Kathavu Thiranthathu
3/5
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsNadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsUdal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsThennangkaatru Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsMadhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Paarkadal Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsMaaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Vetti Vergal Rating: 5 out of 5 stars5/5Thodaamal Naan Malarvean Rating: 5 out of 5 stars5/5
Related to Kathavu Thiranthathu
Related ebooks
Mayangukiraal Oru Maathu Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Ninnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Aayiram Nilavae Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKannamochi Yenada? Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsPirivu Ini Illai Rating: 5 out of 5 stars5/5Vendum Unthan Uravu Rating: 0 out of 5 stars0 ratingsPoomazhai Thoovi Rating: 0 out of 5 stars0 ratingsThoorathu Nilavu Rating: 4 out of 5 stars4/5Agayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsAagaya gangai Rating: 5 out of 5 stars5/5Theeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsNee En Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsKaatril Kalanthavale...! Rating: 0 out of 5 stars0 ratingsPennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsPurusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Inba Kaatru Veesattum... Rating: 5 out of 5 stars5/5Kalyaanamaalai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsKodimalar Rating: 5 out of 5 stars5/5Nilavu Thoongum Neram! Rating: 0 out of 5 stars0 ratingsPoo Magal Rating: 5 out of 5 stars5/5Inimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5En Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Anbirku Thalaivanangu Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kathavu Thiranthathu
2 ratings0 reviews
Book preview
Kathavu Thiranthathu - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
கதவு திறந்தது
Kathavu Thiranthathu
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
1
கேசவன், உங்களுக்கு போன்.
கேசவன் அவசரமாய் எழுந்தான். நாலு டேபிள் தள்ளியிருந்த டேபிளுக்குச் சென்று டெலிபோன் எடுத்தான்.
கேசவன் தானே!
எதிர்முனை கேட்டதும் பேசுவது மாமாவென்று கேசவனுக்குப் புரிந்து விட்டது.
ஆமாம் மாமா, கேசவன் தான்.
இன்னிக்கு சாயங்காலம் ஒரு ஆறு மணி வாக்குல வீட்டுக்கு வா கேசவா
மாமா எதற்கு என்று சொல்லவில்லை. கேசவனும் கேட்கவில்லை. மாமா அவனை வளர்த்தவர். அன்பு காட்டியவர். படிக்க வைத்தவர். இன்று அவன் ஆடிட்டராயிருப்பதற்கு முழுக்காரணமும் அவர்தான். நீ என் அடிமை என்று தன் கம்பெனியிலேயே அவர் அவனை முடக்கிப் போட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அவனுக்கு முழுச் சுதந்திரம் அளித்திருந்தார். இருந்தாலும் கேசவன் நன்றி மறந்து விடாமல் அவர் சொல்லாமலே அவர் கம்பெனி கணக்கு வழக்குகளில் அவருக்கு உதவிக் கொண்டுதான் இருந்தான். அதற்கென்று அவர் ஏதேனும் பணம் தந்தாலும் வாங்க மாட்டான். ‘கடைசி வரை கேசவனுக்கு உங்க அன்பும் ஆசீர்வாதமும் மட்டும் குறையில்லாம் கிடைச்சா போதும் மாமா’ என்று விடுவான்.
திடீர்னு அதுல என்னடா சந்தேகம் உனக்கு?
மாமா சிரிப்பார்.
சந்தேகம் இல்ல பயம்.
அதான் என்ன பயம்?
சொல்லத் தெரியலை.
நான் சொல்லவா?
என்ன?
உனக்கு ஒரு கல்யாணம் ஆச்சுன்னா உனக்கு. பொண்டாட்டியா வரப் போறவ எப்டியிருப்பா ளோன்னு பயம். அவ என்னை மதிக்கணுமேன்னு பயம். எனக்கு உன் மேல் இருக்கற அன்பு அவளால் குறைஞ்சுடக் கூடாதேங்கற பயம். ஆம் ஐ கரெக்ட்?
