Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Deivam Thantha Poove
Deivam Thantha Poove
Deivam Thantha Poove
Ebook115 pages53 minutes

Deivam Thantha Poove

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105704022
Deivam Thantha Poove

Read more from Vidya Subramaniam

Related authors

Related to Deivam Thantha Poove

Related ebooks

Reviews for Deivam Thantha Poove

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Very nice story truely telling you are the Deivam thandha poo neengal vasagargal pola engalaukku otherwise we would not have got such a touchable story

Book preview

Deivam Thantha Poove - Vidya Subramaniam

http://www.pustaka.co.in

தெய்வம் தந்த பூவே

Deivam Thantha Poove

Author:

வித்யா சுப்ரமணியம்

Vidya Subramaniam

For more books

http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

1

நள்ளிரவில் சடசடவென்று பெய்த மழையின் சாரல் காற்றோடு சேர்ந்து முகத்தில் தெறிக்க, சட்டென விழிப்புக் கண்டது சாரதிக்கு. ஜன்னலோரம் படுத்திருந்தவன் எழுந்து கதவுகளை மூடிக் கொண்டே திரும்பி மற்றவர்களைப் பார்த்தான். வினயாவும் குழந்தை அஸ்வதியும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி உடம்பைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தனர்.

ஜன்னல் கதவைச் சாத்தி விட்டுப் போர்வை ஒன்றை எடுத்து அவர்களுக்குப் போர்த்தி விட்டு வெளியில் வந்தான். மழையின் சத்தம் சங்கீதமாயிருந்தது. இப்போதெல்லாம் அது அபூர்வ சங்கீதமாகி விட்டது. ஒட்டு மொத்தமாய் மனித இனத்தின் மீதே இயற்கை கோபித்துக் கொண்டு விட்டாற்போல் மழைக்காலம் குறைந்து விட்டது.

படுக்கையறைக் கதவைச் சாத்திக் கொண்டு ஹாலின் ஓரமாக இருந்த வராண்டாவில் சேர் போட்டு அமர்ந்தான். பால்கனி தாண்டி தெரு விளக்கின் ஒளியில் வேகமாய்ப் பூமியில் இறங்கும் மழை ஊசிகளை வேடிக்கை பார்த்தான்.

பார்க்கப் பார்க்க அலுக்காத விஷயம் எது, சாரதி?

மூணு விஷயம் அலுக்கவே அலுக்காது. எனக்கு மட்டுமல்ல, எல்லோர்க்குமே.

என்னென்ன?

ஒண்ணு கடல், ரெண்டாவது மழை. மூணாவது குழந்தையின் சிரிப்பு.

அப்டின்னா, நா அலுத்துப் போய்ட்டேனா உனக்கு? இல்ல அலுத்துப் போய்டுவேனா?

விழி உருட்டி, வினயா கேட்டது இப்போதுதான் போலிருக்கிறது. இப்போது நினைத்தாலும் சிரிப்பு வந்தது.

பத்து வருஷமாயிருக்குமா அவளோடு ஊரை விட்டு வந்து! ஊரை விட்டுக் கிளம்பிய அன்று கூட இப்படித்தான் மழை கொட்டிக்கொண்டிருந்தது. பாலக்காடு ஜங்ஷனில் படபடப்பும் - பதட்டமுமாக வினயாவுக்காகக் காத்திருந்த அந்தக் கணங்கள் மறக்க முடியாதவை. அவள் வருவாளா, பயந்து போய்க் கழுத்தறுத்து விடுவாளா என்ற கவலை, இது சரியா, தவறா என்ற குழப்பம், விடிந்த பின் வீட்டில் என்ன நடக்குமோ என்ற பயம் எல்லாமுமாய்ச் சேர்ந்து இதயத்தை அழுத்த வினயாவை எதிர் நோக்கிக் காத்திருந்தான் அவன்.

ஒலவக்கோடு ஜங்ஷன் என்று ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் இருந்த பெயர்ப் பலகையைக் கடந்து இப்புறமும் அப்புறமும் ரெயில்கள் வருவதும் செல்வதுமாக இருக்க, சாரதி மணி பார்த்தான். பத்து மணிக்கு வருவதாகச் சொல்லியிருந்தாள் வினயா. பத்தடிக்க இன்னும் பத்து நிமிடமே இருந்தது. சென்னைக்குச் செல்லும் ரெயிலுக்கு இரண்டு டிக்கெட் எடுத்திருந்தான் அவன். இந்த ரெயிலை விட்டு விட்டால் போட்ட திட்டமெல்லாம் பொடிப் பொடியாகப் போய்விடும்.

சென்னை ரெயில் வந்து கொண்டிருப்பதற்கான அறிவிப்பு தமிழிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலுமாக ஒலிபரப்புக் கருவிகளில் சொல்லப்பட, அவன் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொண்டது.

