Aathikka Nayagan...
By Devibala
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Thurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Amma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Kaanikkai Rating: 5 out of 5 stars5/5Vaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Kodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Ennai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Pottuvetcha Vatta Nilaa Rating: 5 out of 5 stars5/5Mounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Aathikka Nayagan...
Related ebooks
Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsAboorva Ragam Rating: 5 out of 5 stars5/5Kaadhalin Pidiyil... Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thazhuvatha Mehangal! Rating: 0 out of 5 stars0 ratingsUnakku Mattum Rating: 0 out of 5 stars0 ratingsYeidhavanai Thedi... Rating: 5 out of 5 stars5/5Vaigarai Ragangal Rating: 0 out of 5 stars0 ratingsThen Pothigai Santhana Kaatrey! Rating: 3 out of 5 stars3/5Ennul Nee Pathitha Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsRudhra Thaandavam Rating: 0 out of 5 stars0 ratingsUraintha Ragasiyam... Rating: 4 out of 5 stars4/5Paathaiyora Paathigal Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthiya Maalai Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Vedham Rating: 5 out of 5 stars5/5Sippikkul Muthu Rating: 5 out of 5 stars5/5Udaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKaarkala Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsVanthal Varalakshmi!!! Rating: 0 out of 5 stars0 ratingsIru Kannilum Un Gnabagam… Rating: 4 out of 5 stars4/5Karpoora Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsKathavu Thiranthirukku! Rating: 0 out of 5 stars0 ratingsNeeradum Kangal Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsYerikkadiyil Sila Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsAanathikkam Rating: 5 out of 5 stars5/5Un Kaiyil Ennai Koduthean Rating: 4 out of 5 stars4/5Deivathin Theerpu Rating: 0 out of 5 stars0 ratingsSonthamena Nee Irunthal… Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5
Reviews for Aathikka Nayagan...
0 ratings0 reviews
Book preview
Aathikka Nayagan... - Devibala
http://www.pustaka.co.in
ஆதிக்க நாயகன்...
Aathikka Nayagan…
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
கோவிலில் தரிசனம் முடிந்து பாக்யம் பிரகாரத்தில் வந்து உட்கார்ந்தாள்.
என்ன பாக்யம்? சீக்கிரமே வந்துட்டியா?
குரல் கேட்டுத் திரும்பினாள்! நாகலஷ்மி சிரிப்புடன் நின்றாள்!
இன்னிக்கு ஆடி வெள்ளியாச்சே! அம்மனுக்கு விளக்கு போட வந்தேன்
அப்படியா? போட்டு முடிச்சிட்டியா?
ஆச்சு! என் மருமக எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு இருக்கா
அந்த மருமகள் வந்தாள்!
ராணி! இந்த பாக்யம் ஆன்ட்டிக்கு எல்லாம் எடுத்து வச்சு, ஒரு பாத்திரத்துல குடு!
சரிங்க அத்தே!
அந்தப் பெண் விளக்கு, மாவு, தேங்காய், பழம் என சகலமும் பேக் செய்யத் தொடங்கினாள்.
பாக்யம்! இங்கே எதையாவது மனமார வேண்டிக்கிட்டு அம்மனுக்கு மாவிளக்கு போட்டா, உடனே அது நடக்குது!
சந்தோஷம் நாகலஷ்மி!
இதோ என் பையனுக்கு கல்யாணமாகி ரெண்டு வருஷங்கள் ஆச்சு! நல்ல மருமகளை குடுனு வேண்டிக்கிட்டேன். அம்மன், ராணியை குடுத்துட்டா! அதான் அவளையும் கூட்டிட்டு வந்து மாவிளக்கு போட்டேன்! நீயும் வேண்டிக்கோ! உனக்கும் ஒரு நல்ல மருமகள் கிடைப்பார். உன் பிள்ளை கவுரிசங்கருக்கு இருபத்தியெட்டு வயசாகுது இல்லையா? என் பையனோட வயசாச்சே?
ஆமாம் நாகலஷ்மி!
உடனே வேண்டிக்கோ. நடக்கும்!
