Dinam Dinam Valarpirai
()
About this ebook
'தினம் தினம் வளர்பிறை...!' நாவல் மென்மையான காதல் கலந்த குடும்பக் கதையாகும்.
கதாநாயகி ஜானவிக்கு சொர்க்கம் போன்ற வாழ்வு கிடைக்கிறது. சொல்லப் போனால் அழகான சரணாலயமே கிட்டுகிறது. கெடுமதி கொண்டவளின் துர்போதனையால்... ஜானவி, தான் வாழ்வை நரகமாக்கிக் கொள்கிறாள். ஜனாவி என்றால் வெளிச்சம் என்று பொருள். அவள் கதாநாயகன் ஜனாவைப் புரிந்து கொண்டாளா? இருண்டு போன அவளது வாழ்வில் எப்படி வெளிச்சம் வந்தது?
அவளுக்கு மீண்டும் சொர்க்கம் கிடைத்ததா? என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Read more from Lakshmi Praba
Ullam Rendum Ondru Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Ennuyir Neethaney…! Rating: 5 out of 5 stars5/5Unnai Virumbinen Uyire.. Rating: 5 out of 5 stars5/5Ennalum Un Pon Vaanam Naan... Rating: 5 out of 5 stars5/5Thirumagal Thedi Vandhaal… Rating: 5 out of 5 stars5/5Sorgathiley Idhu Mudivaanathu Rating: 5 out of 5 stars5/5Pathu Maatha Bandham Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Jeevaney..? Rating: 5 out of 5 stars5/5Maavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Maaya Kangal Rating: 5 out of 5 stars5/5Athisayam Adhu Rakasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKaana Vendum Seekiram...! Rating: 5 out of 5 stars5/5Devan Thantha Veenai... Rating: 0 out of 5 stars0 ratingsEnna Vilai Azhage…? Rating: 5 out of 5 stars5/5Un Vizhiyil Vizhunthen Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Unakkaagavey Naan Vazhgiren Rating: 5 out of 5 stars5/5Agnip Pravesam Rating: 5 out of 5 stars5/5Nenjam Irandin Sangamam Rating: 5 out of 5 stars5/5Naan Undhan Poomalai Rating: 5 out of 5 stars5/5Aagaya gangai Rating: 5 out of 5 stars5/5Idhayamellam Un Ninaivu Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unai Neenga Maatten Rating: 5 out of 5 stars5/5Nallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsVaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Inippin Vetri Rating: 0 out of 5 stars0 ratings
Related to Dinam Dinam Valarpirai
Related ebooks
Naan Undhan Poomalai Rating: 5 out of 5 stars5/5Vaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Sirithenum Nesithirukkalam Rating: 0 out of 5 stars0 ratingsArunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Manushigal Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Neerindri Oru Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsSooriyakanthi Pookkal Rating: 5 out of 5 stars5/5Indru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unai Neenga Maatten Rating: 5 out of 5 stars5/5Vaarayo... Vennilave... Rating: 5 out of 5 stars5/5Agnip Pravesam Rating: 5 out of 5 stars5/5Ennuyiril Kalandhaai Rating: 5 out of 5 stars5/5Devan Thantha Veenai... Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Charanadainthen Rating: 5 out of 5 stars5/5Idhayam Muzhuthum Unathu Vaasam...! Rating: 5 out of 5 stars5/5Idhayamellam Un Ninaivu Rating: 0 out of 5 stars0 ratingsNenjam Irandin Sangamam Rating: 5 out of 5 stars5/5Neela Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsChithirame…. Senthen Mazhaiye Rating: 0 out of 5 stars0 ratingsPennalla... Neeyoru Bommai Rating: 0 out of 5 stars0 ratingsKaana Vendum Seekiram...! Rating: 5 out of 5 stars5/5Un Vizhiyil Vizhunthen Rating: 0 out of 5 stars0 ratingsVaa... Pon Mayile Rating: 5 out of 5 stars5/5Sollathey Yarum Kettal Rating: 5 out of 5 stars5/5Mangai Enthan Nenjukkul! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Dinam Dinam Valarpirai
0 ratings0 reviews
Book preview
Dinam Dinam Valarpirai - Lakshmi Praba
http://www.pustaka.co.in
தினம் தினம் வளர்பிறை
Dinam Dinam Valarpirai
Author:
லட்சுமி பிரபா
Lakshmi Praba
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
தினம் தினம் வளர்பிறை
1
தோட்டத்துப் பறவைகள் கலகலத்வனி செய்து விடியலை வரவேற்கத் தொடங்கின
ஜானவி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். விடிவிளக்கின் மங்கிய வெளிச்சத்தில்... எதிர்ச் சுவரிலிருந்த கடிகாரத்தை உற்றுப் பார்த்தாள்.
