Sollathey Yarum Kettal
5/5
()
About this ebook
Read more from Lakshmi Praba
Ullam Rendum Ondru Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Ennuyir Neethaney…! Rating: 5 out of 5 stars5/5Unnai Virumbinen Uyire.. Rating: 5 out of 5 stars5/5Ennalum Un Pon Vaanam Naan... Rating: 5 out of 5 stars5/5Thirumagal Thedi Vandhaal… Rating: 5 out of 5 stars5/5Sorgathiley Idhu Mudivaanathu Rating: 5 out of 5 stars5/5Pathu Maatha Bandham Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Jeevaney..? Rating: 5 out of 5 stars5/5Maavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Maaya Kangal Rating: 5 out of 5 stars5/5Athisayam Adhu Rakasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKaana Vendum Seekiram...! Rating: 5 out of 5 stars5/5Devan Thantha Veenai... Rating: 0 out of 5 stars0 ratingsDinam Dinam Valarpirai Rating: 0 out of 5 stars0 ratingsIdhayamellam Un Ninaivu Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Enna Vilai Azhage…? Rating: 5 out of 5 stars5/5Unakkaagavey Naan Vazhgiren Rating: 5 out of 5 stars5/5Nenjam Irandin Sangamam Rating: 5 out of 5 stars5/5Un Vizhiyil Vizhunthen Rating: 0 out of 5 stars0 ratingsAagaya gangai Rating: 5 out of 5 stars5/5Vaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Inippin Vetri Rating: 0 out of 5 stars0 ratingsNaan Undhan Poomalai Rating: 5 out of 5 stars5/5Agnip Pravesam Rating: 5 out of 5 stars5/5Nallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unai Neenga Maatten Rating: 5 out of 5 stars5/5
Related to Sollathey Yarum Kettal
Related ebooks
Mangai Enthan Nenjukkul! Rating: 0 out of 5 stars0 ratingsMazhaikaala Malligaigal Rating: 0 out of 5 stars0 ratingsArunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Charanadainthen Rating: 5 out of 5 stars5/5Nallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsVannathupoochikku Vazhi Vidu Rating: 4 out of 5 stars4/5Maaya Kangal Rating: 5 out of 5 stars5/5Vaa... Pon Mayile Rating: 5 out of 5 stars5/5Mullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Jeevaney..? Rating: 5 out of 5 stars5/5Ullamengum Alli Thelithean Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Aasaigal Rating: 5 out of 5 stars5/5Vilagatha Sirakugal Rating: 5 out of 5 stars5/5Erimalai Pookkal Rating: 4 out of 5 stars4/5Mazhaithuli Mattum Unakku Rating: 5 out of 5 stars5/5Venpura Nesam Rating: 0 out of 5 stars0 ratingsVaigairai Deepangal Rating: 5 out of 5 stars5/5Chithirame…. Senthen Mazhaiye Rating: 0 out of 5 stars0 ratingsVaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Ennuyiril Kalandhaai Rating: 5 out of 5 stars5/5Poo Viluntha Saththam Rating: 4 out of 5 stars4/5Neela Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsKoodu Marantha Kuyilkal Rating: 5 out of 5 stars5/5Imayaga Naan Iruppean Rating: 0 out of 5 stars0 ratingsPaavam, Malukutti Rating: 0 out of 5 stars0 ratingsEnkengum Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsSoorya Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsAnnaparavai Manithargal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Sollathey Yarum Kettal
1 rating0 reviews
Book preview
Sollathey Yarum Kettal - Lakshmi Praba
https://www.pustaka.co.in
சொல்லாதே யாரும் கேட்டால்
Sollathey Yarum Kettal
Author:
லட்சுமி பிரபா
Lakshmi Praba
For more books
https://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
1
தோட்டத்துப் பறவைகளின் கலகல த்வனி அதிகரித்ததால்… அதிகாலையின் இருட்டு மெல்ல உடைந்து கொண்டிருந்தது.
சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்த அபிதா… கலைந்த கூந்தலைக் கோதி கொண்டையிட்டுக் கொண்டாள்.
வழக்கமாக அதிகாலை நான்கு மணிக்கு கண் விழிப்பவள் விழிப்பு தட்டியதும் முதல் வேலையாக இரு கைகளையும் பரபரவென்று தேய்த்து… உள்ளங்கையில் முகம் பார்த்துக்கொள்பவள் தான்… தன்னிச்சையாய் அவளது இதழ்கள் மெல்ல இதை முணுமுணுக்கும்.
கராக்ரேவஸ்தே லட்சுமி கரமத்ய சரஸ்வதி கரமூகேது கவுரி…
நமது உள்ளங்கையில் மூன்று அம்பிகைகளும் உறைஞ்சு இருக்காங்க… அதனால கார்த்தால இந்த ஸ்லோகத்தை தவறாம சொல்லிக்கிட்டே நம்ம உள்ளங்கையில் கண் விழிச்சா… ரொம்ப நல்லதுன்னு பெரியவர் சொல்லி வச்சிருக்கா…
அம்மா ருக்மணி கூறியதை… அவள் என்றுமே மறந்ததில்லைதான்.