பாக்யம் பதிலே பேசவில்லை.
பிரசாதம் கைக்கு வந்தது. அந்தப்பெண் ராணி அழகாக... களையாக இருந்தாள்.
இந்த மாதிரி ஒரு மருமகள் எனக்கும் வேண்டும் தான்
அம்மன் கண் திறக்கலையே?
வர்றேன் பாக்யம்
இருவரும் புறப்பட்டுப் போக, பாக்யமும் எழுந்தாள். வெளியே வந்து ஆட்டோ பிடித்தாள்.
வீட்டுக்கு வந்து சேர, பாக்யத்தின். கணவர் ரமணி வெளியே புறப்பட்டு கொண்டிருந்தார்.
டிபன் சாப்பாட்டாச்சா?
ம்! இப்பத்தான் ஆச்சு! நீபாட்டுக்கு காலைல கோவிலுக்கு போயிட்டே!
சரிங்க! சமையலுக்கு தனம் இருக்கா. வீட்டு வேலைகளையும் அவ பாத்துக்கறா. இந்த வீட்ல எந்த வேலையும் நின்னு போகலை. அப்புறம் என்ன?
அருகில் வந்தார் ரமணி.
சமையல்காரியே எல்லாத்தையும் பார்த்துப்பானா, நீ எதுக்கு?
காலைல நல்லதை பேச மாட்டீங்களா?
நான் கெட்ட அர்த்தத்துல பேசலை பாக்யம்! நமக்கு பணம் இருக்கு. வசதிகள் இருக்கு. எல்லாத்தையும் கவனிக்க ஆள் இருக்கு. நான் மறுக்கலை. ஆனாலும் உனக்குனு சில பொறுப்புகள் இருக்கே. அதை நீ சரியா செய்யறியா?
என்ன செய்யல நான்?
நம்ம கெளரிசங்கருக்கு ஒரு கல்யாணத்தை செஞ்சு முடி. ஒருத்தி இந்த வீட்டுக்கு வரட்டும். அவ கைல குடும்பப் பொறுப்பை ஒப்படைக்கலாமில்லை?
பாக்யம் முறைத்தாள்.
ஏன் அப்படி பார்க்கற?
நம்ம பையனை பற்றி எங்கிட்ட பேசாதீங்க. அதுவும் அவனோட கல்யாணம் பற்றி கண்டிப்பா எங்கிட்ட பேசாதீங்க. அதுக்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை
ஏண்டீ? நீயெல்லாம் ஒரு அம்மாவா? இப்படி பேசறது நல்லாருக்கா?
போதும் நிறுத்துங்க. ஒரு அம்மாவுக்குள்ள உரிமை, மரியாதை, சலுகை இதுல எதை உங்க பையன் எனக்கு குடுத்திருக்கான்? நான் இந்த வீட்ல டம்மி பீஸ்! நீங்க இருக்கீங்களே. பார்த்து செய்ங்க. அவன் கல்யாணத்தை பற்றி நீங்க பேச வேண்டிய இடம் வேற!
குரலில் கோபம் கொப்பளித்தது.
அருகில் வந்தார் ரமணி.
ஏன் பாக்யம் இப்படி இருக்கே?
தெரியாதா உங்களுக்கு! வெள்ளிக்கிழமை காலைல என் வாயை கிளறாதீங்க. தப்பாயிடும். கோவிலுக்கு வந்த நாகலக்ஷமி, நல்ல மருமகள் வந்த காரணமா மாவிளக்கு போடறா. என்னையும் போடச் சொல்றா. அந்த அம்மன் எனக்கு ஒரு உரிமையையும் தரலியே? அப்புறம் எதுக்கு?
குரல் இடறி கரகரத்தது.
பாக்யம்! இதப்பாரு. நீ ஆத்திரப்பட்டு லாபமில்ல. கவுரிசங்கர் பச்சக்குழந்தை இல்லை. அவனுக்குனு ஒரு அபிப்ராயம் இருக்கும். அதை நீயும் மதிக்கணும்!
