Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maname Azhagu
Maname Azhagu
Maname Azhagu
Ebook120 pages38 minutes

Maname Azhagu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகில் படைக்கப்படும் பெண்கள் எல்லோரும் ஊர்வசி மேனகை ரம்பைகளாக படைக்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ‘அழகு’தான் முக்கியம் என நினைப்பது முட்டாள்தனம். அன்பான மனமும் அறிவார்ந்த எண்ணமும் அவளை வாழ்க்கையில் நிச்சயம் தலைநிமிரச் செய்யும்.

அழகே பெரிதென நினைக்கும் கணவன் அமைந்ததால் கதையின் நாயகி அனுபவிக்கும் இன்னல்கள்... அதிலிருந்து அவள் மீண்டாளா என்பதை விவரிக்கும் நாவல்தான் ‘மனமே அழகு’ குடும்ப நாவலாக எழுதப்பட்ட இக்கதை வாசகர்கள் உள்ளங்களை கவரும் என மனமார நம்புகிறேன்.

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580137806156
Maname Azhagu

Read more from Parimala Rajendran

Related to Maname Azhagu

Related ebooks

Reviews for Maname Azhagu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maname Azhagu - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    மனமே அழகு!

    Maname Azhagu!

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    முன்னுரை

    இறைவன் நம்மை படைக்கும் போதே நம்மிடம் கேட்டு, தாயையும், தந்தையையும், நிறத்தையும், அழகையும் படைப்பதில்லை. புற அழகு ஏதுமில்லாத சில பெண்களின் அக அழகு அந்த குறைபாட்டை போக்கி விடும். நல்ல குணம், இனிய உரையாடல், உயர்ந்த பண்பு, பிறருக்கு உதவும் சுபாவம், விருந்தோம்பல் ஆகிய அழகிற்கு புறஅழகு ஈடாகாது.

    அன்னை தெரசாவின் அழகு அவரது கருணை, அன்பு, தொண்டு உள்ளம்தான். இந்திராவின் அழகு அவருடைய தைரியம், நாட்டை ஆண்ட விதம், நெருக்கடி காலங்களில் அவர் எடுத்த முடிவுகள். ஜெயலலிதாவின் நேர்கொண்ட பார்வை. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரல், பத்மா சுப்ரமணியத்தின் நடனம் என ஒவ்வொரு சாதனையாளர்களையும் நினைக்கும் போது அவர்களின் புற அழகு தெரிவதில்லை. மாறாக அவர்களின் திறமையே நமக்கு அழகாக தெரியும். அழகு என்பது பார்ப்பவர் கண்களில் தான் உள்ளது.

    புற அழகு பெண்ணிந்த முக்கியமில்லை, அக அழகே முக்கியமான ஒன்று என்பதை இக்கதையில் வரும் கதைநாயகி மூலம் நமக்கு எடுத்து கூறும் நாவலாசிரியர் ஒருவர் கண்ணுக்கு அசிங்கமாக தெரியும் பெண் மற்றவர்களின் கண்ணிற்கு எவ்வளவு அழகாக தெரிகிறாள் என்பதை மிகவும் அற்புத படைப்பாக நமக்கு வழங்கியுள்ளார்.

    *****

    1

    முகத்தை அலம்பி சின்னதாக பொட்டு வைத்தவள், சுவாமி விளக்கை ஏற்றினாள்.

    பெருமாளே... இன்னைக்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்கணும்...

    மனம் வேண்டியது.

    தொட்டிலில் தூங்கும் மோனிகா... எழுந்து விட்டதை உணர்த்த லேசாக சிணுங்க ஆரம்பித்தாள். இந்த வைகாசி வந்தால் இரண்டு வயது பூர்த்தியாகிவிட்டது.

    என்னடா செல்லம்... எழுத்தாச்சா தொட்டிலிலிருந்து குழந்தையை தூக்கி முத்தமிட்டாள் ரேணுகா.

    உன் மகள் உன்னை மாதிரி இல்லாமல் அவங்க அப்பாவை போல சிவந்த நிறத்தில் மூக்கும் முழியுமாக சர்வ லட்சணமாக இருக்கா... எதிர் வீட்டு மாமி சொன்னது ஞாபகம் வர, கண்ணாடியில் ஒரு முறை தன் முகத்தை பார்த்தாள். பழுப்பு நிறம், மேல் நோக்கிய மேடிட்ட நெற்றி, அகன்ற முகத்திற்கு சிறிதும் பொருந்தாமல் சிறிய கண்கள், சற்று நீளமான மூக்கும், பெரிய உதடுகளுமாக... நிச்சயமாக அவள் அழகானவள் இல்லை என்பதை அப்பட்டமாக அறிவித்தது.

    காலிங்பெல் அடிக்கும் சப்தம், கணவன் வந்துவிட்டான்... குழந்தையை இடுப்பில் வைத்தபடி வேகமாக சென்று கதவை திறந்தாள்.

    கதவை திறக்க இவ்வளவு நேரமா...

    அவனை பார்த்து சிரிக்கும் குழந்தையை பொருட்படுத்தாமல் வேகமாக உள்ளே வந்தான். நண்பனின் கல்யாண ரிஷப்ஷனில் கலந்துக் கொண்டு வந்திருக்கிறான் ராகுல்.

