Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vidiyattum Paarkkalaam
Vidiyattum Paarkkalaam
Vidiyattum Paarkkalaam
Ebook83 pages28 minutes

Vidiyattum Paarkkalaam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466817
Vidiyattum Paarkkalaam

Read more from N.C.Mohandass

Related to Vidiyattum Paarkkalaam

Related ebooks

Related categories

Reviews for Vidiyattum Paarkkalaam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vidiyattum Paarkkalaam - N.C.Mohandass

    1

    "அமிர்தா! சீக்கிரம் ரெடியாகு! கம்பெனி வண்டி வந்துருச்சு!"

    இதோ வந்துட்டேம்மா!

    லட்சுமி! நீ இங்க என்ன பண்ணிட்டிருக்கே? பொண்ணோட மேக்கப் பெட்டி ஃப்ரீப் கேஸையெல்லாம் கொண்டு போய்க் காரில் வை!

    வெச்சாச்சும்மா.

    அப்புறம் இன்னும் ஏன் நிற்கிறாயாம்?

    நல்ல நேரத்தில் கிளம்பலாம்னுதான்!

    அமிர்தா நல்ல நேரம் ஆரம்பிச்சதும் வருவா. நீ போய் ஏறு! தனம் விரட்ட, லட்சுமி தாவணியை சரிபண்ணிக் கொண்டு வாசலுக்கு ஓடினாள்.

    அவளுக்கு இருபது. இன்னுங்கூட தாவணி போதும் என்கிற அளவிற்கு அளவோடு இருந்தாள். அவள் நடிகை அமிர்தாவின் உதவிப் பெண்! உதவி எனும்போது மேக்கப், டச் அப், வேலைக்காரி, சமையல்காரி, சலவைக்காரி எல்லாமே அடக்கம். சொந்த ஊர் காங்கேயம்.

    அமிர்தா மைசூர் சில்க்கில் அறையிலிருந்து வெளியே வந்தபோது தேவதைபோல் காட்சியளித்தாள். முடியை லூஸ் பண்ணி படர விட்டிருந்தாள். விரல்களில் வைரம். பாதி முகத்தை ரேபான் கிளாஸ் மறைத்திருந்தது.

    ஹாலுக்கு வந்தவள் அங்கே போனில் ஐக்யமாயிருந்த சுபேந்தரைப் பார்த்து வண்டி ரெடியா.?

    அவன் போனை பொத்தி ரெடி மேடம் என்று எழுந்து நின்றான்.

    மேடம்! டி.வி.க்கு பேட்டி கேட்டிருந்தாங்களாமே வரட்டுமான்னு கேட்கிறாங்க.!

    இப்போ எப்படி முடியும்? அவுட்டோராச்சே!

    அங்கேயே வந்திடறோம்ங்கிறாங்க. பேசறீங்களா? என்று நீட்டினான்.

    அவள் வாட்ச்சை பார்த்தபடி. முடியாதே! கஷ்டம்! ஷூட்டிங் பொள்ளாச்சியா இல்லை, திருப்பூரான்னு தெரியலே! அங்கே வந்திருங்களேன்! என்று சுபேந்தரிடம் நீட்டி சுபே! நீயே அவங்களை அழைச்சு வந்திரு! என்று வாசலுக்கு வாசத்தோடு விரைந்தாள்.

    ஹாலின் சுவர் முழுக்க அமிர்தா நடித்த பட ஸ்டில்கள் பிரேமில் தொங்கின. கண்ணாடி அலமாரில் ஷீல்டுகள்! வரவேற்பு மேஜையில் சினிமா இதழ்களும். தினசரிகளும் கலைந்து கிடக்க, தனம் அவற்றை அடுக்கி வைத்து அமிர்தா! அங்கேப் போனதும் போன் பண்ணு! எங்க ரூம் போட்டிருக்காங்கன்னு தெரிவி! என்ன தெரிஞ்சுதா?

    சரிம்மா!