அப்டியும் இருக்கலாம்.
ஒருக்கால் கல்யாண விஷயமாய்ப் பேசத்தான் மாமா கூப்பிடுகிறாரா? கேசவன் யோசித்தான்.
ஆறுமணிக்கு சரியாக தன் ஹீரோ ஹோண்டாலை மாமாவின் பங்களாவுக்குள் செலுத்தினான்.
புல் வெளியில் உட்கார்ந்திருந்த மாமா அவனைப் பார்த்து சிரித்தார். வா கேசவா
என்றார்.
கேசவன் அவருக்கு எதிரிலிருந்த கூடை நாற்காலியில் பவ்யமாக அமர்ந்தான்.
ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கீங்க போல்ருக்கு!
யெஸ்...
என்ன கேசவா ரொம்ப நாளாச்சு, இந்த பக்கம் வந்து!
கேசவன் திரும்பினான். அலமேலு மாமி கையில் டிரேயோடு வந்தாள். பீங்கான் ஜாரிலிருந்து ஆவி பறந்த டீயை கப்களில் ஊற்றி இருவருக்கும் நீட்டினாள்.
மதுரைக்கு போயிருந்தேன், வேலை விஷயமா.
அம்மா சௌக்கியம்தானே?
அவளுக்கென்ன இருபத்தினாலு மணி நேர டிவி புரோக்கிராம்ஸ், எப்பப்பாரு டிவிதான். ராஜ் டிவி சன் டிவின்னு மாத்தி மாத்தி பார்க்கவே நேரம் சரியார்க்கு.
கண்ணு கெட்டுரும்.
போரடிக்குதாம். அது சரி, ராதிகா எங்கே...?
ப்ளவர் ஷோக்காக ஊட்டி போயிருக்கா.
நீங்க போகலையா?
இவ போய்ட்டா மெட்ராஸ் ஊட்டியாய்டும், ஊட்டி மெட்ராஸாய்டும்னு நா கூட சொன்னேன் போய்ட்டுவான்னு.
ம்க்கும்...! நா கிட்டக்க வந்தாலே அனலடிக்குமே.
மாமி முகத்தை தோள்பட்டையில் இடித்துக் கொள்ள கேசவன் சிரித்தான்.
எதுக்கு வரச் சொன்னீங்க மாமா?
உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கப் போறேன். அது பத்தி பேசத்தான் வரச் சொன்னேன்!
அதுக்கென்ன அவசரம் இப்பொ?
ராதிகாக்கு வயசாறதே.
அவளுக்கு யார் பண்ண வேண்டாம்னா
கல்யாணமே உனக்கும் அவளுக்கும் தானே.
மாமா சொல்ல கேசவன் திகைத்தான். மாமியைப் பார்த்தான். அலமேலு மாமியின் முகம் அஷ்ட கோணலாகி இருந்தது.
2
யாரைக் கேட்டு முடிவு எடுத்தீங்க?
யாரைக் கேட்கணும் நா?
என்னை...! என்னைக் கேட்டிருக்கணும்.
உனக்கு என்ன நல்லது கெட்டது தெரியும்?
நா குழந்தையில்லப்பா! உங்க கம்பெனியை எடுத்து நடத்தறவ, என் திறமைக்கு சாட்சி உங்களோட வருஷாந்திர லாபம்.
உனக்குத் திறமையில்வைன்னு நா சொல்லலையே. வாழ்க்கைங்கறது இந்த கம்பெனி மாதிரியில்ல. அது வேற இது வேற.
இருக்கலாம். ஆனா நீங்க பார்த்திருக்கற ஆள் என் மனசுக்கு பிடிக்க வேண்டாமா?
கேசவனைப் பத்தி தெரிஞ்சுமா இப்டி சொல்ற? அவன் நல்லவன் ராதிகா.
