Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuttram Azhaikkirathu
Kuttram Azhaikkirathu
Kuttram Azhaikkirathu
Ebook97 pages1 hour

Kuttram Azhaikkirathu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466794
Kuttram Azhaikkirathu

Read more from N.C.Mohandass

Related to Kuttram Azhaikkirathu

Related ebooks

Related categories

Reviews for Kuttram Azhaikkirathu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuttram Azhaikkirathu - N.C.Mohandass

    1

    ஏப்ரல் 1991.

    "வேன் வந்திருச்சு. சீக்கிரம் புறப்படுங்க! என்று ஆரவமுதன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வீட்டிற்குள் ஓடினார். அங்கே தலைவாரிக் கொண்டிருந்த மனைவியிடம், இன்னும் நீ ரெடியாகலியா...?"

    ஆச்சுங்க. இதோ ரெண்டு நிமிஷத்துல வந்துர்றேன்!

    அம்பது வயசுல இத்தனை அலங்காரம் தேவையா. மாப்பிள்ளை எங்கே?

    இதோ! நான் இங்கே இருக்கேன் மாமா! என்று அவரது மகளுடன் திருட்டுத்தனம் பண்ணின களையோடு அறையிலிருந்து வெளிப்பட்டான். தொடர்ந்து தன் சேலையை சரி பண்ணிக்கொண்டு வசுமதியும்.

    சீக்கிரம் போய் வண்டியில ஏறுங்க. ஃப்ளைட்டுக்கு நேரமாகுது!

    துபாய் ஃப்ளைட் நாலு மணிக்குத்தானே!

    சொல்ல முடியாது. முன்னாடியே வந்தாலும் வந்திரும். அப்புறம் நாம வரலேன்னு நினைச்சுட்டு அஜய் டாக்ஸி பிடிச்சு வந்திரப் போறான்! அவனை நாம் ஏமாத்தப்படாது!

    ஆமாமாம்... ஏற்கனவே அண்ணனை ரொம்ப ஏமாத்தியாச்சு என்று வசுமதி, முணுமுணுக்க,

    என்னடி சொல்றே?

    அது வந்துப்பா... வந்து, நீங்க வண்டியில வாங்க. நான் கடைவீதியில் என்னோட ப்ளவுஸை வாங்கிட்டு...

    ஏண்டி ப்ளவுஸ் வாங்கற நேரமா இது? முன்னாடியே வாங்கி வச்சுக்கக்கூடாது? வேலு வெளியே ஒப்புக்கு கேட்டு கண் சிமிட்டினான். சும்மா ஒரு பேச்சுக்கு!

    நான் என்ன பண்றதாம்! ஆளை வெளியே விட்டால்தானே! என்று அவனது இடுப்பில் கிள்ளினாள்.

    ப்ளவுஸ் எங்கேடி கொடுத்திருக்கே?

    சர்ச் பக்கத்து வீட்டுக்கு புதுசாய் வந்திருக்கிற டெய்ஸியிடம்.

    மசமசன்னு பேசிட்டே நிற்காம சீக்கிரம் போய் வாங்கி அங்கேயே போட்டு பார்த்துட்டு வந்திரு! என்று அம்மா விரட்ட சரிம்மா என்று வசுமதி தெருவில் இறங்கி ஓட ஆரம்பித்தாள்.

    வழியில் தண்ணீர் எடுத்து வந்தப் பெண் என்னடியம்மா - இன்னைக்கு ஒரே துள்ளல்?

    எங்கண்ணன் துபாய்லிருந்து வருது. ஏர்போர்ட்டுக்குப் போறோம்!

    அப்படியா... உங்கம்மா சொல்லவேயில்லையே! என்றவள், சரி...சரி நெத்தியில் பொட்டெல்லாம் கலைஞ்சிருக்கு பார்! மாப்பிள்ளை ரொம்பவே களை பறிச்சிட்டார் போலிருக்கு!

    சீ. போங்கத்தே!

    சர்ச்சுக்கு பின்புறம் அந்த வீடு பாசி படர்ந்திருந்தது. திண்ணையில் சிமெண்ட் பெயர்ந்து எறும்புகள் கும்பல் கும்பலாய் மணல் துகள்களை குவித்திருந்தன.

    வசுமதி உள்ளே எட்டிப்பார்த்து டெய்ஸிக்கா! என்று கத்த இதோ வந்துட்டேன்! என்று கொசுவத்தை இடுப்பில் செருகிக்கொண்டு இருபத்திரண்டு ஒன்று வெளியே வந்தது.