ஆனால் இன்றோ அவள் உள்ளங்கையில் முகம் பார்க்கவே இல்லை.
அவள்தான் இரவெல்லாம் உறங்கவே இல்லையே?
நீள நீள சட்டங்கள் பொருத்தப்பட்ட மோட்டு வளையை வெறித்துப் பார்த்தபடி கொட்டக்கொட்ட கண் விழித்திருந்தாள் அபிதா.
தற்செயலாய் நள்ளிரவில் புரண்டுபடுத்த அம்மா ருக்மணி… விடி விளக்கு வெளிச்சத்தில் அவள் அமர்ந்திருந்ததைப் பார்த்துவிட்டு கேட்டாள்,
என்ன அபி? தூங்கலையா? சதா சிந்திச்சுண்டே இருக்கே. கண்டதையும் போட்டு மனசைக் குழப்பிக்கிட்டே இருந்தா… அப்புறம் நீ இந்தாத்துல இருக்கிற சாம்பு மாமா மாதிரியே ஆயிடுவே… ஜாக்கிரதை! பேசாம படுத்து தூங்கு அபி
மெல்லிய குரலில் எச்சரித்தாள்.
அப்பாவோட நண்பர் ராமமூர்த்தியோட பொண்ணுக்கு கல்யாணம். கும்பகோணத்துக்கு நாம்ப குடும்பத்தோட போயாகணும். ஆபீசுக்கு நீ லீவு போடுன்னு சொன்னே… மறுபேச்சு பேசாம லீவு போட்டுட்டு… உங்ககூட வந்திருக்கேன். புது இடம் தூக்கமே வரலை…
அதானே பார்த்தேன். ஒரே பொண்ணுங்கிறதால கராத்தே, சிலம்பம், பாட்டு, டான்ஸ், யோகா என்று சகலத்தையும் கத்துக்க வச்சு… உன்னை சகலகலாவல்லியா வளர்த்துட்டோம். நீயும் நல்லா படிச்சு மெரிட்லே தேறினே… உன் ஆசைக்கு முட்டுக்கட்டை போடக் கூடாதுன்னு… ஒதுங்கி இருந்தோம். உன் விருப்பப்படியே தினச்சுடர்லே பத்திரிகையில ரிப்போர்ட்டரா வேலைக்கு சேர்ந்தே… எங்க பொண்ணு திறமைசாலி… பெரிய பத்திரிகைக்காரி ஆயிட்டாள்னு நாங்க பெருமையா எல்லார்கிட்டேயும் சொல்லிண்டிருக்கோம். உங்கப்பாவுக்கு உன்ன நெனச்சாலே… நூறு சதவீதம் அவருக்கு பெருமிதம் தான்… ஆனா நான்… உள்ளூர திகில்லே செத்துண்டிருக்கேன்… மத்தவாகிட்டே அதை வெளிக்காட்டிக்கிடறது இல்லைன்னாலும் பெத்தவ இல்லையா? பரிதவிச்சுண்டிருக்கேன் அபி.
ஏன்மா? எதுக்கு பரிதவிக்கணும்?
தழைந்த குரலில் கேட்டாள்.
அறிவுக்களஞ்சியம் நீ. அம்மா என்னத்துக்கு கலங்கித் தவிக்கிறேன்னு உனக்குப் புரியலையாக்கும்?
சலித்துக்கொண்டாள் ருக்மணி.
தினச்சுடர் எவ்வளவு பிரபலமான பத்திரிகை? அதுலே வேலை கிடைச்சது பெரிய விஷயமாச்சே? தினச்சுடர்லே ‘நடந்தது என்ன?’ ஒரு பகுதி வருதே… அதுக்கு ஜனங்க மத்தியில நல்ல வரவேற்பு இருக்குன்னு உனக்கே தெரியுமே? பரபரப்பான திகில் சம்பவங்கள் அமானுஷ்யமான விஷயங்களை நேர்லே போய் ஆராய்ஞ்சு ரிப்போர்ட் தரணும். அதை வாசிச்சுட்டு எத்தனை பேரு போன் மூலமாவும், லெட்டர் மூலமாவும் பாராட்டறாங்க…? இந்தளவுக்கு பேரும் புகழும், செல்வாக்கும் வேற எந்த வேலையிலாவது எனக்கு கிடைக்குமா? மத்தவங்க பாராட்டும்போது உனக்கு எவ்ளோ பெருமையா இருக்கு? சந்தோஷத்துல சொல்லிச் சொல்லி புளகாங்கிதம் அடையறே இல்ல? அப்புறம் எதுக்கு கலங்கித் தவிக்கணும் சொல்லும்மா?
