Vinnaivittu Vaa Kanne
By R.Manimala
()
About this ebook
Read more from R.Manimala
Sarkkarai Nilave Rating: 0 out of 5 stars0 ratingsEn Vasam Naanillai Rating: 0 out of 5 stars0 ratingsManam Varuda Vanthaayaa Rating: 0 out of 5 stars0 ratingsKalyaanamaalai Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Megame Rating: 0 out of 5 stars0 ratingsKannellaam Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsUnnnai Thedum Nenjam Rating: 3 out of 5 stars3/5En Piriyasagi Rating: 0 out of 5 stars0 ratingsMuththamida Aasai Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsPoo Pookkum Neram Rating: 0 out of 5 stars0 ratingsPoovum Naanum Veru Rating: 0 out of 5 stars0 ratingsKaalamellaam Naan Varuven Rating: 0 out of 5 stars0 ratingsPon Vaanam Panneer Thuvuthu Rating: 0 out of 5 stars0 ratingsSuttum Vizhichsudare Rating: 0 out of 5 stars0 ratingsPoonkili Kaivarum Naal Varumaa Rating: 0 out of 5 stars0 ratingsEn Anbe Rating: 4 out of 5 stars4/5Nee En Nila Rating: 0 out of 5 stars0 ratingsMalare Ennai Nerunkaathe Rating: 4 out of 5 stars4/5Poove Pen Poove Rating: 0 out of 5 stars0 ratingsKan Simittum Neraththi Rating: 0 out of 5 stars0 ratingsAnthimazhai Pozhigirathu Rating: 0 out of 5 stars0 ratingsNettruvarai Nee Yaaro mm Rating: 0 out of 5 stars0 ratingsPennalla Neeyoru Bommai Rating: 0 out of 5 stars0 ratingsKaathalaal Thavikkiren Rating: 5 out of 5 stars5/5Neeyum Naanum Veralla Rating: 0 out of 5 stars0 ratingsMarakkumo Nenjam Rating: 5 out of 5 stars5/5
Related to Vinnaivittu Vaa Kanne
Related ebooks
Inikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Maanbumigu Maapillai Rating: 0 out of 5 stars0 ratingsAvalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsThoppil Thani Maram Rating: 0 out of 5 stars0 ratingsIlamai Kaatru Rating: 5 out of 5 stars5/5Pon Nilaavil En Kanaave Rating: 0 out of 5 stars0 ratingsAnantham Vilaiyadum Veedu Rating: 4 out of 5 stars4/5Vazhikatti Vazhi Thavarugirathu! Rating: 5 out of 5 stars5/5Aagaya gangai Rating: 5 out of 5 stars5/5Padma Viyugam Rating: 0 out of 5 stars0 ratingsVenpuraa Nesam Rating: 5 out of 5 stars5/5Aasai Kiliye Rating: 0 out of 5 stars0 ratingsMaya Enum Poonchiragu Rating: 0 out of 5 stars0 ratingsMaravaathe Maname Rating: 0 out of 5 stars0 ratingsUyire Urugaathey Rating: 0 out of 5 stars0 ratingsKonjum Mainaakkale 2 Rating: 0 out of 5 stars0 ratingsOru Gulmohar Marathin Keezhaey Rating: 0 out of 5 stars0 ratingsIthayam Oru Kovil Rating: 4 out of 5 stars4/5Kanna Unnai Thedugirean Rating: 0 out of 5 stars0 ratingsKowsalya! Rating: 0 out of 5 stars0 ratingsIrandu Manam Vendum Rating: 4 out of 5 stars4/5Madhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Ini Sogamillai! Rating: 0 out of 5 stars0 ratingsMannithuvidu Maayaa Rating: 5 out of 5 stars5/5Manase Manase Rating: 5 out of 5 stars5/5Netru Nila Indru Nee Rating: 5 out of 5 stars5/5Moongil Ilai Rating: 0 out of 5 stars0 ratingsSuvaril Nuzhaintha Vergal Rating: 4 out of 5 stars4/5Kadalalavu Aasai Rating: 0 out of 5 stars0 ratingsOru Malarin Payanam Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Vinnaivittu Vaa Kanne
0 ratings0 reviews
Book preview
Vinnaivittu Vaa Kanne - R.Manimala
1
கல்யாணி, காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி கண் மூடி வணங்கினாள்.
‘என் பொண்ணுக்கு ஏத்த மாதிரி நல்ல வரன் அமையணும். நான் எப்பவும் தீர்க்க சுமங்கலியாகவே இருக்கணும்!’
வெளியே ‘டமார்’ என்று இடிச் சத்தம் கேட்க, பட்டென கண் திறந்தாள்.
நேற்றெல்லாம் வலுத்துப் பெய்த மழை, இன்னமும் விடாமல் தேம்பித் தேம்பி அழுதுக்கொண்டிருந்தது.
