Aagaya gangai
5/5
()
About this ebook
Read more from Lakshmi Praba
Ullam Rendum Ondru Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Ennuyir Neethaney…! Rating: 5 out of 5 stars5/5Unnai Virumbinen Uyire.. Rating: 5 out of 5 stars5/5Ennalum Un Pon Vaanam Naan... Rating: 5 out of 5 stars5/5Thirumagal Thedi Vandhaal… Rating: 5 out of 5 stars5/5Sorgathiley Idhu Mudivaanathu Rating: 5 out of 5 stars5/5Pathu Maatha Bandham Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Jeevaney..? Rating: 5 out of 5 stars5/5Maavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Maaya Kangal Rating: 5 out of 5 stars5/5Athisayam Adhu Rakasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKaana Vendum Seekiram...! Rating: 5 out of 5 stars5/5Devan Thantha Veenai... Rating: 0 out of 5 stars0 ratingsDinam Dinam Valarpirai Rating: 0 out of 5 stars0 ratingsUn Vizhiyil Vizhunthen Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Enna Vilai Azhage…? Rating: 5 out of 5 stars5/5Unakkaagavey Naan Vazhgiren Rating: 5 out of 5 stars5/5Nenjam Irandin Sangamam Rating: 5 out of 5 stars5/5Naan Undhan Poomalai Rating: 5 out of 5 stars5/5Agnip Pravesam Rating: 5 out of 5 stars5/5Idhayamellam Un Ninaivu Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unai Neenga Maatten Rating: 5 out of 5 stars5/5Nallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsVaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Inippin Vetri Rating: 0 out of 5 stars0 ratings
Related to Aagaya gangai
Related ebooks
Vaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Vaarayo... Vennilave... Rating: 5 out of 5 stars5/5Ennuyiril Kalandhaai Rating: 5 out of 5 stars5/5Amma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsEllaam Penne Unnaale Rating: 5 out of 5 stars5/5Arunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsPoomazhai Thoovi Rating: 0 out of 5 stars0 ratingsVandhuvidu Vasavi.. Rating: 0 out of 5 stars0 ratingsNenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Maavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsManase Manase Rating: 5 out of 5 stars5/5Nee Sooriyan, Naan Thamarai Rating: 5 out of 5 stars5/5Iththanai Naalai Engirunthaai Rating: 4 out of 5 stars4/5Maaya Kangal Rating: 5 out of 5 stars5/5Thoorathu Nilavu Rating: 4 out of 5 stars4/5Anantham Vilaiyadum Veedu Rating: 4 out of 5 stars4/5Kangal Sollum Kavithai Rating: 5 out of 5 stars5/5Devan Thantha Veenai... Rating: 0 out of 5 stars0 ratingsUn Vizhiyil Vizhunthen Rating: 0 out of 5 stars0 ratingsChithirame…. Senthen Mazhaiye Rating: 0 out of 5 stars0 ratingsIdhayamellam Un Ninaivu Rating: 0 out of 5 stars0 ratingsVenpuraa Nesam Rating: 5 out of 5 stars5/5Ullangal Ondragi... Rating: 0 out of 5 stars0 ratingsNyabagangal Thee Mootum Rating: 0 out of 5 stars0 ratingsManame Para Para Rating: 0 out of 5 stars0 ratingsKaiyarukil Poomaalai Rating: 4 out of 5 stars4/5Idhayam Muzhuthum Unathu Vaasam...! Rating: 5 out of 5 stars5/5Poo Pookkum Osai Rating: 5 out of 5 stars5/5Naan Undhan Poomalai Rating: 5 out of 5 stars5/5Naan Unai Neenga Maatten Rating: 5 out of 5 stars5/5
Reviews for Aagaya gangai
2 ratings0 reviews
Book preview
Aagaya gangai - Lakshmi Praba
http://www.pustaka.co.in
ஆகாய கங்கை
Aagaya Gangai
Author:
லட்சுமி பிரபா
Lakshmi Praba
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
‘என்னுரை’
வாசக நெஞ்சங்களுக்கு,
வணக்கம்! சென்ற முறை வெளிவந்த ‘அமானுஷ்ய அரண்மனை’ நாவலுக்கு நீங்கள் தந்திருந்த பேராதவுக்கு எனது மனமார்ந்த நன்றி!
ஆகாய கங்கை நாவலின் கதையம்சமும் கதைக்களமும் உங்கள் மனதை நிச்சயமாய் கொள்ளை கொள்ளும். அடுத்த மாத நாவலின் தலைப்பு ‘யார் அந்த நிலவு?
ஆசிரியர் N.T. மாதவன் அவர்கட்டு நெஞ்சமார்ந்த நன்றி!
அன்புடன்
உங்கள்
திருமதி. லட்சுமி பிரபா M.A., B.Ed.,
lakshmiprabanovelsreview@gmail.com
***
1
வழக்கமாய் அதிகாலை ஐந்து மணிக்கே சாம்பவி கண் விழிப்பவள் என்பதால் தன்னிச்சையாய் இன்றும் விழித்துக் கொண்டாள்.
