Poo Pookkum Neram
By R.Manimala
()
About this ebook
Read more from R.Manimala
Kalyaanamaalai Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Megame Rating: 0 out of 5 stars0 ratingsEn Vasam Naanillai Rating: 0 out of 5 stars0 ratingsKannellaam Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsManam Varuda Vanthaayaa Rating: 0 out of 5 stars0 ratingsSarkkarai Nilave Rating: 0 out of 5 stars0 ratingsUnnnai Thedum Nenjam Rating: 3 out of 5 stars3/5En Anbe Rating: 4 out of 5 stars4/5Vinnaivittu Vaa Kanne Rating: 0 out of 5 stars0 ratingsEn Piriyasagi Rating: 0 out of 5 stars0 ratingsMuththamida Aasai Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsPon Vaanam Panneer Thuvuthu Rating: 0 out of 5 stars0 ratingsKaalamellaam Naan Varuven Rating: 0 out of 5 stars0 ratingsKan Simittum Neraththi Rating: 0 out of 5 stars0 ratingsPoovum Naanum Veru Rating: 0 out of 5 stars0 ratingsSuttum Vizhichsudare Rating: 0 out of 5 stars0 ratingsAalayamaagum Mangai Manathu Rating: 0 out of 5 stars0 ratingsNee Kaatru... Naan Maram… Rating: 0 out of 5 stars0 ratingsMalare Ennai Nerunkaathe Rating: 4 out of 5 stars4/5Anthimazhai Pozhigirathu Rating: 0 out of 5 stars0 ratingsPoove Pen Poove Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla Rating: 0 out of 5 stars0 ratingsMannikka Maattaayaa Rating: 5 out of 5 stars5/5Pennalla Neeyoru Bommai Rating: 0 out of 5 stars0 ratingsPiriyaatha Varam Thaa Rating: 0 out of 5 stars0 ratingsUyire Urugaathey Rating: 0 out of 5 stars0 ratings
Related to Poo Pookkum Neram
Related ebooks
பூ பூக்கும் நேரம்… Rating: 0 out of 5 stars0 ratingsKraim Dot Kaam Rating: 0 out of 5 stars0 ratingsமுத்தமிட ஆசை! Rating: 0 out of 5 stars0 ratingsMuththamida Aasai Rating: 0 out of 5 stars0 ratingsPallavi Anupallavi Maranam Rating: 0 out of 5 stars0 ratingsAalayamaagum Mangai Manathu Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kodi Sumanthu! Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsKuttram Azhaikkirathu Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Kalavu Sei Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Kuttrangal Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Sikkiya Minnal Rating: 0 out of 5 stars0 ratingsNinaivennum Sannathiyil? Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Jeevan Rating: 5 out of 5 stars5/5என் வசம் நான் இல்லை... Rating: 0 out of 5 stars0 ratingsWelcome To Martuary Rating: 5 out of 5 stars5/5வெல்கம் டூ மார்ச்சுவரி Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathai Thodalama? Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Nerathu Udhayangal Rating: 0 out of 5 stars0 ratingsUyir Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsKolla Theriyavillai! Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Moochu...! Rating: 0 out of 5 stars0 ratingsUchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsNaamirukkum Naadu Rating: 0 out of 5 stars0 ratingsPanthaya Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aval Theevu Rating: 5 out of 5 stars5/5Aabathu Odi Vidu Rating: 5 out of 5 stars5/5Iduppu Siruthavale Rating: 5 out of 5 stars5/5இடுப்பு சிறுத்தவளே… Rating: 0 out of 5 stars0 ratingsNinaithathu Yaro... Neethaney! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Poo Pookkum Neram
0 ratings0 reviews
Book preview
Poo Pookkum Neram - R.Manimala
1
கிழக்கு நோக்கி கம்பீரமாய் நின்றிருந்தது அந்த பிரம்மாண்டமான பங்களா! விடியலை பிரசவித்து சில நிமிடங்களே ஆகியிருந்தன. சூரியனின் பிஞ்சுக் கதிர்கள் பங்களாவின் கிரானைட் சுவர்களுக்கு மேலும் பளபளப்பு ஏற்றிக்கொண்டிருந்தன.
பங்களாவைச் சுற்றி மதில் சுவர் கட்டி... அதன்மேல் உடைந்த கண்ணாடி சில்லுகளைப் பொருத்தியிருந்தனர்.
புற்களை மோப்பம் பிடித்தபடி நாலைந்து உயர்ரக நாய்கள் ரோந்து போக... அவற்றை இணைத்திருந்த சங்கிலிகளைக் கொத்தாய்... கெட்டியாய்ப் பிடித்தபடி... அவை இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடிக்கொண்டிருந்தான்... வேலையாள் தேசப்பன்.
ஏலே... இதுங்களை அங்கிட்டு இழுத்துட்டுப் போலே...
கண்களில் பயம் தேங்கியிருக்க... செடிகளுக்கு ரப்பர் குழாய்மூலம் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த முண்டாசு கட்டியிருந்த முத்துசாமி, தேசப்பனிடம் கூற... சிரித்தான் தேசப்பன்.
