Nee En Nila
By R.Manimala
()
About this ebook
Read more from R.Manimala
Kalyaanamaalai Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Megame Rating: 0 out of 5 stars0 ratingsEn Vasam Naanillai Rating: 0 out of 5 stars0 ratingsKannellaam Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsUnnnai Thedum Nenjam Rating: 3 out of 5 stars3/5Manam Varuda Vanthaayaa Rating: 0 out of 5 stars0 ratingsSarkkarai Nilave Rating: 0 out of 5 stars0 ratingsEn Anbe Rating: 4 out of 5 stars4/5Vinnaivittu Vaa Kanne Rating: 0 out of 5 stars0 ratingsEn Piriyasagi Rating: 0 out of 5 stars0 ratingsMuththamida Aasai Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsPon Vaanam Panneer Thuvuthu Rating: 0 out of 5 stars0 ratingsKaalamellaam Naan Varuven Rating: 0 out of 5 stars0 ratingsPoovum Naanum Veru Rating: 0 out of 5 stars0 ratingsSuttum Vizhichsudare Rating: 0 out of 5 stars0 ratingsPoo Pookkum Neram Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla Rating: 0 out of 5 stars0 ratingsMalare Ennai Nerunkaathe Rating: 4 out of 5 stars4/5Aalayamaagum Mangai Manathu Rating: 0 out of 5 stars0 ratingsKan Simittum Neraththi Rating: 0 out of 5 stars0 ratingsAnthimazhai Pozhigirathu Rating: 0 out of 5 stars0 ratingsPoove Pen Poove Rating: 0 out of 5 stars0 ratingsPiriyaatha Varam Thaa Rating: 0 out of 5 stars0 ratingsPennalla Neeyoru Bommai Rating: 0 out of 5 stars0 ratingsUyire Urugaathey Rating: 0 out of 5 stars0 ratingsNee Kaatru... Naan Maram… Rating: 0 out of 5 stars0 ratingsMannikka Maattaayaa Rating: 5 out of 5 stars5/5
Related to Nee En Nila
Related ebooks
Nee En Nila Rating: 0 out of 5 stars0 ratingsAmutha Geetham Rating: 0 out of 5 stars0 ratingsஅமுத கீதம் Rating: 0 out of 5 stars0 ratingsMayamaan Rating: 5 out of 5 stars5/5Kaathal Thendral Veesumaa Rating: 0 out of 5 stars0 ratingsகாதல் தென்றல் வீசுமா? Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Indrum Naalaiyum Rating: 0 out of 5 stars0 ratingsT.R.vin Thernthedukkappatta Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaviriyai Pola... Rating: 0 out of 5 stars0 ratingsParapatharke Siragugal... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Pookkal Uthiruma? Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla Rating: 0 out of 5 stars0 ratingsநீயும் நானும் வேறல்ல... Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Puthaimanal Rating: 0 out of 5 stars0 ratingsMarabugal Murikindra Nerangal Rating: 0 out of 5 stars0 ratingsமனோரதம் Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Panithuli Ondru Rating: 0 out of 5 stars0 ratingsAayul Dhandani Rating: 5 out of 5 stars5/5Paangi Rating: 0 out of 5 stars0 ratingsSevvanathil Oru Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsNilavey Malarnthidu... Rating: 4 out of 5 stars4/5Irandavathu Thenilavu Rating: 0 out of 5 stars0 ratingsVanavil Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vandhal Rating: 2 out of 5 stars2/5Manasaiththadi Manikkuyile Rating: 4 out of 5 stars4/5Kannukkoru Vannakkili Rating: 5 out of 5 stars5/5Unnai Kandu Uyirthean Rating: 4 out of 5 stars4/5
Related categories
Reviews for Nee En Nila
0 ratings0 reviews
Book preview
Nee En Nila - R.Manimala
10
1
அதிகாலைப் பொழுது!
உடலை இதமாய் வருடும் குளிர்காற்று திறந்திருந்த ஜன்னல் வழியே அனுமதி இன்றியே குபுகுபுவென உள்ளே நுழைந்திருந்தது. மேல் பெர்த்தில் படுத்திருந்த சுமித்ரா கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். குளிரை, உடம்பில் ஊசியாய் துளைத்து இதமான அவஸ்தையை ஏற்படுத்தும் விதத்தை, நாற்று நட்டு வைத்த பயிரைப் போல குத்திட்டு நிற்கும் மயிர்க்கால்களை... ஒவ்வொன்றையும் அணு அணுவாக ரசிப்பவள்தான் சுமித்ரா. மார்கழி குளிரில் வெடவெடத்தபடி போர்வையை பயன்படுத்தாமல், கைகளை தொடைகளுக்கிடையில் பதுக்கி கேள்விக்குறி போல் சுருண்டு படுத்திருப்பது அவளுக்கு பிடித்தமான ஒன்று!