திறந்திருந்த சன்னல் வழியே சுதந்திரமாய் உட்புகுந்த காற்று, தோட்டத்தில் பூத்திருந்த செண்பகம், இருவாட்சி, பவள மல்லிப்பூக்களின் நறுமணத்தைக் கலவையாய் சுமந்து கொண்டு வந்து சில்லென்று முகத்தில் மோதியது.
ஆழ மூச்செடுத்து சுகந்த மணத்தை ரசித்த சாம்பவி கலைந்த முடியைக் கோதி கொண்டையிட்டுக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
புருவ மத்தியில் நினைவை நிறுத்தி பதினைந்து நிமிடங்கள் ஆழ்ந்த தியானம் செய்தாள். சிந்தனைகள் ஒருமுகப்பட்டு மனம் வெற்றுத் தாளானது.
புத்துணர்வு பெற்றவளாய் சட்டென்று எழுந்து குளியலறைக்குள் புகுந்தாள் சாம்பவி. பத்து நிமிடங்களில் வெளிப்பட்டவள், பூத்துவாலையால் முகத்தை இலேசாக ஒற்றியபடியே அடுக்களைக்குள் நுழைந்தாள்.
அம்மா மஞ்சுளா மும்முரமாக வாணலியில் ரவையை வறுத்துக் கொண்டிருந்தாள்.
கண்கள் பனிக்க மகளை ஆசையுடன் ஏற இறங்கப் பார்த்தாள்.
சாம்பவி! சாமி மாடத்துக்குக் கீழே உனக்கு ஒரு புதுச்சேலை வாங்கி வச்சிருக்கேன். நமஸ்காரம் பண்ணிட்டு எடுத்துக் கட்டிக்கோம்மா.
இன்னிக்கு என்ன விசேஷம்? கேசரி பண்ணிட்டிருக்கே? புதுச்சேலை வாங்கி வச்சிருக்கே?
அகன்ற விழிகளில் ஆச்சரியம் மிதக்க ஏறிட்டாள் சாம்பவி.
நிஜமாவே ஞாபகம் இல்லியா? இன்னிக்கு உன்னோட பிறந்த நாளும்மா ... அதான.
அட... போம்மா! ஒவ்வொரு வருஷமும் என்னோட பிறந்த நாள் எப்ப வருதுன்னு... உன்னைக் கேட்டுத்தான் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. பிறந்த நட்சத்திரத்தைப் பார்த்து கொண்டாடுகிறவளாச்சே நீ!
மகம் நட்சத்திரத்துலே பிறந்தவங்க ஜெகத்தை ஆளுவாங்கன்னு சொல்வாங்க... ஆனா என் வயித்துல வந்த பொறந்த பாவத்துக்குத்தான்.... நீ வறுமையில் வாடி வதங்கிட்டிருக்கே செல்லம்!
குரலில் ஏகத்திற்கும் சோகம் இழையோடியது. நா தழுதழுத்தது. தாயின் இதழ்கள் துயரத்தில் துடிப்பதைக் கண்டாள் சாம்பவி.
அவள் பேச நினைக்கும் வார்த்தைகள் போட்டி போட்டுக் கொண்டு முன்னால் ஓடி வந்து தொண்டையைத் தாண்டாமல் மவுனம் காத்ததையும் மகள் புரிந்து கொண்டாள்.
மனதின் வலி... தாயின் இடுங்கிய கண்களில் வெப்ப நீர் ஊற்றை உருவாக்கியது.
என்னத்துக்கு அம்மா அழறே? என்கென்ன குறைச்சல்? கஷ்டப்பட்டு வளர்த்து என்னை ஆளாக்கியிருக்கே... நர்ஸிங் கோர்ஸ் முடிச்சிட்டு பிரபல மருத்துவமனையில ட்ரெயினிங் முடிச்ச கையோட... அங்கேயே வேலை கிடைச்சு கை நிறைய சம்பாதிக்கிறேன்.
பரம்பரை நாட்டியக் கலையை எனக்குக் கத்து குடுத்திருக்கே... உன்னோட ஃபிரண்ட் தேவகி லயன்ஸ் கிளப் செகரட்டரி.... நான் படிக்கிற காலத்துல ஊக்கத்தொகை கொடுத்து உதவினாங்க... எதிர்த்தாப்புல இருக்கற அப்பார்ட்மெண்ட்டைச் சார்ந்த சில குழந்தைகளுக்கு நான் டான்ஸ் கத்துக் கொடுக்கறேன்.
தேவகி ஆன்ட்டியோட பலத்த சிபாரிசு இது! நர்ஸ் வேலைக்குப் போறே... உனக்கு எப்போ டைம் கிடைக்குதோ... அப்ப ட்யூஷன் வச்சுக்கோ. வாரத்துல ரெண்டு நாள் கிளாஸ் எடுத்தாக் கூடப் போறும்னு சொல்லிட்டாங்க.
