Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irai Thedum Paravaikal
Irai Thedum Paravaikal
Irai Thedum Paravaikal
Ebook91 pages55 minutes

Irai Thedum Paravaikal

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

R.Manimala, an exceptional Tamil novelist, written over 200 novels, 150 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
ISBN9781043466138
Irai Thedum Paravaikal

Read more from Manimala

Related to Irai Thedum Paravaikal

Related ebooks

Reviews for Irai Thedum Paravaikal

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irai Thedum Paravaikal - Manimala

    12

    1

    கிழக்கில் ஆதவன் முகம் காட்டினதுதான் தாமதம்... பறவைகள் அரக்க பரக்க ஜோலிக்கு கிளம்பின.

    இடம். மொட்டைமாடி!

    குளித்து முடித்து ஈர உடம்பில் வேட்டி கட்டி, கண்மூடி கரம் குவித்து சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார் சந்தானம்.

    சற்று தள்ளி அவரது மகன் விஷ்ணு எக்ஸர்சைஸ் செய்துகொண்டிருந்தான். உடல் முழுக்க வியர்வை கொப்புளங்கள், கதிரவன் ஒளி பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தன. விஷ்ணு எம்.காம் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கிறான்.

    சந்தானத்தின் உதடுகள் இறைவனிடம் வேண்டி எதையோ முணுமுணுத்தன.

    இந்த நாடு நல்லாயிருக்கணும். என் வீடும் நல்லாயிருக்கணும். நான் எல்லோருக்கும் நல்லவனாயிருக்கணும். எல்லோருக்கும் நல்லதே செய்யணும். நாலு பேருக்கு உதவற அளவுக்கு எனக்கு நல்ல மனசையும், பொருளையும் தா! பகவானே... உன் திருவடிபோற்றி...! என்றபடி கண்களை திறந்தார்.

    குட்மார்னிங் டாடி என்றான் விஷ்ணு.

    குட்மார்னிங்... நீ எப்ப மேலே வந்தே?...

    ஜஸ்ட் நவ் டாடி!

    இன்னைக்கு ஜிம்முக்கு போகலியா?

    இல்லேப்பா. செமினார் நெருங்குது. அதனால் ஒரு வாரத்துக்கு ஜிம்முக்கு போக வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

    தட்ஸ் குட்! பாடியை எப்ப வேணும்னாலும் கண்ட்ரோல் பண்ணலாம். படிப்பை மனசுக்குள்ளே கண்ட்ரோல் பண்றதுக்கு குறிப்பிட்ட காலம்தான் இருக்கு. நானே சொல்லணும்னு நினைச்சேன். நீயே முடிவெடுத்திட்டே! வெரிகுட்... பெஸ்ட் ஆஃப் லக்! மகனின் முதுகை பெருமிதத்துடன் தட்டி கொடுத்தார் சந்தானம்.

    தாங்க்ஸ் டாடி!

    இருவரும் மாடியைவிட்டு கீழிறங்கி வந்தனர்.

    டேப்பில் அபிராமி அந்தாதி கசிய... பூஜை அறையில் விளக்கை ஏற்றினாள் சந்தானத்தின் மனைவி சரஸ்வதி.

    பூஜையறையிலிருந்து சமையலறைக்கு ஓடினாள். குக்கரில் பருப்பை வேகப் போட்டாள். காய்கறிகளை நறுக்கிக் கொண்டே கூடவே பாடிக் கொண்டிருந்தாள். களையான முகம் கொண்ட சரஸ்வதியின் வயது நாற்பது.

    சரசு... காபி கிடைக்குமா? என்று கேட்டுக் கொண்டே அவளருகே வந்தார் சந்தானம்.

    வந்துட்டீங்களா? இதோ தர்றேங்க... விஷ்ணு உனக்கும் வேணுமா?

    வேண்டாம்மா!

    சரஸ்வதி கணவரிடம் காபியை நீட்டுகிறாள்.

    ஏங்க, ஒரு ஹெல்ப் பண்றீங்களா?

    என்ன சரசு... சொல்லு?!

    இன்னைக்கு மாலதி வெண்டைக்காய் பொரியல் பண்ணச் சொல்லியிருந்தா... ஃப்ரிட்ஜ்ல பார்த்தா வெண்டைக்காய் இல்லே...!