யாரில்லைன்னு சொன்னாங்க. நல்லவன்ங்கற காரணத்துக்காகவே ஒருத்தரை கட்டிக்கணும்னா நா நிறைய பேரைக் கட்டிக்கலாம்.
ஏன் கேசவனைப் பிடிக்கலைன்னு சொல்ற நீ? அப்டி என்ன வெறுப்பு?
அவர் மேல எனக்கு எந்த வெறுப்பும் இல்ல. குழந்தைலேர்ந்து பார்த்து பழகின முகம், குணம். புருஷன்ங்கற ஸ்தானத்துல என்னால கேசவனை நினைச்சுக் கூட பார்க்க முடியாது.
போகப் போக சரியாய்டும்.
நீங்க என்ன சொன்னாலும் முடியாதுப்பா.
அப்பொ வேற ஏதோ காரணமிருக்கு. உன் மனசுல வேற யாராவது இருக்கானா?
ராதிகாவின் முகம் இதைக் கேட்டதும் சுருங்கியது. சத்தியமாக அப்படி எதுவும் இல்லை. சின்ன வயசிலிருந்து கேசவனை அவளுக்குத் தெரியும். அத்தை பையன்தான். புருஷன் இறந்த பிறகு அத்தையும் அவன் பிள்ளையும் நிராதரவாக இருந்த நிலையில் அப்பாதான் அவர்களுக்கு கை கொடுத்தார். மெட்ராஸுக்கு அழைத்து வந்தார். நாலு தெரு தள்ளி வீடு பார்த்து குடியமர்த்தினார். செலவுக்கு பணம் கொடுத்தார். கேசவனை நல்ல பள்ளியில் சேர்த்தார்.
தங்களை அண்டி வந்தவர்கள் என்ற வகையில் கேசவன் ராதிகாவுக்கு துச்சமாய்த் தெரிந்தான் அதிலும் கேசவனின் கசங்கிய சட்டையும் அழுக்கு வேட்டியும் அசமந்தமான பார்வையும் ராதிகாவுக்கு சுத்தமாய்ப் பிடிக்காது. வீட்டில் விஷேம் என்றால் அத்தைதான் சமைப்பாள். கேசவன் மடித்து கட்டின வேட்டியோடு கடைகண்ணிக்குப் போய் வருவான்.
சாப்பிடும்போது அப்பா அவனை அருகிலேயே உட்கார வைத்துக் கொள்வார். கேசவன் காணாததைக் கண்டாற்போல் கன்னம் உப்ப அடைத்துக் கொண்டு சாப்பிடுவதைப் பார்த்து ராதிகாவுக்கு எரிச்சலாக வரும். நாசூக்காக, நளினமாக குறைவாய் சாப்பிடத் தெரியாத அவனுடைய சாப்பாட்டு ராமத்தனம் அவளுக்கு சுத்தமாகப் பிடிக்காது.
மாமா வீடு என்றில்லை. எந்தச் விருந்துக்கு சென்றாலுமே கேசவன் இலை நிறைய சாதம் போட்டுக் கொண்டுதான் சாப்பிடுவான். இரண்டு முறை சாம்பார் சாதம் சாப்பிடுவான். ரசம் சாதம் சாப்பிட்டதும் ரசம் குடிப்பான். ரசம் குடித்த டம்ளரிலேயே மோர் வாங்கி சர் சர்ரென்று உறிஞ்சிக் குடிப்பான்.
மோர் சாதம் சாப்பிட்ட பிறகு இரண்டு கப்பாவது பாயாசம் வாங்கி அதில் பூந்தித் தூளை வக்கனையாகக் கலந்து குடிப்பான். தப்பித் தவறிக் கூட எந்த விருந்திலும் அவனுக்கு அருகிலோ எதிரிலோ அமர்ந்து விட மாட்டாள் ராதிகா.
"ஏண்டி அந்த