போதும்... அவங்களை தொந்தரவுப் பண்ணினது. வர்றியா, பசிக்குது!
சாப்பாட்டு மேசை முன் அமர்ந்திருந்த சக்தி, தட்டில் மெல்ல தாளம் போட்டுக்கொண்டிருந்தாள்.
என்ன... கிண்டல் பண்றியா? சாமி கும்பிடக்கூட விடமாட்டேங்கிறே?
என்ன கும்பிடப் போறே? பொண்ணுக்கு கல்யாணமாகணும். எப்பவும் பூவும், பொட்டோட இருக்கணும். அதுக்காக அப்பாவுக்கு கூன் விழுந்து வளைஞ்சு நடக்கணும்னுதானே?
அடிப்பாவி!
வாயைப் பொத்திக்கொண்டாள். எப்படிடி இத்தனை சரியா சொல்றே... மனசுக்குள்ளே புகுந்து பார்த்த மாதிரி?
உன்னை மாதிரி பெண்களுக்கு வேற என்னம்மா வேண்டுதல் இருந்துடப் போகுது? மத்திய அரசு அதிகாரியா வேலை பார்க்கற புருஷன். ‘சாப்ட்வேர் கம்பெனியில ‘டீம் லீடரா’ நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கற- கல்யாணமாகாத அழகான பொண்ணு! ஒரு கோடி மதிப்புள்ள சொந்த வீடு. தேவையான வசதி வாய்ப்பு, வங்கி இருப்புன்னு அமர்க்களமா இருக்கிற கல்யாணிக்கு வேறென்ன வேண்டுதல் இருக்கப் போவுதாம்?
பாரேன்... பேர் சொல்லி பேசறதை?
ஏன்... சொன்னா என்னவாம்?
முழுக்கைச் சட்டையை அணிந்து கை பொத்தானைப் போட்டுக்கொண்டே மகள் பக்கத்தில் அமர்ந்தார் கைலாசம்.
உங்களாலதான் அவ கெட்டுப் போறா. பெத்தவங்களை பேர் சொல்லிக் கூப்பிடுறது என்ன மரியாதையாம்?
பேர் சொல்லத்தான்டி பிள்ளையைப் பெத்துக்கறோம்.
அப்படி சொல்லு கைலாசம்!
ஒரு கணம் அவர் திகைத்துதான் போனார்... மகள் அப்படிச் சொன்னதும்.
அம்மாடி... அப்பாவையே கவுத்துட்டியே!
சும்மா... உங்க பொண்டாட்டிய கலாய்க்க...
அழகாய் சிரித்த சக்தி, மலர்ந்த பூவைப்போல் கொள்ளை அழகாய் இருந்தாள். கன்னங்களில் விழுந்த சிறு குழிகளும், மோவாய் பள்ளமும் தனிப்பட்ட வசீகரத்தைத் தந்திருந்தன.
‘ஹாட்பேக்’கைத் திறந்து இடியாப்பம் எடுத்து இருவரின் தட்டிலும் வைத்து தேங்காய்ப்பால் ஊற்றினாள்.
என்ன கல்யாணி இது?
பார்த்தா தெரியலையா?
நக்கலாய் கேட்டாள் கல்யாணி.
ஓ... சேமியா உப்புமாவா?
பெரிதாய் வியந்துக் கேட்டார் கைலாசம்.
பொங்கிய சிரிப்பை சக்தி உள்ளுக்குள் மென்றாள்.
கல்யாணி கோபமாய் கணவரைப் பார்த்தாள்.
இதைப் பார்த்தா உப்புமா மாதிரியாத் தெரியுது... இடியாப்பம்.
இதானே வேணாங்கறது. பொய்தானே சொல்றே? பாரு... உதிரி உதிரியா இருக்கு.
நல்லாத்தானே பிழிஞ்சேன். சனியன், ஒழுங்கா வரலே? என்ன இப்ப? முழுசா அப்படியேவா முழுங்கப் போறீங்க? பிய்ச்சு பிய்ச்சுதானே சாப்பிடப் போறீங்க? தெனமும் எதையாவது குறை சொல்றதே வேலையாப் போச்சு உங்களுக்கு.
முகம் சிவந்து போனாள் கல்யாணி.
"உன்னைக் குறை சொல்லலேம்மா! செய்யறதை திருத்தமா செய்யின்னுதான் சொல்றேன். கல்யாணமாகி இருபத்தி ஆறு வருஷமாயிடுச்சு! என்னைக்காவது ஒரு நாள்... என் கல்யாணியும் நல்லா சமைக்கத்தான் போறாள்னு காத்துக்கிட்டிருந்தேன். இன்னமும் காத்திருப்பேன்.
சரி... சரி! சக்தி... சாப்பிடும்மா!" நடிகர் திலகம் தொனியில் பேசினார் கைலாசம்.