இதுங்க குழந்தைங்கமாதிரி. ஏன் அண்ணாச்சி... இதுங்களைப் பார்த்து பயப்படறீங்க?
நான் குழந்தையா இருந்தப்ப... இந்த மாதிரி குழந்தை ஒண்ணு... தொடை சதையை கவ்விடிச்சி. தொப்புளை சுத்தி ஊசி போட்டாக... பயம் வராம பாசமா வரும்? அங்கிட்டு இழுத்துட்டுப் போவியா?
என்றார் முத்துசாமி.
வாய்விட்டு சிரித்தபடி அவற்றை இழுத்துக்கொண்டு சென்றான் தேசப்பன்.
முத்து...
குரல் கேட்டுத் திரும்பிய முத்துசாமியின் உடம்பு தன்னிச்சையுடன் பணிவாகக் குனிந்தது.
காரணம்- தனுஷ்கோடி. முதலாளி. பல ஆயிரம் குடும்பங்களுக்கு சோறு போடும் பெரும் தொழிலதிபர்: அவ்வளவு காலையிலேயே உதட்டில் புகைக்குழாய் செருகி இருந்தார்.
ஐயா...!
ரப்பர் குழாயைக் கீழே போட்டுவிட்டு இரு கைகளையும் மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டான் முத்துசாமி.
அதோ... அந்தத் தென்னைமரத்துக்கீற்று பால்கனி ஜன்னலை உராயுது பார். அந்தக் கீற்றை மட்டும் வெட்டி எறிஞ்சிடு!
சரிங்கய்யா!
தனுஷ்கோடி, நகரத்தின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர். இல்லாதவர்களுக்கு உதவும் மனம் உடையவர். அவருக்கு ஒரே ஒரு பிள்ளைதான் உதயகுமார்!
அழகான இளைஞன். அப்பாவைப் போன்றே நல்ல இதயம் கொண்டவன். அப்பாவின் எண்ணற்ற கம்பெனிகளில் சிலவற்றை தன் மேற்பார்வையில் நிர்வகித்து வருபவன்.
பிரம்மாண்டமான அந்த பங்களாவில் முதல் மாடியில் விசாலமாக அமைந்திருந்தது உதயகுமாரின் படுக்கையறை! ஏ.சி. காற்றில் மருக்கொழுந்து மணமும் கலந்திருக்க... சிறுபிள்ளை போல்... நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்தான் உதயகுமார்.
உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாதவனாயிருந்தாலும்... கட்டுமஸ்தான உடல் அவனுக்கு. சந்தனநிற தேகத்தில் மார்பு ரோமங்கள் கூட அவனுக்குக் கவர்ச்சியாய்த்தானிருந்தன. களையான முகம். உறக்கத்திலும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற உதடுகள். தலைகொள்ளா முடி... முன்நெற்றியிலும் காதல் புரிந்துகொண்டிருந்தன. மேலுதடை மறைத்த அடர்த்தியான மீசை, அவன் சிரிப்புக்குக் கூடுதல் கவர்ச்சியைத் தந்தது.
அவனின் அழகான நெஞ்சுக்குள் அழகிய யுவதி ஒருத்தி... ஆலமரம் போல் கிளை பரப்பி... ஆழமாய்ப் பதிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
தொலைபேசி சிணுங்கியது.
உதயகுமாரின் உறக்கம் கலைந்தது.
கண்களைத் திறக்காமலேயே கையை உயர்த்தி... எட்டும் உயரத்தில் இருந்த தொலைபேசியை எடுத்தான்.
அலோ...!
என்றான் கரகரப்பாக.
அலோ... காலை வணக்கம் சார்! மரியா பேசறேன்!
காலை வணக்கம்... என்ன விசயம் சொல்லுங்க?
காலையிலே எழுப்பிவிடச் சொன்னீங்க சார்!
என்றாள் மரியா. அவனுடைய தனிச் செயலாளர்.
முழுதாய்க் கண்களைத் திறந்த உதயகுமாரின் உறக்கமெல்லாம் பறந்தோடிவிட்டது.
ஓ... ஆமா... ஆமா! இன்னைக்கு மலேசியக் குழுவை விமான நிலையத்துல வரவேற்கப் போகணுமில்ல? விமானம் எத்தனை மணிக்கு?
எட்டு முப்பதுக்கு சார்.
ஓக்கே!
என்றபடி ரிசீவரை வைத்துவிட்டு கட்டிலைவிட்டுக் கீழிறங்கினான்.
கீழ் அறையில் தனுஷ்கோடி அமர்ந்திருந்தார். யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவர் இவனைப்பார்த்ததும், ஓக்கே... அப்புறம் பேசுவோம்! நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும். ஏற்பாடுகள் பக்காவாக இருக்கணும்!
என்று கூறிவிட்டு வைத்தார்.
அப்பாவுக்கு வணக்கம்.