அதிகாலை மணி நான்கு...!
இன்று அம்மா ருக்மணிக்கு திவசம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்... அம்மா கண்ணை மூடி விட்டிருந்தாள்.
'அம்மா! இன்னிக்கு உனக்கு திதி! அய்யரை வரவழைச்சு சிரார்த்தம் பண்ணணும்னு ரொம்ப ஆசைதான்! அண்ணா சம்மதிக்கமாட்டானே? அண்ணா ஒத்துக்கிட்டாலும் அண்ணி செய்யவிட மாட்டாங்களே?
பத்து மாசம் சுமந்து பெத்து கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினவ நீ... உனக்கு முறையா திதி கொடுக்கக்கூட என்னால முடியலையேம்மா...
அம்பத்தஞ்சு வயசெல்லாம் ஒரு வயசா? ஏம்மா. இவ்ளோ சீக்கிரமா கண்ணை மூடி... என்னை அம்போன்னு விட்டுட்டுப் போனே?
தங்கச்சி சைந்தவி மட்டும் இல்லைன்னா... நான் கண்டிப்பா உயிரோட இருந்திருக்கமாட்டேன்.
அவளை இந்த நரகத்துல அனாதையா தவிக்க விட மனசில்லாமதான். அத்தனை கொடுமைகளையும் சகிச்சுட்டிருக்கிறேன்...
ஈ, எறும்புக்குக்கூட துரோகம் நினைக்காத நீ! தெய்வத்தோட பாதத்துல போய் சரணடைஞ்சுட்டே... உன் ஆத்மா எங்களை ஆசீர்வதிக்கட்டும்.
தனக்குள் புலம்பியபடியே சைந்தவியை திரும்பிப் பார்த்தாள்.
குழந்தைபோல் முழங்கால்களைக் குறுக்கி, ஒருக்களித்துப் படுத்திருந்தாள்.
காலடியில் சுருண்டு கிடந்த போர்வையை எடுத்து உதறி அவளுக்குப் போர்த்திவிட்டாள்.
போர்வை அரதப் பழசாய் ஆங்காங்கே நைந்து போயிருந்தது.
மர அலமாரியைத் திறந்தாள். அம்மா ருக்மணியின் புகைப்படத்தை அதில்தான் வைத்திருந்தாள் ஜானவி.
பகிரங்கமாய் சுவரில் அதை மாட்டி வைப்பதற்குக்கூட அவளுக்கு கொடுப்பினை இல்லை.
‘'தோ பாரு! செத்தவங்க ஃபோட்டோவை எல்லாம் கண்டபடி மாட்டி வைக்காதே...!
காலங்கார்த்தால எந்திரிச்சதும் செத்துப் போனவங்க மூஞ்சியிலே முழிச்சா. உருப்பட்ட மாதிரிதான்...
உங்கம்மா உனக்கு ஒசத்தியா இருக்கலாம். அதுக்காக, விடியற பொழுது நல்லபடியா விடியனும். வீட்டுல நல்லது நடக்கணும்.
வேணும்னா டிரங்க் பெட்டியிலோ. மர அலமாரியிலோ வச்சுக்கோ. போன மகராசி சும்மாவா கண்ணை மூடினா?
எவ்ளோ பெரிய செலவை இழுத்து விட்டுட்டுப் போனா? என் கண்ணுல படும்படியா இதை வைக்காதே. வீடு துலங்க வேணாம்?...சே!"
அண்ணி சுகந்தி அவளைக் கரித்துக் கொட்டியபோது. அண்ணன் கோபி மவுனமாய் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தான்.
"ஏய்! எங்கம்மா ஃபோட்டோவை மாட்டக் கூடாதுன்னு சொல்றியே, உனக்கு மனசாட்சி வேணாம்....? எங்களுக்காக மெழுகுவர்த்தி மாதி தன்னையே உருக்கிக்கிட்டவ எங்கம்மா... எங்களுக்கு. இந்த வீட்டுக்கு அவங்கதாண்டி தெய்வம்...!' பரிந்துகொண்டு பேசுவான் என்று எதிர்பார்த்தாள் ஜானவி.
