Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poovizhi Punnagai
Poovizhi Punnagai
Poovizhi Punnagai
Ebook40 pages14 minutes

Poovizhi Punnagai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466800
Poovizhi Punnagai

Read more from N.C.Mohandass

Related to Poovizhi Punnagai

Related ebooks

Related categories

Reviews for Poovizhi Punnagai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poovizhi Punnagai - N.C.Mohandass

    1

    சரியாய் ஒன்பது மணிக்கெல்லாம் புறப்பட்டுவிடும் என்றார்களே - ரயில் இன்னும் ஏன் வரவில்லை? இன்னும் எவ்ளோ நேரம்தான் காத்திருப்பதாம்!

    வாட்ச்சைப் பார்த்தேன். ஆகாய வெளுப்பில் ஒன்பதரை காட்டிற்று. நான் காத்திருந்தது ஸ்டேஷனில்லை.

    அது அனாந்திரகாடு, நீண்ட தூரத்திற்கு ஜனசந்தடியே இல்லை. இரண்டு பக்கமும் புதர்களும் முள் மரங்களும் நிரம்பியிருக்க, தண்டவாளம் மட்டும் நீண்டு கொண்டுப் போயிற்று.

    கொஞ்சம் தள்ளி ஹைவே! அதில் லாரிகள் உறுமிக் கெண்டிருந்தன அல்லது நிறுத்தி இன்டர்வெல் போயின. தலைக்குமேல் மின்சார ‘கம்பங்கள்! காற்று அதன் கம்பிகளில் தாக்கி உய்ய்ங் உய்ய்ங் என்று நெஞ்சை கலக்குகிற மாதிரி ஆலோலம்.

    வானத்தில் நட்சத்திர பட்டாளம். நிலவைக் காணவில்லை. தூங்கப் போயிருக்க வேண்டும்!

    எனக்கும் தூக்கம் வந்து கொட்டாவி!

    சொடக்கு போட்டுக்கொண்டு சரளை கற்களில் நடந்தேன். தூங்கதானே வந்திருக்கிறேன்!

    ஆனால் மீளாத தூக்கம்!

    முப்பது வயதில் ஒரு இளைஞனுக்கு இத்தனை பாரம் கூடாது!

    குரு! உன்னை நம்பிதான் அஞ்சு பிள்ளைகளையும் விட்டுட்டுப் போறேன்! நீதான் அவர்களை கரைசேர்க்கணும்!

    அப்பா எளிதாய் டயலாக் பேசிவிட்டு எளிதாய் செத்துப் போய்விட்டார். அவருக்கு நல்ல சாவு என்று ஊர் பேசிற்று. எந்த வித சேமிப்பும் இல்லாமல், பசங்களுக்கு எந்த முன்னேற்பாடும் செய்துவைக்காமல் கண்களை மூடுவதற்கு பெயர்தான் நல்ல சாவா?

    அதெல்லாம் ஒரு சாவா? காப்பாற்ற துப்பில்லாதவருக்கு எதற்கு அரைடஜன்? எனக்கு அம்மாவின் மேல் கோபம் கோபமாய் வந்தது. அவளுக்காவது புத்தி இருந்திருக்க வேண்டும்! புருஷன் சீக்காளியாயிற்றே- குடிகாரனாச்சே என்று தடை பண்ணிக் கொண்டிருந்திருக்க வேண்டும்!

    இப்போது எல்லாம் என் தலையில்!

    அண்ணன் ஒரு கோயில்தான். தங்கை ஒரு கீதம் தான்! மறுப்பதிற்கில்லை.

    கீதம் பாடிப்பாடி என்னை தொலைத்து விட்டார்கள். சிலருக்கு உடன் பிறவா சகோதரிகளால் தொல்லை. எனக்கு உடன் பிறந்தவர்களால்!

    குரு! எண்டா சரிச்சுக்கிறே! உன் உடன் பிறப்புதானே! அவ ஆசைப்பட்டபடி கம்ப்யூட்டர் படிக்க வையேன்!

    அப்புறம் அவர்கள் ஆசைப்பட்டபடி கல்யாணம்!

    Enjoying the preview?
    Page 1 of 1