Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhayam Malarkirathu!
Idhayam Malarkirathu!
Idhayam Malarkirathu!
Ebook119 pages51 minutes

Idhayam Malarkirathu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விட்டுக்கொடுத்து, அன்பாகவும், பொறுமையாகவும் வாழும் சுகன்யா. அவள் அன்பை புரிந்து அவள் மாமியார் மனம் மாறினாரா? உறவுகளை மதித்து வாழத் தெரியாத திவ்யாவுக்கும், உறவுதான் முக்கியம் என்று வாழும் பிரபாவுக்கும் இடையில் திருமணத்திற்கு பிறகு நடந்த பிரச்னைகள் என்ன? நம்மை சுற்றியிருக்கிற நம் உறவுகளை புரிந்துகொள்ள மலர்ந்த இதயத்துடன் வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateOct 1, 2022
ISBN6580137809100
Idhayam Malarkirathu!

Read more from Parimala Rajendran

Related to Idhayam Malarkirathu!

Related ebooks

Reviews for Idhayam Malarkirathu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhayam Malarkirathu! - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    இதயம் மலர்கிறது!

    Idhayam Malarkirathu!

    Author :

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கருகாவூர் கோவில். குழந்தை பாக்கியத்திற்கென்றே பிரசித்தி பெற்ற கோவில். முல்லைவனநாதரும், கர்ப்பரட்சாம்பிகையும் அருள்பாலிக்கும் ஸ்தலம். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.

    பரந்தாமனும், ராஜேஸ்வரியும் தங்கள் இரு மகள்கள் சுகன்யா, திவ்யாவுடன் டிராவல்ஸ் காரில் வந்து இறங்கினார்கள்.

    என்னப்பா... இவ்வளவு கூட்டம் இருக்கு.

    ஆமாம்மா, நம்ம கவலைகளுக்கெல்லாம் தீர்வு இருக்கோ, இல்லையோ தெரியாது. இருந்தாலும் இங்கே வந்து கொட்டி தீர்த்துட்டா மனசுக்கு ஏதோ ஒரு வகையில் நிம்மதி கிடைக்கத்தான் செய்யுது. அதான் மக்கள் பல்வேறு பிரார்த்தனைகளுடன் கோவிலுக்கு வந்துடறாங்க.

    ராஜி அர்ச்சனை சாமான்கள் உள்ள கூடையை மட்டும் எடுத்துக்க மனைவியிடம் சொல்கிறார்.

    திவ்யா இறங்கி சுற்றுமுற்றிலும் வேடிக்கை பார்க்க, பெரியவள் சுகன்யா, அம்மாவுடன் கோவிலுக்கு வாங்கிய அர்ச்சனை பொருட்களுடன் இறங்குகிறாள்.

    அப்பா கிராமத்துக்கே ஒரு தனி அழகு இருக்குப்பா. கோவிலுக்கு எதிரே குளம் அமைதியான சூழல்.

    அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "கோவிலுக்கு பூமாலை, அர்ச்சனை சாமான் இருக்கு... வாங்கிட்டு போங்க... குழந்தைக்காக வேண்டுதல்னா... கோவிலில் படி மெழுகி கோலம் போடச் சொல்வாங்க. உங்க பிரார்த்தனையை அம்பிகை நிச்சயம் நிறைவேற்றுவா...

    அப்புறம் கோவிலில் நெய் தருவாங்க. அதை கணவன் மனைவி இரண்டு பேரும் ஒரு மண்டலம் சாப்பிடணும்."

    கடை வைத்திருப்பவள், வியாபாரத்திற்காக பேச,

    அர்ச்சனை சாமான்கள் கொண்டு வந்திட்டோம்மா - பரந்தாமன் சொல்ல,

    அப்பா, அவங்ககிட்டே மாலை மட்டும் வாங்குவோம் சுகன்யா சொன்னதும்.

    வா தாயி... ரோஜாப்பூ மாலை இருக்கு தரேன். என்ன குழந்தைக்காக வேண்டுதலா...

    ஆமாங்க... மாலை கொடுங்க.

    அவள் கடைக்கு போய் மாலை வாங்கிக்கொண்டு வர, நல்ல படியா போய் அம்மனை கும்பிடு... அடுத்த வருஷமே குழந்தையோடு வருவே.

    உங்க வாக்கு பலிக்கட்டும்.

    ஏய் சுகி, நீ என்ன லூசா... அந்தம்மாகிட்டே போய் விபரமா சொல்லிட்டு இருக்கே...

    திவ்யா அக்காவை கடிந்துகொள்ள,

    நல்ல மனசோடு சொல்றாங்க... அவங்க வாக்கு பலிக்கட்டுமே...

    ஆமாம்... எல்லாம் வியாபாரத்திற்காக ஏதாவது சொல்வாங்க.

    திவ்யா... பெரியவங்களை முதலில் மதிக்க கத்துக்க. வா போகலாம்.