ஆனால், இப்போதெல்லாம் அப்படி இருக்க முடியவில்லை. உடம்பு அவள் விருப்பத்திற்கு தோதாய் ஒத்துழைப்பதில்லை. அவ்வளவு ஏன்? குளிரை ரசிக்கும் மனோபாவமே அகன்று போய்... ச்சே என்ற சலிப்புதான் எட்டிப் பார்க்கிறது.
தூக்கம் வராமல் புரண்டுபடுத்த சுமித்ராவுக்கு ரயிலைப் போலவே நெஞ்சமும் தடதடத்துக் கொண்டிருந்தது. இருள் பிரியாத அந்த அதிகாலைப் பொழுது வெளிச்சத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பது போலவே... அவள் மனமும் ஏதோ ஒன்றிற்காய் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தது. மணி என்னயிருக்கும்? கொஞ்சமாய் போர்வையை விலக்கி, தலையை உயர்த்தி மங்கலான இரவு விளக்கின் வெளிச்சத்தில் கையை உயர்த்தி வாட்சைப் பார்த்தாள். நாலரையைத் தாண்டியிருந்தது.
இன்னும் நான்குமணி நேரமிருக்கிறது... ரயில் சென்னையைத் தொட...!
முழுதாய் மூன்று வருடம் கழித்து... சென்னை மண்ணில் காலடி எடுத்து வைக்கப்போகிறாள்.
நினைத்தாலே உடம்பை ஒரு முறை தூக்கிப் போட வத்தது.
வரவேற்பு எப்படியிருக்கும்?
வெள்ளத்தோடு வந்ததெல்லாம் அது வடிந்து போகும் போது அதனோடு போய் விடுவது போல... அந்த துவேஷமெல்லாம் போயிருக்குமா?
அல்லது கடலில் கிடக்கும் பாறையைப் போல் அப்படியே வைத்தது.
அந்த மனிதர்களைச்... சட்டென மாறிவிடும் அவர்களை எளிதில் எடைபோட்டு விட மடியாது.
பிறகெப்படி... எந்த நம்பிக்கையில், தைரியத்தில் அவர்களை நோக்கிப் போகிறேன்?
சுமித்ரா நம்பிக்கையில்லாமல்தான் ரயில் ஏறினாள். அதுவும் அவளாக ஏறவில்லை. ஏற்றப்பட்டாள்.
மூணு வருட காலத்தில் ஒரே ஒரு லெட்டர் மட்டும்தான் அம்மா போட்டாள்.
‘சந்திரன் ஃபாரினுக்குப் போயிட்டான். நீ ஒருமுறை இங்கே வந்துவிட்டுப்போ... உன்னைப் பார்க்கணும் போலிருக்கு’ என்று எழுதியிருந்தாள்.
அதில் கூட வந்துவிட்டுப்போ... என்றுதான் இருந்ததே தவிர, நிரந்தரமாய் வந்துவிடு என்றிருக்கவில்லை.
‘பரவாயில்லை... அம்மாவிற்கு தன் மீதுள்ள பாசம் இன்னும் செத்துவிடவில்லை’ என்று சந்தோஷப்பட்டாள். நூறு முறையேனும் படித்து கண்ணீர் வடித்திருப்பாள்.
‘அம்மாவே எழுதிட்டாங்கயில்லே... போய்தான் பார்த்துட்டு வாயேன்’ என்று அவள் உடன் பணிபுரிந்த, ஒரே அறையில் தங்கியிருந்த சங்கரி சொன்னபோது சிரித்தபடி மறுத்தாள்.
இல்லே சங்கரி... என்னால இயல்பா யாரோடவும் பழக முடியாது. போலித்தனமா மரியாதைக்காக உறவை வளர்க்கிறதை விட இப்படி விலகியிருப்பதே நல்லது
என்றாள்.
ஆனால், ஒரு கட்டத்தில் போயே ஆக வேண்டும் என்று ஒரு சூழல், மனமும் கூட அவர்களைக் காண ஆசைப்பட்டது. ஆனாலும் ஒரு தயக்கம். இப்போதும் சங்கரிதான் அவளைக் கட்டாயப்படுத்தினாள்.
போலித்தனம், மரியாதைங்கற உன்... ஃபார்முலாவை ஒதுக்கி வச்சிட்டு போய்ட்டு வா சுமி! இப்போ நீ இருக்கிற நிலைமையில் அந்த சூழல் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஒரு நல்ல மாறுதலை, தேறுதலை தரும். டாக்டர் சொன்னதை மறந்து விட்டாயா? போய்ட்டு வா... அதான் அம்மாவே வரச்சொல்லி லெட்டர் போட்டிருந்தாங்கயில்லே?
அது ஒரு ஆறு மாசத்துக்கு முன்பு!
அன்புக்கு... வருஷக் கணக்கில்லை சுமி! பிரிவுதான் அன்பை வளர்க்கும்னு சொல்வாங்க!"
அப்படீங்கறியா?
ப்ச்... சஜஷன் கேட்கிற விஷயமில்லே இது! தைரியமா போய்ட்டு வா!
