Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marakkumo Anbu Nenjam
Marakkumo Anbu Nenjam
Marakkumo Anbu Nenjam
Ebook129 pages31 minutes

Marakkumo Anbu Nenjam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதிரேசன் அவரின் மனைவி ராஜம் என்ற சுந்தரி. கதிரேசன் அம்மாவின் சூழ்ச்சியினால் சுந்தரி கதிரேசனை விட்டு பிரிந்துவிடுகிறாள். கதிரேசன் மகன் சக்திவேல் அப்பாவை வெறுக்க காரணம் என்ன? கதிரேசன் தனது மனைவியுடன் சேர்ந்தாரா? வாசித்து அறிவோம்.

Languageதமிழ்
Release dateJan 18, 2021
ISBN6580137807970
Marakkumo Anbu Nenjam

Read more from Parimala Rajendran

Related to Marakkumo Anbu Nenjam

Related ebooks

Reviews for Marakkumo Anbu Nenjam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marakkumo Anbu Nenjam - Parimala Rajendran

    https://www.pustaka.co.in

    மறக்குமோ அன்பு நெஞ்சம்

    Marakkumo Anbu Nenjam

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    அன்று அமாவாசை என்பதால் விடியற்காலையிலேயே எழுந்து, வீட்டை சுத்தம் பண்ணி, குளித்துவிட்டு வந்து சுவாமி விளக்கேற்றியுள்ளார் கதிரேசன்.

    மனைவி, குழந்தை, குடும்பம் என்று வாழ்ந்தவர் இன்று யாருமில்லாத தனிமையில் எழுபது வயதை கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    ஜீவன் இருக்கும் வரை வாழதானே வேண்டும்.

    விதி எழுதிய வழியில் வாழ்க்கை.

    காலமெல்லாம் உங்கள் கைபிடித்து துணைவருவேன் என்று சொன்ன லட்சுமி, இப்போது அருகில் இல்லை.

    மகன் சக்திவேலும், திருமணமான பின் சுத்தமாக அப்பாவை மறந்துவிட்டான். மருமகள் சுடர்விழியும், பேரன் சூர்யாவும்தான் அவருக்கு இருக்கும் ஆறுதல்.

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் சூர்யா வந்து தாத்தாவை பார்ப்பான். அதேபோல சுடர்விழியும், விசேஷமாக ஏதாவது சமையல் செய்யும் போது மாமனாருக்காக எடுத்து வந்து கொடுத்துவிட்டு போவாள்.

    ஆனால் சக்தி மட்டும் வரமாட்டான். எங்காவது பார்க்க நேர்ந்தாலும், பார்க்காதது போல போய்விடுவான்.

    அவர்கள் குடும்பம் சிதறி போனதற்கு காரணம் அவர்தான் என்று பிஞ்சு வயதிலேயே அவன் மனதில் பதிந்து போனதுதான்.

    இதற்கெல்லாம் காரணம் நானா... இல்லை... விதி... விதி என் வாழ்க்கையில் விளையாடிவிட்டது.

    வாசலில் சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும் சப்தம் எட்டி பார்க்க, பெருமாள் நின்று கொண்டிருந்தார்.

    என்ன கதிரேசா... போகலாமா. கிளம்பிட்டியா.

    புறப்பட வேண்டியது தான். இதோ ஒரு வாய் காபி குடிச்சுட்டு வரேன். உனக்கு வேணுமா...

    எனக்கு வேண்டாம். இப்ப தான் டிபன் சாப்பிட்டு வரேன். நீ சாப்புடலையா.

    இல்லை. இன்னைக்கு அமாவாசை இல்லையா... மதியம் தான் சாப்பாடு. இப்பதான் அப்பா, அம்மாவுக்கு பால், பழம் வச்சு சாமி கும்பிட்டேன்.

    என்னவோ போ. உன் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போட்டவங்க அவங்க தான். நீ இன்றும் அவங்களை மறக்காமல் இருக்கே.

    அவர் சொன்னதற்கு எந்த பதிலும் சொல்லாமல், கலந்து தயாராக வைத்திருந்த காபியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு பெருமாளுடன் வேலைக்கு புறப்படுகிறார் கதிரேசன்.

    ***

    ‘ஆதித்யா சாப்ட்வேர் சொலுசன்’ என்று பெயர் பொதிக்கப்பட்ட பத்து மாடி பிரம்மாண்டமான கட்டிடம். ஆயிரக்கணக்கானோர், கார்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் வந்து இறங்க,

    கதிரேசனும், பெருமாளும் தங்கள் உடைகளை மாற்றி, செக்ரியூட்டி யூனிபார்ம் அணிந்து, கார் பார்க்கிங்கில் வாகனங்களை சரிபார்த்து நிற்க வைக்க ஆரம்பித்தார்கள்.

    "போனவாரம் எங்க கம்பெனி மூடி, எல்லாருக்கும் வேலை போனதும், ரொம்பவே பயந்துட்டேன். ஏதோ புருஷனும், பெண்டாட்டியுமாக வர்ற வருமானத்தில் பொழுதை ஓட்டினோம். இனி என்ன செய்ய போறோம்னு தவிச்சுட்டேன்.

    அலமேலு தான் போய் கதிரேசன் அண்ணனை பாருங்க, அவர் வேலை செய்யற கம்பெனியில் சேர்ந்து விடுவாருன்னு சொன்னா...