    ராஜி மகளை அதட்ட,

    ஆமாம் என்னை அடக்கப்பாரு... உன் சம்பந்தி அதான் சுகியின் மாமியார் முன்னால... நாலு வார்த்தை பேச கூட யோசிப்பே... உன்னை மாதிரியெல்லாம் என்னால இருக்க முடியாது

    திவ்யா... என்னம்மா... இது கோவில். உன் அக்காவுக்கு கல்யாணமாகி மூணு வருஷமாகுது. குழந்தை பாக்கியம் வேண்டி, பிரார்த்தனை பண்ண வந்திருக்கோம். அதை நிறைவேற்றுவோம். அம்மாவோடு வாக்குவாதம் பண்ணிட்டிருக்கே. வா. கோவிலுக்கு போகலாம்.

    மகளை அழைத்துக்கொண்டு பரந்தாமன் முன்னால் நடக்க,

    ராஜியும், சுகன்யாவும் அவர்களை பின் தொடர்கிறார்கள்.

    2

    பரந்தாமன் கவர்மெண்ட் ஸ்கூலில் டீச்சராக இருந்து ரிடையர்ட் ஆனவர்.

    இரண்டு பெண்கள்... பெரியவள் படிப்பு முடிந்ததும்...

    ரிடையர்ட் ஆன பின் வந்த பிராவிடண்ட் பணத்தில், இருக்கும் நகைகளை வைத்து, நல்லபடியாக திருமணத்தை முடித்தார்.

    மாப்பிள்ளை ஸ்ரீகாந்த் காலேஜ் லெக்சரர். அவர்கள் தகுதிக்கு ஏற்ற குடும்பம்.

    மாமனார், மாமியார், திருமணத்திற்கு காத்திருக்கும் ஒரு தங்கை... கூட்டுக்குடும்பமாக சேலத்தில் சுகன்யா இருக்கிறாள்.

    மாப்பிள்ளை சுகன்யாவை நல்ல முறையில் பார்த்துக் கொண்டாலும், மாமியார் மூலம், சிறுசிறு பிரச்சனைகள் சுகன்யாவுக்கு ஏற்படத்தான் செய்தது. அதையெல்லாம் சமாளித்து புகுந்த வீட்டில் நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

    திவ்யாவும் நான்கு மாதம் முன்தான் டிகிரி முடித்தாள். அவள் கல்யாணத்திற்கும் ஓரளவு நகைகள், பணம் என சேமித்து வைத்திருக்கிறார். நல்ல மாப்பிள்ளையாக அமைந்தால் அவள் கல்யாணத்தையும் முடிக்க வேண்டும்.

    இதற்கிடையில் திருமணமாகி மூன்று வருடம் முடியப் போகிறது. இன்னும் குழந்தை தரிக்கவில்லை என்பதை சுகன்யாவின் மாமியார் குறையாக பேச ஆரம்பித்தாள்.

    "சம்பந்தி. எங்க குடும்பத்தில் கல்யாணமான மறு வருஷமே குழந்தை பிறந்துடும். சுகன்யா விஷயத்தில் தள்ளிப்போகுது. இனியும் இப்படியே கடவுள் கொடுப்பார்ன்னு காத்திருக்க முடியாது.

    இப்பதான் மருத்துவ வசதி நிறைய வந்தாச்சே... கருத்தரிப்பு மையம்னு... செலவுதான் லட்சக்கணக்கில் ஆகும்னு சொல்றாங்க. என்ன பண்றது. அதையும் முயற்சி பண்ணி குழந்தை பிறக்க வழி இருக்கான்னு பாருங்க."

    "ஐயோ... என்னங்க இது லட்சக்கணக்கில் செலவு பண்ண நாம எங்கே வச்சுருக்கோம். திவ்யா கல்யாண செலவுக்கே நம்முடைய சேமிப்பு போதுமான்னு தெரியலை.

    கடவுள் ஏன் நம்மை இப்படி சோதனை பண்றாருன்னு தெரியலையே.

    மூணு வருஷம் தானே ஆகுது. சம்பந்தியம்மா ஏன் அவசரம் படறாங்க."

    "நாம எதுவும் பேச முடியாது ராஜி. அப்படி ஒரு நேரம் வந்தால் செலவு பண்ணிதான் ஆகணும்.

    திருக்கருகாவூர் கோவிலுக்கு போய் வேண்டுதல் வைக்கலாம்னு சொன்னியே.

    போய்ட்டு வருவோம். கடவுள் கண் திறக்குதான்னு பார்ப்போம். மூணுமாசபொழுது ஓடட்டும். எப்படியாவது பணம் ஏற்பாடு பண்ணி ட்ரீட்மெண்ட் ஆரம்பிப்போம்."

    சேலத்திலிருந்து சுகன்யாவை திருச்சிக்கு வரவழைத்து கோவிலுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

    ***

    கோவிலுக்குள் வந்தவர்கள் முல்லைவனநாதரை தரிசனம் செய்யப்போக, அப்போதுதான் ஞாபகம் வந்தவளாய்,

    "என்னங்க, கோபுரத்தை பார்த்து கும்பிட்டு, ஏதோ ஞாபகத்தில் அர்ச்சனை சீட்டு, வேண்டுதலுக்கு நெய் வாங்காமல் வந்துட்டோம். அதோ அங்கே ஆபீஸ் கவுண்டரில் வாங்கணும், போய் வாங்கிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1