Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanne Kolai Maane
Kanne Kolai Maane
Kanne Kolai Maane
Ebook78 pages29 minutes

Kanne Kolai Maane

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் தாயின் உடல்நிலைக்காக ஆசிரியர் பணிக்கு சேரும் ஆசிரியர் சந்தோஷ் அங்கு முதல் நாளே பல இன்னல்களுக்கு உள்ளாகிறான்.

வீட்டில் போதிய அன்பு இல்லாமல் பள்ளியில் லூட்டி அடிக்கும் மாணவி வினோதினி. அதனால் சந்தோஷிடம் அடி வாங்குகிறாள்.

தன் மனைவியிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக காத்திருக்கும் ரௌடி மாயாண்டி.

இவர்கள் மூவருக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளும் அதனால் உண்டாகும் விளைவுகளும், எதிர்பாராத திருப்பங்களுமே என்.சி.மோகன்தாஸ் எழுதியுள்ள கண்ணே கொலை மானே நாவலாகும்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580132406230
Kanne Kolai Maane

Read more from Nc. Mohandoss

Related to Kanne Kolai Maane

Related ebooks

Related categories

Reviews for Kanne Kolai Maane

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanne Kolai Maane - NC. Mohandoss

    http://www.pustaka.co.in

    கண்ணே கொலை மானே

    Kanne Kolai Maane

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author//nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    அந்த லாட்ஜ் திருச்சி கடைவீதியின் மத்தியில் இருந்தது. கட்டிடங்கள் வலுவிழந்து, விரிசல் விட்டு அவற்றினிடையில் ஒட்டடை. செங்குத்தாய் மாடிப்படி. குறுகலான அறைகள் அறைகளில் கால்பிசகின கட்டில்.

    மொத்தத்தில் திருச்சியின் பழமையை அது நினைவுபடுத்திற்று. பத்து ரூவா வாடகைக்கு இதுவே அதிகம்!

    சுவர்களில் பாசிபடர்ந்து அங்கங்கே திட்டு திட்டாய் பச்சை. மாடியிலிருந்து பார்த்தால் மலைகோட்டையும் காவிரி பாலமும் தெரியும் நேர் எதிரே எப்போதும் சலசலப்பான ஜனங்கள். அவசரமான ரிக்ஷா, காய்கறி வண்டி எதெடுத்தாலும் ஒண்ணேகால் ரூபா கடைகள்.

    பத்தாம் எண் அறையின் மரக்கதவை கிறீச்சென்று திறந்துக் கொண்டு வெளியே வந்தவன் பெயர் சந்தோஷ், முப்பது. வாட்டசாட்டமான தேகம். அவன் கையில் சோப் - டவல் - பிரஷ் வைத்திருந்தான்.

    காமன் பாத்ரூமை நோக்கி அவன் கால்கள் நடந்தன. ரூமே பாத்ரூம் போல ச்சிராவாய் தான் இருக்கின்றது. பாத்ரூம் எப்படியிருக்குமோ என்று அவன் கவலைப்படவில்லை.

    அவன் மனம் முழுக்க இன்று போய் சேரவேண்டிய வேலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது. தெப்பகுளத்திற்கு பக்கத்திலிருக்கும் ஸ்கூலில் அவனுக்கு வாத்தியார் வேலை கிடைத்திருந்தது.

    பல்விளக்கும் போது கஷ்டத்திற்கிடையில் பி.எஸ்.ஸி முடித்த ஞாபகம் வந்தது. குளிக்கும்போது வேலை உடனே கிடைத்துவிடும் என்ற கனவுடன் பி.எட். முடிந்ததும் டிரஸ் மாற்றும் போது வாத்தியார் வேலைக்காக காத்திருந்து, எம்ப்ளா மெய்மெண்ட் எக்ஸேஞ்சில் தவமிருந்து -

    ஐயா நான் ஐந்து வருஷமா காத்திருக்கேன்ய்பா!

    உனக்கு பத்து வருஷம் முன்னாடி முடிச்சவனுக்கே இன்னும் வேலை கிடைக்கலே போய்யா!

    சும்மா இருக்கும் நேரத்தில் எம்.எஸ்ஸி படிக்கலாமே என படித்து டுடோரியல் காலேஜிக்கு ரூ.100க்கு தன் அறிவை விற்று இதோ இப்போது தனியார் ஸ்கூலில் கிடைத்திருக்கிறது.

    கடந்த காலத்தை பற்றி நினைத்தபோது எதிர்காலம் அவனை பயமுறுத்திற்று. இந்த ஸ்கூல் எப்படியிருக்குமோ வேலை பறி போகாத அளவில் நாம் நடந்துக் கொள்ள வேண்டுமே... ஹெட்மாஸ்டர் எப்படி பழகுவார் சக ஆசிரியர்கள் எப்படி பழகுவார்கள் அவனுக்கு அச்சமாயியிருந்தது

    பெட்டியிலிருந்து முருகன் படம் எடுத்து வைத்து சூடம் காட்டினான். ஊதுபத்தி பற்ற வைத்தபோது அந்த பக்கமாய் கடந்துப் போன லாட்ஜ் ஓனர் ஓடிவந்து, ம்கூம். இதெல்லாம் இங்கே கூடாது தம்பி. ஏற்கனவே கட்டிடம் பழசு தீ, கீ பிடிச்சதுன்னா என்னாவறது!

    அவன் 'சரிங்க' என்பதிற்குள் மளமளவென உள்ளே வந்தவர் சட்டென கற்பூரத்தை அணைத்துவிட்டு நடந்தார். அவனுக்கு எரிச்சலும், அதே சமயத்தில் வருத்தமாயும் இருந்தது. வேலைக்கு போகும் முன்பு மனமாரப் பிராத்திக்க வேண்டி ஏற்றிய கற்பூரத்தை அபசகுனமாய் அணைத்துவிட்டு போகிறாரே...

    நம் வேலை நிலைக்குமா... என வருந்தினான். ரூமில் சாமி கும்பிடக் கூட சுதந்திரமில்லை; அவனுக்கும் ஊரில் படுக்கையில் கிடக்கும் அம்மா ஞாபகத்திற்கு வந்தாள். அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை செய்ய முடியாத தன் இயலாமையை நொந்து கொண்டான்.

    வேலைக்கு போனதும் சம்பளம் பெற்று அம்மாவை டவுனிற்கு கொண்டு வரவேண்டும் பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்து

    அதுவரை அவங்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்று பிராத்தித்தான்.

    கண்களை ஒத்திக் கொண்டு சர்டிபிகேட் சமாச்சாரங்களை ஒரு துணிக்கடைப் பையில் சுற்றி எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

    வெளியே வரும்போது நிலைபடியில் தலை டணால் என இடித்து உஷ்... அம்மா...

    பார்த்து வரப்புடாது... பழங்காலத்து நிலை!

    மானேஜருக்கு அவருடைய

    Enjoying the preview?
    Page 1 of 1