எதிர்பார்ப்பில் மண் விழுந்ததுதான் மிச்சம்!
அண்ணி சுகந்தி ஒரு அழகான ராட்சசி. கோபியை அப்படியே அடிமையாக்கி தலையாட்டி பொம்மையாக்கி விட்டிருந்தாள்.
சுகந்தி சர்வாதிகாரியாய் இவர்களை ஆட்டிப்படைப்பவள்தான்.
ஆனால்... பார்ப்பதற்கு நேர் மாறான தோற்றம் கொண்டவள்.
அதிர்ந்து பேசமாட்டாள். கோபமாய் உக்கிரமாய் ஒரு பார்வை பார்த்ததில்லை.
சிரித்த முகத்துடன் சாந்த சொரூபியைப் போல முகத்தை வைத்துக் கொண்டிருப்பாள்.
வெளியிலிருந்து யாராவது வந்தால். அன்பான பண்பான குணவதி போல்தான் வேஷம் போடுவாள்.
பெருவாரியான காரியங்களை... கணவனை ஏவிவிட்டே அவன் மூலமாய் சாதித்துக் கொள்வதில் சுகந்தி ஒரு கில்லாடிதான்.
இவர்களை அதட்டி அதிகாரம் செய்யும் போதுகூட. குரலை உயர்த்தாமல். அக்கம்பக்கத்தினர் இவள் செய்யும் கொடுமைகளைத் தெரிந்து கொள்ளாமல். நீக்குபோக்காய் நடந்து கொள்வாள்.
அப்பா நடேசன். ஜானவிக்கு மூன்று வயதாகும் போதே மஞ்சள் காமாலை நோய் வந்து மாண்டு போனார்.
அம்மா ருக்மணி அதிகம் படிக்காதவள்தான். நண்டும் சிண்டுமாய் மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு திண்டாடித்தான் போனாள்.
சொந்தமாய் அந்தக் காலத்து வீடு மட்டும்தான் இருந்தது. இருபது பவுன் நகை இருந்தது.
அதை விற்று எத்தனை மாதங்களுக்குச் சமாளிக்க முடியும்?
அதன் பின்பு, என்ன வழி?
ருக்மணிக்கு வைராக்கியம் ஜாஸ்தி! யாரிடமும் கையேந்தாமல் தன்மானத்துடன் உழைப்பதில் தவறில்லையே! என்ற முடிவுக்கு வந்தாள்.
அக்கம் பக்கத்தினர் வீட்டு விசேஷங்களுக்கும் சென்று சமைத்துக் கொடுப்பதிலிருந்து, வற்றல், வடாம், அப்பளம், ஊறுகாய், பொடி வகைகள் தயாரித்து இட்லி மாவு அரைத்து விற்று காலத்தை ஒட்டினாள்.
இரண்டு பெண் குழந்தைகள் வைத்திருக்கிறோமே! பிற்காலத்தில் இந்த இருபது பவுன் நகைகளை வைத்துக் கரையேற்றிவிடலாம் என்ற எண்ணத்தில், ருக்மணி அந்த நகைகளைப் பத்திரமாய் பாதுகாத்து வந்தாள்.
கட்டும் செட்டுமாய் குடும்பத்தை நடத்தி, குழந்தைகளைப் படிக்கவும் வைத்தாள்.
கோபி, ஜானவியைவிட ஐந்து வயது மூத்தவன். பாசமான பிள்ளையாய் பொறுப்புணர்வுடன் நன்றாகப் படித்து முடித்து உடனடியாக வேலையில் அமர்ந்துவிட்டான்.
அம்மா! அண்ணாவுக்குத் தான் வேலை கிடைச்சிருச்சே, அப்புறம் ஏம்மா எல்லாத்தையும் இழுத்துப் போட்டு கஷ்டப்படறே... பேசாம நிம்மதியா இரும்மா... இதுகாலம் வரை நீ உழைச்சது போறாதா?
என்று ஜானவி கேட்கத்தான் செய்தாள்.
"பச்! உழைச்சே பழகிப் போச்சு... கோபியும் இதையேதான் சொல்றான். பாசமான குழந்தைங்க வாய்ச்சிருக்கீங்க... சந்தோஷமா இருக்கும்மா...