    அமிர்தாவின், கார் தெருவிலிருந்து மறைகிற வரை தனம் அங்கேயே நின்றிருந்து அவளே கேட்டை இழுத்து மூடினாள். அன்று வாட்ச்மேனுக்கு லீவ். லீவ் கொடுத்து அனுப்பினது தனம்தான்.

    அமிர்தா வெளியூர் படப்பிடிப்புக்கு போகும் போதெல்லாம் அவனுக்கும் லீவ் கொடுக்கப்படுவது வழக்கம். ஏம்மா இப்படி பண்றே? உனக்கும் வீட்டுக்கும் பாதுகாப்பு வேண்டாமா? என்று அமிர்தா கண்டிப்பாள்.

    இந்த வயசுல எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. அப்புறம் வீட்டை பார்த்துக் கொள்ளத்தான் நானிருக்கிறேன்! பாவம் வாட்ச்மேன்! கிடந்து சாகிறான். இடையிடையே வீட்டுக்கும் போய் அனுபவித்து வரட்டுமே!

    தனம் அப்படிச் சொன்னாலும்கூட, வாட்ச்மேனை அனுப்புவதற்கு காரணம் அதுவல்ல என்பதுதான் உண்மை.

    உண்மையான காரணம். சுபேந்தர். அவர்களுக்கிடையேயுள்ள உறவு!

    தனம் கதவை மூடிவிட்டு உள்ளே வர, சுபேந்தர், வேகமாய் ஓடிவந்து அவளைக் கட்டிக் கொண்டு, யூ ஆர் லுக்கிங் ஸ்மார்ட்! என்று மூச்சு முட்டினான்.

    தனம் அந்த ஸ்பரிசத்தில் நெளிந்து, விடு! விடு! அமிர்தா வந்திரப் போறா!

    அவதான் போயிட்டாளே!

    2

    காங்கேயம்.

    சிதம்பரம் மருத்துவமனையின் வாசலில் ரிக்ஷாக்களும் ஆட்டோக்களுமாய் தவமிருக்க லட்சுமி டிரான்ஸ்போர்ட் என பெயரிடப்பட்டிருந்த அந்த மண் லாரி அவசரமாய் வந்து நின்று ஹாரனடித்தது.

    அதிலிருந்து முரளி எட்டிப்பார்த்து ஏ. பழக்கடை! கொஞ்சம் ஒதுக்கேன், நான் வண்டியை போட்டுக்கிறேன் என்று ஓரங்கட்டி இறங்கினான்.

    ஏம்ப்பா - எங்க பிழைப்பிலே மண்ணு அள்ளிப் போட்றீங்க? லாரியைக் கொண்டு வந்து இப்படி மறிச்சுக்கிட்டா அப்புறம் எப்படி பார்வை கிடைக்கும்?

    கோவிச்சுக்காதப்பா! இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துர்ரேன்! என்று உள்ளே ஓடினான். வார்டில் வேகமாய் நடந்து பதினைஞ்சாம் நம்பர் ரூம்! கழுத்தில் கட்டியிருந்த கர்சிப்பை அவிழ்த்து முகத்தில் ஒற்றிக் கொண்டான்.

    அங்கே பிசிறினி முடியும் இருமலுமாய் படுத்திருந்த கற்பகத்திடம் என்னாச்சுத்தே? என்று வருத்தத்தை வெளிப்படுத்தினான்,

    மறுபடியும் வயித்துவலி! டாக்டர்ட்ட காட்டினப்போ கட்டாயபடுத்தி பெட்டில் சேர்த்துட்டார்

    திருப்பூருக்கு லோடு போயிட்டு வந்தப்போதான் பக்கத்து வீட்டில் தகவல் சொன்னாங்க. இப்போ எப்படியிருக்கு?

    கற்பகம் அதற்கு வறட்சியாக புன்னகைத்தாள்.

    காலா காலத்துல போய் சேர்ந்துட்டால் எல்லோருக்கும் நிம்மதி.

    ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க? டாக்டர் அன்னைக்கே சொன்னார் ஆபரேஷன் பண்ணினால் சரிபண்ணிரலாம்னு.

    "அதுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1