Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Siththi
Siththi
Siththi
Ebook44 pages18 minutes

Siththi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466817
Siththi

Read more from N.C.Mohandass

Related to Siththi

Related ebooks

Related categories

Reviews for Siththi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Siththi - N.C.Mohandass

    1

    "கார் வந்திருச்சு... கார் வந்திருச்சி! தோட்டக்காரன் தெருமுனையிலிருந்து ஒலி பரப்பிக்கொண்டு ஓடிவர, காரியஸ்தன் உடன் உஷ்ணம் பெற்று வாட்ச்மேன்! நான் சொன்னதெல்லலாம் ஞாபகமிருக்கில்லே?" என்று கத்தினான்.

    இருக்குங்க, கதவை திறந்து விட்டுட்டு, ஐயாவும் சின்னம்மாவும் இறங்கும் போது பட்டாஸ் கொளுத்தணும்!

    ஆமாம், யோவ் சமையல்! நீ டேப்பை ஆன் பண்ணி மங்கள இசை! வேலைக்காரி நீ?

    ஆரத்திங்க என்று அவள் தட்டை நீட்டினாள். இடுப்பில் கொத்தாக இருந்த பட்டுப் புடவையை சரிபண்ணிக் கொண்டாள். என்னவோ தனக்குத்தான் விசேஷம் என்பது போல தலையில் சூடியிருந்த மல்லிகைப் பந்தலை பரப்பி விட்டுக் கொண்டாள். மாடியிலிருந்து காம்பவுண்ட் வரை தோரணங்கள் படபடத்துக் கொண்டிருந்தன.

    குழந்தைங்க எங்கே?

    அதுங்க எதுக்கு சாமி! வம்புதானே!

    அப்போது மொட்டை மாடியில் பசங்களின் கால்கள் தெரிந்தன. அவர்கள் சுவற்றுக் கட்டையின் மேல் கால்களை ஆட்டிக்கொண்டு ஒரு தினுசாய் அமர்ந்திருந்தனர்.

    ஏய்... ராம்! சங்கர்! கீழே இறங்கி வாங்க! அங்கே என்ன பண்றீங்களாம்!

    ம்... காலாட்டிக்கிட்டிருக்கோம். பார்த்தா தெரியலே? என்றவர்களுக்கு வயது முறையே எட்டு, ஐந்து! இரண்டுமே வானரங்கள். வாலில்லா குறைதான்! எப்போதும் எதிலாவது தொற்றிக் கொண்டுதானிருக்கும்ங்கள்!

    அதற்குள் காரின் ஹாரன்.

    எல்லோரும் தத்தம் பணிகளை செவ்வனே செய்தனர். கேட் - திறக்கப்பட்டது. கார் உள்ளே பாய்ந்ததும் பட்... பட் படார்! டமால்! உஷ்...! விஷ்க்கென ராக்கட் கிளம்பி போய் டம்!

    கார் வாசலில் நின்றதும் மங்கள இசை!

    கதவை திறந்து கொண்டு முதலில் சுப்பு இறங்கினான். அவனுக்கு நாற்பது நரைகள்! என்னதான் சாயம் பூசப்பட்டிருந்தாலும் காதோரம் வெண்மையின் சிலிர்ப்பு இருக்கவே செய்தது.

    அவன் தான் எஜமானன்.

    அவனைத் தொடர்ந்து கொலுசு கால்கள் நிலம் பதிந்தன. பட்டுப்புடவை கொஞ்சம் கசங்கி, வயிற்றை வெளிச்சம் போட, மிதுனா அதை இழுத்துவிட்டுக்கொண்டு புன்னகையும், நகையுமாய் நிற்க, வேலைக்காரி ஆரத்தியுடன் ஓடிவந்தாள்.

    சுப்பு காரியஸ்தனை முறைத்து, ஏய்... என்ன இதெல்லாம்?

    எல்லாம் ஒரு ஐஸ்வர்யத்துக்குதாங்க!

    யாரைக் கேட்டுட்டு இதெல்லாம்? என்று தோரணத்தை பார்த்து முகம் சுளித்தான். எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு தெரியுமில்லே!

    "என்னங்க நீங்க? ஊழலுக்காக ஜெயிலுக்குப் போயிட்டு வரவங்களுக்கே பிரமாதப்படுத்தறாங்களாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1