அவனே முடிவெடுத்து, இந்த பொண்ணு தான் எனக்கு வேணும்னு கேட்டா, நான் சந்தோஷப்படுவேனே! அட, ஜாதி மாறி ஒருத்தியை அவன் காதலிச்சு அதை எங்கிட்ட வந்து சொன்னாக்கூட நான் சந்தோஷமா, என் பிள்ளையோட ஆசையை நிறைவேற்றி வைப்பேனே! இவனோட எல்லா முடிவுகளையும் அவதானே எடுக்கறா. வேண்டாங்க. அவளைத் தாண்டி நான் நிக்க முடியாது. எனக்கும் ஒரு தன்மானம் உண்டு. இதை விட்ருங்க! இனி பேச வேண்டாம். நமக்கு குடுத்து வச்சது அவளோ தான்
இரு பாக்யம்! நீ பேசிட்டே போகாதே. கவுரிசங்கரை நீ தப்பா நினைக்கறியா?
அவன் என் பிள்ளைங்க
சொல்றே இல்லை? அந்த உரிமையை எடுத்துக்கோ!
இல்லீங்க. முடியாதுங்க. பத்து மாசம் சுமந்து பெத்த ஒரு தாய்க்கும் சில பிடிவாதங்கள் இருக்கும். அந்த உணர்வுகளை என்பிள்ளை புரிஞ்சுக்கணும். தானே புரிஞ்சுக்கணும்
வேகமாக உள்ளே போய் விட்டாள்.
ரமணி தவித்துப் போய் நின்றார்.
அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ரமணிக்கு வயது ஐம்பத்தி நாலு. கடுமையான உழைப்பாளி. அடி மட்டத்திலிருந்து வந்தவர்.
முதலில் மற்றவர்களின் கீழே வேலை பார்த்து, கடுமையாக உழைத்து, இன்று சொந்தமாக எக்ஸ்போர்ட் பிசினஸ் நடத்தி வருகிறார்.
பதப்படுத்தப்பட்ட கடல் சார்ந்த உணவு பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில்.
கடந்த பத்தாண்டுகளாக இந்த தொழில் சூடுபிடித்து, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கிளைகள். மாதத்தில் இருபத்தி நாலு நாட்களும் வெளியூரில் தான் இருப்பார் ரமணி. சொந்தமாக பெரிய வீடு, கார், பேங்க் பேலன்ஸ் என சகலமும் சேர்ந்து விட்டது.
பாக்யம் அடக்கமான குடும்பத் தலைவி.
அவரது வருமானத்தை அழகாக கையாண்டு சொத்துக்களை சேர்த்து விட்டாள். திறமைசாலி. ஆனால் முன்கோபம், பிடிவாதம், ஈகோ சகலத்துக்கும் சொந்தக்காரி.
மூத்தவள் நாராயணி - பட்டதாரி! அவளது கணவன் மும்பையில் வெளிநாட்டு தொடர்புள்ள ஒரு கம்பெனியில அதிகாரி. மும்பையில் வாசம்.
அடுத்தவள் அஞ்சலி. டெல்லியில் குடியிருப்பு. அவளே உத்யோகம் பார்க்கிறாள். கணவனும் பெரிய பதவி.
இரு பெண்களுக்கும் தலா இரண்டு குழந்தைகள். ஒரே பிள்ளை, கடைசி பிள்ளை கவுரிசங்கர். எம்.பி.ஏ. முடித்து விட்டு ஒரு பெரிய நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மானேஜர்!
அழகன் - அதிக புத்திசாலி, நன்றாக பழகும் இளைஞன். சுலபத்தில் பெண்களை தன் பக்கம் ஈர்த்து விடும் சக்தி படைத்தவன்.
படிப்பு முடிந்து உத்யோக நிமித்தம் நாலைந்து முறை வெளிநாடு சென்று விட்டு வந்தவன்.
அந்த கெளரிசங்கரின் உயிர் நண்பன் ருத்ரன். இவனை விட ஏழெட்டு வயது மூத்தவன். கவுரிசங்கர் கல்லூரியில்