ட்யூட்டி, டான்ஸ் கிளாஸ்னு நான் சந்தோஷமா இருக்கேன்மா. அப்பா உயிரோட இருந்தாக் கூட இந்தளவுக்கு எனக்கு பொறுப்பும், கடமையுணர்ச்சியும் இருந்திருக்காது தெரியுமா?
எங்க ஹாஸ்பிடல்லே நான் வேலை செய்யற விதத்தைப் பார்த்து தலைமை மருத்துவரிலிருந்து கடைநிலை ஊழியர் வரை... என்னை ரொம்பவே பாராட்டறாங்க தெரியுமா?
தாயின் தோளில் கரிசனத்துடன் கை வைத்தாள் சாம்பவி.
மஞ்சுளாவின் விழிகளில் பொங்கிய கண்ணீர் உடைப்பெடுத்துக் கொண்டு வழிந்து கன்னங்களில் வாய்க்கால் போட்டு இறங்கியது.
என்னோட பிறந்த நாள்னு சொல்றே? இப்படி எதையோ மனசுல வச்சுக்கிட்டு துக்கப்பட்டு அழறே... எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா அம்மா? நீ எனக்கு அம்மா மட்டுமில்லே... என்னோட ஃப்ரண்ட், ஃபிலாஸ்ஃபர், கைட் எல்லாமே நீதான்னு நான் நெனச்சுட்டிருக்கேன்.
ஆனா... ஏதோ ஒரு பெரிய விஷயத்தை உன் மனசுக்குள்ளே போட்டு புதைச்சு வச்சு... வேதனை தாங்காம புழுவா துடிக்கிறே! அது என்ன விஷயம்னு என்கிட்டே சொல்லக் கூடாதாம்மா? ப்ளீஸ்!
ஓரளவுக்கு உனக்கு விஷயம் தெரியுமில்லையா? இப்போதைக்கு அது போறும்... போம்மா, புதுப்புடவையைக் கட்டிக்கிட்டு வாடா கண்ணா.
மகளை திசை திருப்பினாள் மஞ்சுளா. சாம்பவி மீண்டும் கேள்விக் கணையைத் தொடுக்கும் முன் துரிதப்படுத்தினாள்.
புடவையைக் கட்டிக்கிட்டு வந்ததும்... நடேசன் மாமாகிட்டே போய் ஆசீர்வாதம் வாங்கணும். அப்படியே கற்பகம் அத்தைக்கு பி.பி செக் பண்ணிட்டு இன்சுலின் இன்ஜெக்ஷன் போட்டுரு. சரியா?
ஒரு கணம் தாயின் விழிகளை ஊன்றிப் பார்த்துவிட்டு கூடத்தை நோக்கி நகர்ந்தாள் சாம்பவி.
மஞ்சுளா ஒரு விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டால்... அது அவ்வளவுதான்! என்னதான் தலைகீழாக நின்று பார்த்து மன்றாடினாலும்... அவளிடமிருந்து விஷயத்தைக் கறக்கவே முடியாது.
'நடேசன் மாமாவிற்கு ஒரு வேளை முழு விவரமும் தெரிந்து இருக்குமே? அவரிடம் கேட்டுப் பார்த்தால்...? ஊகூம்!’
நடேசன் மாமா தங்கை மஞ்சுளா மீது அளவு கடந்த பாசம் கொண்டவர். தங்கையின் விருப்பு, வெறுப்புகளை நன்கு அறிந்த மனிதராயிற்றே?
‘சாம்பவியின் மேல் பாசமழை பொழிபவர்தான். ஆனால் மஞ்சுளாவைப் பற்றிய விவரங்களைத் தன்னிடம் கூறுவார் என்று நிச்சயம் சொல்ல முடியாதே?’
ஆகாய நீல வண்ணக் காட்டன் புடவையைக் கட்டிக் கொண்டு வந்து, தன் கால்களில் விழுந்து நமஸ்கரித்த சாம்பவியை கண் கொள்ளாமல் ஆசை தீரப் பார்த்தாள் மஞ்சுளா.
'நிகு நிகுவென்று உயரம், உயரத்திற்கேற்ற பருமன், கூர் மூக்கு, ரோஜா இதழ்கள், சங்குக் கழுத்து, பாலில் குங்குமப் பூவைக் கலந்தாற்போன்று அசரடிக்கும் நிறம், அந்த வம்சத்திற்கு உரிய கம்பீரம்... அதே ராஜகளை!’
'அச்சில் வார்த்தது போல் உரித்துக் கொண்டு வந்து அந்த வம்சத்தைப் பறைசாற்றுகின்ற அழகுத் தோற்றம். யார் கண்களிலாவது இவள் பட்டுவிட்டால்?’ மஞ்சுளாவுக்கு உள்ளூர் திகில் ஊறியது.
***
2
சவுபாக்கியவதியா... தீர்க்காயுசா இரும்மா
தனது பாதங்களைத் தொட்டுப் பணிந்த சாம்பவியின் தோளைத் தொட்டுத் தூக்கினார் நடேசன்.
சட்டைப்பையில் துழாவி ஒரு