வணக்கம் என் செல்ல மகனே!
ஏய் காபி!
என்று வேலையாளுக்கு உத்தரவைப் பிறப்பித்து விட்டு அப்பாவைப் பார்த்துப் புன்னகைத்தான்.
நீங்க காபி சாப்பிட்டாச்சா அப்பா?
ம்... ஆச்சு உதய்! இன்னைக்குதானே மலேசியக் குழுவினர் வர்றாங்க?
ஆமாப்பா! சரியா எட்டரை மணிக்கு நான் விமான நிலையத்துல இருந்தாகணும்!
ஏன் உதய்? நீ ஏன் ஓடறே? ஜி.எம். என்ன பண்றான்? அவனை அனுப்பவேண்டியதுதானே?
இல்லை அப்பா! இந்தக் குழுவால் நமக்கு வியாபாரத்துல நிறைய ஆதாயம் இருக்கு. நானே போய் வரவேற்றால்தான். மரியாதையா இருக்கும்!
வேலையாள் பணிவாய் நீட்டிய காபியை எடுத்து உறிஞ்சியவன், தந்தி எங்கே?
என்றான்.
இதோ கொண்டுவரேங்கய்யா!
என்றவன் அடுத்த சில நொடிகளில் ஆங்கில, தமிழ் தினசரிகளைக் கொண்டுவந்து தந்தான்.
தினத்தந்தியை எடுத்துப் பிரித்தவன், இரண்டாவது பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தியைப் பார்த்தான். அவன் முகம் பூவாய் மலர்ந்தது.
அ... அப்பா... பார்த்தீங்களா?
என்றான் பரவசமாய்.
என்னப்பா? லாட்டரியிலே நூறு கோடி பரிசு விழுந்தவன் மாதிரி மகிழ்ச்சி அடையுறே? என்ன விசயம்?
எனக்கெதுக்கு அப்பா நூறு கோடி? அதைவிட பெரிய இன்பச் செய்தி அப்பா!
என்னன்னுதான் சொல்லேன்!
என்றார் சிரிப்பை உதட்டுக்கிடையில் மென்றபடி.
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கல்பனா இடமாற்றம். நாளை சென்னையில் பதவியேற்கிறார்.
ஓ... இதுதானா? இதுக்கா அப்படி குதிச்சே?
என்றார் சாதாரணமாய்.
அ... அப்பா! நம்ம கல்பனாப்பா! நாளைக்குக் கல்பனா, சென்னைக்கு வரப்போகிறா! இந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரலியா?
அதிர்ச்சியுடன் அப்பாவைக் கேட்டான்.
அதற்குமேல் மகனை வேதனைப்படுத்த விரும்பாமல் வாய்விட்டுச் சிரித்தார் தனுஷ்கோடி.
வியப்பாய்ப் பார்த்தான் உதயகுமார்.
உனக்குக் கல்பனா வரப்போகிற விசயம் இன்னைக்குதானே தெரியும்? எனக்கு நாலு நாள் முன்னாடியே தெரியும். கல்பனா போன் பண்ணி சொல்லிட்டா!
ஏன் என்கிட்டே சொல்லலே?
என்றான் ஏமாற்றமாய்.
இப்படியொரு இன்ப அதிர்ச்சி தர்றதுக்குதான்!
நல்ல இன்ப அதிர்ச்சி!
என்றவன் சடாரென அந்த இடத்தைவிட்டு எழுந்தான்.
2
"எங்கே எழுந்துபோகிறே?"
"எனக்கு ஏகப்பட்டவேலை இருக்கு அப்பா! என்றவன் போனை எடுத்து எண்களை அழுத்தினான்.
அலோ... மரியா! நான் விமான நிலையத்துக்குப் போக முடியாது. குணாளனை போகச் சொல்லு! மலேசியக் குழுவை இப்ப சந்திக்க முடியாது. அஞ்சு நாள் கழிச்சு நேரம் கொடு. அஞ்சு நாளைக்கு நான் ஆபீசுக்கு வரமாட்டேன். என் கையெழுத்துத் தேவைப்படற கோப்புகளை வீட்டுக்கு அனுப்பு. ஓக்கே!
ரிசீவரை வைத்தான்.
உதயா... என்னாச்சு உனக்கு? ஒரு அஞ்சு நிமிடம் முன்னாடிதான் விமான நிலையம் போகணும். மலேசியக் குழுவை நானே தான் வரவேற்கணும். அவங்களால் ஆதாயம் இருக்குன்னு சொன்னே! இப்ப என்னடான்னா, போன் பண்ணி குணாளனை போகச் சொல்றே! அஞ்சு நாளைக்கு ஆபீஸ் பக்கமே தலைவைச்சுப் படுக்கமாட்டேன்னு சொல்றே! என்ன ஆச்சு உனக்கு?
ஆச்சரியமாகக் கேட்டார்.
"என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? நம்ம கல்பனா வரப்போகிறா! அதுவும் நாளைக்கே!