    நல்லவேளை, நீ சிபாரிசு செய்ததும், எனக்கும் செக்ரீயூட்டி வேலை போட்டு தந்துட்டாங்க. என்ன பன்றது, இருக்கும் குறைகாலத்தை ஓட்டி ஆகணுமே..."

    "சரி, சரி நீ அந்த கேட்டில் வர்ற கார்களை பாரு.

    நான் டூவீலர் பார்க்கிங்கில் நிற்கிறேன்.

    கதிரேசன் சொல்ல, பெருமாள் நகர,

    வேகமாக வந்த ஸ்கூட்டி, அவர் மேல் மோதுவது போல, அவரருகில் ‘ப்ரேக்’ போட்டு நிற்க. பயந்து போகிறார்.

    ஏன்ம்மா, இப்படியா வருவே. பார்த்து வரக்கூடாது. இத்தனை நேரம் மோதியிருந்தா, என் நிலைமை என்ன ஆகிறது. வயசான காலத்தில் வலி தாங்க முடியுமா.

    உங்க மேலே தப்பை வச்சுட்டு, என்னை கேட்கறீங்க உங்க டூட்டியை ஒழுங்கா பாருங்க... வர்ற வண்டியை கவனிக்காமல் என்ன வேலை பார்க்கிறீங்க...

    பார்க்க சின்ன பெண்ணாகயிருக்கே. இவ்வளவு வாய் பேசற. தப்பும்மா... பெரியவங்ககிட்டே கொஞ்சம் மரியாதையாக பேசு.

    அப்படியென்ன மரியாதை குறைவாக பேசிட்டேன். வாடா, போடான்னு சொன்னேனா... இல்லை தள்ளி நில்லுடான்னு கோபப்பட்டேனா... அப்படியென்ன சொல்லிட்டேன். ஒழுங்கா வேலையை பாருங்கன்னு தானே சொன்னேன்.

    அவள் பட்படவென சரவெடி போல பொரிந்துதள்ள, பெருமாள், என்ன இந்த பெண் இப்படி சண்டைக்கு வருகிறாளே என்று அதிர்ந்து நிற்க, சிரித்தபடி அங்கு வருகிறார் கதிரேசன்.

    பார்த்தியா கதிரேசா, இந்த பொண்ணு, இந்த பேச்சு பேசுது. நீ சிரிச்சுட்டு இருக்கே.

    என்னம்மா, ஸ்வேதா, வழக்கம் போல உன் சேட்டையை ஆரம்பிச்சுட்டியா...

    அவளை பார்த்து கேட்க,

    "ஆமாம் தாத்தா உங்களை வம்பு இழுக்கலைன்னா எனக்கு பொழுது போகாதே. உங்களுக்குதான் வலை விரிச்சேன். உங்களை பயமுறுத்தனும்னு தான் அப்படி வேகமாக வந்தேன். நீங்க தான்னு நினைச்சேன். யாரு தாத்தா இது... நான் ஒரு வாரம் ப்ரொஜெக்ட்டுக்காக வெளியூர் போன சமயம், புது அப்பாயிண்ட்மெண்டா...

    சிரித்தபடி கேட்க,

    ஆமாம்மா... இவன் என் பால்ய சிநேகிதன் ஒரு கம்பெனியில் வேலை பார்த்தான். கம்பெனியை மூடிட்டாங்க. நம்ப வர்தா சாருக்குகிட்டே சொல்லி, இங்கே வேலையில் சேர்த்தேன்.

    கதிரேசா, இந்த பொன்னு யாருப்பா.

    பெருமாள் கேட்க,

    என்னை கேளுங்க தாத்தா, நான் சொல்றேன். நான் இந்த நிறுவனத்தில் சாப்ட்வேர் இஞ்சினியராக வேலை பார்க்கிறேன். என் பேர் ஸ்வேதா... கதிரேசன் தாத்தாவோட பெஸ்ட் ப்ரெண்டு.

    அப்படியா... என்னை மன்னிச்சுடும்மா தேவையில்லாமல் உன்கிட்டே கோபப்பட்டுட்டேன்.

    ஐயோ, தாத்தா, நீங்கெல்லாம் என்கிட்டே மன்னிப்பு கேட்டுகிட்டு... நான் தான் சும்மா விளையாட்டுக்கு அப்படி செய்தேன்.

    நீங்க தான் என்னை மன்னிக்கனும் இனிமேல் நீங்களும் என் ப்ரண்டுதான் சொன்னவள்.

    சரி தாத்தா, நான் உள்ளே போறேன். மதியம் ‘லஞ்ச்’ இரண்டு பேரும் என்னோடுதான் சாப்பிடுறீங்க. ஓகேவா...

    சொன்னவள், ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்தி பூட்டிவிட்டு போக,

    படிச்ச பொண்ணாகயிருந்தாலும், நம்பகிட்டே நல்லா பிரியமாக பழகுது... இல்லையா கதிரேசன்...

    ஆமாப்பா.. இங்கே இருக்கிறவங்க பாதிபேர் நம்மை மதிக்ககூட மாட்டாங்க. ஆனா... ஸ்வேதா அப்படியில்லை. பிரியமாக பேசும், விளையாட்டு குணம் ஜாஸ்தி. எனக்கு அவ பேத்தி மாதிரி... சரி, நீ போய் வேலையை பாரு.

    கதிரேசன் சொல்ல, பெருமாள் அந்த இடத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1