இனி எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல, கோபி உங்களைப் பார்த்துப்பான்." நம்பிக்கையுடன் பேசினாள் அம்மா ருக்மணி.
அந்த நம்பிக்கையில் மண் அள்ளிப் போட்டுவிட்டான் கோபி.
எண்ணி மூன்றே மாதங்களில். அலுவலகத்தில் தன்கூட வேலை பார்த்த சுகந்தியிடம் காதல் வயப்பட்டதோடு நிற்காமல்... மாலையும் கழுத்துமாய் அவளைக் கைப்பிடித்து வீட்டிற்கே கூட்டிக்கொண்டு வந்துவிட்டான்.
இதயத்தில் பெரிய இடியே இறங்கினாற் போலிருந்தது.
துக்கத்தை மென்று விழுங்கிக் கொண்டாள்.
கோபமாய் ஒரு வார்த்தைகூட மகனைக் கண்டிக்கவில்லை.
நடந்தது நடந்துவிட்டது. இனி நடந்ததை மாற்றவா முடியும்?
அமைதியாக மணமக்களை உள்ளே வரவழைத்துக் கொண்டாள்.
வந்த மருமகள் ஒரே வாரத்தில் சர்வாதிகாரியாகி விட்டிருந்தாள்.
என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் வரப்போக இருப்பாங்க... இனிமே உங்கம்மாவை வத்தல், வடாம், ஊறுகாய், இட்லி மாவு, பொடி வகைகளை விக்கிறதை நிறுத்தச் சொல்லுங்க. எனக்கு கவுரவக் குறைச்சலா இருக்கு...
தலையணை மந்திரம் ஒதிவிட்டாள் சுகந்தி. மறுநாள்...
அம்மா! இதெல்லாத்தையும் நிறுத்தப் போறியா? இல்லையா?
அதட்டினான் கோபி.
ஜானவிக்கு கல்யாணம் பண்ற வரைக்கும். ஏதோ கொஞ்சம் வருமானம் வரட்டுமேன்னு பார்க்கிறேன் கோபி
"தேவையில்ல... ஃபிரண்ட்ஸ் வரப்போக இருக்காங்கள்ல... இளக்காரமா பார்ப்பாங்க... எங்களுக்கு கேவலமா இருக்கும்மா’’
"கே... கேவலமா இருக்கா? இத்தன வருஷமா இப்படி உழ்சைசுத்தானே உங்களை வளர்த்து ஆளாக்கினேன்? உழைப்புல கேவலம் என்னப்பா இருக்கு?
‘கேவலம்' என்ற வார்த்தையைக் கேட்டபோதே, அம்மா அதிர்ச்சியில் பாதி செத்துப் போய்விட்டிருந்தாள்.
'ஊகூம்! இவன் பொண்டாட்டி தாசன் ஆகிவிட்டான். இனி இவன் தங்கைகளைக் கரையேற்றுவான் என்று எதிர்பார்ப்பதே தவறுதான்....!
சுயநலத்தின் மொத்த வடிவமாகிவிட்டான். இவன், எனது மகள்களைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டான்...' என்று அப்பட்டமாய் அவளுக்குப் புரிந்துவிட்டது.
அம்மா! ஏம்மா இப்படி அழறே? நீ இப்படி அழுது நான் ஒருநாளும் பார்த்ததே இல்லையேம்மா...
அன்று இரவில்... அம்மாவின் தாடையைத் தடவியபடி நா தழுதழுக்க கேட்டாள் ஜானவி.
"என்னால தாங்க முடியலியே ஜானு! என்னோட நம்பிக்கையைத் தகர்த்துட்டானே?
எம் மேல எவ்ளோ பாசமா இருந்தான்? எப்படி மாறிட்டான் பார்த்தியா? கேவலம்னு பேசிட்டர்னே!
இனி அவன் உங்களுக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடமாட்டான், ஜானு! அதை நெனச்சாத்தான் எனக்கு ஆறவே இல்ல...."
விட்டுத் தள்ளும்மா... அண்ணா ஒண்ணும் செய்யாட்டிப் போகட்டும். விடு...!
அவனைக் கஷ்டப்பட்டு எம்.ஈ. வரைக்கும் படிக்க வச்சேனே? நான் பட்ட பாட்டை. கொஞ்சம்கூட நெனச்சுப் பார்க்கலையே...?
"நெனக்காட்டி போகட்டும். விடும்மா... இதோ நான் பி.எஸ்.சி.