலும் நீங்க என்னோட
போட்டி கம்பெனியில வேலை பார்த்திருக்கீங்க. அதனால அவசியம் தெரிஞ்சுக்கணும்னு முயற்சி செய்தேன். தெரிஞ்சுக்கிட்டேன்."
அவள் சலனமே இல்லாத ஒரு பார்வையை அவன் மீது செலுத்தினாள்.
கோசலை மைந்தன் பொம்பளை விஷயத்துல ஒரு மாதிரி. பணத்துக்காகவும், பதவி உயர்வுக்காகவும் சில பெண்கள் வலியப் போய் விழறதும் உண்டு. பர்சனல் செக்ரட்ரியான உங்ககிட்டேயும் அவர் அதே மாதிரி தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறார். அவரோட நோக்கம் தெரிஞ்ச நீங்க வேலையை விட்டு வந்திட்டீங்க, இல்லையா மிஸ். கண்ணகி ஸாரி மங்களா?
அவன் கிண்டலாகக் கேட்டாலும் அவனுடைய கண்கள் அவளை மதிப்பாக எடை போட்டன.
ஆமாம்
என்றாள் அமைதியாக.
ஏன் இதை என்கிட்டே சொல்லலை.
எதுக்குச் சொல்லணும்? அந்த மனுஷன் செய்த தப்பை பகிரங்கப்படுத்தவும் பழிவாங்கவும் நான் விரும்பலை. பணத்துக்காக யாரை வேணா பணிய வைக்கலாம்கறது அவரோட எண்ணம்னா எந்தச் சூழ்நிலையிலும் சுயமரியாதையை வீட்டுக் கொடுக்கக் கூடாதுங்கறது என்னோட எண்ணம். அதனாலதான் துஷ்டனைக் கண்டால் தூர விலகணும்னு விலகிட்டேன். தவிர வேலைக்கு வந்த இடத்துல இதையெல்லாம் எந்தப் பொண்ணும் பேச மாட்டா.
"வெரிகுட்! ஆனா செகரட்ரியா வேலை செய்துட்டு எதுக்காக ரிசப்ஷனிஸ்டுன்னு பொய் சொல்லணும்? ஒரு
வேளை இங்கேயும் செகரட்ரியா வேளை கொடுத்துட்டு கோசலை மைந்தன் மாதிரி நானும் நடந்துப்பேனான்னு பயமா?"
பயம்தான். ஆனா கோசலை மைந்தன் மாதிரி எல்லாரையும் எடை போடா முடியதில்லையா? இது வேற மாதிரி பயம்.
வேற மாதிரின்னா?
அவன் தன் கம்பீரமான புருவங்களை உயர்த்தினான்.
அவள் துணிச்சலான சிரிப்பொன்றை உதிர்த்தாள்.
நீங்களேதான் சொன்னீங்க. ராஜி மோட்டார் கம்பெனியோட எல்லாத் துறை சம்பந்தமான விஷயங்களும் எனக்கு அத்துப்படின்னு! அந்த பயம்தான். பர்சனல் செகரட்ரின்னு உங்ககிட்ட என்னை வெளிப்படுத்திக்கிட்டிருந்தா, ராஜி மோட்டார் கம்பெனியைத் தன்னோட போட்டிக் கம்பெனியா நினைக்கிற நீங்க என்கிட்டேயிருந்து அந்தக் கம்பெனி பற்றிய ரகசியங்களைக் கேட்க முயற்சிக்கலாம் இல்லையா? அதனால தான் ரிசப்ஷனிஸ்ட்னு சொன்னேன்.
ஓ...
அவன் ஆச்சரியமாகப் புருவங்களை உயர்த்தினான். பிறகு தோளைக் குலுக்கிக் கொண்டான்.
இப்போதான் எல்லா உண்மையும் தெரிஞ்சுட்டே! அதனால வேலையை விட்டுப் போகப் போறீங்களா?
எதுக்குப் போகணும்? நீங்க ஜென்டில் மேனா நடந்திப்பீங்கன்னு நினைக்கிறேன். இன்னொரு கம்பெனியோட ரகசியங்களைக் கிளற மாட்டிங்கன்னு நம்பறேன்.
கிளறினா?
சொல்ல மாட்டேன்.
உங்கக்கிட்ட தப்பா நடக்க முயற்சி செய்த அந்தக் கோசலை மைந்தனுக்கு இத்தனை விசுவாசம் தேவையா?
விசுவாசம் அவர் மேல இல்லை. கடவுள் மேல். மனசாட்சி மேல். சபலத்தால அவர் சறுக்கியிருக்கலாம். அதுக்காக அவரோட சாதனையிலேர்ந்து சறுக்கணும்னு நினைக்கிறது தப்பு.
வெரிகுட்! இன்னா செய்தாரை ஒறுத்து இத்தனை விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு வந்த மறுநாளே பிரமோஷன் தரப்போறேன். நீங்க இன்னையிலிருந்து என்னோட பர்சனல் செக்ரட்ரி.
சற்றே திகைத்தாலும் புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டாள்.
தாங்க்யூ சார்... தாங்க்யூ வெரி மச்!
2
‘எமகாதகனாக இருப்பான் போலிருக்கிறது. எதுவும் தெரியக்கூடாது என்று தானே அப்படிப் பொய் சொன்னேன். ஆனாலும் எப்படியோ கண்டு பிடித்து விட்டானே?’
வீட்டிற்குத் திரும்பும் போது இதையே யோசித்துக் கொண்டிருந்தாள் மங்களா.
"ச்சே... எங்கெங்கெல்லாம்