    அவளது சேலையில் எண்ணைய் பிசுக்கு. ஊருக்கெல்லாம் ப்ளவுஸ் தைத்துக் கொடுத்தாலும் அவளது ப்ளவுஸைத் தைக்க நேரமில்லை. மனசுமில்லை! கக்கப் பகுதியில் விரிசல்! ஒட்டின வயிறு. முகத்தில் மாத்திரம் மலர்ச்சி. கவர்ச்சி!

    அக்கா! என் ப்ளவுஸ்!

    எப்பவோ ரெடி! போட்டு பார்க்கிறாயா? என்று எடுத்து நீட்டினாள்.

    வசுமதி மறைவுக்குப் போகாமல் அங்கேயே ரவிக்கையை கழற்றி மாட்டி, கண்ணாடியிடம் நின்று சரியாயிருக்கா... நான் வரேன்க்கா! என்று அழகு பார்த்தாள். நானும் எத்தனையோ டைலரிடம் தைச்சு பார்த்துட்டேன். இத்தனை கச்சிதமாய் யாருமே தைக்கலை! நீங்க வந்த பின்புதான் எங்களுக்கு நிம்மதி!

    உங்கண்ணன் எத்தனை மணிக்கு வரார்? உனக்கு என்னென்ன வாங்கி வராராம்?

    தெரியல.

    உன்னை பார்த்தா பூரிச்சுப் போவாரில்லே? கல்யாணத்துக்கு முந்தி போனவர் இப்போதான் வரார்ன்னு சொன்னாங்களே!

    உடனே டெய்ஸியின் முகம் வாடுவதை கண்ட வசுமதி, அக்கா! உங்கண்ணனும் துபாய் போயிருப்பதாய்க் கேள்விப்பட்டேன்... அவர் எப்போ வராராம்?

    அந்த பகவானுக்கே வெளிச்சம்! வசு! நீ கொடுத்து வெச்சவ. உனக்கு அப்பா - அம்மா இருக்கா! அண்ணா! மனச நிறைஞ்ச ஆத்துக்காரர்!

    அக்கா! நான் வரட்டுமா... வாசலில் வேன் வந்து நிக்கிது. அப்புறம் அப்பா திட்டுவார்! வேன் ஹாரனடிக்க இதோ வந்துட்டேன்பா! என்று ஓட ஆரம்பித்தாள்.

    2

    திருச்சி ஏர்போர்ட்,

    ஷார்ஜா விமானம் எப்போ வரும் எப்போ வருகிறது என்று ஆரவமுதனின் நச்சரிப்பு தாங்காமல் ‘என்கொயரி’ நபர் காணாமல் போக வேண்டி வந்தது.

    ஒருமணி நேர காத்திருப்பிற்கு பிறகு விமான வரவு.

    மாடிக்கு ஓடி அண்ணன் தெரிகிறதா என்று வசுமதி கண்ணாடி தடுப்பில் மூக்கை நசுக்கிக்கொண்டு பார்த்தாள்.

    தெரியவில்லை. யார் யாரோ அங்கிருந்து கையாட்டினார்கள். இங்கிருந்து காலரியிலும் பதிலுக்கு கையசைப்பு.

    சற்று நேரத்தில் சலசலப்புடன் ஆட்களின் வரவு. டிராலிகள்! கன்வேயரில் தடிதடியாய் பெட்டிகள்! சூட்கேஸ்கள்!

    அஜயை அவர்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லை. எஸ்கலேட்டர் நின்றுப் போக, அப்பா! அண்ணன் வரலே போலிருக்கே!

    இல்லை. வந்திருப்பான்

    அப்போது அஜய், அருகில் யாருடனோ பேசிக்கொண்டு மாடிப்படி இறங்கி வந்தான். அவன் முன்பிருந்ததைவிட சற்று தடித்திருந்தான். முடியின் அடர்த்தி குறைந்திருந்தது. கூலிங் கிளாஸில்லை. கழுத்தில் செயினில்லை. கையிலும் சாதா வாட்ச்!

    வசுமதிக்கு அவனை பார்க்க சற்று ஏமாற்றமாகத்தானிருந்தது. அண்ணன் மாறவில்லை என்று அறிந்ததில் சற்று நிம்மதி! பணம் வந்ததும் அண்ணன் எங்கே என்னையெல்லாம் மறந்துவிடுமோ என்று

    Enjoying the preview?
    Page 1 of 1