Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sangamam
Sangamam
Sangamam
Ebook79 pages29 minutes

Sangamam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரண்டு தோழிகள் ஒரு தெய்வீகக் கலையைக் கற்கின்றனர். இருவரையும் திருமணம் பிரித்தபின் ஒருத்தி இன்னொரு தெய்வீகக் கலையைக் கற்க நேர்கிறது. இக்கலைத் திறமைகளால் தாங்களும் மேன்மை பெற்று பிறருக்கும் எவ்வாறு உதவுகின்றனர் என்பதைச் சொல்லும் 'சங்கமம்' என்ற இக்குறுநாவல் ஆன்மீகமும், அமானுஷ்யமும் கலந்து விறுவிறுப்பாக இறுதிவரை செல்கின்றது.

Languageதமிழ்
Release dateSep 19, 2023
ISBN6580169910222
Sangamam

Read more from Geetha Kannan

Related to Sangamam

Related ebooks

Reviews for Sangamam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sangamam - Geetha Kannan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சங்கமம்

    Sangamam

    Author:

    கீதா கண்ணன்

    Geetha Kannan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/geetha-kannan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் குறிப்பு

    ஸ – ஸட்ஜமம் – சூரியன்

    ரி - ரிஷபம் - சந்திரன்

    க - காந்தாரம் - அங்காரகன்

    ம - மத்யமம் - புதன்

    ப - பஞ்சமம் - குரு

    த - தைவதம் - சுக்ரன்

    நி - நிஷாதம் - சனைச்சரன்

    இந்த படைப்பு Pachyderm Tales உடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது

    www.pachydermtales.com

    ஆசிரியர் குறிப்பு

    கீதா கண்ணன்

    சங்கமம் எனும் இந்த குறுநாவலின் ஆசிரியர் கீதா கண்ணன். இவர் விழுப்புறம் அருகிலுள்ள கப்பியாம்புலியூர் என்றொரு சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தார். சென்னையில் பலகாலம் வசித்தவர் தற்போது ஸ்ரீரங்கத்தில் வசித்து வருகிறார்.

    இவரது முதல் நாவல் ‘வைதேஹி’ பேக்கிடெர்ம் டேல்ஸ் மூலம் வெளிவந்தது. சிறந்த வீணைகலைஞர். கவிதைகள், கதைகள் ஆகியவற்றை முகநூலில் எழுதி வருகிறார். கதைப் புத்தகங்கள் படிப்பதிலும் இசையை ரசிப்பதிலும் அதிக ஆர்வம் உண்டு. இது ஆன்மீகமும் அமானுஷியமும் கலந்த நாவல். மயில் இறகு போன்ற இதமான எழுத்திற்குச் சொந்தக்காரர்.

    ஸ – ஸட்ஜமம் – சூரியன்

    காலை வேளை. ராஜி சமையலறையில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தாள். வேணு ஆஃபிஸ் புறப்பட்டுப் போய்விட்டான்.

    போய்ட்டு வரோம்மா. என்று ப்ளஸ் ஒன் படிக்கும் ரஞ்சனியும், எய்த் ஸ்டாண்டர்ட் படிக்கும் காயத்ரியும், காலேஜுக்கும், ஸ்கூலுக்கும் கிளம்பினர்.

    ஃபோன் ஒலித்தது. ராஜி ரிஸீவரை எடுத்தாள். அம்மா.

    சொல்லும்மா. என்ன. காலை வேளைல ஃபோன் பண்ணிருக்கே. ஏதானும் அவசரமாம்மா?

    ஆமாண்டி. ராஜி. ரெண்டு நாளா அப்பாவுக்கு லேசா ஜுரம். டாக்டர்கிட்ட காட்டி, மருந்து மாத்திரை எடுத்துக்கறார். உன்னை இப்பவே பார்கணும்கறார். மாப்பிள்ளை, குழந்தைகள்ளாம் கிளம்பியாச்சுன்னா ஒருநடை வந்து எட்டிப் பாத்துட்டுப் போயேன்.

    ஆச்சும்மா. இதோ பஸ்ல வரேன். அப்பாகிட்ட சொல்லு.

    வீட்டைப் பூட்டினாள். வடபழனி பஸ்ஸ்டாப்புக்கு வந்தாள். கொஞ்ச நேரத்தில் தாம்பரம் போகும் பஸ் வந்து நிற்க ஏறினாள். சீட் கிடைத்து ஜன்னலோரம் உட்கார்ந்து டிக்கட்டும் வாங்கியபின், ‘அப்பா, எதுக்காக என்னை அவசரமாப் பாக்கணும்னு சொல்லிருப்பார்’ என்ற சிந்தனைகளில் மூழ்கினாள்.

    ***

    ராஜியின் அப்பா ரங்கநாதன். முதலில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்தவர், வேலையை விட்டுவிட்டு சொந்த பிசினஸில் இறங்கிவிட்டார்.

    ஓயாது உழைத்ததில் நல்ல வருமானம், சொந்த வீடு. ரங்கநாதனுக்கு அறுபத்து எட்டு வயசு. இப்போது அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது.

    சகுந்தலா ரங்கநாதன் தம்பதிக்கு ஒற்றைப் பெண்ணான ராஜலக்ஷ்மி கல்யாணமாகிக் கணவன் குழந்தைகள் என இதோ வடபழனியில் நன்றாக இருக்கிறாள்.

    பல வருஷங்களுக்குமுன் ரங்கநாதனுடன் கூடவே தனியார் கம்பெனியில் வேலை பார்த்து பக்கத்துத் தெருவிலிருந்தார் நெருங்கிய நண்பர் சபேசன். திருமணமாகிக் குழந்தைகள் பிறக்க செங்கல்பட்டில் வீடு வாங்கிக் கொண்டு போய்விட்டார்.

    அவருடைய குடும்பத்தில் ஆண்கள் எல்லோரும் சக்தி உபாசகர்கள்.

    ஒருநாள் காலை, ராஜி பிறந்த புதிது. ரங்கநாதன் நண்பரைப் பார்க்கப் போனார்.

    அன்று அவர்கள் வீட்டு ஹாலில் நிறைய பேர் ஆண்களும் பெண்களுமாய்க் கூட்டமாய் உட்கார்ந்திருந்தனர். எதோ ப்ரசங்கம் நடந்து கொண்டிருந்தது.

    சபேசனின் அப்பா ரங்கநாதனையும் உட்காரச் சொன்னார். கூட்டத்தின் கடைசியில்

    Enjoying the preview?
    Page 1 of 1