    ரிஷப்ஷன் நல்லபடியாக நடந்துச்சா... டின்னர் எப்படி இருந்துச்சு... நல்லா சாப்பிட்டீங்களா... தோசை மாவு இருக்கு. கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடறீங்களா...

    ஆமாம்... இப்ப சாப்பாடு தான் முக்கியம், நகரு...

    சோபாவில் உட்காருகிறான். பிரச்சனை ஆரம்பமாக போகிறது... மனம் சொல்ல அவனையே பார்க்கிறாள்.

    இப்படியொரு ஏமாளியாக நான் இருந்திருக்க கூடாது. சை... காலம் முழுக்க இப்படி பொருமியே சாகணும்னு அந்த கடவுள் என் தலையில் எழுதி வச்சுட்டான்

    என்னாச்சுங்க...

    என்ன ஆகணும், உன்னை கட்டிக்கிட்டேனே அதோட விளைவு இப்படி புலம்பறேன்.

    சிவாவோட மனைவி எப்படி இருக்கா தெரியுமா... அந்த அலங்காரத்துக்கும், மேடையில் இருந்த விளக்கொளிக்கும், அப்படியே தேவதை மாதிரி ஜொலிச்சா... கொடுத்து வச்சவன். அழகு மனைவியோடு காலமெல்லாம் சந்தோஷமாக வலம் வருவான். என்னை மாதிரியா... ஒரு இடத்துக்கு சேர்ந்து போக முடியுதா... மௌனமாக இருந்தாள் ரேணுகா.

    போன மாசம் கிராமத்துக்கு போயிருந்தப்ப விசாலம்பாட்டி சொன்னதை நீயும் தானே கேட்டே...

    ராகுல் உன் அழகுக்கும் கம்பீரத்துக்கும் பொருத்தமே இல்லாமல் உனக்கு மனைவி அமைஞ்சுட்டா... என் பேத்தி விஜி அப்படியே சிவந்த நிறத்தில் அம்சமாக இருப்பா... உனக்கு பேசி முடிக்கலாம்னு சொன்னேன். உன் சித்தப்பா கேட்டானா... ராகுலுக்கு தோஷம் ஜாதகம் பொருந்தாதுன்னு சொல்லிட்டான். அந்த காலத்து மனுஷி. நானே ஜாதகத்தை பெரிசாச எடுத்துக்கலை... என்னமோ கதையை சொல்லி, தூரத்து சொந்தமான விலை போகாத ரேணுவை உன் தலையில் கட்டிட்டான். தாய், தகப்பன் இல்லாத நீ, வளர்த்த கடமைக்கு அவன் சொன்னதை கேட்டு தாலி கட்டிட்டே... என்னமோ போ... இது தான் உன் தலையெழுத்து, நான் என்னத்தை சொல்றது...

    நீட்டி முழக்கி விசாலம் பாட்டி பேசியது ரேணுகாவிற்கு ஞாபகம் வந்தது.

    சரிங்க... அதனால் என்னாச்சு. நான் அழகில் குறைந்தவளாக இருந்தாலும், உங்க மேல் வச்சிருக்கிற அன்பு குறையாமல், சந்தோஷமாக தானே குடும்பம் நடத்தறேன். இங்கே பாருங்க, உங்களை அப்படியே உரிச்சு வச்சு, லட்டு போல மகள் பிறந்திருக்கா... அப்புறம் என்னங்க... அவனை சமாதானப்படுத்துவது போல ரேணுகா பேச...

    போதும், உன்னை பத்தி நீயே பெருமைபட்டுக்காதே... எனக்கு தலைவலிக்குது... போய் சூடா ஒரு டம்ளர் காபி கொண்டு வா... எரிச்சலுடன் சொல்கிறான் ராகுல்.

    குழாயடியில் போய் தண்ணீர் பிடித்து குடத்தில் நிரப்பி, இடுப்பில் தூக்கி கொண்டு வீடு வந்த ரேணுவை... எதிர்கொண்டு போன பார்வதி,

    ரேணு. நமக்கு நல்ல நேரம் வந்துடுச்சுடுடி, சதாசிவம் மாமா வந்து சம்பந்தம் பேசிட்டு போனாரு. உனக்கு கல்யாணம் வரப் போகுது. கிராமத்தில் வளர்ந்த நீ, பட்டணத்தில் வாழ்க்கைபட போற...

    என்னம்மா சொல்ற...

    ஆமாம் ரேணு, சதாசிவத்தின் வளர்ப்பு பிள்ளை ராகுல், அவனுக்கு தான் உன்னை கல்யாணம் பண்ண பேசியிருக்கோம். ஐ.டி கம்பெனியில் வேலை. கை நிறைய சம்பளம். நீ ரொம்ப கொடுத்து வச்சவள் ரேணு.

    நம்ப முடியாமல் அம்மாவை பார்த்தபடி, குடத்தை வீட்டினுள் வைக்கிறாள். ஆறுமாதம் முன் உறவினர் வீட்டு திருமணத்தில் பார்த்த ராகுலின் முகம் நினைவுக்கு வருகிறது. சினிமா நடிகர்

    Enjoying the preview?
    Page 1 of 1