என்ன இப்படி கேட்டுட்டே அபி? பரபரப்பான திகில் சம்பவங்கள் அமானுஷ்யமான விஷயங்களை நேர்லே போய் ஆராய்ஞ்சு வரணும்னு… நீ அடிக்கடி கிளம்பிப் போயிடறே… திரும்பி வர்ற வரைக்கும் நான் உசுரைக் கையில பிடிச்சுண்டிருக்கேன் தெரியுமா? பெத்த மனசு படறபாடு உனக்கு எங்கே புரியுது.
காலையில ஆபீசுக்குப் போயி… ஏ.ஸி. அறையில கணினி முன்னாடி மணிக்கணக்கா உட்கார்ந்துட்டு ரொட்டீனா வேலை பார்த்து மாசம் பொறந்ததும் சம்பளத்தை வாங்கிட்டு வீட்டுக்கு வந்து சேர்றதிலே… என்ன த்ரில் இருக்கு சொல்லு? வாழ்க்கையில பல சவால்களை சந்திக்கணும். போராட்டங்களையும், கஷ்டங்களையும் சமாளிச்சு மீண்டு வரணும். அதுலே தானேம்மா சுவாரஸியமும், திருப்தியும், எதையோ சாதிச்ச பெருமிதமும் நமக்கு கிடைக்கும். உயிரைப் பணயம் வச்சு மூச்சடக்கி ஆழ்கடலுக்குள்ளே மூழ்கித் தேடறவனுக்குத்தான்… விலை உயர்ந்த முத்து பரிசா கிடைக்குது. நான் என்ன தனியாவா ஆராயப்போறேன். டிபார்ட்மெண்ட்டுலே இருந்து துணைக்கு வர்றாங்க இல்லையா? அப்புறம் என்னவாம்?
உம்… எதையாச்சும் சொல்லி என் வாயை அடைச்சுடு அபி! உங்கப்பா எப்பவும் உனக்குதானே பரிஞ்சு பேசறாரு? என்னோட தவிப்பு என்னன்னு… இப்போ உனக்கு புரியாதும்மா… நீயும் ஒரு பொண்ணைப் பெத்து… அது வளர்ந்து வயசுப் பொண்ணாகும் போதுதான்… வயித்துல நெருப்பு கட்டிண்டாப்பல ஒரு கலக்கமும், தவிப்புமா… நீ அவஸ்தைப்படுவே பாரு… அப்போதான் என்னோட உணர்வுகளை நீ புரிஞ்சுக்குவே.
புலம்பித் தள்ளிவிட்டு மறுபக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள் ருக்மணி.
அபிதாவுக்கு தூக்கமே வரவில்லை.
அது புது இடம் என்பதால் மட்டுல்ல… அவளுக்கு தூக்கம் பிடிக்காததற்கு வேறொரு முக்கியமான காரணம் இருந்தது நிஜம்.
நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது… அவளுக்கு அம்மாவிடமிருந்து செல்பேசியில் அழைப்பு வந்தது.
அபி! இன்னிக்கு சாய்ந்திரம் சீக்கிரமா வந்துடு. நாம எல்லோரும் கும்பகோணத்துக்குப் புறப்படனும், மூணு நாள் லீவு போட்டுடு. சரியா?
என்னம்மா இது? நான் அவசியம் வரணுமா? அப்பாவும் நீயும் போயிட்டு வந்துடுங்களேன். எனக்கு மூணு நாளுக்கு லீவு போடறதுக்கு எப்படியோ இருக்கே?
ராமமூர்த்தி மாமா ரொம்ப கோவிச்சுக்கப் போறாரு. உங்கப்பாவும், அவரும் பால்ய காலத்து சிநேகிதர்களாச்சே? உன்னை அவசியம் அழைச்சுண்டு வரணும்னு சொல்லியிருக்காரே? மூணு நாள் லீவு போட்டா ஒன்னும் குடிமுழுகிப் போயிடாது. எடிட்டர்கிட்டே அனுமதி கேட்டுட்டு வந்துடு… சரியா?
திட்டவட்டமாக கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள் அம்மா ருக்மணி.
ஆசிரியரிடம் விவரத்தைச் சொல்லி… விடுமுறை கடிதத்தை எழுதிக் கொடுத்துவிட்டு தனது கேபினுக்கு திரும்பினாள்.
டேபிளின் மீது அவளது பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த கடிதங்களின் மீது பார்வையை ஓட்டினாள்.
‘தினச்சுடரில்’ வரும் ‘நடந்தது என்ன?’ என்ற பகுதியைப் பாராட்டி வாசகர்களிடமிருந்து நிறைய கடிதங்கள் வந்திருந்தன.
ஒவ்வொரு கடிதத்தையும் சிரத்தையுடன் வாசித்துக் கொண்டிருந்தபோது… அவளது செல்போன் செல்லமாய் சிணுங்கியது.
திரையில் மின்னி மின்னி சிரித்த பெயரைப் பார்த்தாள்.
கிரீசன்… உதவி ஆசிரியர், துடிப்பான இளைஞன். நல்ல பெயர் எடுப்பதற்காக நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவன். ஆசிரியர் குணசேகரனின்