Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Raagam Thedum Pallavi
Raagam Thedum Pallavi
Raagam Thedum Pallavi
Ebook121 pages28 minutes

Raagam Thedum Pallavi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுபத்ரா, திசை மாறிப்போன தன் பெற்றோர்களால் அன்பு, பாசம், பாதுகாப்பு தேடி அலைகிறாள். தாய், தந்தை இல்லாமல் வாழும் அவள் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்ததா? அவள் தேடிய ராகம் கிடைத்ததா? வாங்க வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateOct 15, 2022
ISBN6580137809101
Raagam Thedum Pallavi

Read more from Parimala Rajendran

Related to Raagam Thedum Pallavi

Related ebooks

Reviews for Raagam Thedum Pallavi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Raagam Thedum Pallavi - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    ராகம் தேடும் பல்லவி

    Raagam Thedum Pallavi

    Author :

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    சத்ய தெய்வம் நீயே சரணம் நாராயணா.

    நித்ய மங்களம் நீயே சரணம் நாராயணா...

    பாடல் ஒலிக்க, கண்களில் கண்ணீர் வழிந்தோட கைகூப்பி பெருமாள் படத்தின் முன் அமர்ந்திருந்தாள் சுபத்ரா.

    அது வொர்கிங் வுமன்ஸ் ஹாஸ்டல்... இரண்டாவது மாடி வாரந்தாவின் கைபிடி சுவரில் சாய்ந்தபடி நந்தினி நின்றிருக்க, அங்கு வந்தாள் மேகா.

    என்ன நந்தினி, உன் ரூம் மேட் சுபத்ரா வழக்கம் போல சாமி கும்பிட ஆரம்பிச்சுட்டாளா. மணி ஆறாச்சே...

    கிண்டலாக சிரித்தபடி கேட்க,

    உன்னை மாதிரி, என்னை மாதிரி. எப்ப பார்த்தாலும் யூட்யூப், பேஸ்புக்னு இல்லாமல், இந்த இருபத்தி நாலு வயசில் பக்தி சிரத்தையோடு சாமி கும்பிடராளே அதை நீ மதிக்கலைன்னாலும், இப்படி கிண்டலாக பேசாதே.

    சற்று எரிச்சலுடன் சொன்னாள் நந்தினி.

    அப்பப்பா... உங்களுக்குள் அப்படி என்ன பந்தமோ அவளை சென்னால் உனக்கு அப்படி கோபம் வருது.

    சரி, நான் ஷாப்பிங் கிளம்பியிருக்கேன். போய்ட்டு வரேன்

    ‘கேட்’ அருகில் அவளுடைய பாய் ப்ரென்ட் காத்திருப்பான் என்பது தெரிந்தவளாய், தலையாட்டுகிறாள் நந்தினி.

    கதவை திறந்து வெளியே வருகிறாள் சுபத்ரா.

    கைகளை முன்புறம் கட்டியபடி சிநேகிதியை பார்க்கிறாள்.

    சுண்டினால் ரத்தம் வரும் என்று சொல்வார்களே. அப்படியொரு ரோசாப்பூ நிறம். நீண்ட விழிகள், வளைந்த புருவங்களுக்கு மத்தியில் சிறு புள்ளியாய் ஸ்டிக்கர் பொட்டு.

    அளவான மூக்கு... குவிந்த உதடுகள். குறை சொல்ல முடியாத முக அமைப்பு. ஐந்தடி இரண்டு அங்குல உயரத்திற்கேற்ற கச்சிதமான உடலமைப்பு.

    அழகி போட்டியில் கலந்து கொள்ள தகுதியானவள்தான்.

    என்ன நந்தினி. என்னமோ இன்னைக்குதான் என்னை புதுசா பார்க்கிற மாதிரி அப்படி பார்க்கிறே...

    வென்பற்கள் தெரிய சிரிக்கிறாள்.

    நான் ஒன்று சொல்லட்டுமா சுபா. நான் மட்டும் ஆம்பிளையாக பிறந்திருந்தால் உன்னை காதலித்து... கல்யாணம் பண்ணியிருப்பேன். அந்த வாய்ப்பை விக்ரமிற்கு தந்திருக்கமாட்டேன்.

    சிரிப்போடு சொல்ல,

    ஏய் என்ன ஓவராக பேசுற... உன்னை பத்தி சொன்னே ஓ.கே. ஏன் தேவையில்லாமல் விக்ரமை இழுக்கிற... அவர் எவ்வளவு கன்னியமான மனிதர் தெரியுமா. இரண்டு பேரும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் நட்பாக பழகறாரு அவ்வளவுதான்.

    சரி இருக்கட்டும் எவ்வளவு நாளைக்கு இந்த நாடகம்னு பார்க்கிறேன். ஒருவரையொருவர் விரும்பிறீங்கன்னு பார்க்கிற எங்களுக்கே தெரியுது. உங்க இரண்டு பேர் மனசுக்கும் தெரியாதா.

    ஒருநாள் நீயே என் கழுத்தை கட்டி புடிச்சிக்கிட்டு...

