Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aruge Vandhu Pazhagu
Aruge Vandhu Pazhagu
Aruge Vandhu Pazhagu
Ebook100 pages38 minutes

Aruge Vandhu Pazhagu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கோபன் என்பவன் பணக்கார வீட்டில் பிறக்கின்றான், சூழ்நிலை காரணமாக ஏழ்மைநிலையில் உயிருக்கு அஞ்சி சாகசா பெண் வேடத்தில் குடிசையில் வாழ்க்கை பயணத்தை தொடங்கினான். கோபன் என்பவன் ஏன் ஏழ்மை நிலையில் அடைய வேண்டும்? இதற்கான காரணம் என்ன? கோபனின் வாழ்க்கைக்கு உதவியவர் யார்? சொந்தங்களிடம் சேருவானா? என்பதை இக்கதையில் காண்போம்.

Languageதமிழ்
Release dateNov 2, 2021
ISBN6580100606644
Aruge Vandhu Pazhagu

Read more from Devibala

Related to Aruge Vandhu Pazhagu

Related ebooks

Reviews for Aruge Vandhu Pazhagu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aruge Vandhu Pazhagu - Devibala

    https://www.pustaka.co.in

    அருகே வந்து பழகு

    Aruge Vandhu Pazhagu

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அண்ணாந்து பார்த்த கூட்டம் ஆரவாரமாகக் கைதட்டியது. ராமாயி கம்பி மேல் நடந்து கொண்டிருந்தாள். இந்தக் கோடிக்கு அந்தக் கோடி முளை நட்டு மத்தியில் ஓடும் கம்பியில் சர்வ ஜாக்ரதையாக நடக்கத் தொடங்கினாள் ராமாயி.

    கீழே அந்தக் காட்சிக்கு தக்க இசையமைத்துக் கொண்டிருந்தாள் அம்மணி. விரித்த பெட்ஷீட்டில் காசு விழுந்து கொண்டிருக்க, ராமாயி இறங்கிவிட்டாள்.

    அடுத்தபடியாக அம்மணி தீப்பந்தம் அமைத்துப் பிடித்துக்கொள்ள, ஓடி வந்த ராமாயி வெகு சாதாரணமாக அதற்குள் நுழைந்து மறுபுறம் வந்து விழுந்தாள்.

    ஆண்பிள்ளைகளே செய்யத்தயங்கும் பல வித்தைகளை ராமாயி அனாயாசமாக செய்து கொண்டிருந்தாள்.

    தொடர்ந்து அரைமணி நேரம் நீடித்து அது முடிய, கூட்டம் கலையத் தொடங்கியது. சில்லறைக் காசு, தகரப்பாத்திரம், உபகரணங்கள் என்று சகலத்தையும் இருவரும் சேகரிக்க, தன்னருகில் பூட்ஸ் கால்கள். ராமாயி நிமிர்ந்தாள். ஒரு போலீஸ்காரன்!

    இன்னாமே! இங்க வச்சு வித்தை காட்டறியா? இது மாநகராட்சி எல்லை தெரியுமா? ராமாயி எழுந்தாள் அவன் அருகில் வந்தாள்.

    உனக்கு இன்னா வோணும்? துட்டா?

    அந்தப் போலீஸ்காரன் ‘ஒரு விரல்' கிருஷ்ணாராவ் போல் இருந்தான். தலையை ஒரு மாதிரி சொறிந்து கொண்டு சிரித்தான்.

    பத்து ரூபாய் எடுத்துத் தந்தாள் ராமாயி.

    இன்னா பத்து ரூபாய்?

    "கஸ்மாலம்... நீ இன்னா உழைச்சேனு

    இங்கிட்டு வந்து நிக்கற? கஸ்டப்படறது நாங்க. நீ வந்து மாமூல் வசூல் பண்றியாக்கும். போலீஸ்காரனை விட பகிரங்கமான திருடன் நம்ம நாட்ல இல்லைப்பா!"

    அவன் விலக, அம்மணி வாயில் அறைந்துகொண்டாள்.

    யக்கா வுடு! நீ குடுக்கலைனா, அந்த பேமானி இங்க வித்தை காட்ட வுடமாட்டான். ஒழியட்டும்!

    இரண்டு பேரும் கடற்கரையோரமாக இருந்த அந்தக் குடிசைப் பகுதிக்கு வந்துவிட்டார்கள்.

    நீ இரு ராமாயி! நான் போய் கருவாடு வாங்கிக்கினு வாறேன்!

    அம்மணி விசுக் விசுக்கென இழுத்து இழுத்து நடக்க, குடிசைக்குள் நுழைந்து ஒரு ஓரமாகச் சாய்ந்தாள் ராமாயி. உடம்பு வலித்தது. ஒவ்வொரு முறையும் வித்தை காட்டி சம்பாதிக்கும்போது வெறுப்பாக இருக்கும்.