வினயாவைத் தேடி அலைந்தன அவன் விழிகள்.

அதோ ஓட்டமும் நடையுமாய் வருவது அவள்தானா? அவன் விழி சுருக்கிப் பார்த்தான், அவளேதான். குடை விரித்திருந்தும் நனைந்திருந்தாள். அதுவரை நெஞ்சையடைத் திருந்த கவலையும் பயமும் சட்டென்று அகல, இழுத்துச் சுவாசித்தான்.

ரெயில் வேகம் குறைத்து ஜங்ஷனுக்குள் நுழைந்து கொண்டிருந்தது.

வா... வேகம்... அவளை இழுத்துக் கொண்டு ஓடினான், முன் பதிவு செய்திருந்த பெட்டி, அவளை ஏற்றி விட்டுத் தானும் ஏறினான். இருக்கை எண் பார்த்து அமர்ந்தார்கள். ஏற்கெனவே, பெர்த்துகளில் படுத்திருந்தவர்கள் அரைத் தூக்கத்தில் புதிதாய் வந்தவர்களைப் பார்த்து விட்டுக் தூக்கத்தைத் தொடர்ந்தார்கள்.

பதினைந்து நிமிடத்திற்குப் பின் ரெயில் கிளம்பியது. டி. டி. ஆர். டிக்கெட் செக் பண்ணிவிட்டு நகர்ந்த பின் நடு பெர்த்தில் அவளைப் படுக்கச் சொல்லிவிட்டு மேல் பெர்த்தில் ஏறி அவனும் படுத்துக் கொண்டான். படுத்தார்களே தவிர இருவரும் உறங்கவில்லை. நடுவில் எழுந்து அவள் ஏதோ சொல்ல வாயெடுக்க, அவன் வேண்டாம் என ஜாடை காட்டினான்.

இப்ப எதுவும் பேச வேண்டாம். கேட்டயா? எதானாலும் மெட்ராஸ் போனதும் பேசிப்போம். நீ தூங்கப்பார்.

அவள் படுத்தாள். ஆற்றுப் பாலத்தின் மீது ரெயில் பேரிரைச்சலோடு சென்றது. அவன் மனதில் கல்பாத்தி புழை பெருக்கெடுத்து ஓடியது. கல்பாத்தி சிவனைக் கண்மூடிப் பிரார்த்தித்தான். 'சரியோ தப்போ, இது நாங்க மனசொத்து எடுத்த முடிவு. கடைசி வரை எங்களோட இருந்து காப்பாற்று, ஈஸ்வரா!'

இரண்டு வருடம் முன்பு வரை கூட அவன் நினைத்த தில்லை. இந்த வினயாவை நேசிப்போம் என்றோ, அவளோடு இப்படி ஊரை விட்டு ஓடி வருவோம் என்றோ... அவனுக்கே ஆச்சர்யமாகக் கூட இருந்தது.

தென்மேற்குப் பருவக்காற்றின் தயவில் கேரளா முழுக்க மழை துவங்கியிருந்த ஒரு ஜூன் மாதத்தில்தான் வினயாவை முதன் முதலில் சந்தித்தான். சிவன் கோயில் படிக்கட்டுகளில் அமர்ந்து நண்பர்களோடு அரட்டையடித்துக் கொண்டிருந்த சமயம், அவளும், அவள் அப்பாவும் அவர்களைக் கடந்து கோவிலுக்குச் சென்றார்கள். தமிழ் நாடு என்று பேச்சு வழக்கில் தெரிந்தது.

ஏம்பா எவ்ளோ வருஷம் இருந்தாகணும், இந்த ஊர்ல?

மூணு வருஷம், ஒரு வேளை அதுக்கு முந்தியே கூட மாற்றல் கிடைச்சாலும் கிடைக்கலாம்.

நீ வேணா இருந்துக்க, படிப்பை விட்டுட்டு என்னால இருக்க முடியாது. என்னை மெட்ராஸ்லயே ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுடு.

பேசாம வரயா. எனக்குத் தெரியும் எல்லாம்.

அவர் வேகமாக நடக்க, அவள் முகம் சுருங்கப் பின்னால் நடந்து சென்றாள்.

யாருடா அது? சாரதி நண்பனைக் கேட்டான்.

யாருக்குத் தெரியும். ஊருக்குப் புதுசாட்டம் இருக்கு.

கேட்டுட்டா போச்சு. அவர்கள் காத்திருந்தார்கள். தரிசனம் முடித்து அப்பாவும், பெண்ணும் திரும்பி வந்து கொண்டிருப்பது கண்டு சாரதி எழுந்து நின்றான்.

சார் ஊருக்குப் புதுசா…?

அவர் பதில் சொல்லாமல் விழித்துப் பார்த்தார்.

Enjoying the preview?
Page 1 of 1