என்று கழுத்தை பிடித்து தள்ளாத குறையாய் தள்ளி தரதரவென இழுத்து வந்து ரிசர்வ் செய்த சீட்டில் அமரவைத்து நெற்றியில் முத்தமிட்டாள் சங்கரி.
அத்தனை விரட்டலும் சுமித்ராவின் நன்மைக்காக! சரி... ஆனது ஆகட்டும் என்று இவளும் புறப்பட்டு விட்டாள்.
ஆனால், சென்னை நெருங்க... நெருங்க... பயம், தொண்டையை இறுக்கிப் பிடித்தது...
பெருமூச்சுடன் மெல்ல அந்தக் கம்பார்ட்மென்ட்டைக் கண்களால் துழாவினாள்.
ரயிலின் சீரான தாலாட்டலில் உடம்பு ஆட, அவளைத் தவிர அத்தனை பேரும் நல்ல தூக்கத்தில் இருந்தார்கள். இவளுக்கு நேர் எதிர் பதத்தில் ஐம்பது வயதான அம்மா லேசாய் வாய் பிளந்தபடி கறுப்பு பெட்ஷீட்டை கழுத்து வரை போர்த்திக் கொண்டு உறங்கிக்கொண்டிருந்தாள்.
நல்ல கலையான முகம் அந்தம்மாவிற்கு. நாலணாவுக்கு ஒரு சுற்று குறைவான சைஸில் குங்குமப் பொட்டு சிவந்த நிற முகத்திற்கு... மிக அழகாக, மங்களகரமாக இருந்தது.
சுமித்ரா அவளையே விடியும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்றது. சூடான காபி, இட்லி, சாம்பார், வடை, என்று குரல்கள் எல்லோரையும் சேவல் கூவாமலே எழுப்பியது.
சரசரவென சுறுசுறுப்பாய் போர்வை உதறி, கொட்டாவியை அலட்சியம் செய்து பாத்ரூமில் இடம் பிடிக்க முதல் ஆளாய் ஓடுவதில் பரபரப்பாய் செயல்பட்டனர்.
ஒரு சிலர் முகம் கழுவாமல், வாய் கூட கொப்புளிக்காமல், அப்படியே காபியை வாங்கிக் குடிப்பதைப் பார்த்து சுமித்ராவுக்கு குமட்டியது.
‘பெட்காபி’ என்பார்கள். இதை இப்படித்தான் குடிக்க வேண்டும் என்று விளக்கம் வேறு கூறுவார்கள். கர்மம்டா சாமி!
எப்படித்தான் குடிக்கிறார்களோ? சுமித்ராவுக்கு பல் விளக்கி குளித்தபின் தான் காபி குடித்துப்பழக்கம்.
இங்கு அது முடியாது! ஆனால் கொஞ்சமாவது கருணை வைத்து காபியை தொடேன் என்று வறண்ட தொண்டை கெஞ்ச ஆரம்பித்தது.
சுமித்ரா கீழே இறங்கி தன் பேகிலிருந்து பிரஷையும் பேஸ்ட்டையும் கூடவே கையோடு கொண்டு வந்திருந்த வாட்டர் பாட்டிலையும், எடுத்துக் கொண்டு பிரஷ் செய்ய ஆரம்பித்தாள்.
வாயைக் கொப்புளித்து முகத்தையும் கழுவி துடைத்துக் கொண்டு ஒரு காபியை வாங்கிக் கொண்டு தன் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள்.
வாயில் வைக்க முடியவில்லை. பயங்கரமாய் கொதித்தது. லேசாய் ஊதி ஒரு சிப் உள்ளே இறக்கியிருப்பாள்.
ஏய்... மித்ரா...
என்ற பழகிய குரல் வெளியே பக்கவாட்டிலிருந்து வரவும்... திடுக்கிட்டுத் திரும்பவும்... காபி சிலும்பி கையை முத்தமிட... சூடு பொறுக்க மாட்டாமல் கீழே தவற விட்டாள்
நல்ல வேளை யார் மீதும் படவில்லை!
அடடா...
என்று எதிர் சீட்டுக்காரர் பரிதாபப்பட்டதைக் கூட கவனிக்காமல் பார்வையை வெளியில் படரவிட்டாள்.
எங்கே... எங்கே அவன்?
ஏய்... மித்ரா... ஓடாதே... ஏய் வாலு...!
ஒரு முப்பது வயது இளைஞன் ஐந்து வயது மகள் பின்னாடி விரட்டி ஓடிக் கொண்டிருந்தான். இவன் யாரோ?
ச்சே...
என்று தன்னையே கடிந்து கொண்டவள் தனக்குத் தானே சிரித்துக்கொண்டாலும்... சற்றே ஏமாற்றமாகவும் உணர்ந்தாள்.
அவளை இந்த உலகில் அத்தனை பேரும், சுமி, சுமித்ரா