Vidiyal Paravaigal
By GA Prabha
5/5
()
About this ebook
Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Read more from Ga Prabha
En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsUravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsAasai Veedu Rating: 5 out of 5 stars5/5Manasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5Peiyena Peiyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsManathin Arathanai Rating: 5 out of 5 stars5/5En Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vidiyal Paravaigal
Related ebooks
Sangamam Rating: 0 out of 5 stars0 ratingsPongalo Pongal Rating: 0 out of 5 stars0 ratingsPushpa Rating: 5 out of 5 stars5/5Idhayam Malarkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsGnanakulam Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Punnagaikkiral Rating: 5 out of 5 stars5/5Andhi Nerathu Udhayam Rating: 0 out of 5 stars0 ratingsNyabagangal Thee Mootum Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Pagal Pol Nilavu... Rating: 0 out of 5 stars0 ratingsPerithinum Perithu Kel Rating: 5 out of 5 stars5/5Kangal Sollum Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsUravukkendru Virintha Ullam Rating: 1 out of 5 stars1/5Theervu Rating: 5 out of 5 stars5/5Oru Koppai Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Puthu Raagam Part - 1 Rating: 5 out of 5 stars5/5Pathu Maatha Bandham Rating: 0 out of 5 stars0 ratingsVinakkalum Kanakkalum Rating: 0 out of 5 stars0 ratingsPoo Magal Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsJeippathu Neeya? Naana? Rating: 5 out of 5 stars5/5Sorgathiley Idhu Mudivaanathu Rating: 5 out of 5 stars5/5Thean Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKolai Kolaiya Mandhira Akka! Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsPhoenix Devathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAanukkum Undu Ingey Agni Paritchai!! Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Paartha Pinbu Naan... Rating: 0 out of 5 stars0 ratingsKannethiril Thondrum Kanavu! Rating: 0 out of 5 stars0 ratingsPenn Vannam Kandean Rating: 0 out of 5 stars0 ratingsJanakiyin Dairy Kurippugal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vidiyal Paravaigal
1 rating0 reviews
Book preview
Vidiyal Paravaigal - GA Prabha
http://www.pustaka.co.in
விடியல் பறவைகள்
Vidiyal Paravaigal
Author:
ஜி.ஏ.பிரபா
G.A.Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
நல்ல எண்ணங்களும் செயல்களுமே
நமக்கு நல்லதைக் கொண்டு வரும்.
விழிக்கும் போது சந்தோஷமாக இருந்தது.
சந்தோஷம்தான் விழிப்பைத் தந்தது.சின்ன பூத்தூவலாய் மனதுக்குள் விழுந்து சந்தோஷம் அதிகாலை உறக்கத்திலிருந்து விழிக்க வைத்து விட்டது.
சில நாள் தான் இப்படி சந்தோஷமும், விழிப்பும் சேர்ந்து விடுகிறது.சின்ன மணைச்சப்தமாய் அது மனதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும்.
ஜன்னலுக்கு வெளியே பறவைகள் தங்கள் இன்னிசை கச்சேரியை ஆரம்பித்திருந்தன. கீச், கீச் என்ற அதன் குரல் மனக் களைப்பை அதிகப்படுத்தியது.
மனிதர்கள் இந்த விடியல் பறவைகள் போல் இருக்க வேண்டும்.மகிழ்ச்சியும், ஆனந்தமும் கொண்டு வரும் பறவைகள் போல் பரந்தாமன் சின்னப் புன்னகை மலரப்படுத்திருந்தார்.அடர்த்தியான திரைச் சீலைகளைத் தாண்டி, தெரு விளக்கின் ஒளி செந்நிறமாய் உள்ளே பரவியிருந்தது.எலக்ட்ரிக் விநாயகர் கண் சிட்டிச், சிமீட்டிச் சிரித்தார்.சுக்லாம்பரதம் விஷ்ணும், சசிவர்ணம் சதுர்புஜம் என்று பாட ஆரம்பித்து, அலாமரமாய் பாட ஆரம்பிக்கும்.
பரந்தாமன் எழுந்து கைகளை பரபரவென்று தேய்த்து நடு விரலைப் பார்த்து தியானித்தார்.
"ஏம் தத்புருஷனாய வித்மஹே வக்ரதுண்டாய
தீமஹி தன்னோதந்தி பிரச்சோதயாத்."