    நந்தினி... விக்ரம் என்னை காதலிக்கிறாரு... கல்யாணம் பண்ணிக்கலாமேன்னு கேட்கிறாருன்னு... முகம் சிவக்க சொல்லதான் பேசறே...

    அப்படியா... அப்ப பார்ப்போம்...

    அதற்குள் சுபத்ராவின் கையில் இருந்த செல்போன், சினுங்குகிறது.

    யாரு சுபா...

    அப்பா...

    ஆன் செய்கிறாள்.

    செல்லுங்கப்பா. நல்லாயிருக்கிங்களா...

    நான் நல்லா இருக்கேன்மா. நீ எப்படி இருக்கே. வேலையெல்லாம் எப்படி போகுது.

    ஒண்ணும் பிரச்சனையில்லப்பா... நல்லா போயிட்டிருக்கு நான் வேலைக்கு சேர்ந்தே ஆறுமாசத்துக்கு மேலாச்சே...

    இருக்கட்டும்மா. உள்ளூரில் வீட்டை வச்சுக்கிட்டு, பிடிவாதமா ஹாஸ்டலில் இருக்கே... என்றால் எதுவும் சொல்ல முடியலைமா...

    வேண்டாப்பா. வேற ஏதாவது பேசலாம்...

    சரிம்மா. நாளைக்கு சித்தி சிக்கன் பிரியாணி செய்ய போறதாக சொன்னா. சண்டே ப்ரீயாக தானே இருப்பே. வீட்டுக்கு வாயேன். குனா, ராகேஷீம் வீட்டில் இருப்பாங்க... உன் தம்பிகளையும் பார்த்த மாதிரி இருக்கும்.

    இல்லப்பா - இன்னொரு நாள் வரேன். வேற வேலை இருக்கு.

    சரிம்மா உன் இஷ்டம். உடம்பை பார்த்துக்க.

    போனை ‘கட்’ செய்தவளின் முகத்தை பார்க்கிறாள் நந்தினி.

    இவ்வளவு நேரம் உதடுகளில் இடம் பெற்றிருந்த சிரிப்பு விடைபெற்றிருந்தது.

    யாரு... உங்கப்பா. டாக்டர். மோகனா...

    ஆமாம்...

    என்னவாம்...

    அதான் கேட்டியே... வீட்டுக்கு நாளைக்கு சாப்பிடவரச்சொல்றாரு...

    நீ தேவையில்லாமல் போக போறதில்லை. எதுக்கு இப்படி கூப்பிட்டு, உன்னை சங்கடப்படுத்தறாங்க... சரி விடு... பக்கத்தில் இருக்கிற பார்க்கிற்கு போய்ட்டு வருவோமா...

    அதற்குள் திரும்பவும் போன் சிணுங்க...

    இப்ப யாரு...

    சிவா டாடி…

    சரிசரி எடுத்து பேசு...

    எப்படிம்மா இருக்கே...

    நல்லா இருக்கேன் டாடி...

    உங்கம்மா, தங்கச்சிகளெல்லாம் எப்படி இருக்காங்கன்னு கேட்கமாட்டியா?

    சரி சொல்லுங்க எப்படி இருக்காங்க...

    எல்லாரும் நல்லா இருக்காங்க... உங்கம்மாவுக்கு இரண்டு நாளாக உன் ஞாபகமாக இருக்காம். நாளைக்கு சண்டே அவசியம் நீ வீட்டுக்கு வரணுமாம்...

    அதுமட்டுமில்லை சுபா. எனக்கும் உன்னை பார்த்து நாளாச்சு... வர்றியாம்மா...

    இல்லடாடி. இந்த வாரம் வரமுடியாது. நெக்ஸ்ட் வீக். பார்க்கிறேன். வெளியே கிளம்பிட்டிருக்கேன் வச்சுடட்டுமா.

    கஷ்டமாக இருக்கு சுபத்ரா. உன் நிலைமை யாருக்கும் வரக்கூடாது. அப்பா, அம்மா இரண்டு பேர் இருந்தும், நீ யாருமில்லாமல் தனிமையில் வாழறே.

    இதுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும் நந்தினி.

    ஒரு அப்பா, அம்மா... இல்லையே... வித்தியாசமாக இரண்டு அப்பா, அம்மா இல்லையா எனக்கு அமைஞ்சிருக்காங்க... மனசு வலிக்குது நந்தினி.

    அவள் குரல் கம்முகிறது.

    சரிவிடு சுபத்ரா. வா. நாம் இரண்டு பேரும் பக்கத்தில் இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு போய்ட்டு வருவோம்.

    சிநேகிதியின் மனநிலை புரிந்து அவளை அழைத்துக்கொண்டு கிளம்புகிறாள்.

    …...

    மோகன் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி கொண்டிருக்க அங்கு வருகிறாள் மாலினி.

    கண்ணாடி முன் நின்று தலைசீவிக் கொண்டிருந்த கணவனை பார்த்தவள்,

    "முடிக்கு, மீசைக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1