    'வாழ்நாள் முழுக்க இப்படித்தான் பிழைக்க வேண்டுமா?’

    ‘எப்படி முடியும்?' ராமாயிக்கு இப்போது இருபத்தி ஒன்று, பத்து வயது முதலே வித்தை பழகிவிட்ட பெண் அம்மணி அவள் அக்கா. ராமாயியை விட பதினைந்து வயது மூத்தவள். பதினெட்டு வயது அம்மணிக்கு நடக்கும்போது ஆத்தா போய்ச்சேர, மூன்று வயதுக்குழந்தை ராமாயி. அன்று முதல் இதே வித்தை காட்டி, தன் தங்கையை பெற்ற மகள் போல் வளர்த்து வருகிறாள் அம்மணி.

    முப்பத்தைந்து ஆகிவிட்டதால் அம்மணியால் வித்தை காட்ட முடியாது. இனி ராமாயி தேறிவிட்டாள். புதுப்புது அயிட்டங்கள் காட்டுவதால் ஏகப்பட்ட கிராக்கி.

    அக்காவுக்கென்று ஒரு வாழ்க்கை இல்லை. கல்யாண வயசு தாண்டிவிட்டது. 'பாவம் அக்கா!' கருவாடு 'மணக்க' அம்மணி நுழைந்தாள்.

    யக்காவ்! பசிக்குது!

    பளய சோறு இருக்கே! வெங்காயத்தை வச்சிட்டுத் துன்னேன்!

    சரியக்கா!

    பழைய சோற்றை பீங்கான் சட்டியில் போட்டு, பச்சை மிளகாய் வெங்காயத்துடன் சாப்பிடத் தொடங்கினாள் 'ராமாயி'.

    அவசரப் பசிக்கு சாப்பிடு புள்ள... தடா கருவாட்டுக் கொளம்பு செய்யறேன். வவுத்துல எடம் வெச்சுக்கோ!

    அம்மணி!

    குடிசைக்கு வெளியே குரல் கேட்டது.

    யாரது?

    நான் தேங்... துலுக்காணம்! வெகு உரிமையுடன் வாயில் தொங்கிய பீடியுடன் துலுக்காணம் உள்ளே நுழைந்தான்.

    மடித்துக் கட்டிய லுங்கி தொடைவரை ஏறியிருக்க, மொட்டைக் கை

    பனியன் நீலநிறத்தில், மாநில ஏதோ ஒரு அரசியல் தலைவர்.

    என்ன துலுக்காணம்?

    கருவாட்டுக் கொளம்பா? எனக்கு உண்டா? இல்லை. நீ என்ன கிளிக்கறே எங்களுக்கு. போய்யா வூட்டைப்பார்த்து. சும்மா வந்து ரவுசு பண்ணிக்கிட்டு!

    சள்ளென விழுந்தாள் ராமாயி.

    உன் தங்கச்சி தடா இருக்குது யக்கா!

    நீ ஏண்டா அவகிட்ட, வம்பு வளர்த்திகிட்டு...?

    ."நான்தானே கட்டிக்கப் போறவன் அவளை!'

    சர்தான். உன் நாய் மூஞ்சிக்கு கல்யாணம் ஒரு கேடா? போடா! துலுக்காணத்தின் காது மடல்கள் விடைத்துக் கொண்டன. இன்னாமே? வெளிலதான் வித்தை காட்டுவேன்னு நினைச்சேன். வீட்ல வந்தும் காட்டறியா?

    கிட்டவா! புதுப்புது அயிட்டமெல்லாம் காட்டறேன்!

    வந்துட்டேன்! அவளை நெருங்கினான் துலுக்காணம்.

    சென்ட் போட்டியா?

    உம்.... சிங்கப்பூர் சென்ட்!

    பொணத்துகிட்ட கொளுத்தி வச்ச ஊதுபத்தி மாதிரி மட்டிப்பால் வாசனை குமட்டுது. கழுதை! போய்யா!

    இரும்மே! இப்ப நான் போறேன். மழைக்காலம் போயிட்டா உனக்கு பரிசம்போட வருவேன்!

    அப்படி சொல்லிக்கினு வந்தா கைய, கால ஒடிப்பேன்!

    என்னை இளிச்ச வாயன்னு நினைச்சியா? அம்மணி அக்கா வெளில போன அன்னிக்கு உள்ள புகுந்து உன்னை...!

    துலுக்காணம் என்ன இது? - அம்மணி அதட்ட, அவன் விலகிப் போனான். கருவாட்டுக் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது.

    ராமாயி! நீ வயசுப்புள்ள!

    ஏன் யக்கா இதச் சொல்ற இப்ப?

    "வாயைக் கொஞ்சம் மூடி வச்சுக்கணும்.. துலுக்காணம் ஒரு மாதிரி ஜென்மம். சொன்னபடி என்னிக்காவது ஒருநாள் சாராயம் அடிச்சிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1