கணபதி காயத்ரி சொல்லி மனதை ஒருமுகப்படுத்தினார்.
மூச்சை ஆழமாக இழுத்துவிட்டார்.ஈரக் காற்று உள்ளே நுழைந்தது.ஒவ்வொரு முறையும் மூச்சுக் காற்று குளிராய் நுரையீரல் முழுதும் குளுமையாக பரவியது.
மூச்சுப்பயிற்சி செய்தபின் புத்துணர்ச்சியாக இருந்தது.
குட்மார்னிங்
-அருகில் போர்வை அசைந்தது.பத்மாவின் தலைமட்டும் எட்டிப்பார்த்தது.இயல்பாய் அவளைப் பார்த்ததும் எழும் பரவசம், ஆனந்தம் இப்போதும்.
அட முழிச்சிட்டியா?
பரந்தாமன் திரும்பி முகத்தருகே குனிந்தார்.அவர் கழுத்தை கட்டிக் கொண்டாள் பத்மா.
தொடரும் ஏழ் பிறப்பும்
நான் வருவேன் கூட
உயிரே உன் மடிதான் நான் கேட்பது"
காதருகில் பாடினார் பரந்தாமன்.ம்ம்
-சிணுங்கினாள் பத்மா.
காலங்காத்தால் பாட்டா?
பாட்டுவரும்.உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்.
போதும்
-பத்மா எழுந்தாள்.ஆறு ஆயிருச்சு.குழந்தைகளுக்கு சமைச்சித் தரணும்.
நான் செய்யறேன்.நீ படு.ராத்திரி பூரா வீசிங்ல அவஸ்தைப் பட்டீல்ல.ஏழு மணிக்கு எழுந்து வா.அதுக்குள்ள ஒரு காபி தரேன்
பரந்தாமன், போர்வையை பத்மா கழுத்தைச் சுற்றி அழுத்தி படுக்க வைத்தார்.எழுந்து கை, கால் முகம் கழுவி வெளியில் வந்தார்.
கிச்சனில் லைட் வெளிச்சம் ஹாலில் கோடாக விழுந்தது.நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
சிவபுராணம் ஒலித்தது.
எட்டிப் பார்த்தார்.
சங்கர்.புளி கரைத்துக் கொண்டிருந்தான்.
ஹலோ நைனா.கம், கம்
அழைத்தான்.
என்னடா நடக்குது இங்க?
ரஸவாதம் நைனா.செம்பை தங்கமாக்கறேன்
கொழுப்பா?
பின்ன! கைல புளி கரைச்ச பாத்திரம் இருக்கு.என்ன கேள்வி இது.சாம்பார், ரசம், பீன்ஸ் உசிலி
சூப்பர்.ஏண்டா திடீர்னு இத்தனை அயிட்டம்
மத்தியானம் ஒபாமா வரார் நம்ம வீட்டில சாப்பிட
உன் சாப்பாட்டை சாப்பிடவா.கஷ்டம்டா
அப்பா.இது பிற்கால நலனுக்காக
காபியை கலந்து நீட்டினான் சங்கர்.கல்யாணம் ஆனா வசதியா இருக்கும்ல?"
யாருக்கு.உன் பொண்டாட்டிக்கா?
எல்லாரையும் தன்னை மாதிரியே நினைக்கற பரந்த மனசு.சரி இன்னைக்கி அம்மாக்கு எத்தனை தோப்புக்கரணம் போட்டீங்க?
இன்னும் போடலைடா.தூங்கறா?
சங்கர் சப்தமாய் சிரித்தபடி அவரை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.சூப்பர் நைனா
பாத்துடா.அம்மா பாத்தா கோவிச்சுக்குவா
பயங்கர ஜாலிப்பா நீங்க
சங்கர் அவர் காபி டம்ளரை பிடுங்கி தான் குடித்தான்.இது அந்த வீட்டு வழக்கம்.பையன், மனைவி எல்லோரும், அவர் எது குடித்தாலும், பாதியில் வாங்கி தாங்கள் குடித்து விடுவார்கள்.அதற்கு போட்டியே நடக்கும்.அதற்காகவே பரந்தாமன் டம்ளரை தூக்கி குடிப்பார்.
நீ மட்டும் என்னடா.தங்கப் பையன்.