இது நாள்தோறும் நடக்கும் கூத்துதான். மனைவியை சீண்டிப் பார்க்காவிட்டால் கைலாசத்துக்கு அன்றைய நாள் இனிதாய் இருக்காது.
அப்ப... இத்தனை நாளும் என் சமையல் நல்லா இல்லேன்னா சொல்றீங்க?
ஒரேயடியா அப்படிச் சொல்லலேடா! ஏதோ சுமாரா இருக்கு.
அநியாயமா பேசாதீங்க!
அப்பாவை ஏம்மா கோவிச்சுக்கறே? போன வாரம்கூட நம்ம வீட்டுக்கு வர்ற பிச்சைக்காரன்,
சமைப்பது எப்படின்னு ஒரு புத்தகம் வாங்கிட்டு வந்து குடுத்தான்னு... அப்பா... அப்பா நீங்கதானே சொன்னீங்க?".
அம்மா முறைப்பதைப் பார்த்ததும் சமாளித்தாள்.
அதையும் நான் சொல்லிட்டேனா? அதைக்கூட விடு. நம்ம தெருவுல ஒரு கறுப்பு நிற நாய் இருந்துச்சே...
ஆமா... கொஞ்ச நாளா அதைக் காணோமே... நாய் வண்டிக்காரன்கிட்ட மாட்டிக்கிச்சா?
அப்படி மாட்டி இருந்தாக்கூட ஏதோ துள்ளாம துடிக்காம மேலே போய் சேர்ந்திருக்கும். சித்திரவதைப்பட்டு செத்ததும்மா!
எப்படிப்பா?
அதை உங்க அம்மாவையே கேளு!
சங்கடமும், கோபமும் எட்டிப் பார்க்க, ஏன் அதையும் நீங்களே சொல்லுங்களேன்...
முகத்தை திருப்பிக்கொண்டாள்.
சொல்லகூடாதுன்னு நினைச்சாலும் விடமாட்டீங்களே! போன வாரம் பங்கம்மா புளியெல்லாம் கரைச்சு விட்டு ‘மட்டன்’ குழம்புன்னு ஒரு ‘அயிட்டம்’ பண்ணாளே!
ஆமா... நான்கூட ரோஸ்லின் வீட்ல விசேஷம்னு அங்கே போய் சாப்பிட்டேன். ‘மட்டன்’ குழம்பை தவற விட்டுட்டேன்.
ஆயுசு கெட்டி! மிச்சமானதை எல்லாம் அந்த நாய்க்கு போட்டிருக்கிறா... பாவம் சக்தி அது... மறுநாள் காலையில நாக்குத் தள்ளி செத்துக்கிடந்ததை பார்க்கணுமே... கொடுமை!
போதும் என்னை அவமானப்படுத்தினது. இனிமே இந்த வீட்ல நான் சமைக்கமாட்டேன். யாரையாவது சமையல்காரிய வச்சுக்குங்க!
வேகமாய் சமையலறைக்குள் நுழைந்துகொண்டாள் கல்யாணி.
சாப்பிட்டு முடித்திருந்த கைலாசம் கை கழுவிக்கொண்டு சிரித்தபடி பின்தொடர்ந்தார்.
அசிங்கமாப் பேசாதே! நான் ஏன் சமையல்காரியை வச்சுக்கணும்? ரதி மாதிரி நீ இருக்கப்ப!
கல்யாண வயசுல பொண்ணை வச்சுக்கிட்டு கிழவனுக்கு நினைப்பைப் பாரு.
நான் கிழவனா?
கணவனும். மனைவியும் கிண்டலும், கொஞ்சலும், கோபமுமாய் பேசிக்கொண்டிருக்க....
சக்தி கையைக் கழுவிக்கொண்டு துடைத்தபடி சமையலறைக்குள் வர, - மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டு இருந்தார் கைலாசம்.
சென்சார்...
என்று சக்தி குரல் கொடுக்க, விலகினார் சங்கடத்துடன்.
எனக்கு தம்பி வேணும்னு இப்ப நான் எந்த கோரிக்கையும் வைக்கலையே... வரட்டுமா?
கண்ணடித்து சிரித்துவிட்டு நகர்ந்தாள்.
2
ஒரு வழியாய் சமாதானப்படுத்தி- சாப்பாட்டு மேசை முன் மனைவியை அமர வைத்தார் கைலாசம்.
நீயும் சாப்பிடு கல்யாணி!
தட்டில் எடுத்து வைத்தார்.
இல்ல... நீங்க ஆபீசுக்கு கிளம்பின பிறகு சாப்பிட்டுக்கறேன்!
சங்கோஜப்பட்டாள்.
ஏன்... நீ மட்டும் நல்லதா வேற ‘டிபன்’ செஞ்சு சாப்பிடப் போறியா?
திரும்பவுமா?