    இப்ப என்ன? வெண்டைக்காய் வாங்கிட்டு வரணும். அவ்வளவு தானே? பேக் எடு... போய்ட்டு வர்றேன்.

    டாடி உங்களுக்கேன் சிரமம்? நான் போய் வாங்கிட்டு வர்றேனே. என்று முன்வந்தான் விஷ்ணு.

    வேணாம் விஷ்ணு. இதிலே எனக்கென்ன சிரமம்? நான் குளிச்சாச்சு. பூஜையும் முடிச்சாச்சு. நீ குளிச்சிட்டு காலேஜுக்கு கிளம்பணும். உனக்கேன் இந்த வேண்டாத வேலையெல்லாம்? நேரமாகுது. நீ போய் குளி! வெண்டைக்காய் போதுமா? வேற ஏதாவது வாங்கணுமா?

    உங்களுக்கு உருளைக்கிழங்கு பொடிமாஸ்னா ரொம்ப பிடிக்குமே... கூட அதையும் வாங்கிட்டு வாங்க... என்றாள் சிரித்தபடி.

    சந்தானம் மனைவியின் கன்னத்தை செல்லமாய் கிள்ளினார்.

    என் மனசறிஞ்சு நடந்துக்க உன்னால் மட்டும்தான் முடியும் செல்லம்.

    ஸ்... ஸ்... கையை எடுங்க... பிள்ளைங்க பார்த்துடப் போறாங்க... என்னமோ நேத்துதான் கல்யாணம் ஆன மாதிரி...

    "ஆம்பளை எப்பவும் புதுமாப்பிள்ளைதான்!’’

    நாளைக்கே விஷ்ணுவுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தையும் பிறந்துட்டா. அப்புறம் நீங்க புதுதாத்தாவாய்டுவீங்க.

    பாவி... பாவி... நாப்பத்தஞ்சு வயசுலேயே என்னை கிழவனாக்கப் பார்க்கிறீயே... அவனவன் அம்பது வயசுலேகூட குழந்தை பெத்துக்கறான். என்று பொய்யாய் அங்கலாய்த்தார்.

    ஓஹோ... ஐயாவுக்கு அப்படியொரு ஆசை வேற இருக்கா?

    ஏன் இருக்கக்கூடாதா? பாவம் மாலதி. கடைக்குட்டியா பொறந்து அவஸ்தைப்படறா. விஷ்ணுவுக்கு ரெண்டு தங்கை இருக்கு. நந்தினிக்கு ஒரு தங்கை இருக்கு. பாவம், மாலதிக்குதான் ஒரு தங்கையோ, தம்பியோ இல்லே. அந்த குறை அவளுக்கு எதுக்கு? என்ன சரஸ்? சந்தானம் மனைவியைப் பார்த்து குறும்புடன் கண்ணடித்து கேட்டார்.

    கடவுளே... காலங்கார்த்தால இதென்ன பேச்சு?

    பொண்டாட்டி கிட்டே பேச எதுக்கு நேரங்காலம்? எல்லாம் நம்ம மாலதியோட நன்மைக்குத்தானே? என்றார் குழைந்தபடி.

    அதே நேரம்... அவர்களை நோக்கி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள் பதிமூன்று வயது மாலதி.

    அப்பா!

    திடுக்கிட்டு திரும்பினார்.

    நான் எப்ப உங்ககிட்டே தம்பி பாப்பா வேணும், தங்கச்சி பாப்பா வேணும்னு கேட்டேன்? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான்தான் இந்த வீட்லே கடைசி பெண்ணா செல்ல பெண்ணா இருக்கணும். சொல்லிட்டேன்.

    ரொம்ப விவரம்! காரியத்தை கெடுத்திட்டியேம்மா! போ... போய் குளிச்சிட்டு ஸ்கூலுக்கு கிளம்பு!

    கணவனின் முகத்தில் லிட்டர் லிட்டராய் வழிந்த அசடைப் பார்த்து எழுந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள் சரஸ்வதி.

    நந்தினியக்கா குளிக்கப் போய் ஒருமணி நேரமாகுது- இன்னும் வெளியே வரலே. நான் எப்ப குளிச்சி... எப்ப ஸ்கூலுக்குப் போய். அலுத்துக் கொண்டாள் மாலதி.

    என்னடி, என்னை பத்தி என்ன பேசிட்டிருக்கே? தலையை

    Enjoying the preview?
    Page 1 of 1