என்னை மாதிரி பையன் கிடைக்க குடுத்து வைக்கணும்.இதோ வருது பாருங்க.ஒரு சைத்தான் குட்டி.
டேய் அண்ணா.காபீடா
ஈர முகத்தை துடைத்தபடி உள்ள வந்தாள் புவனா.குட்மார்னீங்பா
என்ன ஒரு மரியாதை.பூர்வ புண்ணியம்
சங்கர் அவளுக்கும் காபி கலந்து நீட்டினான்.நாளைக்கு நிச்சயதார்த்தம்.சீக்கிரம் எழப் பழகுவோம்னு தெரியலை.சமைக்க தெரியுமா?
ரவீந்திரனுக்கு தெரியும்
பேஷ் பேஷ்.ரொம்ப பேஷ்
லவ் பண்ணி கல்யாணம்.அதனால குழந்தையை கஷ்டப்பட விடமாட்டாண்டா.மூணுவருஷம் காத்திருந்து, வீட்ல போராடி சம்மதம் வாங்கி இருக்கான்.என் தங்கக் குட்டியை தங்கமா பாத்துக்குவான்.
பெருமை வழிந்தது பரந்தாமன் குரலில்.
நானும் டீக்கா பரஸ் பண்ணிட்டு பைக்ல சுத்தறேன்.எந்தப் பொண்ணும் திரும்பிப் பார்க்க மாட்டேங்கறா
அதுக்கெல்லாம் மச்சம் வேணும்டா அண்ணா
புவனா.
என் புள்ளைக்கு என்ன குறைச்சல்?
பத்மா வந்து விட்டாள்.என் தங்க அம்மா
சங்கர் பத்மாவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
ஏண்டா கண்ணா நீ சமைக்கறே?
ராத்திரி நீ தூங்காம வீசிங்ல அவஸ்தைப் பட்டீல்லம்மா.அதான் நான் சீக்கிரம் எழுந்து சமைச்சேன்.எனக்கும் இந்த சைத்தான் குட்டிக்கும் சாப்பாடு எடுத்துட்டு போவணும்ல.
புவனாவை எழுப்பி இருக்கலாம்ல
யாரை.இவளையா? நாளைக்கு நிச்சயதார்த்தம்.அடுத்த மாதம் கல்யாணம்.அதுவரைக்கும் இங்க தூங்கட்டுமே.இதோ ஆச்சு
சங்கரை பெருமையோடு பார்த்தார் பரந்தாமன்.உத்தமமான பிள்ளை.குடும்பத்தில் பற்றும், பாசமும் மிகுந்தவன்.புவனா செல்லப் பெண்.அண்ணா, பெற்றோர்கள் மீது அதீத பாசம்.
எம்.பி.ஏ. முடித்துவிட்டு சங்கர் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறான்.புவனாவும் எம்.பி.ஏ. முடித்துவிட்டு பணியாற்றுகிறாள்.ஒரு கல்வி நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறாள்.சங்கரின் கல்லூரித் தோழன் தான் ரவீந்திரன்.மூன்று வருடமாக புவனாவை விரும்புகிறான்.ஐ.டி. நிறுவனத்தில் வேலை.புவனாவிடம் காதலை தெரிவித்தபோது மறுத்து விட்டாள்.என் பொற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைதான் என் கணவர் என்று உறுதியாகக் கூறிவிட ரவீந்திரன் வீட்டில் கூறி, பரந்தாமனை சந்தித்து பேசி இன்று திருமணம் நிச்சயமாகிறது.
கண்ணு.இன்னைக்கு நானே வந்துடறேன்.சாயந்திரம் உனக்கு நகை வாங்கிடலாம்.பரந்தாமன்
உனக்கு ஒரு ஆரம் வாங்கிட்டு, ரவீந்திரனுக்கு செயின், மோதிரம் வாங்கணும்."
அப்போ நான் என் வண்டில போக வேண்டாமா?
வேண்டாம்.சங்கர் உன்னை டிராப் பண்ணிடுவான்.
ஆமா.அதுக்குத்தானே நான் இருக்கேன்
குளித்து ரெடியாகி தன் பைக்கை எடுத்தான் சங்கர்.
ஏய் சைத்தான் குட்டி.சீக்கிரம் வா
கத்தினான்.
வரேண்டா அண்ணா
புவனா ஓடி வந்து பைக்கில் ஏறினாள்.
"குழந்தையை